Skip to main content

பிச்சாவரத்தில் படகு சவாரி நேரத்தை அதிகபடுத்தவேண்டும் - சுற்றுலா பயணிகள் கோரிக்கை

Published on 02/05/2019 | Edited on 02/05/2019

சிதம்பரம் அடுத்த பிச்சாவரத்தில் தமிழக அரசின் சுற்றுலா வளர்ச்சி கழகம் சார்பில் சுற்றுலா மையம் உள்ளது.  இங்கு 5 ஆயிரம் ஏக்கர் சதுர மீட்டர் பரப்பளவில் இயற்கை சூழலுடன்  மருத்துவ குணம் கொண்ட சதுப்புநிலக்காட்டில்  சுரப்புண்ணை, தில்லை, திப்பராத்தி, வெண்கண்டல், நீர்முள்ளி, பண்ணுக்குச்சி, நரிகண்டல், கருங்கண்டல் எனும் 20 வகையான தாவரங்களும்,  வங்காரவாசி, உயிரி, கோழிக்கால், உமிரி, சங்குசெடி, பீஞ்சல் உள்ளிட்ட 18 வகையான மூலிகை தாவரங்களும் உள்ளது. மாங்குரோவ் காடுகளில் மூலிகை செடிகள்  நிறைந்திருப்பதால் வனத்துறையினர் கட்டுபாட்டில் உள்ளது.

 

pichavaram

 

இந்த சதுப்புநிலக்காட்டில்  நான்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட கால்வாய்களும் ஒரே மாதிரியான அமைப்பை கொண்டவையாக உள்ளது. உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள்  பிச்சாவரம் சதுப்புநிலக்காடுகளில் படகு சவாரி செய்து காடுகளிலுள்ள இயற்கை வளங்களை ரசித்து செல்லும் வகையில் தினசரி வருகின்றனர். தற்போது, கோடை காலம் துவங்கி வெயில் வாட்டி வதைப்பதால், சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது. தினசரி காலை முதலே சுற்றுலாப் பயணிகள் குவிந்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த புதனன்று  மே தின விடுமுறை என்பதால், வழக்கத்திற்கு மாறாக பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.
 

பிச்சாவரம் இந்த பகுதி மக்களின் ஏழைகளின் ஊட்டியாக திகழ்கிறது என்கிறார் சீர்காழி பகுதிகளில் இருந்து படகு சவாரி செய்ய வந்த சிவக்குமார் என்பவர். மேலும் அவர் கூறுகையில் கோடை விடுமுறை காலத்தில் தமிழகத்திலுள்ள ஊட்டி, கொடைகானல் உள்ளிட்ட இடங்களுக்கு சென்று அங்குள்ள குளிர் காற்றை ரசித்து படகு சவாரி செய்து மகிழ்ந்து வருவார்கள். இதற்கு செலவு அதிகமாகும்,  ஏழ்மை நிலையில் உள்ளவர்களுக்கு அங்குசெல்வது சிறமமாக இருக்கும். எனவே குறைந்த செலவில் குடும்பத்துடன் குதூகலமாக படகு சவாரி செய்து மகிழ பிச்சாவரம் சுற்றுலா மையம் ஏற்ற இடமாக உள்ளது. தண்ணீரும் முழங்கால் அளவுக்கு உள்ளதால் படகு சவாரி செய்யும் போது சுற்றுலா பயணிகளுக்கு பாதுகாப்பு உள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன் காலையிலே படகு சவாரி தொடங்கி மாலை 6 வரை இருக்கும். தற்போது வனத்துறை கெடுபிடி விதித்துள்ளதால் காலை 9 மணிக்கு  தொடங்கி 4 மணியுடன் முடித்து விடுகிறார்கள். இதனால் தொலைதூரத்திலிருந்து வரும் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைகிறார்கள். இதனை அரசு கவனத்தில் எடுத்துக்கொண்டு படகுசவாரி நேரத்தை மாற்றி அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையும் வைத்துள்ளார். இந்த கோரிக்கை அனைத்து சுற்றுலா பயணிகளின் கோரிக்கையாகவும் உள்ளது என்பதை யாராலும் மறுக்கமுடியாது.  

 

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

பிச்சாவரத்தில் சுற்றுலாத் துறை ஆணையர் ஆய்வு

Published on 21/11/2023 | Edited on 21/11/2023

 

Inspection by the Commissioner of Tourism at Pichavaram

 

சிதம்பரம் அருகே உள்ள பிச்சாவரம் சுற்றுலாதளத்தை பல்வேறு உள் கட்டமைப்பு வசதிகளுடன் மேம்படுத்தும் பணிகள் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் மூலம் நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை கடலூர் மாவட்ட ஆட்சியர் டாக்டர் அருண் தம்புராஜ் முன்னிலையில் முதன்மைச் செயலாளரும் சுற்றுலாத்துறை ஆணையருமான காக்கர்ல உஷா பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

 

அப்போது அவர் பிச்சாவரம் அறிஞர் அண்ணா சுற்றுலா வளாகத்திற்கு பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகளின் தேவைகளை நிறைவு செய்யும் வகையிலும், சுற்றுலாப் பயணிகளின் வருகையை அதிகப்படுத்தும் நோக்கத்துடன் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் வாயிலாக பிச்சாவரம் சுற்றுலா மையத்தினை மேம்படுத்தும் வகையில் இந்தியாவில் சிறு தொழில்கள் மேம்பாட்டு வங்கியில் கிளஸ்டர் மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ 14.7 கோடி மதிப்பீட்டில் பணிகள் நடைபெற்று வருகிறது. பணிகளை விரைவில் முடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது'' என்று கூறினார்.

 

இதனைத் தொடர்ந்து சிதம்பரத்தில் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழக நிதியின் மூலம் ரூ 8.65 கோடி மதிப்பீட்டில் ஹோட்டல் தமிழ்நாடு கட்டுமான பணிகள் நடைபெற்று வருவதையும் ஆய்வு மேற்கொண்டனர். இதில் சிதம்பரம் உதவி ஆட்சியர் சுவேதாசுமன், வட்டாட்சியர் செல்வகுமார், கிள்ளை பேரூராட்சி மன்ற துணைத்தலைவர் கிள்ளைரவீந்திரன், சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் செயற்பொறியாளர் பௌல், மாவட்ட சுற்றுலா அலுவலர் முத்துசாமி, உதவி செயற்பொறியாளர் முனுசாமி, பிச்சாவரம் படைக்கு இல்ல அலுவலர்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

 

 

Next Story

பிச்சாவரம் சுற்றுலாத்தலம் மேம்படுத்தும் பணி; சுற்றுலாத் துறை ஆணையர் ஆய்வு

Published on 21/11/2023 | Edited on 21/11/2023

 

Commissioner of Tourism inspects the development of Pichavaram tourist site

 

சிதம்பரம் அருகே உள்ள பிச்சாவரம் சுற்றுலா தலத்தை பல்வேறு உட்கட்டமைப்பு வசதிகளுடன் மேம்படுத்தும் பணிகள்  தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் மூலம் நடைபெற்று வருகிறது.  இந்த பணிகளை கடலூர் மாவட்ட ஆட்சியர் டாக்டர் அருண் தம்புராஜ் முன்னிலையில் முதன்மைச் செயலாளரும் சுற்றுலா துறை ஆணையருமான திருமதி காக்கர்ல உஷா பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

 

அப்போது அவர் பிச்சாவரம் அறிஞர் அண்ணா சுற்றுலா வளாகத்திற்கு பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் சுற்றுலா பயணிகளின் தேவைகளை நிறைவு செய்யும் வகையிலும், சுற்றுலா பயணிகளின் வருகையை அதிகப்படுத்தும் நோக்கத்துடன் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் வாயிலாக பிச்சாவரம் சுற்றுலா மையத்தினை மேம்படுத்தும் வகையில் இந்தியாவில் சிறு தொழில்கள் மேம்பாட்டு வங்கியில் கிளஸ்டர் மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ 14.7 கோடி மதிப்பீட்டில் பணிகள் நடைபெற்று வருகிறது பணிகளை விரைவில் முடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளதாக கூறினார்.

 

இதனை தொடர்ந்து சிதம்பரத்தில்  தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழக நிதியின் மூலம் ரூ 8.65 கோடி மதிப்பீட்டில் ஹோட்டல் தமிழ்நாடு கட்டுமான பணிகள் நடைபெற்று வருவதையும் ஆய்வு மேற்கொண்டனர். இதில் சிதம்பரம் உதவி ஆட்சியர் சுவேதாசுமன், வட்டாட்சியர் செல்வக்குமார் கிள்ளை பேரூராட்சி மன்ற துணைத்தலைவர் கிள்ளை ரவீந்திரன்,  சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் செயற்பொறியாளர் பௌல், மாவட்ட சுற்றுலா அலுவலர் முத்துசாமி, உதவி செயற்பொறியாளர் முனிசாமி,  பிச்சாவரம் படைக்கு இல்ல அலுவலர்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.