![Petrol bomb at Thenampettai - Police investigate](http://image.nakkheeran.in/cdn/farfuture/rAcAgDv2pn6wyrxT9g37Q56emuBOkfyF9ndewj0cWgQ/1583239880/sites/default/files/2020-03/fdhgjg.jpg)
![Petrol bomb at Thenampettai - Police investigate](http://image.nakkheeran.in/cdn/farfuture/twMIwzFwJ9zaH3SRazVndYQ2dM1dqr5e9Zo7tbQ23k4/1583239880/sites/default/files/2020-03/fhghtgyhty.jpg)
![Petrol bomb at Thenampettai - Police investigate](http://image.nakkheeran.in/cdn/farfuture/MApCHUwEgQCQpSp396q96ShW7ia-L0nnJAV3ENFVrFs/1583239880/sites/default/files/2020-03/tyuyu8y.jpg)
![Petrol bomb at Thenampettai - Police investigate](http://image.nakkheeran.in/cdn/farfuture/m4fMJmL8D5gAavZ9NDj4hFSy3nB2rHqj1gx28m19R-g/1583239880/sites/default/files/2020-03/hjyhuiyi.jpg)
சென்னை தேனாம்பேட்டை காமராஜர் அரங்கம் அருகே பெட்ரோல் குண்டு வெடித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தேனாம்பேட்டை சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்த இரு நபர்கள் திடீரென அருகிலிருந்த கார் ஷோரூமின் மீது வீசிய பெட்ரோல் குண்டு வெடித்து ஷோரூமின் கண்ணாடி உடைந்து சேதம் அடைந்துள்ளது.
இந்த நிலையில் இந்த செயலில் ஈடுபட்டவர்கள் யார், எதற்காக பெட்ரோல் குண்டு போடப்பட்டது என்ற கோணத்தில் அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை கொண்டு தேனாம்பேட்டை உதவி ஆணையர் கோவிந்ராஜ் நேரில் விசாரணை நடத்தி வருகிறார். மேலும் அங்கு உடனடியாக வந்த தடயவியல் நிபுணர் ஷோபா ஜோசப் ஆய்வு செய்துவருகிறார்.
ஏற்கனவே கடந்த சில வாரங்களுக்கு முன் தேனாம்பேட்டையில் வெங்கடேசன் என்பவர் காதல் தோலிவியால் காதலி மீது விசிய பெட்ரோல் குண்டு தவறி போலீஸ்டேசன் பூத் மீது விழுந்து சேதம் அடைந்தது பெரும்பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில் இன்று நடந்த இந்த சம்பவம் மீண்டும் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.