Skip to main content

அவசர தேவைக்காக கார் வாங்கி சென்ற நபர்... திரும்பி வராததால் பிடிபட்ட கும்பல்!

Published on 30/06/2021 | Edited on 30/06/2021

 

The person who bought the car for an emergency: The gang caught for not returning

 

திண்டிவனத்தில் வாடகைக்கு கார் எடுப்பதாகக் கூறி கார்களை விற்பனை செய்து நூதன மோசடியில் ஈடுபட்ட ஆறு நபர்களைக் கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்து மூன்று கார்களைப் பறிமுதல் செய்துள்ளனர். திண்டிவனம் பாரதிதாசன் நகரைச் சேர்ந்தவர் அசோக்குமார் என்பவரது மகன் ரமேஷ். இவர் சொந்தமாக கார் வைத்து வாடகைக்கு விட்டுவருகிறார். இந்நிலையில், கடந்த 14ஆம் தேதி அசோக்குமாரின் தம்பி ராஜேஷின் நண்பர் ரோஷனை பகுதியைச் சேர்ந்த ராஜசேகர் என்பவர் அசோக்குமாரிடம் தனது மனைவி பிரசவ வலியில் துடிப்பதால் அவரை புதுச்சேரி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதற்காக கார் வேண்டும் என்று கேட்டுள்ளார்.

 

மனிதாபிமான அடிப்படையில் அசோக்குமார் ராஜசேகருக்கு காரை கொடுத்துள்ளார். பின்பு மறுநாள் ராஜசேகரை தொடர்புகொண்டு காரை எடுத்துவரும்படி அசோக்குமார் கேட்டபோது, பேருந்து வசதி இல்லாததால் எனக்கு நான்கு நாட்களுக்கு கார் தேவை என்று ராஜசேகர் அழுததாக கூறப்படுகிறது. பின்பு 4 நாட்கள் கழித்து ராஜசேகரை தொலைபேசியில் தொடர்புகொண்ட அசோக்குமார், கார் சம்பந்தமாக கேட்டபோது முன்னுக்குப்பின் முரணாக ராஜசேகர் பதில் அளித்துவிட்டு தொலைபேசி இணைப்பைத் துண்டித்துள்ளார். இதனால் கோபமடைந்த அசோக்குமார், கடந்த 18ஆம் தேதி ரோஷனை காவல் நிலையத்தில் ராஜசேகர் மீது புகார் அளித்துள்ளார். புகாரின் மீது வழக்குப் பதிவுசெய்த போலீசார், அசோக்குமாருக்கு சொந்தமான காரை ராஜசேகரிடமிருந்து மீட்டதுடன், இதுபோன்ற மோசடியில் விற்பனை செய்த மேலும் 2 கார்களையும் பறிமுதல் செய்தனர்.

 

The person who bought the car for an emergency: The gang caught for not returning

 

மேலும், வி.அகரம் பகுதியைச் சேர்ந்த ராஜா, பிரபு, விழுப்புரம் பானாம்பட்டு ரோட்டைச் சேர்ந்த பழனி, மயிலத்தை அடுத்த தழுதாளி ஆனந்த், கடலூர் மாவட்டம் பண்ருட்டியை அடுத்த கொங்கையனூர் பகுதியைச் சேர்ந்த சரண்ராஜ், சோதனைபாளையம் ஸ்ரீதர் ஆகிய ஆறு பேரையும் கைது செய்தனர். முக்கியக் குற்றவாளியான ராஜசேகரை போலீசார் தேடிவருகின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

எந்த சின்னத்திற்கு ஓட்டு போட்டேன் என சொன்ன பெண் அடித்து கொலை; 7 பேருக்கு வலை

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
nn

நேற்று தமிழகத்தில் மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்த நிலையில் எந்த சின்னத்தில் வாக்களித்தேன் என வெளியே சொன்னதால் ஒரு பெண் கொலை செய்யப்பட்டதாக வெளியான தகவல் தமிழகத்தில் பரபரப்பு ஏற்படுத்திருக்கிறது.

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அடுத்துள்ளது பக்ரிமாணியம் கிராமம். அந்த பகுதியில் வசித்து வந்தவர் கோமதி. நேற்று நடந்த மக்களவைத் தேர்தலில் குறிப்பிட்ட ஒரு சின்னத்திற்கு வாக்களித்ததாக வெளியில் கூறியுள்ளார். இதனைக் கேட்ட அதே ஊரைச் சேர்ந்த அருள், பாண்டியன், அறிவுமணி, ரவிராஜா, கலைமணி, தர்மராஜ் ஆகியோர் அப்பெண்ணிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது. அதனைத் தொடர்ந்து 'நீ ஏன் எங்கள் கட்சிக்கு வாக்களிக்கவில்லை' என கூறி ஏழு பேரும் ஒன்றாக சேர்ந்து கோமதியை பலமாக தாக்கியுள்ளனர்.

இதில் கோமதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இதுகுறித்து உடனடியாக ஸ்ரீமுஷ்ணம் காவல்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில், சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பெண்ணின் உடலைக்  கைப்பற்றி விருதாச்சலம் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்விற்காக அவரது உடலை அனுப்பி வைத்தனர். இதில் சம்பந்தப்பட்ட ஏழு பேரையும் போலீசார் தேடி வருகின்றனர். இக்கொலைக்கு உடைந்தையாக இருந்ததாக அந்த பகுதியைச் சேர்ந்த மூன்று பெண்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Next Story

காவு வாங்கிய குளம்; கிராமத்தையே சோகத்தில் ஆழ்த்திய சிறுவர்களின் உயிரிழப்பு

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
 The pool of water; The lost their live of the boys left the village in mourning

கடலூரில் குளத்தில் இறங்கி குளிக்க முயன்ற இரண்டு சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே உள்ளது நந்தீஸ்வர மங்கலம். இந்தக் கிராமத்தில் வசித்து வந்த ராமமூர்த்தி என்பவருக்கு இரண்டு மகன்கள் இருந்தனர். திலீப் ராஜ்(16), தினேஷ்(14) ஆகிய இரு மகன்களும் வெளியூரில் விடுதியில் தங்கி படித்து வந்தனர். இந்த நிலையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்திருந்தனர்.

சிறுவர்கள் திலீப் ராஜ் மற்றும் தினேஷ் ஆகியோர் வீட்டுக்கு அருகே உள்ள குளத்தில் குளிக்க சென்றுள்ளனர். அப்பொழுது ஆழமான பகுதிக்கு இருவரும் குளிக்கச் சென்றதாக கூறப்படுகிறது. இதில் நீரில் மூழ்கி இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். குளத்துக்கு குளிக்கச் சென்ற சிறுவர்கள் காணாமல் போனதால் பதறியடித்த பெற்றோர் காவல்துறைக்கு தகவல் அளித்தனர். உடனடியாக மீட்பு படையினர் வரவழைக்கப்பட்டு குளத்தில் இறங்கி தேட ஆரம்பித்தனர். பின்னர், வெகு நேரத்திற்கு பின் இருவரின் உடலையும் கைப்பற்றிய மீட்புப்படையினர் உடல்களை கரைக்கு கொண்டு வந்தனர். சிறுவர்களின் உடல்களை பார்த்து பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். உயிரிழந்த சிறுவர்கள் இருவரின் உடலும் காட்டுமன்னார் கோவில் அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

விடுதியில் தங்கிப் படித்து வந்த சிறுவர்கள் விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்த நிலையில் குளத்தில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.