Skip to main content

பெரியார் பல்கலை: 75 ஆசிரியர்கள், ஊழியர்கள் தாமதமாக பணிக்கு வருகை!

Published on 05/09/2023 | Edited on 05/09/2023

 

Periyar University: 75 teachers, staff late for work!

 

சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் ஆசிரியர்கள், குறித்த நேரத்திற்குப் பணிக்கு வருவதில்லை என்ற புகார் தொடர்ந்து வந்தது. இதையடுத்து பயோமெட்ரிக் முறையிலான வருகைப் பதிவேடு முறை அறிமுகப்படுத்தப்பட்டது. 

 

இந்த புதிய வருகைப்பதிவு முறை அமலுக்கு வந்த தொடக்கத்தில் பேராசிரியர்கள், இணை மற்றும் உதவி பேராசிரியர்கள் அனைவரும் காலை 9.30 மணிக்குள் வருகையைப் பதிவு செய்து வந்தனர். ஆனால் அந்த நடைமுறையும் 'வர வர மாமியார் கழுதை போல ஆனாளாம்' என்ற பழமொழிக்கு ஏற்ப, ஆசிரியர்கள் வழக்கம்போல் தாமதமாக வரத் தொடங்கினர். 

 

இந்நிலையில், செப். 1ம் தேதி முதல், முகம் பதிவு செய்யும் வருகைப்பதிவு நடைமுறைக்குக் கொண்டு வரப்பட்டது. பெரியார் பல்கலையில் பணியாற்றும் அனைத்து ஆசிரியர்கள், நிர்வாகப் பிரிவில் உள்ள தொகுப்பூதிய, காலமுறை மற்றும் தினக்கூலி பணியாளர்கள் அனைவரும் காலை 9.30 மணிக்குள் முகம் பதிவு செய்யும் உபகரணம் மூலம் வருகையை உறுதி செய்யும்படி பல்கலையின் 'நிரந்தர பொறுப்பு' பதிவாளர் தங்கவேல் சுற்றறிக்கை அனுப்பி இருந்தார். 

 

Periyar University: 75 teachers, staff late for work!

 

வருகையைப் பதிவு செய்ய என்னதான் நவீன தொழில்நுட்பத்தைக் கொண்டு வந்தாலும் பணிக்கு தாமதமாக வந்தே பழக்கப்பட்டுவிட்ட ஊழியர்கள் வழக்கம்போல் தாமதமாக வந்துள்ளனர். செப். 1 மற்றும் 2ம் தேதியில் மட்டும் ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளர்கள் 75 பேர் காலை 9.30 மணிக்கு மேல்தான் வருகையைப் பதிவு செய்துள்ளனர். 

 

இதனால் நொந்து போன பல்கலை நிர்வாகம், சலுகை நேரத்தையும் கடந்து கால தாமதமாக பணிக்கு வருவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்துள்ளது. காலை 9.30 மணிக்குள் வருகையைப் பதிவு செய்வது கட்டாயம் என்றும் மீண்டும் கறாராகத் தெரிவித்துள்ளது.

 

இது தொடர்பாக நடுநிலையான பேராசிரியர்கள் சிலர் நம்மிடம் பேசினர், ''ஏற்கனவே போலி அனுபவ சான்றிதழ் மூலம் ஆசிரியர் பணிக்குச் சேர்ந்தவர்கள், பிஹெச்.டி மாணவர்களிடம் வசூல் வேட்டை, மாணவிகளிடம் பாலியல் சீண்டல், பணம் கொடுத்து பணிக்குச் சேர்ந்தவர்கள், முறையான கல்வித் தகுதி இல்லாமல் ஆசிரியர் பணியில் சேர்ந்தவர்கள், பணி நேரத்தில் வகுப்பில் தூங்கும் ஆசிரியர்கள் எனப் பேராசிரியர்கள், உதவி மற்றும் இணைப் பேராசிரியர்கள் பலர் மீது ஏகப்பட்ட புகார்கள் குவிந்துள்ளன.

 

ஓதுவார், கல்லூரி உதவி பேராசிரியர், முழு நேர பிஹெச்.டி., ஆராய்ச்சி மாணவர் என 'தசாவதாரம்' கமல்ஹாசன் போல ஒரே நபர், ஒரே நேரத்தில் பல வேடங்களில் பணியாற்றியதாக அனுபவச் சான்றிதழ் அளித்து பணியில் சேர்ந்த பேராசிரியர் மீதான புகாருக்கே இன்னும் விடை தெரியவில்லை.

 

இவை குறித்து ஏற்கனவே தணிக்கை துறையிலும் பகிரங்கமாக சுட்டிக் காட்டப்பட்டு உள்ளன. இதைப்பற்றியெல்லாம் ஏற்கனவே நக்கீரன் புலனாய்வு இதழ் மற்றும் இணையதளத்திலும் விரிவாகச் செய்திகள் வந்துள்ளன. குறிப்பிட்ட சாதியினரின் ஆதிக்கம், அரசியல் தலையீடு காரணமாக நேர்மையற்ற ஆசிரியர்கள் தங்களுக்குத் தேவையான காரியங்களைச் சாதித்துக் கொள்கின்றனர். அவர்களால் நேர்மையான ஆசிரியர்கள் பாதிக்கப்படுகின்றனர். 

 

ஏற்கனவே பயோமெட்ரிக் முறையில் வருகைப் பதிவு செய்து வரும்போது, தேவையின்றி பல்கலை நிர்வாகம் முகம் பதிவு மூலம் வருகையைப் பதிவு செய்யும் உபகரணங்களைப் பொருத்தி உள்ளது. தலைமைப் பொறுப்பில் உள்ளவர்கள் நேர்மையாக இருந்தால் ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளர்களும் காலம் தவறாமை உள்ளிட்ட அனைத்து வகையிலும் நேர்மையாக இருப்பார்கள். 

 

ஆசிரியர்கள் சிலரை ஒடுக்க வேண்டும் என்பதற்காக பல்கலை நிர்வாகம் கால தாமத வருகை குறித்தெல்லாம் பகிரங்கப்படுத்தி வருகின்றனர்'' என விரக்தியாக கூறினார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பெரியார் பல்கலை. பதிவாளர் விவகாரம்; உயர்நீதிமன்றம் சரமாரி கேள்வி!

Published on 28/02/2024 | Edited on 28/02/2024
Periyar University Registrar Matters The High Court questions

'பியூட்டர் பவுண்டேஷன்' என்ற தனியார் நிறுவனத்தை தொடங்கி பெரியார் பல்கலைக்கழக துணை வேந்தராக இருக்கக்கூடிய ஜெகநாதன் மற்றும் பதிவாளர் பொறுப்பு வகித்த தங்கவேல், இணை பேராசிரியராகப் பணியாற்றி வந்த சதீஷ், பாரதிதாசன் பல்கலைக்கழக பேராசிரியராக இருந்த ராம் கணேஷ் ஆகியோர் கல்விக் கட்டணம் பெற்று மோசடி செய்ததாக புகார்கள் எழுந்தன. இதனடிப்படையில் பெரியார் பல்கலைக்கழகத்தில் பணியாற்றி வந்த தொழிலாளர் சங்க சட்ட ஆலோசகர் இளங்கோவன் கொடுத்த புகாரில் சேலம் கருப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதனை கைது செய்தனர். ஜாமீனில் வெளிவந்த ஜெகநாதன் மீண்டும் துணை வேந்தராகப் பணியாற்றி வருகிறார்.

அதே சமயம் பல்கலைக்கழகத்தின் பதிவாளராகவும் கணினி அறிவியல் துறைக்கு தலைவராகவும் பணியாற்றி வந்த தங்கவேல், தனது துறைக்குத் தேவையான கணினி, இணைய சேவைக்கான பொருட்களை வாங்கியதில் முறைகேடு செய்ததாகவும், ஆதிதிராவிடர் இளைஞர்களுக்கு நடத்தப்படும் திறன் மேம்பாட்டு பாடத் திட்டங்களில் பெரும் முறைகேடு நிகழ்ந்துள்ளதாகவும் புகார் எழுந்தது. இந்த முறைகேடு தொடர்பாக எழுந்த புகாரின் பேரில் தணிக்கைக் குழு ஆய்வு செய்திருந்தது. இந்த ஆய்வில் முறைகேட்டில் தங்கவேல் ஈடுபட்டது நிரூபணமானது.

அதன்பின்னர் பல்கலைக்கழக பதிவாளர் தங்கவேலை பணியிடை நீக்கம் செய்ய பல்கலைக்கழக துணை வேந்தருக்கு தமிழக அரசு கடந்த 7 ஆம் தேதி உத்தரவிட்டிருந்தது. பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற முறைகேடு தொடர்பாக விசாரணை நடத்த அமைக்கப்பட்ட அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் பழனிசாமி குழு அறிக்கை அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதற்கான உத்தரவை தமிழக உயர்கல்வித் துறைச் செயலாளர் கார்த்திக் பிறப்பித்திருந்தார். இருப்பினும் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன் பதிவாளர் தங்கவேலை பணியிடை நீக்கம் செய்யாமல் இருந்து வந்தார். இதற்கு ஆசிரியர் சங்கங்களை சேர்ந்தவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இதனையடுத்து பதிவாளர் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டு கணினி அறிவியல் துறை தலைவராக உள்ளார். அதே சமயம் தங்கவேல் மீதான குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரங்கள் கேட்டு துணைவேந்தர் ஜெகநாதன் உயர்கல்வித் துறைக்கு கடிதம் எழுதி இருந்தார். இது தொடர்பாக தமிழக உயர்கல்வித் துறைச் செயலாளர் கார்த்திக், துணை வேந்தருக்கு மீண்டும் எழுதியிருந்த கடிதத்தில், “பதிவாளராக இருந்த தங்கவேலு மீதான குற்றச்சாட்டுகளுக்கான ஆதாரங்கள் அனுப்பப்பட்டுள்ளது. தங்கவேல் மீது 8 புகார்கள் உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே தங்கவேலுவை பணியிடை நீக்கம் செய்ய நடவடிக்கை எடுத்து அரசுக்கு தெரிவிக்க வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

Periyar University Registrar Matters The High Court questions

இதற்கிடையே பணிநீக்கம் தொடர்பான உத்தரவை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் பதிவாளராக இருந்த தங்கவேல் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு நீதிபதி இளந்திரையன் முன்பு இன்று (28.02.2024) விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தங்கவேல் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஐசக் மோகன்லால், “பல்கலைக்கழகம் என்பது தனிச் சட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்டது. இதில் சிண்டிகேட், செனட் உறுப்பினர்கள் உள்ளனர். மனுதாரர் 34 ஆண்டுகள் பணி அனுபவம் கொண்டவர். நாளை ஓய்வு பெற உள்ள நிலையில் பணிநீக்கம் செய்வது தொடர்பான பரிந்துரை தங்கவேலுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே பணிநீக்கம் தொடர்பான பரிந்துரைக்கு தடை விதிக்க வேண்டும்” என வாதிட்டார். அப்போது குறுக்கிட்ட நீதிபதி இளந்திரையன், “உயர் கல்வித்துறை செயலாளரின் பரிந்துரை குறித்து பல்கலைக்கழக நிர்வாகம் என்ன நடவடிக்கை எடுத்துள்ளது” எனக் கேள்வி எழுப்பினார்.

Periyar University Registrar Matters The High Court questions

இதற்குப் பதிலளித்த தற்போதைய பதிவாளர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சந்திரகுமார், “பணி நீக்கம் குறித்து பல்கலைக்கழகத்தின் சிண்டிகேட் நிர்வாகம் தான் முடிவெடுக்க வேண்டும். இது தொடரான பரிந்துரை சிண்டிகேட் குழுவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார். இதனைப் பதிவு செய்துகொண்ட நீதிபதி, “நிதி முறைகேடு புகார் தொடர்பான விசாரணை அறிக்கையைத் தமிழக அரசு நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும். உயர் கல்வித்துறை செயலாளரின் பரிந்துரை மீது உரிய நடவடிக்கை எடுக்காமல் துணைவேந்தர் தமிழக அரசிடம் விளக்கம் கேட்டது ஏன்? முறைகேடு புகார் தொடர்பாக சேலம் பல்கலைக்கழக பதிவாளர் தங்கவேல் மீது துணைவேந்தர் உரிய நடவடிக்கை எடுக்கலாம். மார்ச் 14 ஆம் தேதி இந்த வழக்கு தொடர்பான உத்தரவு பிறப்பிக்கப்படும்” எனத் தெரிவித்தார். பதிவாளராக இருந்த தங்கவேல் நாளையுடன் (29.02.2024) பணி ஓய்வு பெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

Next Story

பெரியார் பல்கலை. பதிவாளர் விவகாரம்; உயர் கல்வித்துறை அதிரடி உத்தரவு

Published on 27/02/2024 | Edited on 27/02/2024
Periyar University. Registrar Matters; Higher Education Action Order

'பியூட்டர் பவுண்டேஷன்' என்ற தனியார் நிறுவனத்தை தொடங்கி பெரியார் பல்கலைக்கழக துணை வேந்தராக இருக்கக்கூடிய ஜெகநாதன் மற்றும் பதிவாளர் பொறுப்பு வகித்த தங்கவேல், இணை பேராசிரியராகப் பணியாற்றி வந்த சதீஷ், பாரதிதாசன் பல்கலைக்கழக பேராசிரியராக இருந்த ராம் கணேஷ் ஆகியோர் கல்விக் கட்டணம் பெற்று மோசடி செய்ததாக புகார்கள் எழுந்தன. இதனடிப்படையில் பெரியார் பல்கலைக்கழகத்தில் பணியாற்றி வந்த தொழிலாளர் சங்க சட்ட ஆலோசகர் இளங்கோவன் கொடுத்த புகாரில் சேலம் கருப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதனை கைது செய்தனர். ஜாமீனில் வெளிவந்த ஜெகநாதன் மீண்டும் துணை வேந்தராகப் பணியாற்றி வருகிறார்.

அதே சமயம் பல்கலைக்கழகத்தின் பதிவாளராகவும் கணினி அறிவியல் துறைக்கு தலைவராகவும் பணியாற்றி வந்த தங்கவேல், தனது துறைக்குத் தேவையான கணினி, இணைய சேவைக்கான பொருட்களை வாங்கியதில் முறைகேடு செய்ததாகவும், ஆதிதிராவிடர் இளைஞர்களுக்கு நடத்தப்படும் திறன் மேம்பாட்டு பாடத் திட்டங்களில் பெரும் முறைகேடு நிகழ்ந்துள்ளதாகவும் புகார் எழுந்தது. இந்த முறைகேடு தொடர்பாக எழுந்த புகாரின் பேரில் தணிக்கைக் குழு ஆய்வு செய்திருந்தது. இந்த ஆய்வில் முறைகேட்டில் தங்கவேல் ஈடுபட்டது நிரூபணமானது.

அதன்பின்னர் பல்கலைக்கழக பதிவாளர் தங்கவேலை பணியிடை நீக்கம் செய்ய பல்கலைக்கழக துணை வேந்தருக்கு தமிழக அரசு கடந்த 7 ஆம் தேதி உத்தரவிட்டிருந்தது. பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற முறைகேடு தொடர்பாக விசாரணை நடத்த அமைக்கப்பட்ட அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் பழனிசாமி குழு அறிக்கை அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதற்கான உத்தரவை தமிழக உயர்கல்வித் துறைச் செயலாளர் கார்த்திக் பிறப்பித்திருந்தார். இருப்பினும் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன் பதிவாளர் தங்கவேலை பணியிடை நீக்கம் செய்யாமல் இருந்து வந்தார். இதற்கு ஆசிரியர் சங்கங்களை சேர்ந்தவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வந்தனர்.

Periyar University Registrar Matters Higher Education Action Order

இதனையடுத்து பதிவாளர் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டு கணினி அறிவியல் துறை தலைவராக உள்ளார். அதே சமயம் தங்கவேல் மீதான குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரங்கள் கேட்டு துணைவேந்தர் ஜெகநாதன் உயர்கல்வித் துறைக்கு கடிதம் எழுதி இருந்ததாக கூறப்பட்டது. இந்நிலையில் தமிழக உயர்கல்வித் துறைச் செயலாளர் கார்த்திக், துணை வேந்தருக்கு மீண்டும் எழுதியுள்ள கடிதத்தில், “பதிவாளராக இருந்த தங்கவேலு மீதான குற்றச்சாட்டுகளுக்கான ஆதாரங்கள் அனுப்பப்பட்டுள்ளது. தங்கவேல் மீது 8 புகார்கள் உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே தங்கவேலுவை பணியிடை நீக்கம் செய்ய நடவடிக்கை எடுத்து அரசுக்கு தெரிவிக்க வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிப்ரவரி 29 ஆம் தேதியுடன் ஓய்வு பெற இருக்கும் நிலையில், தங்கவேலை பணியிடை நீக்கம் செய்ய தமிழக அரசு உத்தரவிட்டு மீண்டும் கடிதம் எழுதியுள்ளது குறிப்பிடத்தக்கது.