Skip to main content

இரட்டை குழந்தையுடன் இளம்பெண் தற்கொலை; கணவரின் குடும்பத்தினரிடம் தீவிர விசாரணை 

Published on 30/01/2023 | Edited on 30/01/2023

 

perambalur twin child and young women incident 

 

பெரம்பலூர் மாவட்டம் லப்பை குடிக்காடு அருகே உள்ள பென்னகோணம் கிராமத்தைச் சேர்ந்தவர் விஜயகுமார் (வயது 32). இவர் அரபு நாட்டில் வேலை செய்து வருகிறார். இவருக்கும் கடலூர் மாவட்டம் ராமநத்தம் கிராமத்தைச் சேர்ந்த செல்வராஜ் என்பவரின் மகள் ஜெயாவிற்கும் திருமணமாகி தற்போது இரண்டு வயதில் இரட்டை பெண் குழந்தைகள் உள்ளன. விஜயகுமார் அரபு நாட்டில் வேலை செய்து வருவதால், அவரது மனைவி ஜெயாவும் இரண்டு பிள்ளைகளும் அவரது தாய் வீடான ராமநத்தம் கிராமத்தில் வசித்து வந்தனர். ஒரு வாரத்திற்கு முன்பு ஜெயா தனது குழந்தைகளுடன் பென்னகோணத்தில் உள்ள கணவரின் வீட்டிற்குச் சென்று தங்கியிருந்துள்ளார்.

 

இந்நிலையில் நேற்று முன்தினம் காலையில் நீண்ட நேரமாகியும் ஜெயாவின் வீட்டின் கதவு திறக்கப்படவில்லை. கதவு உள்பக்கமாக தாழ் போடப்பட்டிருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, ஜெயா தூக்கிட்டு தற்கொலை செய்தும், இரண்டு குழந்தைகளும் இறந்த நிலையில் இருப்பதை கண்ட அக்கம் பக்கத்தினர் மங்களமேடு காவல் நிலையத்திற்கு இது குறித்து தகவல் அளித்தனர்.

 

போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மூன்று பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் குழந்தைகளுக்கு ஜெயா உணவில் விஷம் கலந்து கொடுத்து அதை சாப்பிட்ட குழந்தைகள் இறந்துள்ளதை அடுத்து ஜெயாவும் தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்துள்ளது. இதையடுத்து ஜெயாவின் தந்தை செல்வராஜ் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விஜயகுமாரின் தாய், தம்பி வினோத் குமார் மற்றும் அவரது மனைவி பிரியா ஆகியோரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

திருமணத்தை மீறிய உறவு; பெண்ணை பெட்ரோல் ஊற்றி எரித்த நடத்துநர்

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Conductor who doused woman with petrol and her in Krishnagiri

கிருஷ்ணகிரியைச் சேர்ந்தவர் திருப்பதி. இவரது மனைவி சிவகாமி(பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவருக்கும் கிருஷ்ணகிரி பாத்திமா நகரைச் சேர்ந்த அரசு பேருந்து நடத்துனர் மாதவன் என்பவருக்கும் கடந்த ஐந்து ஆண்டுகளாக திருமணத்தை மீறிய உறவு இருந்துள்ளது. இந்த நிலையில் மாதவனுக்கு வேறு சில பெண்களுடன் தொடர்பு  இருப்பதாக கருதிய லட்சுமி மாதவன் உடனான உறவை துண்டித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து மாதவன் சிவகாமிக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று இரவு வீட்டிற்கு வெளியே சென்று லட்சுமியைப் பின் தொடர்ந்து வந்த மாதவன் சிவகாமியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். மேலும் தன்னுடன் பேசுமாறு வற்புறுத்தியுள்ளார். ஆனால்   இதற்குச் சிவகாமி மறுப்பு தெரிவிக்க, ஆத்திரமடைந்த மாதவன் சிவகாமி மீது பெட்ரோலை ஊற்றி உயிரோடு எரித்துள்ளார். பின்னர் வீட்டின் அருகே உள்ள முட்புதிரில் தீயில் கருகி நிலையில் உயிருக்கு போராடி கொண்டிருந்த சிவகாமியைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக அவரை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இந்த நிலையில் இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் சிவகாமிடம் விசாரணை செய்ததில் மேற்கண்ட விவரங்கள் தெரியவந்துள்ளது. இதை அடுத்து மாதவன் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

Next Story

தீ விபத்து; பலி எண்ணிக்கை 6 ஆக உயர்வு!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
incident for hotel near Patna Railway Station Bihar

பீகார் மாநிலம் பாட்னா ரயில் நிலையம் அருகே உள்ள ஹோட்டலில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு படை வீரர்கள் தீயை அணைக்கும் பணியிலும், மீட்புப் பணியிலும் ஈடுபட்டனர். இந்த தீ விபத்தில் சிக்கிய 12 பேர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக முதற்கட்டமாக அனுப்பி வைக்கப்பட்டனர். இச்சம்பவம் பாட்னாவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருந்தது. இந்த தீ விபத்தில் சிக்கி 3 பேர் உயிரிழந்ததாகவும், 7 பேர் பலத்த காயமடைந்துள்ளனர் என பாட்னா போலீஸ் எஸ்.எஸ்.பி. ராஜீவ் மிஸ்ரா தெரிவித்திருந்தார்.

இது குறித்து பாட்னா தீயணைப்புத் துறை போலீஸ் டிஜி, ஷோபா ஓஹட்கர் கூறுகையில், “தீயணைப்புத் அணைக்கும் மேற்கொண்டோம். இதுபோன்ற நெரிசலான பகுதிகளில் விபத்துகளை தடுக்க தொடர்ந்து சிறப்பு கவனம் செலுத்தி வருகிறோம். இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்க நாங்கள் தொடர்ந்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம். சிலிண்டர் வெடித்ததால் இந்த தீ விபத்து நடந்தது. இருப்பினும் தற்போது தீ முற்றிலும் அணைக்கப்பட்டது” எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் பாட்னா சட்டம் மற்றும் ஒழுங்கு போலீஸ் டிஎஸ்பி கிருஷ்ணா முராரி கூறுகையில், “இந்த தீ விபத்தில் 5 முதல் 6 பேர் வரை இறந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சுமார் 30க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளனர். அதில் பலத்த காயம் அடைந்த 7 பேர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்” எனத் தெரிவித்தார்.