Skip to main content

பெண் கொலை; கணவரின் தம்பி கைது!

Published on 02/01/2023 | Edited on 02/01/2023

 

perambalur district women farmer incident 

 

பெரம்பலூர் மாவட்டம் வெங்கனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராசாத்தி (வயது 35). இவர் அதே ஊரைச் சேர்ந்த முனியப்பன் என்பவரை கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்துள்ளார். திருமணம் ஆன மூன்று ஆண்டுகள் கழித்து முனியப்பன் இறந்துவிட்டதால், தனித்திருந்த ராசாத்தி நாகப்பட்டினம் மாவட்டத்தை சேர்ந்த ராமகிருஷ்ணன் என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்துள்ளார். இரண்டாவது கணவர் ராமகிருஷ்ணனும் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார்.

 

இதன் பிறகு வெங்கனூரிலேயே தங்கி தனியாக வசித்து வந்த ராசாத்தி தனக்கு சொந்தமான வயலில் விவசாயம் செய்து வந்தார். சம்பவத்தன்று, வயலில் வேலை செய்துவிட்டு மாலை வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்தபோது வழி மறித்த மர்ம நபர்கள் அவரை சரமாரியாக வெட்டிக் கொலை செய்துள்ளனர். விவசாயப் பணிகளை முடித்துவிட்டு வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்தவர்கள் ராசாத்தி கொலை செய்யப்பட்டு கிடந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். பின்னர், இது குறித்து உடனடியாக போலீசாருக்கு தகவல் அளித்தனர்.

 

சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் ராசாத்தி உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ராசாத்தி மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டது குறித்து வெங்கனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதனிடையே, ராசாத்தி அதே ஊரைச் சேர்ந்த நாகராஜன்  என்பவரிடம் கடன் பெற்றுள்ளதாகவும், அந்தப் பணத்தை நாகராஜன் திருப்பிக் கேட்டபோது,  தான் கடன் வாங்கவே இல்லை என்று ராசாத்தி கூறியதாகவும் சொல்லப்பட்டது .

 

இதனால் நாகராஜனை சந்தேகத்தின் பேரில் போலீசார் அழைத்து விசாரணை செய்து வந்த நிலையில், அவர் தான் கொலை செய்தார் என்பதை அவரே ஒப்புக் கொண்டுள்ளார். மேலும், இந்த விசாரணையில், நாகராஜன் ராசாத்தியின் முதல் கணவரான முனியப்பனின் உடன் பிறந்த தம்பி என்பது தெரிய வந்துள்ளது. அவர் போலீசாரிடம் அளித்துள்ள வாக்குமூலத்தில், "எனது சகோதரர் முனியப்பனை ராசாத்தி திருமணம் செய்து சில மாதங்களில் எனது அண்ணன் இறந்துபோனார். மீண்டும் ராசாத்தி நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் என்பவரை திருமணம் செய்தார். அவரும் சில ஆண்டுகளில் இறந்துபோனார். அதன் காரணமாக ராமகிருஷ்ணன் குடும்பத்தினர் மீது ஜீவனாம்சம் கேட்டு ராசாத்தி வழக்குத் தொடர்ந்தார்.

 

perambalur district women farmer incident 

 

அந்த வழக்குச் செலவிற்காக சுமார் ஒன்றரை லட்சம் வரை ராசாத்திக்கு பணம் கொடுத்துள்ளேன். அவருக்கு ஜீவனாம்சமாக சுமார் 10 லட்ச ரூபாய் பணம் கிடைத்தது. அதன்பிறகு நான் கொடுத்த ஒன்றரை லட்சம் பணத்தை திருப்பித் தருமாறு ராசாத்தியை பலமுறை கேட்டுப் பார்த்தும் அவர் எனக்கு பணம் தராமல் ஏமாற்றி வந்தார். சம்பவத்தன்று அவர் நிலத்தில் வேலை செய்துவிட்டு வரும்போது எதிரில் பார்த்த நான் பணம் தருமாறு கேட்டேன். அப்போதும் அவர் தரமறுத்துப் பேசினார். இதனால் கோபம் அடைந்த நான் கையில் வைத்திருந்த அரிவாளால் அவரை சரமாரியாக வெட்டிக் கொலை செய்தேன். எனக்குச் சேரவேண்டிய பணத்தை தர மறுத்ததால் கோபத்தின் காரணமாக ராசாத்தியை கொலை செய்தேன்" எனக் கூறியுள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம்; அதிமுக நிர்வாகி உள்ளிட்ட 4 பேர் கைது!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Ambedkar statue incident 4 people including ADMK executive 

கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி அருகே உள்ள அம்பலவாணன் பேட்டை கிராமத்தில் அண்ணல் அம்பேத்கர் சிலை ஒன்று உள்ளது. அந்தப் பகுதிக்கு இன்று (24.04.2024) அதிகாலை இரு சக்கர வாகனத்தில் வந்த மர்மநபர்கள் சிலர் அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டை வீச முயற்சி செய்துள்ளனர். அப்போது மர்மநபர்கள் வீசிய பெட்ரோல் குண்டு அம்பேத்கர் சிலை மீது படாமல் அதற்கு பின்னால் இருந்த பழைய ஊராட்சி மன்ற கட்டடத்தின் மீது பட்டு வெடித்துள்ளது. அதே சமயம் அம்பேத்கர் சிலைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.

இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். இதனையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த 4 இளைஞர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் அம்பலவாணன் பேட்டை, குள்ளஞ்சாவடி பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், பெட்ரோல் குண்டு வீச்சு தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த வெற்றி (வயது 21), கிருஷ்ணகுமார் (வயது 21), அதிமுக இளைஞர் பாசறை கிளை கழக செயலளார் சதீஷ் (வயது 29), விஜயராஜ் (வயது 22) ஆகிய 4 பேரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அதே சமயம் அம்பேத்கர் சிலை அருகே குண்டு வீசிய இடத்தை தூய்மைப்படுத்திய விசிகவினர் பால் அபிஷேகம் செய்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். 

Next Story

ஆண் நண்பருடன் சேர்ந்து கணவனைக் கொன்ற மனைவி; பகீர் கிளப்பும் பின்னணி

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
wife who incident her husband along with her boyfriend

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே வசிப்பவர்கள் ஸ்ரீகாந்த் - ஆர்த்தி தம்பதியினர். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இந்த நிலையில் ஆர்த்திக்கு ஸ்ரீகாந்தின் நண்பர் இளையராஜாவுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் அந்த பழக்கம் திருமணத்தை மீறிய உறவாக மாறி உள்ளது.

இது குறித்த தகவல் ஸ்ரீகாந்துக்கு தெரிய வர இருவரையும் அழைத்து கடுமையாக எச்சரித்துள்ளார். இந்த நிலையில் திருமணத்தை மீறிய உறவிற்கு இடையூறாக இருக்கும் கணவன் ஸ்ரீகாந்தை கொல்ல இளையராஜாவுடன் ஆர்த்தி திட்டமிட்டுள்ளார்.  அதன் படி கடந்த 2021 ஆம் ஆண்டு தேவகோட்டை அருகே உள்ள அருகே உள்ள ஆள் நடமாட்டம் இல்லாத காட்டு பகுதிக்கு இளையராஜா ஸ்ரீகாந்தை அழைத்துச் சென்று மது குடிக்க வைத்து அவரை வெட்டிக்கொன்று புதைத்துள்ளார். ஆனால் மனைவி ஆர்த்தி தனது கணவர் குடும்ப பிரச்சனை காரணமாக கோபித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறியதாக குடும்பத்தாரிடமும் அக்கம்பக்கத்தினரிடமும் நாடகமாடி உள்ளார்.

இந்த நிலையில் இரண்டரை வருடம் கழித்து ஸ்ரீகாந்த் கொலை செய்யப்பட்டது குறித்த தகவல் போலீசாருக்கு கிடைத்துள்ளது. அதன் பெயரில் விசாரணையை தொடங்கிய போலீஸ் மனைவி ஆர்த்தியையும், இளையராஜாவையும் கைது செய்தனர். மேலும் இந்த சம்பவத்தில் இளையராஜாவின் நண்பர் ஒருவருக்கும் தொடர்பு இருப்பது தெரிய வந்தது. அவரையும் கைது செய்தனர். மேலும் இந்தக் கொலை தொடர்பாக தலைமறைவாக இருக்கும் இருவரை போலீஸ் தேடி வருகின்றனர்.