Skip to main content

கோவில் கும்பாபிஷேகத்திற்குத் தடை... சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்!!

Published on 21/01/2022 | Edited on 21/01/2022

 

People involved in road blockade against goverment order

 

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் சிதம்பரம் சாலையில் உள்ளது கடாரம் கொண்டான் என்ற கிராமம். வரலாற்று சிறப்புமிக்க இந்த ஊரில் பல்வேறு தரப்பு மக்கள் வாழ்கிறார்கள். ஊர் மக்கள் மற்றும் இங்குள்ள ஆண்டவர் சாமியை குலதெய்வமாக எல்லை தெய்வமாக வழிபட்டு வருகிறார்கள். கடந்த 3 ஆண்டுகளாக சிறுக சிறுக பக்தர்களின் உதவியுடன் பணம் சேர்த்து அந்த கோயில் சாமி சிலைகளையும், கோயிலையும் புனரமைப்பு செய்தனர். இறுதியில் நேற்று அந்த கோயிலில் முறைப்படி கும்பாபிஷேக நடத்துவதற்கு முடிவு செய்து அதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர். இந்த நிலையில் கரோனா பரவலை காரணம் காட்டி காவல்துறை  கும்பாபிஷேகம் நடத்தக் கூடாது என்று தடை விதித்தது.

 

ஆண்டவர் கோயிலை வழிபடும் மக்கள் தங்கள் கஷ்டப்பட்டு புனரமைப்பு செய்து கோயில் கும்பாபிஷேகம் நடைபெறும் நேரத்தில் தடை உத்தரவு போடப்பட்டது கண்டு ஆத்திரம் அடைந்தனர். இதையடுத்து அந்த கிராம மக்கள் மற்றும் ஆண்டவர் சாமியின் குல தெய்வமாக வழிபடும் பக்தர்கள் திரளாக கூடி திருச்சி -சிதம்பரம் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். கோயில் கும்பாபிஷேக நடத்துவதற்கு அனுமதி தரவேண்டும் இல்லையேல் சாலை மறியலை கைவிட மாட்டோம் என்று பிடிவாதமாக இருந்தனர். இந்த நிலையில் இந்தத் தகவல் ஜெயங்கொண்டம் டிஎஸ்பி கலை கதிரவன், இன்ஸ்பெக்டர் ஜெகதீசன் மற்றும் போலீசாருக்கு தெரிவிக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம்  பேச்சுவார்த்தை நடத்தினர்.

 

குறிப்பிட்ட தேதியில் ஏற்கனவே முடிவு செய்தபடி ஆண்டவர் சாமிக்கு கும்பாபிஷேகம் நடத்துவதற்கு அனுமதி அளித்தால் தான் சாலை மறியலை கைவிடுவோம் என்று அதிகாரிகளிடம் பிடிவாதமாக கூறினர். அதன் பிறகு போலீசார் ஜெயங்கொண்டம் வட்டாட்சியர் ஆனந்தன் மற்றும் அதிகாரிகள் பக்தர்களிடம் நடத்திய பேச்சுவார்த்தையின் இறுதியில் இதுகுறித்து உடையார்பாளையம் கோட்டாட்சியரிடம் மனு அளித்து அவரது ஆலோசனையின்படி நடப்பதாக அதிகாரிகள் பொதுமக்கள் தரப்பில் பேசி முடிவு செய்யப்பட்டது. அதன் பிறகு பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

 

கோட்டாட்சியர் அனுமதியுடன் ஆண்டவர் சாமிக்கு எப்படியும் கும்பாபிஷேகம் நடத்தி முடிப்பது என்பதில் கிராம மக்கள் உறுதியுடன் உள்ளனர். மத்திய அரசு உத்தரப் பிரதேசம் உட்பட பல்வேறு மாநிலங்களில் தேர்தல் நடத்தப் போவதாக அறிவித்துள்ளது. அதேபோல் மாநிலத்தில் பல்வேறு இடங்களில் மக்கள் கும்பல் கூடுவது குறையவில்லை. இந்த நிலையில் தமிழகத்தில் விரைவில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடத்தப் போவதாக அறிவித்துள்ளது. இந்த நிலையில் கோவில் கும்பாபிஷேகங்கள், திருவிழாக்கள், பள்ளிகல்விக்கூடங்களை மட்டும் திட்டமிட்டு மூடுவது ஏன்? தமிழக மக்களின் கலாச்சாரம் பண்பாடு போன்ற அடிப்படை விஷயங்களில் தடைபோட்டு தடுக்கப்படுவதால் அவை அழியும் நிலையை அரசுகளே ஏற்படுத்தலாமா?என்று வேதனை தெரிவிக்கிறார்கள் பொதுமக்கள்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மாவட்டம் விட்டு மாவட்டம் தாவும் சிறுத்தை; இரவு பகலாகத் தேடும் வனத்துறை - மிரட்சியில் மக்கள்

Published on 13/04/2024 | Edited on 13/04/2024
People are afraid because of movement of leopards in Ariyalur

கடந்த சில நாட்களாக மயிலாடுதுறை பகுதியில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக வந்த செய்தியால் பொதுமக்கள் மத்தியில் பரபரப்பும் அச்சமும் ஏற்பட்டது. இதனையடுத்து, தற்போது அரியலூர் மாவட்டம் செந்துறை பகுதியில் சிறுத்தை நடமாட்டம் உள்ளதை பொதுமக்கள் நேரில் பார்த்துள்ளனர். இதனால் செந்துரையைச் சுற்றிலும் உள்ள கிராம மக்கள் பயத்திலும் அதிர்ச்சியிலும் தூக்கம் இன்றி தவிக்கின்றனர்.

இந்நிலையில் நேற்று முன்தினம்(11.4.2024) இரவு செந்துறை அரசு மருத்துவமனை பகுதியில் சிறுத்தை புகுந்ததை பூங்கோதை என்ற பெண்மணி உட்பட சிலர் நேரில் பார்த்துள்ளனர். பயந்து மிரண்டு போன அவர்கள் உடனடியாக செந்துறை காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். உடனடியாக காவல்துறை தீயணைப்புத்துறை பொதுமக்களும் அங்கு திரண்டனர். காவல்துறையினர் மருத்துவமனை பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர். அதில் மருத்துவமனை சாலையில் குறுக்கே சிறுத்தை கடந்து செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தது. இதனையடுத்து உடனடியாக தீயணைப்பு துறையினர் மற்றும் அப்பகுதி இளைஞர்கள் இணைந்து சிறுத்தையைத் தேட தொடங்கினர்.

People are afraid because of movement of leopards in Ariyalur

அப்போது ஒரு வெல்டிங் பட்டறை அருகே சிறுத்தை பதுங்கி இருந்ததை இளைஞர்கள் கண்டனர். அவர்கள் சிறுத்தையை விரட்ட சிறுத்தை அங்கிருந்து ஏந்தல் என்ற ஏரிக்குள் பாய்ந்து சென்று மறைந்துள்ளது. பின்னர் இதுகுறித்து தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. தகவலின் பேரில் விரைந்து வந்த வனத்துறையினர் ட்ரோன் கேமரா மூலம் சிறுத்தையின் நடமாட்டத்தை கண்காணித்தனர். ஆனால் விடிய விடிய தேடியும் சிறுத்தையைக் கண்டுபிடிக்க முடியவில்லை.

இதற்கிடையில், அந்தச் சிறுத்தை செந்துறை அருகில் உள்ள உஞ்சினி, பொன்பரப்பி, சிதலவாடி, பகுதிகளில் உள்ள வனத்துறைக்கு சொந்தமான முந்திரி காடுகளுக்குள் புகுந்து பதுங்கி இருக்கலாம் என்று சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து வனத்துறை அதிகாரிகள் கோவை மாவட்டம் வால்பாறை மலை காடுகளில் இருந்து 30க்கும் மேற்பட்ட வனத்துறையினரை செந்துறை வரவழைத்தனர். அவர்கள் சிறுத்தை நடமாட்டத்தை கண்டறிவதில் நிபுணர்கள் என்று கூறப்படுகிறது.

People are afraid because of movement of leopards in Ariyalur

இதையடுத்து அரியலூர் மாவட்ட வன அலுவலர் இளங்கோவன் தலைமையில் வனத்துறையினர் ட்ரோன் கேமரா மூலமும் அப்பகுதியில் உள்ள ஓடை பகுதியில்  கண்காணித்ததோடு, சில இடங்களில் கூண்டு வைத்து அந்தக் கூண்டுக்குள் ஆடுகளை விட்டு சிறுத்தையை வரவழைத்து பிடிப்பதற்கு கடும் முயற்சி செய்து வருகின்றனர். இது குறித்து வனத்துறை அதிகாரிகள் கூறும் போது செந்துறைப் பகுதியில் சிறுத்தை நடமாட்டம் இருப்பது உறுதியாகியுள்ளது. நின்னையூர், பகுதியில் சிறுத்தையின் காலடித்தடம் பதிந்துள்ளது.

மேலும் செந்துறை பகுதியில் கண்காணிப்பு கேமராவில் சிறுத்தை நடமாட்டம் இருப்பது உறுதியாகி உள்ளது. மயிலாடுதுறை பகுதியில் நடமாடிய சிறுத்தை அங்கிருந்து காடுகள் அதை ஒட்டி உள்ள ஓடை பகுதிகள் வழியாக செந்துறை பகுதிக்கு வந்திருக்கலாம் என்றும், மேலும் அது அங்கிருந்து காடுகள் மற்றும் ஓடை வழியாக பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பச்சை மலைக்கு செல்வதற்கான வாய்ப்பு உண்டு. அந்தச் சிறுத்தை இதுவரை விவசாயிகள் வளர்க்கும் கால்நடைகளையோ நாய்களையோ அடித்து உணவாக சாப்பிட்டதாக தகவல் இல்லை. அதன் வழிப்போக்கில் கிடைக்கின்ற உணவை சாப்பிட்டு சென்று கொண்டிருக்கிறது.

சிறுத்தையை பிடிக்கும் பணியில் தஞ்சாவூர் ,கடலூர், பெரம்பலூர், அரியலூர், ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட வன அலுவலர்கள் கால்நடை மருத்துவர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 24 மணி நேரமும் சிறுத்தை நடமாட்டத்தைக் கண்காணித்து வருகிறோம் என்று வனத்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இந்தச் சிறுத்தை நடமாட்ட அச்சத்தினால் செந்துறைப்பதியில் உள்ள அரசு பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.

People are afraid because of movement of leopards in Ariyalur

சிறுத்தை பிடிபடுமா? தப்பி செல்லுமா? என்று மக்கள் பதைபதைப்புடன் கிராமப்புறங்களில் பேசிக் கொள்கிறார்கள். இதனால் இரவு நேரங்களில் அரியலூர் மாவட்ட கிராமங்களில் மக்கள் நடமாட்டம் இரவு நேரங்களில் குறைந்து காணப்படுகிறது. பாராளுமன்றத் தேர்தல் பரபரப்பு ஒரு பக்கம், சிறுத்தை நடமாட்டத்தினால் ஏற்பட்ட பரபரப்பு மறுபக்கம் என மக்கள் மிரண்டு போய் கிடக்கிறார்கள்.

Next Story

பாகிஸ்தானில் பழங்கால இந்து கோவில் இடித்து தகர்ப்பு!

Published on 13/04/2024 | Edited on 13/04/2024
Demolition of a Historic Hindu temple in Pakistan!

இந்தியா - பாகிஸ்தான் பிரிவதற்கு முன்னாள், ஆப்கானிஸ்தான் - பாகிஸ்தான் எல்லையொட்டி, கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் ‘கைபர் கோவில்’ என்ற பழங்கால இந்து கோவில் ஒன்று செயல்பட்டு வந்தது. அதன் பின்பு, 1947ஆம் ஆண்டில் இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைத்ததற்குப் பின்னால், அங்குள்ள சிறுபான்மையின மக்களான இந்து மக்கள், இந்தியாவிற்கு புலம் பெயர்ந்து வந்தனர்.

இதனால், 1947ஆம் ஆண்டு முதல், அந்த இந்து கோவிலுக்குள் பக்தர்கள் யாரும் உள்ளே சென்று வழிபடவில்லை என்று கூறப்படுகிறது. இதன் காரணமாக, அந்த கோவில் மூடப்பட்டுள்ளது. காலப்போக்கில் இந்த கோவிலில் உள்ள செங்கற்கள் ஒவ்வொன்றாக விழுந்து, அந்த கோவில் சிதிலமடைந்து காட்சியளித்துள்ளது.

இந்த நிலையில், அந்தப் பழமையான இந்து கோவில், கடந்த 10 நாட்களுக்கு முன்பு முழுமையாக இடிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த கோவில் அமைந்திருந்த இடத்தில் புதிதாக வர்த்தக வளாகம் ஒன்று அமைக்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விவகாரம் குறித்து, பாகிஸ்தான் இந்து கோவில் நிர்வாகக் குழு கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்து பாகிஸ்தான் இந்து கோவில் நிர்வாகக் குழு கூறியதாவது, ‘முஸ்லிம் அல்லாதவர்களுக்கு மத முக்கியத்துவம் வாய்ந்த வரலாற்று கட்டிடங்களின் பாதுகாப்பு மற்றும் மறுசீரமைப்பை உறுதி செய்வது மாவட்ட நிர்வாகம் மற்றும் சம்பந்தப்பட்ட அரசுத் துறைகளின் பொறுப்பாகும்’ என்று கூறியுள்ளது.