Skip to main content

வீடு புகுந்து தாக்குதல் நடத்திய மர்ம கும்பல்; நடவடிக்கை எடுக்காத காவல்துறை

Published on 21/11/2022 | Edited on 21/11/2022

 

people complaints that police didn't take action

 

நாகை அருகே தென்மருதூரில் வீடு புகுந்து தாக்குதல் நடத்திய மர்ம கும்பல் மீது வலிவலம் போலீசார் உரிய நடவடிக்கை எடுக்கவில்லையென சாலைமறியலில் ஈடுபட்ட பொதுமக்களுக்கும் போலீசாருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

 

நாகை மாவட்டம், கீழ்வேளூர் அடுத்துள்ள தென்மருதூரைச் சேர்ந்தவர் ஜெயவேல். கடந்த சனிக்கிழமை மதியம் 20 பேர் கொண்ட மர்ம கும்பல் அவரது வீடுபுகுந்து கொடூரமாகத் தாக்குதல் நடத்தி டிராக்டரை எடுத்துச் சென்றுள்ளனர்.

 

இச்சம்பவத்தால் அதிர்ச்சியடைந்த ஜெயவேலுவின் உறவினர்களும், பொதுமக்களும் வலிவலம் காவல்நிலையத்தில் புகாரளித்துள்ளனர். ஆனால், அந்தப் புகாரின் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆத்திரமடைந்த ஜெயவேலுவின் உறவினர்களும், அவரது கிராமத்தைச் சேர்ந்தவர்களும் ஒன்றுதிரண்டுவந்து கீழ்வேளூர் - கச்சனம் பிரதான சாலையை மறித்து நியாயம் கேட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் குற்றவாளிகளுக்கு ஆதரவாக வலிவலம் காவல்துறையைச் சேர்ந்தவர்கள் செயல்படுவதாகக் கூறி அவர்களைக் கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பினர். அதோடு புகாரைப் பெற்றுக்கொண்டு நடவடிக்கை எடுக்காமல் கட்டப்பஞ்சாயத்து பேசுவதாகவும், குற்றவாளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் முழக்கமிட்டனர். 

 

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த கீழ்வேளூர் காவல்நிலைய ஆய்வாளர் தியாகராஜன், வந்த வேகத்திலேயே போராட்டக்காரர்களிடம், ‘புகார் கொடுத்தது இருக்கட்டும். யாரக் கேட்டு ரோட்ட மறிச்சீங்க. ரோட்டுல உட்காந்து எதுக்கு பப்ளிக்க மறிச்சீங்க. அடிச்சி தூக்கிப்போட்டுடுவேன்’ என மிரட்ட, அங்கிருந்த பெண் ஒருவர், ‘அடிச்சிக் கொல்லுங்க; நியாயம் கேட்டதுக்கு அடிச்சிக் கொல்லுங்க’ என இன்ஸ்பெக்டர் தியாகராஜனின் காலைப் பிடித்துக்கொண்டி தரையில் உருண்டு புரண்டார். உடன்பாடு எட்டப்படாத நிலையில், போலீசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. 

 

சாலைமறியல் போராட்டத்தால் சாலையின் இருபுறமும் வாகனங்கள் வரிசை கட்டியதால் பரபரப்பு அதிகமானது. அதன்பிறகு காவல்துறையினர் போராட்டக்காரர்களிடம் சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு, உரிய நடவடிக்கை எடுக்கப்படுவதாக உறுதி அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து போராட்டக்காரர்கள் தற்காலிகமாகப் போராட்டத்தைக் கைவிட்டனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

திமுக பிரமுகரின் வீடு சூறை; மோட்டார் சைக்கிள் எரிப்பு - திருச்சியில் பரபரப்பு

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
beaten on DMK executive house in Trichy

திருச்சி சின்னக்கடை வீதி பகுதியை சேர்ந்தவர் சுரேஷ்குமார்(45). இவரது வீட்டில் நேற்று இரவு மர்ம நபர்கள் ஐந்துக்கும் மேற்பட்டோர் நுழைந்து அவரது வீட்டை அடித்து நொறுக்கியதுடன் வெளியில் நின்று இருந்த இவரது மோட்டார் சைக்கிளை தீயிட்டு கொளுத்தினர். நள்ளிரவில் திடீரென   அக்கம்பக்கத்தினர் ஓடி வந்ததை கண்டதும் மர்ம நபர்கள்  அங்கிருந்து தப்பி சென்றனர். பிறகு அக்கம் பக்கத்தினர்  தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து  எரிந்து கொண்டிருந்த மோட்டார் சைக்கிளின் தீயை அணைத்தனர்.

இருப்பினும் மோட்டார் சைக்கிள் முழுவதும் எரிந்து எலும்பு கூடானது. பின்னர் இது குறித்து சுரேஷ்குமார் கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரில் அவருக்கும் தாராநல்லூர் பகுதியைச் சேர்ந்த ஒரு சில நபர்களுக்கும் கோவில் சம்பந்தமாக பிரச்சனை இருந்து வந்துள்ளது. எனவே அவர்கள் தான் செய்திருக்கலாம் என புகாரில் தெரிவித்துள்ளார்.

இது குறித்து கோட்டை காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். நள்ளிரவில் மர்ம நபர்கள் வீடு புகுந்து, வீட்டை  அடித்து நொறுக்கி மோட்டார் சைக்கிளை எரித்த சம்பவம் அப்பகுதி முழுவதும் பதற்றத்தை ஏற்படுத்தியது. சுரேஷ்குமாருக்கும் திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியில் பழக்கடை நடத்தி வரும் நபர் ஒருவருக்கும் கோவில் திருவிழா சம்பந்தமான பிரச்சனை ஒன்று ஏற்கெனவே உள்ளது. அதுமட்டுமின்றி தேர்தல் வேலைகளில் சுரேஷ்குமார் தீவிரமாக ஈடுபட்டதும், சுரேஷ்குமார் திமுக பிரமுகர் என்பதும் குறிப்பிடத்தக்கது

Next Story

விரக்தியில் இளம்பெண் எடுத்த விபரீத முடிவு; போலீசார் தீவிர விசாரணை

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
woman lost their life in trichy

திருச்சி கீழ தேவதானம் எஸ்.எஸ்.நகரை சேர்ந்தவர் கர்ணன் (வயது 46. ). இவரது மனைவி நித்யா (வயது 34). இவர் கடந்த ஆறு வருடங்களாக வலிப்பு நோயால் அவதிப்பட்டு வந்துள்ளார். மேலும் இவருக்கு கடந்த 3 வருடங்களாக தோல்நோய் தொடர்பான பிரச்சனையும் இருந்து வந்துள்ளது. இதற்காக நித்யா சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

இந்நிலையில் வாழ்க்கையில் விரக்திடைந்த நித்யா சம்பவத்தன்று வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது பற்றி தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கோட்டை போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.