Skip to main content

மு.க. ஸ்டாலின் பதவியேற்பு.... மரக்கன்றுகள் இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்..!

Published on 07/05/2021 | Edited on 07/05/2021

 

people celebrate stalin swearing ceremony by offering sapling and sweets

 

2021 சட்டமன்றத் தேர்தலில் அதிக இடங்களில் வெற்றிபெற்ற திமுக, அந்தக் கட்சியின் தலைவர் மு.க. ஸ்டாலினை முதலமைச்சராக பதவியேற்பதற்கு ஒப்புதல் அளித்திருந்தது. இந்நிலையில், இன்று (07.05.2021) பதவியேற்பு விழா எளிமையாக நடைபெற்றது. தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோஹித் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட அமைச்சர்களுக்கு பதவிப் பிரமாணம் செய்துவைத்தார். இந்த நிலையில், 10 வருடங்களுக்குப் பிறகு திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்துள்ளதால் தமிழகம் முழுவதும் உள்ள திமுக தொண்டர்கள் பட்டாசு வெடித்து, இனிப்புகள் வழங்கி மகிழ்ந்தனர். 

 

people celebrate stalin swearing ceremony by offering sapling and sweets

 

தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாட்டில், அதே தொகுதியில் திமுக வேட்பாளராக போட்டியிட்டு, அதிமுக வேட்பாளர் வைத்திலிங்கத்திடம் வெற்றியைப் பறிகொடுத்த புல்லட் ராமச்சந்திரன் தலைமையிலான திமுக கூட்டணிக் கட்சியினர், அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து இனிப்புகள் வழங்கி கொண்டாடினார்கள். இதேபோல மாவட்டம் முழுவதும் கொண்டாட்டங்கள் இருந்தன. புதுக்கோட்டை மாவட்டத்தில் புதுக்கோட்டை நகர் தொடங்கி அனைத்து கிராமங்களில் பட்டாசு வெடித்து, இனிப்புகள் வழங்கப்பட்டன. மேலும், மாவட்டத்தில் இருந்து ரகுபதி, மெய்யநாதன் என இரு அமைச்சர்கள் பதவியேற்றதால் கூடுதல் உற்சாகமாக கொண்டாடினர்.

 

people celebrate stalin swearing ceremony by offering sapling and sweets

 

கீரமங்கலம் அருகில் உள்ள கொத்தமங்கலத்தில் திமுக பொன். லோகநாதன், நிர்வாகிகள் ஆகியோர் கட்சிக் கொடி ஏற்றி வெற்றி முழக்கமிட்டனர். தொடர்ந்து சிபிஐ முன்னாள் மாவட்டச் செயலாளர் செங்கோடன் முன்னிலையில் இனிப்புகளுடன் மரக்கன்றுகளும் வழங்கி கொண்டாடினார்கள். இந்த நாளில் வழங்கப்படும் மரக்கன்றுகள் சுற்றுச்சூழலைப் பாதுகாத்து பல வருடங்களுக்கு நிலைத்து நிற்கும் என்றனர். இப்படி கீரமங்கலம், செரியலூர், வடகாடு, மாங்காடு, அணவயல் உட்பட மாவட்டத்தின் பல இடங்களிலும் கொண்டாடப்பட்டது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“என்ன எல்லாரும் பளபளன்னு இருக்கீங்க... ஆயிரம் ரூபாய் வந்துடுச்சா” - கதிர் ஆனந்த் பிரச்சாரம்

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Kathir Anand campaign in Vellore

வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பரதராமி, கல்லப்பாடி, கொண்டசமுத்திரம்,  பி.கே.புரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வேலூர் பாராளுமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் பிரச்சாரம் மேற்கொண்டார்

அப்போது பேசிய கதிர் ஆனந்த், ட்ரைவர் வண்டி மேல இருக்க ஹெட் லைட் எல்லாம் ஆஃப் பண்ணுப்பா. என் மூஞ்சு தெரியமாட்டுதாம் என்று கூற, உடனடியாக ட்ரைவரும் லைட் ஆஃப் பண்ண, மக்களை பார்த்து இப்போது எனது முகம் தெளிவாக தெரிகிறதா? என்று கேட்டார். அதற்கு மக்களும் தொண்டர்களும் தெரியுது தெரியுது என்று சிரித்துக்கொண்டே கூற தனது பேச்சைத் தொடங்கினார்.

அந்த கலகலப்பு குறையாமல் இருக்க மக்களைப் பார்த்து, என்ன எல்லாரும் பல பளபளன்னு இருக்கீங்க... எல்லாம் ஃபுல்லா மேக்கப் போட்டு வந்து இருக்கீங்களா... ஃபேரன் லவ்லி, ஸ்டிக்கர் பொட்டு எல்லாம் போட்டு ஜம்முன்னு வந்திருக்கீங்களா... என்று கேட்க கூட்டத்தில் இருந்தவர்கள் சிரிக்க ஆரம்பிக்க, அதைவிட உங்க முகத்தை பார்க்கும் போது ஒரு புன்னகை, சந்தோஷம் தெரிகிறது.

நான் வந்தவுடனே சீதாராமன் கிட்ட கேட்டேன், “என்னாங்க எல்லார் மத்திலயும் ஒரு சந்தோஷம் இருக்குதே என்னா காரணம்னு கேட்டேன். அதுக்கு அவரு சொன்னாரு எல்லாருக்கும் மாசம் மாசம் ரூ. 1000 பணம் கொடுக்குறாங்களாம். அதான் எல்லாரும் ஹாப்பியா இருக்காங்களாமானு சொன்னாரு...’ என்ன உண்மையா அது? என்று பெண்களை பார்த்து கேட்க, அவர்களும் ஆம் என்று கூச்சலிட்டனர். அப்பொழுது சிலர் இன்னும் எங்களுக்கு வரவில்லை என கூறினர். அதற்கு இந்த தேர்தல் முடிந்தவுடன் அனைவருக்கும் கலைஞர் மகளிர் ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று  மக்களிடையே தனது கலகலப்பான பேச்சை தொடர்ந்து பிரச்சாரம் மேற்கொண்டார்.

இருப்பினும், ஃபேரன் லவ்லி போட்டீங்களா? பொட்டு வச்சீங்களா? பளபளன்னு இருக்கீங்க என கதிர் ஆனந்த் கேட்டது பெண்களிடம் முகச்சுழிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனை எதிர்க்கட்சிகள், பெண்களை கொச்சைப்படுத்தி பேசுகிறார் வேட்பாளர். இது மேட்டிமைத்தனம், ஆயிரம் ரூபாய் இல்லை என்றால் பெண்கள் என்ன பொட்டு வைக்கக் கூடாதா? தங்களை அழகுபடுத்திக் கொள்ளக் கூடாதா? எனக் கேள்வி எழுப்பி விமர்சனம் செய்து வருகின்றனர்.

Next Story

கமல்ஹாசனை சந்தித்த டி.ஆர். பாலு

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
TR Balu met Kamal Haasan

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

நேற்று வேட்புமனு தாக்கல் முடிந்த நிலையில், இன்று வேட்புமனு பரிசீலனை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்துள்ள கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம், இந்த தேர்தலில் இந்தியா கூட்டணியை ஆதரித்து தமிழகத்தில் பிரச்சாரம் செய்யும் எனக் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்திருந்தார் .

திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள விசிக கட்சியின் தலைவர் திருமாவளவன் நடிகர் கமல்ஹாசனை நேரில் சந்தித்து தங்களுக்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்ய வேண்டும் எனக் கேட்டுக் கொண்டிருந்தார். தற்போது ஸ்ரீபெரும்புதூர் திமுக நாடாளுமன்ற வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள டி.ஆர்.பாலுவும், அமைச்சர் சேகர்பாபுவும் ஆழ்வார்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மய்யத்தின் தலைமை அலுவலகத்திற்குச் சென்றனர். இந்த சந்திப்பில் நடிகர் கமல்ஹாசன் தேர்தல் பிரச்சாரத்தில் பங்கேற்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்ததாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.