Skip to main content

ஆவணமின்றி யானை வைத்திருந்தவர்களுக்கு அபராதம்... வனத்துறை அதிரடி!

Published on 29/05/2022 | Edited on 29/05/2022

 

Penalty for possession of undocumented elephant ... Forest Department Action!

 

நெல்லை மாவட்டத்தின் களக்காடு முண்டன்துறை புலிகள் காப்பகம், அம்பை கோட்டம், கடையம் வனச்சரகத்திற்குட்பட்ட கோவிந்தபேரி பீட் வெளிமண்டலப் பகுதியின் பாப்பன்குளம் கிராமத்தில் தனியார் இருவர் யானை வைத்திருப்பதாக கடையம் வனச்சரக அலுவலகரான ராதைக்குத் தகவல் கிடைக்க, அவரது உத்தரவின் அடிப்படையில் வனகாப்பாளர் ரமேஷ் உள்ளிட்ட வனத்துறையினர் குறிப்பிட்ட பகுதிக்குச் சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் கேரளாவின் கோட்டயத்திலிருந்து பொட்டல் புதூர் கமிட்டிக்கு இனாமாகப் பெறப்பட்ட அந்த யானையை உரிய உரிம ஆவணமின்றி கொண்டுவந்தது தெரிய வந்திருக்கிறது. இதனைத் தொடர்ந்து பொட்டல் புதூரைச் சேர்ந்த பீர்முகமது, பக்கர் இருவருக்கும் களக்காடு முண்டன்துறை புலிகள் வனக் காப்பக இயக்குநர் செண்பகபிரியாவின் உத்தரவின்படி, தலா 25,000 வீதம் 50,000 ரூபாய் அபராதம் விதித்தனர். இதனைப்போன்று உரிய அரசு ஆவணமின்றி வனஉயிரியல் இனமான யானையை வைத்திருப்பது தண்டனைக்குரிய குற்றம் என்கிறார்கள் வனத்துறையினர்.

 

அவர்களிடம் சில பேப்பர்கள் இருக்கின்றன ஆனால் தமிழக வனத்துறையின் உரிய அனுமதி இல்லை. எனவே யானை வந்த விதம் பற்றி விசாரணை நடத்தப்படுகிறது என்கிறார் வனச்சரக அலுவலகரான ராதை. கேரளாவில் யானைகளுக்கு ரசிகர் பட்டாளம் ஏராளம்.

 

கேரளாவின் கொல்லம் கோட்டயம், பத்தனம்திட்டா போன்ற பகுதிகளில் நாம் விசாரித்தபோது, கேரள மாநில சட்டப்படி யானையை வாங்குவதும் விற்பதும் குற்றம். தண்டனைக்குரியது. மாநில அரசால் கூட யானையை விற்க முடியாதாம். அந்த மாநில  வனச் சட்டப்படி, யானையை வைத்திருப்பவர்கள் அரசால் வழங்கப்பட்ட உரிய லைசென்ஸ் வைத்திருக்க வேண்டும். மலைமுகடுகளைக் கொண்ட கேரளாவில் யானைகள் அதிகம் என்பதால் அவைகளைப் பாதுகாக்க வேண்டி நடைமுறைகள் பின்பற்றப்படுகின்றன என்கிறார்கள். மேலும் ஒரு யானையின் விலையே சாதாரணமாக ஒன்றரை கோடியைத் தாண்டுமாம்.

 

மேலும் கோவில்களைக் கொண்ட கடவுள்களின் தேசமான கேரளாவில் யானைகளை அம்பாரி, ரத்தினம் பதித்த அங்கி கம்பளம் போன்ற சர்வ அலங்காரங்களுடன் அலங்கரித்து கோவில்களின் விழாவின் போது கொண்டு வரப்படுகிற அலங்கார யானைகளின் கம்பீர நடையைக் காண்பதற்கு கேரள மக்கள் ஆர்வம் காரணமாக அலை அலையாகத் திரள்வதுண்டு. திருக்கடவூர், திருச்சூர்பூரம், திருவாங்கூர் தேவசம் போர்டு ஆலயங்களின் திருவிழாக்களில் கலந்து கொள்கிற ஜோடிக்கப்பட்ட ஒரு யானையின் ஒரு நாள் வாடகையாக, 2 லட்சம், 3, 4 லட்சம் என்று யானையின் கம்பீர தோற்றத்திற்கு ஏற்ப தரப்படுமாம். இப்படி யானைக்கான வாடகைத் தொகை லட்சங்களில் கிடைப்பதாலேயே யானையை வைத்திருக்கும் தனியார்கள் சிலர் வியாபார நோக்கில் பயன்படுத்துவதும் உண்டாம். யானை இருந்தாலும், இறந்தாலும் ஆயிரம் பொன்தான் என்கிறது சொல்லாடல்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மின்னணு வாக்குப்பதிவு குறித்த புகார்; உச்ச நீதிமன்றம் அதிரடி!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Complaint about electronic voting; The Supreme Court is in action

தேர்தலின் போது மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவாகும் வாக்குகளுடன் ஒப்புகை சீட்டையும் எண்ண வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டிருந்தது. கடந்த முறை இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, ‘ஒப்புகைச் சீட்டு இயந்திரம் கடந்த 2017 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்டது. அதில் வெளிப்படையாக தெரியும் கண்ணாடி பொருத்தப்பட்டுள்ளது. ஆனால் அந்த ஒப்புகை சீட்டு உள்ளே விழுகிறதா? என்பது கூட வாக்காளர்களுக்கு தெரியவில்லை. ஒவ்வொரு மக்களவைத் தொகுதியிலும் உள்ள ஒரு சட்டப்பேரவை தொகுதியில் ஏதாவது 5 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகளுடன் ஒப்புகை சீட்டு சரிபார்க்கப்படுகிறது. இது வெறும் இரண்டு சதவீதம் மட்டுமே சரி பார்ப்பாகும். இதிலும் முறைகேடு ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே இதனைத் தடுக்க மின்னணு வாக்குப்பதிவை மக்கள் நம்பாத பட்சத்தில் ஒப்புகை சீட்டுகளை அதனுடன் ஒப்பிட்டு எண்ணிக்கை நடத்த வேண்டும்’ என மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.

இதைக் கேட்ட நீதிபதிகள், ‘இந்தியாவில் வாக்காளர்களின் எண்ணிக்கை 1960ல் 50 லிருந்து  60 கோடிகளில் தான் இருந்தது. ஆனால் தற்பொழுது 97 கோடிக்கு மேல் பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் இருக்கிறார்கள். இவர்களில் சராசரியாக 65 சதவீதம் பேர் வாக்களிக்கிறார்கள், என்றால் கூட அத்தனை வாக்குகளையும் ஒப்புகை சீட்டுகளையும் எப்படி, எப்போது எண்ணி முடிப்பது? இத்தனை கோடி வாக்கு ஒப்புகை சீட்டுகளை எண்ணி முடிக்க 12 நாட்கள் ஆகும் எனத் தேர்தல் ஆணையம் பிரமாண பத்திரத்தில் தெரிவித்துள்ளது என நீதிபதிகள் சார்பில் தெரிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து மனுதாரர் தரப்பில், ‘மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை எந்த விதத்திலும் தவறாக பயன்படுத்த முடியாது எனத் தேர்தல் ஆணையம் தெரிவிக்கிறது. இதுவரை தவறாக பயன்படுத்தப்படுவதில்லை என்றும் கூறுகிறது. ஆனால் எதிர்காலத்திலும் இவ்வாறு நடக்காது என்று  சொல்ல முடியாது எனவே. 100% ஒப்புகை சீட்டுகளை சரி பார்ப்பதற்கு உத்தரவிட வேண்டும்’ என மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.

இந்நிலையில் இந்த வழக்கு இரண்டாவது முறையாக இன்று (18.04.2024) மீண்டும் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் ஆஜரானார். அவர் அப்போது வாதிடுகையில், “கேரளா மாநிலம் காசர்கோடு சட்டமன்ற தொகுதியில் நடந்த மாதிரி வாக்குப்பதிவில் ஒரு முறை வாக்குப்பதிவு இயந்திரத்தின் பொத்தானை அழுத்தினால் பாஜகவுக்கு 2 ஓட்டுகள் விழுவதாக காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் சார்பில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார். இதனையடுத்து இது குறித்து விசாரிக்க தேர்தல் ஆணையத்திற்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் ஒப்புகைச் சீட்டு இயந்திரத்தை பற்றி பல்வேறு கேள்விகளையும் நீதிபதி எழுப்பியுள்ளனர். 

Next Story

திருமணத்தின் போது மணமகனின் அநாகரிக செயல்; அதிரடி முடிவு எடுத்த மணப்பெண்!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
The bride who broke off the wedding in kerala

கேரளா மாநிலம், பத்தனதிட்டம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் 32 வயது வாலிபர். இவர் துபாயில் வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில், இவருக்கும் அதே மாவட்டத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கும் பெரியோர்களால் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. மேலும், இவர்களது திருமணம் அங்குள்ள ஒரு தேவாலயத்தில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில், திருமண நாள் அன்று, மணமகன் மது குடித்துவிட்டு போதையில் மணமேடைக்கு வந்து கொண்டிருந்தார். இதனைக் கண்ட, மணப்பெண் உள்பட அனைவரும் அதிர்ச்சியடைந்தனர். மேலும், மது போதையில் இருந்த மணமகன், பாதிரியாரிடமும், மணபெண்ணின் உறவினர்களிடம் தகராறு செய்துள்ளார். இதனைக் கண்டு கோபமடைந்த மணப்பெண், திருமணம் வேண்டாம் என்று அங்கிருந்து புறப்பட்டு சென்றுள்ளார். இதனால், அவர்களது திருமணம் பாதியில் நின்றுள்ளது.

இந்த சம்பவம் குறித்து, இரு வீட்டாருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதனால், அங்கு கைகலப்பு ஏற்பட்டுள்ளது. இதனை கண்ட அங்கிருந்தவர்கள், இந்த சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், இரு வீட்டாரிடமும் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் மணப்பெண் குடும்பத்தினர், ‘தங்களுக்கு இந்த திருமணத்தில் விருப்பமில்லை என்றும், திருமணத்திற்கு பெரும் தொகை செலவு செய்ததால், அந்த தொகையை நஷ்ட ஈடாக திரும்ப தர வேண்டும். இல்லையென்றால், மணமகன் மீதும், அவரது உறவினர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்ய வேண்டும்’ என்று கோரிக்கை வைத்தனர்.

அதற்கு, மணப்பெண் குடும்பத்தினர் செலவு செய்த தொகையான 6 லட்ச ரூபாயை நஷ்ட ஈடாக திரும்ப கொடுக்க மணமகனின் குடும்பத்தினர் ஒப்புக்கொண்டனர். இதனையடுத்து, அனைவரும், அங்கிருந்து கலைந்து சென்றனர். இதற்கிடையே, மது போதையில் அனைவரிடமும் தகராறு செய்ததற்காக மணமகனின் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.