Skip to main content

தவறவிட்ட குழந்தையை திரும்ப பெற தவிக்கும் பெற்றோர்!  

Published on 08/02/2022 | Edited on 08/02/2022

 

Parents who went in search of a lost child!

 

சென்னை கண்ணகி நகரைச் சேர்ந்தவர் கவியரசு(28). இவர், அதே பகுதியைச் சேர்ந்த கணவரை இழந்த விமலா(32) எனும் பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார். இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இந்நிலையில், சில தினங்களுக்கு முன்பு வேலூரில் விமலா தள்ளுவண்டி கடைப் போட்டு தின்பண்டங்கள் விற்பனை செய்து வந்துள்ளார். கடந்த 5ம் தேதி கணவர் கவியரசுவிடம் விமலா வியாபாரத்திற்கு முதலீடு செய்ய பணம் கேட்டுள்ளார். இதனால் கணவன் மனைவி இருவருக்கும் இடையே தகராறு நடந்துள்ளது. 

 

அதில் கோபமுற்ற விமலா, ‘குழந்தையை மட்டும் தூக்கிக் கொண்டு போ’ என்று கணவரிடம் கோபமாக கூறியுள்ளார். கவியரசும் 6 மாத குழந்தையை தூக்கிக்கொண்டு அன்று இரவு 11 மணி அளவில் புதுச்சேரி நோக்கி பஸ்ஸில் வந்துள்ளார். அவர் வந்த பஸ் கல்பாக்கம் பஸ் நிலையத்தில் சிறிது நேரம் நின்றுள்ளது. அப்போது பஸ்சில் பயணம் செய்த (சரஸ்வதி) ஒரு பெண்ணிடம் குழந்தையை கொடுத்துவிட்டு இயற்கை உபாதை கழித்துவிட்டு வருவதாகக் கூறிச் சென்றுள்ளார் கவியரசு. 

 

திரும்பிவந்து பஸ்ஸில் ஏறுவதற்குள் அந்த பஸ் புறப்பட்டு சென்றுவிட்டது. குழந்தையை பெண் பயணியிடம் கொடுத்துவிட்டு தவித்த கவியரசு, அதன் பிறகு வேறு ஒரு பஸ்ஸை பிடித்து புதுச்சேரி பஸ் நிலையம் வந்து பல்வேறு இடங்களில் குழந்தையை தேடி அலைந்துள்ளார். குழந்தையை கண்டுபிடிக்க முடியவில்லை. இதுகுறித்து தனது மனைவி விமலாவிடம் சம்பவத்தை கூறி அழுதுள்ளார். 

 

இந்தநிலையில் பஸ்ஸில் குழந்தையை தவறு விட்டுவிட்டு சென்ற நபரை போலீசார் தேடி வருவதாக பத்திரிகை செய்தி வெளிவந்தது. இதை அறிந்த கவியரசு, அவரது மனைவி விமலா இருவரும் கோட்டக்குப்பம் காவல் நிலையத்துக்குச் சென்று நடந்த சம்பவங்களை கூறி குழந்தையை தருமாறு கேட்டுள்ளனர். குழந்தை உங்களுடையது தான் என்பதற்கான ஆதாரம் என்ன கொண்டு வந்துள்ளீர்கள் என்று போலீசார் கேட்டுள்ளனர். 

 

ஆனால், அவர்கள் இருவரும் ஆதாரம் எதுவும் எடுத்து வராததால், குழந்தையை காவல்துறையினர் தொட்டில் குழந்தை திட்டத்தில் ஒப்படைத்துள்ளனர். மேலும், அவர்களிடம் உங்கள் குழந்தை தான் என்பதற்கு உரிய ஆதாரங்களை எடுத்துச் சென்று மாவட்ட ஆட்சியரிடம் கொடுத்து குழந்தை பெற்றுக் கொள்ளுங்கள் என்று கூறி அனுப்பியுள்ளனர். அதன்படி, அவர்கள் இன்று ஆதாரங்களை எடுத்துக் கொண்டு விழுப்புரம் மாவட்ட ஆட்சித் தலைவரை சந்திக்க சென்றனர். 
 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பா.ம.க. வேட்பாளரை ஆதரித்து ராமதாஸ் பிரச்சாரம்!

Published on 24/03/2024 | Edited on 24/03/2024
PMK Ramdas campaign supporting the candidate

நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது. அந்த வகையில், தி.மு.க, அ.தி.மு.க., காங்கிரஸ், தேமு.தி.க., பா.ம.க., பா.ஜ.க. உட்படப் பல்வேறு கட்சிகள் தேர்தல் கூட்டணி, தொகுதிப் பங்கீடுகள் முடிவடைந்து வேட்பாளர்கள் அறிவிப்பு, தேர்தல் பிரச்சாரம் உள்ளிட்ட தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.

அதன் ஒரு பகுதியாக தமிழக முதலமைச்சரும் தி.மு.க. தலைவருமான மு.க. ஸ்டாலின் தமிழ்நாடு முழுவதும் இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் நேற்று முன்தினம் (22.03.2024) திருச்சி சிறுகனூரில் நடைபெற்ற பிரச்சார பொது கூட்டத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் கலந்துகொண்டு திருச்சி தொகுதி ம.தி.மு.க. வேட்பாளர் துரை வைகோவையும், பெரம்பலூர் தொகுதி தி.மு.க. வேட்பாளர் அருண் நேருவையும் ஆதரித்து வாக்கு சேகரித்து தனது பிரச்சாரத்தை தொடங்கினார். இத்தகைய சூழலில் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று (24.03.2024) மாலை திருச்சி மாவட்டம் நவலூர் குட்டப்பட்டு வண்ணாங்கோயில் என்ற இடத்தில் இந்த நாடாளுமன்ற தேர்தலுக்கான அ.தி.மு.க.வின் முதல் தேர்தல் பரப்புரைக் கூட்டத்தை தொடங்கியுள்ளார்.

இதற்கிடையே பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பெற்றுள்ள பட்டாளி மக்கள் கட்சிக்கு காஞ்சிபுரம், அரக்கோணம், தர்மபுரி, ஆரணி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சேலம், திண்டுக்கல் மற்றும் மயிலாடுதுறை ஆகிய 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. இதனையடுத்து பா.ம.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர். அதன்படி அரக்கோணம் - பாலு, கடலூர் - தங்கர்பச்சான், திண்டுக்கல் - திலகபாமா, தர்மபுரி - செளமியா அன்புமணி, விழுப்புரம் - முரளி சங்கர், ஆரணி - கணேஷ் குமார், மயிலாடுதுறை - ம.க. ஸ்டாலின், சேலம் - அண்ணாதுரை, கள்ளக்குறிச்சி - தேவதாஸ்  காஞ்சிபுரம் - ஜோதி வெங்கடேஷ் ஆகியோர் அறிவிக்கப்பட்டனர்.

இந்நிலையில் விழுப்புரம் மக்களவைத் தொகுதி பா.ம.க. வேட்பாளர் முரளி சங்கரை ஆதரித்து கோவடி கிராமத்தில் அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசுகையில், “விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதிக்கு ஒரு நல்ல வேட்பாளரான முரளி சங்கர் நிறைய படித்துள்ளார். 6 மொழிகளில் சரளமாக பேசுவார். மக்களை பற்றி சிந்திக்க கூடியவர். மக்களுக்காக பாடுபடக்கூடியவர். சிறந்த விளையாட்டு வீரரும் ஆவார்” எனத் தெரிவித்தார். 

Next Story

சிறுமி பாலியல் வன்கொடுமை?; டெல்லியில் பரபரப்பு

Published on 24/03/2024 | Edited on 24/03/2024
4 years old girl child inciedent in delhi

டெல்லியில் டியூஷன் சென்டர் ஒன்றில் 4 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகக் கூறி பாண்டவ் நகர் பகுதியில் மக்கள் போராட்டம் நடத்தினர். அப்போது அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார்களை போராட்டக்காரர்கள் அடித்து நொறுக்கினர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இது குறித்து டெல்லி கிழக்கு சரக கூடுதல் காவம் ஆணையர் சாகர் சிங் கல்சி கூறுகையில், “ 4 வயது சிறுமி ஒருவர் டியூஷன் படிக்கும் இடத்தில் 34 வயது மதிக்கத்தக்க நபர் பாலியல் வன்கொடுமை செய்ததாக நேற்று (23.03.2024) மண்டவாலி காவல்நிலையத்திற்கு புகார் ஒன்று வந்தது. இதனையடுத்து அவர் மீது வழக்குப்பதிவு செய்து அந்த நபரை போலீசார் கைது செய்தனர். இருப்பினும் இது குறித்து எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என இந்த பகுதியில் வதந்தி பரவியதால் மக்கள் திரண்டனர். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார் அமைதியான சூழலை ஏற்படுத்தினர். பாதிக்கப்பட்ட குழந்தை பாதுகாப்பாக இருக்கிறது” எனத் தெரிவித்தனர்.

மேலும் டெல்லி கிழக்கு போலீஸ் டிசிபி அபூர்வ குப்தா கூறுகையில், “சிறுமியின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக வதந்தி பரப்பப்படுகிறது. ஆனால் அது உண்மையல்ல. அவளது உடல்நிலை சீராக உள்ளது. இந்த வழக்கு குறித்த அனைத்து சட்ட நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன. சிறுமிக்கு மருத்துவ சிகிச்சை முடிந்துவிட்டது. மருத்துவ ஆலோசகரிடம் நன்றாகப் பேசுகிறார். ஒரு சிலர் உள்நோக்கத்தோடும் பரப்பும் பொய்யான தகவல்களை நம்பி தேவையற்ற செயல்களில் ஈடுபட வேண்டாம் என்று மக்களை கேட்டுக்கொள்கிறேன்” எனத் தெரிவித்தார்.