Skip to main content

ஜாதியை சொல்லி திட்டியதால் பினாயில் குடித்த மாணவிகள் - ஆசிரியை மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பெற்றோர் புகார்

Published on 16/02/2023 | Edited on 16/02/2023

 

Parents file complaint against student-teacher who drank pinay for insulting students by caste

 

திண்டுக்கல் மாவட்டம் சின்னாளபட்டியில் உள்ள அரசு உதவிபெறும் தனியார் உயர்நிலைப்பள்ளி மற்றும் மேல்நிலைப்பள்ளி குறிப்பிட்ட ஒரு சமூகத்தினரால் நடத்தப்பட்டு வருகிறது. இதில் செம்பட்டி சாலையில் உள்ள பெண்கள் உயர்நிலை பள்ளியில் தொப்பம்பட்டியை சேர்ந்த பிச்சைமுத்து என்பவரின் மகள் பிருந்தா 9வது வகுப்பு படித்து வந்துள்ளார். இதுபோல அப்பள்ளியில் கீர்த்தனா என்ற மாணவியும் படித்து வந்துள்ளார். இந்த இரண்டு மாணவிகளும் பள்ளி வாகனத்தில் பள்ளிக்கு வருவதாகக் கூறப்படுகிறது. பள்ளியில் கணித ஆசிரியையாக இருக்கும் பிரேமலதா என்பவர் மாணவி பிருந்தா மற்றும் கீர்த்தனாவை மாணவிகள் மத்தியில் நிற்க வைத்து மாணவிகளின் ஜாதியை சொல்லி திட்டியதாகவும் கூறப்படுகிறது. மேலும் மாணவியரிடம் யாரும் பழக்கவழக்கம் வைத்துக்கொள்ள வேண்டாம் என்றும் மாணவிகளுக்கு பள்ளி வாகனத்தில் இருக்கையில் அமர வைக்கக் கூடாது என்றும் கூறியதாக மாணவியர்கள் தரப்பில் கூறப்படுகிறது.

 

இந்த நிலையில், கடந்த 15ம் தேதி ஆசிரியை பிரேமலதா மாணவிகளை கடும் சொல்லால் திட்டியதால் மாணவிகள் இருவரும் பள்ளியின் கழிப்பறையில் வைக்கப்பட்டிருந்த பினாயிலை குடித்துள்ளனர். இதைப் பார்த்த மாணவிகள் உடனடியாக பள்ளி நிர்வாகத்திடம் தெரிவிக்கவே, மாணவிகளை உடனடியாக சின்னாளபட்டியில் உள்ள அரசு சமுதாயநல மையத்திற்கு கொண்டுசென்று முதலுதவி அளித்த பின்பு திண்டுக்கல்லில் உள்ள மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளனர். மாணவிகள் இருவரும் பட்டியல் இனத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் நீதிபதி மருத்துவமனைக்கு சென்ற மாணவிகளிடம் வாக்குமூலம் பெற்றுள்ளனர். இந்த விஷயம் ஈரோடு தேர்தல் பிரசாரத்திலிருந்த ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு தெரியவே உடனே மருத்துவமனை டீனை தொடர்பு கொண்டு மாணவிகளுக்கு தீவிர சிகிச்சை அளிக்க வேண்டும் என்று கூறி இருக்கிறார்.

 

Parents file complaint against student-teacher who drank pinay for insulting students by caste

 

அதன்பின்னர் நேற்று காலை 8 மணியளவில் தொப்பம்பட்டிக்கு மாணவிகளை அழைத்துவர வந்த பள்ளி வாகனத்தை சிறைபிடித்த தொப்பம்பட்டி கிராம மக்கள் மாணவிகளை ஜாதியை சொல்லி திட்டிய ஆசிரியை மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று போராட்டம் நடத்தியுள்ளனர். அதன் பின்னர் தொப்பம்பட்டியை சேர்ந்த ஊர் முக்கிய பிரமுகர்கள் பேச்சுவார்த்தை நடத்தி பள்ளி வாகனத்தை விடுவிக்க செய்தனர். அதன்பின்னர் கிராம மக்கள் நேரடியாக சின்னாளபட்டி காவல்நிலையத்திற்கு வந்து முற்றுகையிட்டதோடு ஆசிரியை பிரேமலதா மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கோஷமிட்டனர். மாணவியின் தாயார் முனீஸ்வரி சின்னாளபட்டி காவல்நிலையத்தில் ஆசிரியை மீது நடவடிக்கை எடுக்ககோரி புகார் மனு அளித்தார். அதன்பின்பு சின்னாளபட்டி காவல்நிலையத்திற்கு வந்த மாவட்ட எஸ்.பி.பாஸ்கரன், காவல்துறை கண்காணிப்பாளர்கள் இமானுவேல் ராஜ்குமார், ராஜாமுரளி, உதயகுமார் ஆகியோர் முற்றுகையிட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி மறியலை கைவிடச் செய்தனர்.

 

Parents file complaint against student-teacher who drank pinay for insulting students by caste

 

அதைத் தொடர்ந்து கோட்டாட்சியர் சந்தோஷ், வட்டாட்சியர் சரவணன், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் சிவக்குமார், நன்னடத்தை அலுவலர்கள் சேமலா, சரஸ்வதி, ஆகியோர் செம்பட்டி சாலையில் உள்ள பள்ளிக்கு சென்று பள்ளி தலைமையாசிரியர் மற்றும் புகார் செய்யப்பட்ட ஆசிரியையிடம் 2 மணிநேரம் விசாரணை செய்த பின்பு பள்ளிக்கு மாணவியை வரவழைத்து விசாரணை செய்து வாக்குமூலம் பெற்றனர். இதுகுறித்து கேள்விப்பட்டவுடன் காவல்நிலையத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள் பள்ளிக்கும் வந்து முற்றுகையிட்டு மறியலிலும் ஈடுபட்டனர். பின்னர் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி மறியலை கைவிடச் செய்தனர். அதன் பின்னரும் காவல்துறையினர் முறையான நடவடிக்கை எடுக்கவில்லை என்றும், ஆசிரியைக்கு சாதகமாக செயல்படுவதாகவும் கூறி மீண்டும் காவல்நிலையத்தை முற்றுகையிட்டு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் மத்தியில் பேசிய காவல் துணை கண்காணிப்பாளர்கள் இமானுவேல் ராஜ்குமார், ராஜா முரளி, உதயகுமார் ஆகியோர் முறைப்படி நடவடிக்கை எடுப்பதற்காக நாங்கள் தயாராக உள்ளோம். பள்ளி நிர்வாகத்திடம் ஒப்புதல் பெற்ற பின்பு வழக்குப் பதிவு செய்வோம் எனக் கூறியதை அடுத்து மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.

 

Parents file complaint against student-teacher who drank pinay for insulting students by caste

 

இந்த நிலையில், பிரச்சனைக்குரிய ஆசிரியை பிரேமலதாவை பள்ளி நிர்வாகம் பணியிடை நீக்கம் செய்வதாக காவல் நிலையத்திற்கு கடிதம் கொடுத்ததை அடுத்து விசாரணையை போலீஸார் துரிதப்படுத்தி வருகின்றனர். இதுகுறித்து பள்ளி மாணவியின் தாயார் முனீஸ்வரி கூறுகையில், ''பட்டியலின பெண்ணை ஜாதியை சொல்லி திட்டிய ஆசிரியர் மீது வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்ய வேண்டும். ஏற்கனவே இந்த ஆசிரியையால் வீரக்கல்லை சேர்ந்த ஒருமாணவி கிணற்றில் குறித்து கைகால்கள் முறிந்த நிலையில் உள்ளார். தொடர்ந்து இந்த பள்ளியில் ஜாதிய வன்மத்துடன் ஆசிரியைகள் நடந்து கொள்வதால் மனித உரிமை ஆணையம் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்றார்.

 

இது பற்றி விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த மாநில செய்தித் தொடர்பாளர் ரெங்கராஜன் கூறுகையில், ''சமூக நீதியுடன் செயல்படும் இந்த பள்ளிகளில் தற்போது ஜாதிவெறியுடன் செயல்படும் சில ஆசிரியைகளால் பள்ளிக்கு அவப்பெயர் ஏற்பட்டுள்ளது. பள்ளி நிர்வாகம் தயவு தாட்சண்யம் இல்லாமல் ஆசிரியை மீது நடவடிக்கை எடுத்து அரசுப் பள்ளிகளுக்கு அவர்களை அனுப்ப வேண்டும். பள்ளியில் படிக்கும் தாழ்த்தப்பட்ட சமுதாய மாணவிகளுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும்” என்று கூறினார். 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'எல்லாருமே திருடங்கதான்... சொல்லப் போனா...' - பாடலுக்கு நடனமாடியபடி வந்த சுயேச்சை வேட்பாளர்

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Independent candidate danced to the song 'ellarume Thirudangathan... sollpona...'

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

நேற்று வேட்புமனு தாக்கல் முடிந்த நிலையில் இன்று மனுக்கள் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட இருக்கிறது. நேற்று முக்கிய கட்சிகளின் பிரமுகர்கள் முதல் சுயேச்சை வேட்பாளர்கள் எனப் பலர் இறுதி நாள் என்பதால் வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்தனர். வேட்புமனு தாக்கல் செய்ய வரும் சுயேச்சை வேட்பாளர்கள் மற்றும் அரசியல் கட்சியைச் சேர்ந்த வேட்பாளர்கள் சிலர் நூதன முறைகளில் வந்து வேட்புமனு தாக்கல் செய்வது முன்னரே பல தேர்தல்களில் நடந்துள்ளது.

தேர்தல் நேரங்களில் இதுபோன்ற நூதன சம்பவங்கள் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் திண்டுக்கல்லில் வேட்புமனு தாக்கல் செய்ய வந்த சுயேச்சை வேட்பாளர் ஒருவர் 'எல்லாருமே திருடங்கதான் சொல்லப்போனால் குருடங்கதான்' என்ற பாடலை ஒலிக்கவிட்டபடி சாலையில் நடனமாடிக்கொண்டே வேட்புமனு தாக்கல் செய்ய வந்தார். இது தொடர்பான வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Next Story

யோகா மாஸ்டர் அடித்து கொலை; விசாரணையில் பகீர்!

Published on 23/03/2024 | Edited on 23/03/2024
Transgressive yoga master beaten to ; Body recovery in a ruined well

கராத்தே மாஸ்டர் காணாமல் போன சம்பவத்தில், கொலை செய்யப்பட்டு கிணற்றில் வீசப்பட்டது  சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

சென்னை கிழக்கு கடற்கரை சாலை பகுதியிலுள்ள கானத்தூர் ரெட்டி குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் லோகநாதன். இவர் அந்த பகுதியில் பள்ளி மாணவர்களுக்கு கராத்தே மாஸ்டராகவும், யோகா மாஸ்டராகவும் பணியாற்றி வந்தார். இவரிடம் பல்வேறு குழந்தைகள் கராத்தே மற்றும் யோகா பயிற்சிகள் எடுத்து வந்த நிலையில் கராத்தே மாஸ்டர் லோகநாதனை கடந்த 13ஆம் தேதியிலிருந்து காணவில்லை என அவரது மகன் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வந்ததோடு காணாமல்போன லோகநாதன் தேடி வந்தனர். லோகநாதன் வைத்திருந்த செல்போனில் அவருடன் இறுதியாக பேசியது யார் என்பது தொடர்பாக போலீசார் விசாரணை செய்தனர். விசாரணையில் ஓஎம்ஆர் சாலையில் உள்ள நாவலூர் காரனை பகுதியைச் சேர்ந்த சுரேஷ் -கஸ்தூரி தம்பதியிடம் செல்போனில் பேசியது தெரியவந்தது.

சந்தேகத்தின் அடிப்படையில் இரண்டு பேரையும் காவல் நிலையத்திற்கு வரவழைத்து விசாரித்த விசாரித்தபோது யோகா மாஸ்டர் லோகநாதன் அடித்துக் கொலை செய்யப்பட்ட பகீர் தகவல் வெளிவந்தது. செம்மஞ்சேரி பூங்காவில் வைத்து லோகநாதன் பள்ளி மாணவ மாணவிகளுக்கு கராத்தே, யோகா பயிற்சிகளை  கொடுத்து வந்த நிலையில் சுரேஷ்-கஸ்தூரி தம்பதியின் 11 வயது மகன் லோகநாதனிடம் பயிற்சிக்காக சேர்க்கப்பட்டு பயிற்சி எடுத்து வந்தான். அதே நேரம் கஸ்தூரியும் அவரிடம் யோகா பயிற்சி மேற்கொண்டு வந்துள்ளார்.

Transgressive yoga master beaten to ; Body recovery in a ruined well

இந்நிலையில் கஸ்தூரியிடம் லோகநாதன் பாலியல் ரீதியாக தொல்லையில் ஈடுபட்டதாக தெரிகிறது. இதனால் லோகநாதனின் பயிற்சி வகுப்புக்கு செல்வதை கஸ்தூரி தவிர்த்து வந்துள்ளார். ஆனால் இருப்பினும் மொபைல் மூலம் கஸ்தூரியை தொடர்பு கொண்ட லோகநாதன் யோகா வகுப்புக்கு வரும்படி தொடர்ந்து வற்புறுத்தியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கஸ்தூரி இதுகுறித்து கணவரிடம் தெரிவிக்க இருவரும் சேர்ந்து கராத்தே மாஸ்டர் லோகநாதன் கொலை செய்ய திட்டமிட்டனர்.

அவரை மொபைல் மூலம் தொடர்புகொண்டு காரனை பகுதிக்கு வரவழைத்து அடித்து கொலை செய்ததோடு அங்குள்ள பாழடைந்த கிணற்றில் உடலை வீசிவிட்டுச் சென்றது போலீசார் விசாரணையில் தெரியவந்தது. உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் கிணற்றில் இருந்த லோகநாதனின் உடலை கயிறு மூலம் கட்டி வெளியே கொண்டு வந்தனர். யோகா மாஸ்டர் அடித்து கொலை செய்யப்பட்டு கிணற்றில் வீசப்பட்ட சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.