Skip to main content

பழனியில் முடி காணிக்கைக்கு லஞ்சம்; தரிசனம் செய்வதில் இடைத்தரகர்களின் ஆதிக்கம்

Published on 06/02/2023 | Edited on 06/02/2023

 

palani murugan temple intermediate agent issue 

 

முருகனின் ஆறுபடை வீடுகளில் ஒன்றான பழனியில் குடமுழுக்கு விழா சமீபத்தில் நடைபெற்றது. இதில் லட்சக்கணக்கான  பக்தர்கள் கலந்துகொண்டனர். இதனைத் தொடர்ந்து நேற்று தைப்பூச தேர்த் திருவிழா நடைபெற்றது. இதில் பக்தர்கள் காவடி எடுத்து வந்தனர். லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் கலந்துகொண்டனர். தினமும் ஏறத்தாழ 10 ஆயிரம் பக்தர்கள் பழனிக்கு வருகிறார்கள். தற்போது குடமுழுக்கு விழாவில் கலந்து கொள்ளாதவர்கள் தைப்பூச நாளில் வந்து சுவாமி தரிசனம் செய்தனர். இதனால் பழனி நகரம் முழுவதும்  பக்தர்கள் கூட்டத்தால் திணறியது.

 

பழனி அடிவாரத்தில் பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தும் இடம் கோவில் நிர்வாகம் சார்பில் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு முடி காணிக்கை செலுத்துவது முற்றிலும் இலவசம். ஆனால் இங்கு மொட்டை அடிப்பவர்கள் ஒரு ஆளுக்கு 50 ரூபாய் தந்தால் தான் மொட்டை அடிப்போம் என அடாவடியாகப் பேசுவதாக பக்தர்களிடம் இருந்து புகார் எழுந்துள்ளது. வசதியானவர்களாக இருந்தால் 200 ரூபாய், 300 ரூபாய் தர வேண்டும் என முன்கூட்டியே பேசிக்கொண்ட பின்பே மொட்டை அடிக்கிறார்கள் என்கிறார்கள். லஞ்சம் வாங்குவது சட்டப்படி தவறு. லஞ்சம் கேட்டால் புகார் சொல்லுங்கள் என அங்கு தொலைபேசி எண்ணை குறிப்பிட்டுள்ளது கோவில் நிர்வாகம். இதுகுறித்து புகார் சொல்ல யாராவது போன் செய்தாலும் எடுப்பதில்லையாம். கோவில் நிர்வாகத்தைச் சேர்ந்தவர் மொட்டை அடிக்க வரும் பக்தர்களுக்கு டோக்கன் வழங்குகிறார். இதனை அவர் கண்காணித்து அதிகாரிகளிடம் கூறவேண்டும், அவர்களும் கூறுவதில்லை என்கிறார்கள் பக்தர்கள்.

 

பழனி கோவிலுக்கு தமிழ்நாட்டைச் சேர்ந்த பக்தர்களைப் போல அதிக அளவில் கேரளாவைச் சேர்ந்த பக்தர்களும் வருகிறார்கள். அவர்களில் பெரும்பாலானவர்கள் மொட்டை அடித்துக்கொள்ள கட்டணம் செலுத்த வேண்டும் என்றே நினைத்துக் கொள்கின்றனர். அப்படிப்பட்டவர்களிடம் கூடுதலாகவே பணம் வசூலிக்கின்றனர் என்கிற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. முடி காணிக்கை செலுத்தும் இடத்தில் மட்டும் அல்லாமல் சன்னதியில் சுவாமி தரிசனம் செய்யச் செல்லும் பக்தர்களிடமும் அங்குள்ள இடைத்தரகர்கள் வேகமாக தரிசனம் செய்ய வைக்கிறோம் எனச் சொல்லி குறுக்கு வழியில் அழைத்துச் சென்று அதிக அளவில் பணம் வாங்கிக் கொண்டு சுவாமி தரிசனம் செய்ய வைக்கிறார்கள் எனக் குற்றம் சாட்டுகிறார்கள் பழனிக்கு சென்று வரும் பக்தர்கள். இதனால் கோவிலுக்கு வர வேண்டிய வருமானம் வராமல் போகிறது என்கிறார்கள் முருக பக்தர்கள். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'எல்லாருமே திருடங்கதான்... சொல்லப் போனா...' - பாடலுக்கு நடனமாடியபடி வந்த சுயேச்சை வேட்பாளர்

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Independent candidate danced to the song 'ellarume Thirudangathan... sollpona...'

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

நேற்று வேட்புமனு தாக்கல் முடிந்த நிலையில் இன்று மனுக்கள் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட இருக்கிறது. நேற்று முக்கிய கட்சிகளின் பிரமுகர்கள் முதல் சுயேச்சை வேட்பாளர்கள் எனப் பலர் இறுதி நாள் என்பதால் வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்தனர். வேட்புமனு தாக்கல் செய்ய வரும் சுயேச்சை வேட்பாளர்கள் மற்றும் அரசியல் கட்சியைச் சேர்ந்த வேட்பாளர்கள் சிலர் நூதன முறைகளில் வந்து வேட்புமனு தாக்கல் செய்வது முன்னரே பல தேர்தல்களில் நடந்துள்ளது.

தேர்தல் நேரங்களில் இதுபோன்ற நூதன சம்பவங்கள் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் திண்டுக்கல்லில் வேட்புமனு தாக்கல் செய்ய வந்த சுயேச்சை வேட்பாளர் ஒருவர் 'எல்லாருமே திருடங்கதான் சொல்லப்போனால் குருடங்கதான்' என்ற பாடலை ஒலிக்கவிட்டபடி சாலையில் நடனமாடிக்கொண்டே வேட்புமனு தாக்கல் செய்ய வந்தார். இது தொடர்பான வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Next Story

காற்றில் பறக்கும் தேர்தல் விதிமுறை-நிலக்கோட்டையில் அதிகாரிகளின் மெத்தனம்

Published on 17/03/2024 | Edited on 17/03/2024
Is there an election? Or not?- Complacency of authorities in Nilakottai

பல்வேறு எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நேற்று பிற்பகல் நாட்டின் 18 வது நாடாளுமன்ற தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டது. மொத்தமாக ஏழு கட்டங்களாக தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ஆம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. ஏற்கனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதிப் பங்கீடு என தீவிரம் காட்டி வரும் நிலையில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளது. இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நிலக்கோட்டை தொகுதியில் தேர்தல் நடைமுறைகள் அமல்படுத்துவதில் அரசு அதிகாரிகள் மெத்தனம் காட்டி வருவதாகக் கூறப்படுகிறது.

நிலக்கோட்டை பேருந்து நிலையம் அருகே நிலக்கோட்டை சட்டமன்றத் தொகுதியின் அலுவலகம் உள்ளது. பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு நேற்று தேர்தல் தேதி அறிவித்தும் கூட இதுவரை சீல் வைக்கப்படவில்லை. எம்.எல்.ஏ தேன்மொழி ஆதரவாளர்கள் வழக்கம்போல்  சட்டமன்ற அலுவலகத்தை பூட்டிச் சென்ற பூட்டு மட்டுமே அங்கு காட்சிப் பொருளாக தொங்குகின்றதே தவிர தேர்தல் விதி முறைகளின்படி அந்த அலுவலகத்திற்கு அதிகாரிகள் சீல் வைக்காமல் மெத்தனப் போக்கை கடைபிடித்து வருகிறார்கள்.

இதே போல் தொகுதி முழுவதும் கொடிக் கம்பங்கள் அகற்றப்படவில்லை ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என அனைவரும் சாலையில் வைத்துள்ள பேனர்கள் அப்படியே இருக்கிறது. தொகுதியில் தேர்தல் நடக்கிறதா? இல்லையா? என பொதுமக்கள் கேட்கும் அளவிற்கு அதிகாரிகளின் செயல்பாடு மெத்தனமாக உள்ளதாகக் குற்றச்சாட்டும் எழுந்து வருகிறது.