Skip to main content

"அனைத்து மக்களின் வளர்ச்சிக்கும் உறுதுணையாக இருப்பது நமது அரசு"- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு! 

Published on 17/05/2022 | Edited on 17/05/2022

 

"Our government is committed to the development of all people" - Chief Minister MK Stalin's speech!

சென்னை வேப்பேரியில் உள்ள பெரியார் திடலில் இன்று (17/05/2022) மாலை 06.00 மணிக்கு நடந்த நிகழ்ச்சியில், பட்டியலின - பழங்குடியின மக்களின் வலிகளையும், உரிமைகளையும் கட்டுரைகளாகப் பதிவு செய்துள்ள முன்னாள் ஐ.ஏ.எஸ். ராஜூ தொகுத்துள்ள புத்தகமான 'The Dalit Truth' என்ற புத்தகத்தை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். 

"Our government is committed to the development of all "Our government is committed to the development of all people" - Chief Minister MK Stalin's speech!people" - Chief Minister MK Stalin's speech!

விழாவில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், "பட்டியலின, பழங்குடியின மக்களுக்கான உரிமைகளை நிறைவேற்றி இருக்கிறது தி.மு.க. அரசு. பழங்குடியினருக்கு தனி இடஒதுக்கீடு வழங்கியது கலைஞர் தலைமையிலான தி.மு.க. அரசுதான். அருந்ததியின மக்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்கியதும் கலைஞர் தலைமையிலான தி.மு.க. அரசுதான். பொறியியல் படிக்கும் மாணவர்களுக்கு தலா ரூபாய் 5,000 நிதி வழங்கியவர் முத்தமிழறிஞர் கலைஞர். 

"Our government is committed to the development of all people" - Chief Minister MK Stalin's speech!

ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளை வென்றெடுக்க உருவான இயக்கம் தான் தி.மு.க. பழமைவாதத்திற்கு எதிராக முற்போக்கு கருத்தைத் திரைப்படங்களில் எழுதியவர்கள் அண்ணா, கலைஞர் போன்றவர்கள். பட்டியலின மக்களுக்கு எதிரான கொடுமைகள் குறித்து சிறப்பாக எடுத்துரைத்துள்ளது 'நெஞ்சுக்கு நீதி' திரைப்படம். அனைத்து மக்களின் வளர்ச்சிக்கும் உறுதுணையாக இருப்பது நமது அரசு; இது திராவிட மாடல் அரசு. தமிழ்நாடு பட்டியலின, பழங்குடியின ஆணையத்தை உருவாக்கி அவர்களின் உரிமைகளை நிலைநாட்டி வருகிறோம். 

"Our government is committed to the development of all people" - Chief Minister MK Stalin's speech!

தமிழ்நாட்டில் தி.மு.க. ஆட்சி இருக்கும் போதெல்லாம் அண்ணல் அம்பேத்கரின் கனவு நிறைவேற்றப்பட்டு வருகிறது. அனைத்து மாநிலங்களிலும் சமூக நீதி, சமத்துவம் தழைத்தோங்க வேண்டும்; அப்போதுதான் மக்களாட்சி நிலைக்கும்" எனத் தெரிவித்தார். 

"Our government is committed to the development of all people" - Chief Minister MK Stalin's speech!

இந்த விழாவில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, காங்கிரஸ் கட்சியின் சட்டமன்றக் குழு தலைவர் செல்வப்பெருந்தகை, ஜிக்னேஷ் மேவானி எம்.எல்.ஏ. உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.  

 

சார்ந்த செய்திகள்

Next Story

'முந்தியது எந்த மாவட்டம்?'- தலைமை தேர்தல் அதிகாரி வெளியிட்ட தகவல்

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
'Which district was the first?'- the information released by the Chief Electoral Officer

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று தற்போது முடிந்துள்ளது. மாலை 6:00 மணிக்குள் வாக்குச்சாவடிகளுக்கு வாக்களிக்க வந்தவர்களுக்கு டோக்கன் வழங்கி வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் அரசியல் கட்சியினர் முன்னிலையில் வாக்கு இயந்திரங்கள் சீல் வைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

தமிழகத்தில் இறுதி நிலவரப்படி 72.09 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த மாநில தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாஹு பேசுகையில், ''தமிழகத்தில் ஏழு மணி நிலவரப்படி 72.09 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. வாக்குப் பெட்டிகளுக்கு சீல் வைத்து வாக்கு எண்ணும் மையத்திற்கு எடுத்துச் செல்லும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் அதிகபட்சமாக கள்ளக்குறிச்சியில் 75.67 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. மத்திய சென்னையில் 67.37 சதவீதம், தென்சென்னையில் 67.82 சதவீதம், வட சென்னையில் 69.26 சதவீதம், தர்மபுரி மக்களவைத் தொகுதியில் 75.44 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது. சில வாக்குச்சாவடிகளில் டோக்கன்கள் கொடுக்கப்பட்டு வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. மாலை 3 மணிக்கு மேல் ஏராளமான மக்கள் அதிக அளவில் தங்கள் வாக்குகளை செலுத்தியுள்ளனர். தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் சட்ட ஒழுங்கு பிரச்சினை இன்றி அமைதியான முறையில் நடந்துள்ளது'' என்றார்.

Next Story

தமிழகம், புதுவையில் முடிந்தது வாக்குப்பதிவு

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
Polling has ended in Puduvai, Tamil Nadu

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று தற்போது முடிந்துள்ளது. மாலை 6:00 மணிக்குள் வாக்கு சாவடிகளுக்கு வாக்களிக்க வந்தவர்களுக்கு டோக்கன் வழங்கி வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அரசியல் கட்சியினர் முன்னிலையில் வாக்கு இயந்திரங்கள் சீல் வைக்கும் பணி நடைபெற்று வருகிறது.