Skip to main content

அசல் கடன் 38 லட்சம்... ஆனால் வட்டி, வட்டிக்கு வட்டி 1.40 கோடி ரூபாய் கட்டணுமாம்! நிதி நிறுவன அதிபர் மீது பாய்ந்த கந்துவட்டி வழக்கு!! 

Published on 15/06/2022 | Edited on 15/06/2022

 

Original loan 38 lakhs ... but interest, interest 1.40 crore will pay interest! Kantuvatti case against the financial institution CEO !!

 

மேட்டூர் அருகே, 38 லட்சம் ரூபாய் அசல் கடனுக்கு வட்டி, வட்டிக்கு வட்டி எல்லாம் சேர்த்து 1.40 கோடி ரூபாய் வட்டி செலுத்த வேண்டும் என தாபா உணவக உரிமையாளரை மிரட்டியதாக நிதி நிறுவன அதிபர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.

 

சேலம் மாவட்டம், மேட்டூர் அருகே உள்ள கருமலைக்கூடல் நேரு நகரைச் சேர்ந்தவர் சதீஸ் (வயது 43). சாம்பள்ளியில் தாபா உணவகம் நடத்தி வருகிறார். இவர், கடந்த 2017- ஆம் ஆண்டு ஜனவரி மாதம், அதே பகுதியைச் சேர்ந்த நிதி நிறுவன அதிபர் ஜெயக்குமார் என்பவரிடம், தொழில் விரிவாக்கத்திற்காக 5 லட்சம் ரூபாய் கடன் பெற்றுள்ளார். 

 

அதற்கு குறிப்பிட்ட சதவீதம் மாதம்தோறும் வட்டி செலுத்தி வந்துள்ளார். 2019- ஆம் ஆண்டு சதீஸ், முன்பு கடன் பெற்ற அவரிடமே மேலும் 33 லட்சம் ரூபாய் வட்டிக்கு கடன் பெற்றார். இதற்காக 100- க்கு 5 ரூபாய் வட்டி என்று ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளனர். 

 

சதீஸ் பெற்ற கடனுக்கு இதுவரை 50 லட்சம் ரூபாய் வரை வட்டியாக மட்டுமே செலுத்தி வந்துள்ளார். இந்நிலையில், கடந்த ஓராண்டாக வியாபாரத்தில் நட்டம் ஏற்பட்டதாகவும், அதனால் வட்டித் தொகை செலுத்த முடியவில்லை என்றும் சதீஸ் கூறியுள்ளார். 

 

இதையடுத்து அவரிடம் கடனுக்கான வட்டியையும், வட்டி செலுத்தாத காலத்திற்கு அபராத வட்டியும் கணக்கிட்டு மேலும் 90 லட்சம் ரூபாய் கொடுக்க வேண்டும் என்று நிதி நிறுவன அதிபர் ஜெயக்குமார் கேட்டுள்ளார். தன்னால் இப்போதைக்கு அவ்வளவு பெரிய தொகை கொடுக்க முடியாது என சதீஸ் கூறியுள்ளார். அதற்கு ஜெயக்குமார் ஆள்களை வைத்து மிரட்டியதாகச் சொல்லப்படுகிறது. 

 

இதையடுத்து தாபா உரிமையாளர் சதீஸ், தன்னிடம் ஜெயக்குமார் கந்துவட்டி கேட்டு மிரட்டுவதாக கருமலைக்கூடல் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இதையறிந்த ஜெயக்குமார், திடீரென்று தலைமறைவாகிவிட்டார். 

 

விசாரணையில், சதீஸ், இரண்டு தவணையாக பெற்ற 38 லட்சம் ரூபாய் அசல் கடனுக்கு 50 லட்சம் ரூபாய் வட்டி செலுத்தியுள்ள நிலையில், அவரிடம் மேலும் 90 லட்சம் ரூபாய் வட்டி கேட்டு மிரட்டியிருப்பது தெரிய வந்துள்ளது.

 

கந்துவட்டி தடை சட்டத்தின் கீழ் ஜெயக்குமார் மீது வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர் அவரை தேடி வருகின்றனர். 


 

சார்ந்த செய்திகள்

Next Story

கல்லூரி மாணவி மரணம்; நீடிக்கும் மர்மம் - போலீஸ் விசாரணை

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
College student mysterious passed away in Thiruvarangam

திருவரங்கம் ராஜகோபால நகர் 2-வது தெருவைச் சேர்ந்தவர் கோபி என்கிற கோவிந்தராஜன் (வயது 60). இவர் திருவரங்கம் கோவிலில் சுவாமிக்கு வரக்கூடிய துணிகளை ஏலம் எடுத்து விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறார். இவரது மகள் ஜெய்ஸ்ரீ(வயது 18). திருச்சியில் உள்ள கல்லூரியில் பி.ஏ ஆங்கில பட்டப்படிப்பு முதலாமாண்டு படித்து வந்தார். இதற்கிடையில், இவர் திருவரங்கத்தைச் சேர்ந்த கிரோஷ் என்ற வாலிபரைக் காதலித்து வந்துள்ளார்.

இந்த நிலையில் கீழ சித்திர வீதியில் உள்ள காதலனின் நண்பர் வீட்டு மாடியிலிருந்து குதித்து ஜெயஸ்ரீ தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அவரது தந்தை கோவிந்தராஜன் கொடுத்த புகாரின் அடிப்படையில் திருவரங்கம் போலீசார் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து வழக்கு பதிந்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வெண்ணிலா மற்றும் போலீசார்  காதலன்  மற்றும் காதலனின் நண்பர்கள் உள்பட ஐந்து பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் இரண்டு பேர் சரித்திர பதிவேடு குற்றவாளி எனவும் தெரிய வந்துள்ளது.அதனால் இது திட்டமிட்ட கொலையா? அல்லது வேறு ஏதேனும் காரணம் இருக்கிறதா? என்பது குறித்தும் போலீசாருக்கு சந்தேகம் எழுந்துள்ளது. அதன் அடிப்படையில் பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் காதலனின் வீட்டில் போலீசார் அதிரடி சோதனை நடத்தியுள்ளனர். காதலனின் நண்பர் வீட்டு மாடியிலிருந்து கல்லூரி மாணவி குதித்து தற்கொலைச் செய்து கொண்ட சம்பவம் திருவரங்கத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story

திமுக பிரமுகரின் வீடு சூறை; மோட்டார் சைக்கிள் எரிப்பு - திருச்சியில் பரபரப்பு

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
beaten on DMK executive house in Trichy

திருச்சி சின்னக்கடை வீதி பகுதியை சேர்ந்தவர் சுரேஷ்குமார்(45). இவரது வீட்டில் நேற்று இரவு மர்ம நபர்கள் ஐந்துக்கும் மேற்பட்டோர் நுழைந்து அவரது வீட்டை அடித்து நொறுக்கியதுடன் வெளியில் நின்று இருந்த இவரது மோட்டார் சைக்கிளை தீயிட்டு கொளுத்தினர். நள்ளிரவில் திடீரென   அக்கம்பக்கத்தினர் ஓடி வந்ததை கண்டதும் மர்ம நபர்கள்  அங்கிருந்து தப்பி சென்றனர். பிறகு அக்கம் பக்கத்தினர்  தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து  எரிந்து கொண்டிருந்த மோட்டார் சைக்கிளின் தீயை அணைத்தனர்.

இருப்பினும் மோட்டார் சைக்கிள் முழுவதும் எரிந்து எலும்பு கூடானது. பின்னர் இது குறித்து சுரேஷ்குமார் கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரில் அவருக்கும் தாராநல்லூர் பகுதியைச் சேர்ந்த ஒரு சில நபர்களுக்கும் கோவில் சம்பந்தமாக பிரச்சனை இருந்து வந்துள்ளது. எனவே அவர்கள் தான் செய்திருக்கலாம் என புகாரில் தெரிவித்துள்ளார்.

இது குறித்து கோட்டை காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். நள்ளிரவில் மர்ம நபர்கள் வீடு புகுந்து, வீட்டை  அடித்து நொறுக்கி மோட்டார் சைக்கிளை எரித்த சம்பவம் அப்பகுதி முழுவதும் பதற்றத்தை ஏற்படுத்தியது. சுரேஷ்குமாருக்கும் திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியில் பழக்கடை நடத்தி வரும் நபர் ஒருவருக்கும் கோவில் திருவிழா சம்பந்தமான பிரச்சனை ஒன்று ஏற்கெனவே உள்ளது. அதுமட்டுமின்றி தேர்தல் வேலைகளில் சுரேஷ்குமார் தீவிரமாக ஈடுபட்டதும், சுரேஷ்குமார் திமுக பிரமுகர் என்பதும் குறிப்பிடத்தக்கது