சீன அதிபர் ஷி ஜின்பிங் தமிழக வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்த திட்டமிட்டிருந்ததாக கூறி 15 திபெத்தியர்களை சென்னையில் கைது செய்தது காவல்துறை. இதில் சென்னை பல்கலைக்கழகத்தை சேர்ந்த மாணவரும் அடங்குவர். இதனையடுத்து கைது செய்யப்பட்டவர்கள் அனைவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, புழல் சிறையில் அடைக்கப்பட்டனர். அதை தொடர்ந்து சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் திபெத்தியர்கள் தங்கியுள்ள விடுதிகளை காவல்துறையினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றன.
இந்நிலையில் சென்னைக்கு சீன அதிபர் வருகையை முன்னிட்டு திபெத்திய மாணவர்களின் கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.