Skip to main content

புதுக்கோட்டை மாவட்டத்தில் மேலும் 2 அரசுப் பள்ளி மாணவிகளுக்கு மருத்துவக் கல்லூரியில் படிக்க வாய்ப்பு

Published on 06/01/2021 | Edited on 06/01/2021

 

Opportunity for 2 more government school students in Pudukkottai district to study in medical college

 

புதுக்கோட்டை மாவட்டத்தில் தமிழக அரசின் 7.5 சதவீதம் உள் ஒதுக்கீட்டில் 17 அரசுப் பள்ளி மாணவ, மாணவிகள் மருத்துவம் படிக்க தேர்வாகி உள்ளனர். இதில் 11 பேர் அரசு மருத்துவக் கல்லூரிகளிலும் 6 பேர் தனியார் மருத்துவக் கல்லூரிகளிலும் சேர்ந்துள்ளனர். இதில் ஒரு மாணவி பல் மருத்துவம் படிப்பைத் தேர்வு செய்துள்ளார்.

 

அதாவது, முதல் நாள் கலந்தாய்வில் கலந்துகொண்டு அரசு மருத்துவக் கல்லூரிகளில் இடம் கிடைக்காமல் தனியார் கல்லூரியில் இடமிருந்தும் பணம் கட்ட முடியாது என்று இடம் தேர்வு செய்யாமல் திரும்பிய மாணவர்கள், “தனியார் கல்லூரிகளைத் தேர்வு செய்துள்ள மாணவர்களுக்கு தி.மு.க. தலைமை பணம் செலுத்தும் என்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பை தெடர்ந்து, தமிழக அரசே பணம் செலுத்தும் என்று அறிவித்தது. இந்த அறிவிப்பை முன்பே செய்திருந்தால் நாங்களும்  தனியார் கல்லூரிகளில் மருத்துவ இடங்களைத் தேர்வு செய்திருப்போம்” என்று தங்கள் வருத்தங்களைத் தெரிவித்திருந்தனர். பல மாணவர்கள் நீதிமன்றத்தையும் நாடியுள்ளனர்.

 

இந்த நிலையில்தான், 4ஆம் தேதி நடந்த இரண்டாவது கலந்தாய்வில் கலந்துகொண்ட புதுக்கோட்டை மாவட்டம், மறமடக்கி அரசுப் பள்ளி மாணவி நித்யா, எம்.பி.பி.எஸ். படிக்க சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியைத் தேர்வு செய்துள்ளார். அதேபோல சுப்பிரமணியபுரம் அரசுப் பள்ளி மாணவி நர்மதாவுக்கு தனியார் கல்லூரியில் பல் மருத்துவம் படிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. இவர்களோடு சேர்த்து 17 அரசுப் பள்ளி மாணவ, மாணவிகள் மருத்துவம் படிக்க தேர்வாகியிருக்கிறார்கள்.

 

இந்த மாணவர்களில் 10க்கும் மேற்பட்டவர்களுக்கு கீரமங்கலம் ‘நமது நண்பர்கள் பயிற்சி மையத்தில்’ இலவச ஸ்போக்கன் இங்கிலீஷ் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. 

 

சார்ந்த செய்திகள்

Next Story

நீட் தேர்வு எழுதும் மாணவர்களின் கவனத்திற்கு; வெளியான முக்கிய அறிவிப்பு!

Published on 08/04/2024 | Edited on 08/04/2024
Important announcement For the attention of NEET students

2024 ஆம் ஆண்டு நடைபெற உள்ள மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான இளங்கலை நீட் நுழைவுத் தேர்வுக்காக விண்ணப்பம் செய்வதற்கான கால அவகாசத்தை நீட்டித்து தேசியத் தேர்வு மையம் அறிவித்துள்ளது.

2024 - 25 ஆம் கல்வியாண்டிற்கான இளநிலை மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வு (2024) மே மாதம் 5 ஆம் தேதி நடைபெறும் எனத் தேசியத் தேர்வு முகமை ஏற்கனவே அறிவித்திருந்தது. தேர்வுக்கான தேதி அறிவிக்கப்பட்டு பல மாதங்கள் ஆகிவிட்ட நிலையில், தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் எனத் தேசிய தேர்வு மையம் தெரிவித்திருந்தது. 

அதன்படி, கடந்த பிப்ரவரி 2 ஆம் தேதி முதல், மார்ச் 16 ஆம் தேதி வரை நீட் தேர்வு எழுதும் மாணவ - மாணவிகள் ஆன்லைன் வழியாக விண்ணப்ப பதிவை மேற்கொள்ளலாம் எனத் தெரிவித்திருந்தது. இந்த நிலையில், நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பம் செய்வதற்கான கால அவகாசத்தை நீட்டிக்குமாறு மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் கோரிக்கை வைக்கப்பட்டது. அந்த கோரிக்கையை அடிப்படையாகக் கொண்டு மார்ச் 16ஆம் தேதி வரை கால அவகாசம் நிறைவடைந்த நிலையில், ஏப்ரல் 10ஆம் தேதி வரை நீட்டித்துள்ளதாக தேசிய தேர்வு மையம் அறிவித்துள்ளது. 

மேலும், https://exams.nta.nic.in/NEET என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைன் விண்ணப்பப் படிவத்தை நாளை (09-04-24) மற்றும் நாளை மறுநாள் (10-04-24) சமர்ப்பிக்கலாம் எனத் தெரிவித்துள்ளது. நீட் தகுதி தேர்வுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் தகவல் தொகுப்பு கையேடு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அவ்வப்போதைய நிலவரங்களைத் தெரிந்து கொள்வதற்கு, www.nta.ac.in என்ற இணையதளத்தைப் பார்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். குறிப்பிட்ட அவகாசத்திற்குள் விண்ணப்ப முடியாதவர்களின் நலன் கருதி தேசிய தேர்வு முகமை இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 

Next Story

நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு; தேசிய தேர்வு மையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

Published on 09/03/2024 | Edited on 09/03/2024
Important notification For students appearing for NEET

2024 ஆம் ஆண்டு நடைபெற உள்ள மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான இளங்கலை நீட் நுழைவுத் தேர்வுக்காக விண்ணப்பம் செய்வதற்கான கால அவகாசத்தை நீட்டித்து தேசியத் தேர்வு மையம் அறிவித்துள்ளது.

2024 - 25 ஆம் கல்வியாண்டிற்கான இளநிலை மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வு (2024) மே மாதம் 5 ஆம் தேதி நடைபெறும் எனத் தேசியத் தேர்வு முகமை ஏற்கனவே அறிவித்திருந்தது. தேர்வுக்கான தேதி அறிவிக்கப்பட்டு பல மாதங்கள் ஆகிவிட்ட நிலையில், தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் எனத் தேசிய தேர்வு மையம் தெரிவித்திருந்தது. 

அதன்படி, கடந்த பிப்ரவரி 2 ஆம் தேதி முதல், மார்ச் 9 ஆம் தேதி இரவு 9 மணி வரை நீட் தேர்வு எழுதும் மாணவ - மாணவிகள் ஆன்லைன் வழியாக விண்ணப்ப பதிவை மேற்கொள்ளலாம் எனத் தெரிவித்திருந்தது. இந்த நிலையில், இன்றுடன் கால அவகாசம் நிறைவடைய இருந்த நிலையில், மார்ச் 6 ஆம் தேதி வரை நீட்டித்துள்ளதாக தேசிய தேர்வு மையம் அறிவித்துள்ளது. மேலும், https://exams.nta.nic.in/NEET என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைன் விண்ணப்பப் படிவத்தை சமர்ப்பிக்கலாம் எனத் தெரிவித்துள்ளது. நீட் தகுதி தேர்வுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் தகவல் தொகுப்பு கையேடு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.