Skip to main content

‘வீடியோ காலில் வா...’ - ஓ.பி. ரவீந்திரநாத்தால் இளம்பெண்ணிற்கு நேர்ந்த கொடூரம்!

Published on 02/08/2023 | Edited on 02/08/2023

 

o.p ravindranath MP who misbehaved with the young woman

 

ஓ. பன்னீர்செல்வத்தின் மகன் ஓ.பி. ரவீந்திரநாத் மீது தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகப் பெண் ஒருவர் பரபரப்பைக் கிளப்பியுள்ளார். 

 

முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தின் மகன் ஓ.பி. ரவீந்திரநாத் தனக்கு அடிக்கடி பாலியல் தொல்லை கொடுப்பதாகக் கூறி காரைக்குடியைச் சேர்ந்த காயத்ரி தேவி, சென்னையில் உள்ள டிஜிபி அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

 

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “எங்கள் குடும்பத்தினரும் ஓ. பன்னீர் செல்வம் குடும்பத்தினரும் நண்பர்களாகப் பழகி வந்தோம். ஓ.பி. ரவீந்திரநாத்தின் மனைவி ஆனந்தி எனக்கு தோழி. ஆனந்தியின் மற்றொரு தோழியான மலருடன் ஓ.பி. ரவீந்திரநாத்திற்கு தொடர்பு உள்ளது. என் குடும்ப பிரச்சனை காரணமாக கடந்த 2020 ஆம் ஆண்டு எனது கணவரை விவாகரத்து செய்தேன். இந்த நேரத்தில்தான் ரவி அண்ணாவின் ஃபோனில் இருந்து பேசிய ஒருவர், ஓபி. ரவீந்திரநாத் உங்கள் மீது ஆர்வமாக உள்ளார் என்றார். ஆனால், நான் அவரை அண்ணனாகவும், ஓபிஎஸ் அவர்களைத் தந்தையாகவும் பார்க்கிறேன். 
 

o.p ravindranath MP who misbehaved with the young woman

 

இதையடுத்து ஏப்ரல் 1 ஆம் தேதி ரவீந்திரநாத்தின் தொலைப்பேசி எண்ணில் இருந்து எனக்கு ஃபோன் வந்தது. நானும் ஃபோனை எடுத்துப் பேசினேன். நன்றாகப் பேசி வந்த அவர் ஒரு கட்டத்தில், என்னிடம் ரொம்ப ஆபாசமாக பேசத் தொடங்கி விட்டார். இதற்கு நான் சம்மதிக்காமல் எதிர்ப்பு தெரிவித்தேன். ஆனால் அவர் என்னைக் கல்யாணம் செய்து கொள்கிறேன் என்று கூறினார். நான் உடனடியாக ஃபோனை கட் செய்துவிட்டேன். ஆனால் ஆபாச வீடியோ காலில் வா.. என்று தொடர்ந்து அழைத்துக்கொண்டே இருந்தார். அம்மாவுக்கும், தங்கச்சிக்கும் வித்தியாசம் தெரியாதா? எந்த மாதிரியான எண்ணத்தில் அவர் வீடியோ கால் வர சொன்னார் என்பது எனக்கு நன்றாக தெரியும். ஆண்கள் பெண்களிடம் ஆபாசமாக நடந்து கொள்வதற்கு இதை பயன்படுத்திக் கொள்கின்றனர். ஓ.பி. ரவீந்திரநாத்திற்கு பெண் உள்ளது. அவர்களுக்கெல்லாம் இதுபோல் ஃபோன் வந்தால் அவர்கள் விட்டு விடுவார்களா?

 

இது குறித்து ரவீந்திரநாத் மனைவியிடமும் சொல்லி இருந்தேன். மன்னிப்பு கேட்காவிட்டால் நான் மீடியாவிடம் செல்வேன் எனக் கூறிய நிலையில், எனக்கு மிரட்டல்கள் வரத் தொடங்கி உள்ளது. கடந்த நவம்பர் மாதத்தில் ஓ.பி.எஸ்ஸிடமும் சொல்லி இருந்தேன். ஓ.பி.எஸ்ஸிடம் பேசும்போது, நான் சொல்வதை கேட்கும் நிலையில் அவர் இல்லை, அம்மாவின் திதிக்கே ரவீந்திரநாத் வரவில்லை என்று கூறினார். அவரின் நண்பர் முருகன் என்பவரும் என்னை மிரட்டுகிறார். ஓ.பி. ரவீந்திரநாத் இரவு முழுவதும் அழைத்த வீடியோ கால்கள் எனக்கு ஆதாரங்களாக உள்ளது. இதனை டிஜிபியிடம் புகாராகக் கொடுத்துள்ளேன்’’ என்றார்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'எப்படி கேமராக்கள் செயலிழக்கும்?'-அதிமுக ஜெயக்குமார் கேள்வி

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
'How can the cameras fail?'- AIADMK Jayakumar asked

மக்களவைத் தேர்தலுக்கான முதல்கட்ட தேர்தல் தமிழகத்தில் முடிந்திருக்கும் நிலையில் அடுத்தடுத்த கட்டங்களாக பல மாநிலங்களில் தேர்தல் நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் நீலகிரியில் வாக்கு பெட்டிகள் வைக்கப்பட்டிருக்கும் ஸ்ட்ராங் ரூமில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்கள் நேற்று திடீரென 20 நிமிடங்கள் செயலிழந்து பின்னர் சரியானது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

அதீத வெப்பம் காரணமாக சிசிடிவி கேமராக்கள் செயலிழந்ததாக நீலகிரி மாவட்ட ஆட்சியர் தரப்பில் விளக்கம் கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரிடம் செய்தியாளர்கள் இதுகுறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், ''சிசிடிவி கேமரா ஃபெயிலியர் ஆகிவிட்டது என்று சொல்கிறார்கள். இதெல்லாம் எலக்சன் கமிஷனுடைய பிரைமரி டியூட்டி. எப்படி சிசிடிவி கேமரா பெயிலியர் ஆகும். ஸ்ட்ராங் ரூமுக்கு உள்ளேயும் வெளியேயும் பொதுவாக சிசிடிவி கேமரா இருக்கும். ஆனால் எப்படி கேமராக்கள் செயலிழந்து. அதற்கான தனியாக யுபிஎஸ் வைத்து பவர் சப்ளை கொடுக்கவில்லையா? இதெல்லாம் எலக்சன் கமிஷன் செய்திருக்க வேண்டும்.

சாதாரணமாக தொழில்நுட்ப பிரச்சனை என்று சொல்லிவிட்டு போகக்கூடாது. அப்படிக் கடந்து செல்லக்கூடாது. ஜனநாயகத்தினுடைய திருவிழா நடத்தப்பட்டு அதன்படி முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கக்கூடிய இடம் அது. அப்படி இருக்கும் பொழுது அந்தப் பகுதியில் இந்த மாதிரி ஒரு சூழ்நிலை ஏற்பட்டுள்ளது என்று சொல்வது உண்மையிலேயே யாருமே ஏற்றுக்கொள்ள முடியாத விஷயம். தேர்தல் ஆணையம் இதுபோன்ற தவறுகளுக்கு இடம் கொடுக்காமல் விழித்திருந்து முழுமையான பணியை செய்ய வேண்டும். அடுத்தது வாக்குகளை எண்ணப்  போகிறார்கள் அதில் என்ன செய்யப் போகிறார்கள் என்று தெரியவில்லை. அதிலும் சொதப்பாமல் இருந்தால் நல்லது''என்றார்.

Next Story

'அவராலே பாதி தண்ணீர் புதுக்கோட்டைக்கு வராமல் போகிறது'-அமைச்சர் ரகுபதி குற்றச்சாட்டு

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
nn


தமிழ்நாடு முழுவதும் சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வரும் நிலையில் அதிமுக, திமுக என அனைத்துக் கட்சிகளும் ஆங்காங்கே தண்ணீர் பந்தல்கள் அமைத்து தாகம் தணித்து வருகின்றனர். அதேபோல், புதுக்கோட்டை திமுக அலுவலகத்தில் திமுக மருத்துவ அணி சார்பில் இன்று ஞாயிற்றுக்கிழமை கோடைகால தண்ணீர் பந்தலை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, மருத்துவ பணி மாவட்ட செயலாளர் முத்து கருப்பன் ஆகியோர் திறந்து வைத்து பொதுமக்களுக்கு குளிர்பானங்களை வழங்கினார்கள்.

அதன் பிறகு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களை சந்தித்த பேசும்போது, ''குஜராத் என்பது போதைப் பொருட்களின் நடமாட்டத்திற்கான மாநிலம். அங்குள்ள துறைமுகத்திற்கு தான் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்கு போதைப் பொருட்கள் வருகிறது. பிறகு பல மாநிலங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது. குஜராத்தில் போதைப் பொருட்களின் நடமாட்டம் அதிகமாக உள்ளது என்பது அதிசயமான செயல் அல்ல.

மத்திய அரசின் நிதி ஒதுக்கீடு யானை பசிக்கு சோலப் பொறி போல என எங்கள் தலைவர் கூறியுள்ளார். அது எந்த அளவு பத்தும் என்பதை நீங்களே யோசித்துக் கொள்ளுங்கள். இருந்த போதிலும் எங்களுக்கு தேவையான நிதியை தரச் சொல்லி வலியுறுத்துவோம். விஜயபாஸ்கர் அதிமுக ஆட்சி காலத்தில் குடிநீர் பிரச்சினைகளில் தீர்வு காணாமல் கோட்டை விட்டுவிட்டார். புதுக்கோட்டைக்கு வரும் காவிரி நீரை வழிமறித்து அவரது கல்லூரிக்கும், அவரது வயலுக்கும் காவிரி நீரை கொண்டு செல்கிறார். வயலுக்கு காவிரித் தண்ணீரை பயன்படுத்தக்கூடிய ஒரே நபர் விஜயபாஸ்கர் மட்டும்தான். இன்னும் ஒரு மணி நேரத்திற்குள் அங்கு சென்றால் அதை பார்க்கலாம். அது குறித்து நடவடிக்கை எடுக்க சென்றால் போராட்டம் நடத்துவார்கள். அவராலே பாதி தண்ணீர் புதுக்கோட்டைக்கு வராமல் போகிறது.ஆனால் இதை அனுமதிக்க முடியாது. விரைவில் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் அந்த பிரச்சனை குறித்து நடவடிக்கை எடுப்பார்கள்'' என்றார்.

இந்த பேட்டி தொலைக்காட்சிகளில் வெளியான நிலையில், அமைச்சர் ரகுபதி போகிற போக்கில் ஏதேதோ பேசி விட்டு போகிறார். பல வருடமாக குடிநீர் திருட்டு நடப்பதாக இருந்தால் இவர்கள் ஆட்சிக்கு வந்த பிறகு கூட ஏன் தடுக்கவில்லை, நடவடிக்கை எடுக்கவில்லை. ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சிகளில் கூட ஒரு வீட்டிற்கு வரும் தண்ணீரை மோட்டார் வைத்து உறிஞ்சினால் உடனே நடவடிக்கை எடுத்து மோட்டாரை பறிமுதல் செய்து அபராதம் விதிக்கப்படுகிறது. ஆனால் எங்கள் முன்னாள் அமைச்சர் காவிரி கூட்டுக் குடிநீரை தங்கள் கல்லூரிக்கும், தோட்டத்திற்கும் எடுக்கிறார் என்றால் இத்தனை ஆண்டுகளாக ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை. அப்படி இருந்தால் நடவடிக்கை எடுக்க வேண்டியது தானே? தண்ணீர் திருட்டு நடந்தால் அதிகாரிகளை அனுப்பி நடவடிக்கை எடுக்க என்ன தயக்கம்? ஆதாரமற்ற குற்றச்சாட்டை கூறியுள்ளார் என்கின்றனர் அதிமுகவினர்.