Skip to main content

ஆன்லைன் ரம்மியால் தற்கொலை செய்து கொண்ட மகன்; கதறும் தந்தை 

Published on 13/01/2023 | Edited on 13/01/2023

 

online rummy issue in tirunelveli district farmer loss his son and 15 lakhs 

 

ஆன்லைன் ரம்மி சூதாட்ட தடுப்பு மசோதா தமிழ்நாடு சட்டமன்றத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டு, தமிழ்நாடு ஆளுநரின் ஒப்புதல் கிடைக்காமல் கிடப்பில் வைக்கப்பட்டதால் விலைமதிக்க முடியாத மனித உயிர்கள் ஆன்லைன் ரம்மி என்ற வல்லரக்கனுக்குப் பலியாகிக் கொண்டிருக்கின்றன.

 

நெல்லை மாவட்டம் பணகுடி அருகே உள்ள ஸ்ரீரகுநாதபுரத்தைச் சேர்ந்தவர் பாஸ்கரன். விவசாயியான இவருக்கு இரண்டு மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். மகள்கள் இருவருக்கும் திருமணமாகி விட்ட நிலையில், தன் ஒரே மகனான சிவன்ராஜை மிகவும் பாசமாகவும் செல்லமாகவும் வளர்த்திருக்கிறார். விவசாயம் செய்து வரும் பாஸ்கரன் மகன் சிவன்ராஜ் கேட்டதை எல்லாம் மறுப்பு ஏதும் தெரிவிக்காமல் வாங்கி கொடுத்து வந்திருக்கிறார். சிவன்ராஜும் நல்ல பிள்ளையாக பி.ஏ. பட்டப்படிப்பு வரை படித்திருக்கிறார். இன்னும் திருமணமாகவில்லை. நிரந்தர வேலை ஏதும் இல்லாமல் இருந்த சிவன்ராஜ்  அவ்வப்போது யாராவது அழைத்தால் தற்காலிக டிரைவராக செல்வது வழக்கம். அதன் மூலம் வரும் வருமானத்தாலும், அவ்வப்போது  தந்தையிடம்  பெற்று வந்த பணம் சிவன்ராஜ் கைகளில் பணப்புழக்கம் இருந்துள்ளது.

 

வேலையில்லாமல் பொழுது போக்கிற்காக ஆன்லைன் ரம்மி விளையாட்டு ஆப்களை பதிவிறக்கம் செய்து ஆன்லைன் ரம்மி விளையாடியிருக்கிறார். முதலில் ஆன்லைன் ரம்மியில் சில ஆயிரங்கள் பணத்தை வென்றிருக்கிறார். இதுவே காலப்போக்கில் அதற்கு அடிமையாகி தொடர்ந்து விளையாடி வந்துள்ளார். ஆன்லைன் ஏற்றமும் இறக்கமுமாக இருந்துள்ளது. இதனால் கைகளில் பணப்புழக்கம் குறைய தந்தையை மிரட்டி 20 ஆயிரம், 10 ஆயிரம் என அவ்வப்போது  தனக்கு இருக்கும் கடன் என்றும் அதை அடைக்க வேண்டி இருப்பதாகச் சொல்லி அவரிடமிருந்து பணம் வாங்கியுள்ளார் சிவன்ராஜ். அவ்வாறு பெற்ற பணத்தை ஆன்லைன் ரம்மி சூதாட்டத்தில்  இழந்துவிட்டார்.

 

ஒரு கட்டத்தில் 3 ஆயிரம் செலுத்தி விளையாடியதில் 7 லட்சம் கிடைக்க, மேலும் அதிக பணத்திற்கு ஆசைப்பட்டு நண்பர்களிடம் கடன் வாங்கியும், ஆன்லைன் நிறுவனத்தில் கடன் பெற்றும் 7 லட்சத்தை 2 மடங்காக மாற்ற நினைத்த சிவன்ராஜ்., முந்தைய வெற்றியின் நம்பிக்கையில் 14 லட்சம் கட்டினால் 28 லட்சம்  கிடைக்கும் என தன்னுடைய ரம்மி விளையாட்டில்  14 லட்சத்தையும் தான் வழக்கமாக ரீசார்ஜ் செய்கிற கிராமத்தில் உள்ள கடைகளின் மூலம் ஆன்லைன் கணக்கில் ரீசார்ஜ் செய்து விளையாடியதில் 14 லட்சமும்  இழந்துவிட்டதால் அதிர்ச்சி அடைந்துள்ளார். இழந்த பணத்தை எப்படியாவது மீட்க வேண்டும் என்ற எண்ணம் ஒருபுறமிருந்தாலும், அதற்காக வாங்கப்பட்ட கடனுக்கான நெருக்கடி மேலும் சிவன்ராஜுக்கு ஏற்பட்டுள்ளது. "தனக்கு கடன்கள் இருக்கின்றன அதனை அடைக்க பணம் வேண்டும். பணம் தரவில்லை என்றால் என்னை உசுரோட பாக்க முடியாது" என்று தன் தந்தையிடம் சிவன்ராஜ் கூறியுள்ளார்.

 

தனது ஒரே மகன் விபரீதமாக ஏதாவது செய்துகொள்ளக்கூடாது என்ற பயத்தில், தந்தை தன் சொத்தை விற்று மகன் கேட்ட பணத்தைக் கொடுத்திருக்கிறார். அன்றைய தினம் அதை வைத்து ஆன்லைன் ரம்மி விளையாடியதில் ஒரே இரவில் ஒரு லட்சத்தை இழந்திருக்கிறார். இதனால் மேலும் அதிர்ச்சி அடைந்தார் சிவன்ராஜ். மேலும்  ரம்மி விளையாட ஆன்லைன் நிறுவனத்திடம்  இருந்து பெற்ற கடன் 5 லட்சம் திரும்பச் செலுத்த வேண்டிய அழுத்தம் ஏற்பட்டதால் விரக்தி அடைந்திருக்கிறார் சிவன்ராஜ். மகன் ஏதாவது செய்துவிடக்கூடாது என  பயந்துபோன பெற்றோர் அவரைச் சமாதானப்படுத்தியதோடு, இருக்கும் தங்களின் ஒரே சொத்தை விற்று ரம்மி விளையாட்டிற்காக ஆன்லைன்  நிறுவனத்தில் பெற்ற கடனை அடைத்திருக்கிறார்கள். ஆனாலும் ரம்மியில் இழந்ததை ரம்மி விளையாடியே பிடிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் சம்பவத்திற்கு முதல் நாள் கையிலிருக்கும் 70 ஆயிரத்தை ரீசார்ஜ் செய்து சிவன்ராஜ் ரம்மி ஆடியதிலும் பணத்தை இழந்திருக்கிறார்.

 

online rummy issue in tirunelveli district farmer loss his son and 15 lakhs 

ஒட்டு மொத்தமாக பணத்தை இழந்த சிவன்ராஜ் விரக்தியில் நண்பர்களிடம் வாங்கிய கடன், தன் பெற்றோர்களின் சொத்தும் காலியானதை எண்ணி மனம் உடைந்து போன சிவன்ராஜ் ஜனவரி  10 ஆம் தேதி  பெற்றோரிடம் இருநூறு ரூபாய் வாங்கிக் கொண்டு இரவு சென்றவர் வீடு திரும்பவே இல்லை. மறுநாள் காலையில் வீட்டருகே உள்ள தோட்டத்தில் மயங்கிக் கிடந்த சிவன்ராஜை பார்த்த அங்குள்ள விவசாயிகள் அவரை மீட்டு பணகுடி ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாகத் தெரிவித்தனர். இதையடுத்து அங்கு வந்த பணகுடி போலீசார் உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக நாகர்கோவில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு  அனுப்பி வைத்தனர். போலீசாரின் விசாரணையில் ஆன்லைன் ரம்மியில் 15 லட்சம் இழந்துள்ள சிவன்ராஜ் விரக்தியில் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்துள்ளது.

 

"ஒரே பிள்ளைங்குறதால அவன் கேட்ட நேரமெல்லாம், அவன் மனசொடஞ்சி போயிறக் கூடாதுன்றதுக்காக பணம் குடுத்தேன்யா. பணம் குடுக்கலன்னா மிரட்டுவான். கடன் இருக்கு அடைக்கணும்னான். கடைசியாக ஒரு லட்சம் கொடுத்தேன். சொத்த வித்து அவனுக்கு மட்டும் 15 லட்சம் கொடுத்தேன். இப்படி ஆகும்னு நினைக்கலியே. ரம்மி ஆட்டத்தில எல்லாம் போய், மகன் உசுரு போய், இப்ப நடுத்தெருவுக்கு வந்துட்டோம்யா" என மகனை இழந்த துக்கமும் வேதனையுமாக கூறினார் சிவன்ராஜ் தந்தை பாஸ்கரன்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

இளைஞனால் பெரியம்மாவிற்கு நேர்ந்த கொடூரம்; திருவள்ளூரில் பரபரப்பு

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
 young man who stabbed Periyamma to passed away

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அருகே உள்ளது கனகவல்லிபுரம். இந்தக் கிராமத்தைச் சேர்ந்தவர் குமார். இவர் மின்வாரியத்தில் வேலை பார்த்து ஓய்வு பெற்றுள்ளார். இவரின் மனைவி சரஸ்வதி. இவருக்கு 55 வயது ஆகிறது. இந்தத் தம்பதியருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். அவர்களுக்கு திருமணமாகி வெளியூரில் வசித்து வருகின்றனர். இதன் காரணமாக பொன்னேரியில் உள்ள வீட்டில் குமார் மற்றும் சரஸ்வதி இருவரும் தனியாக வசித்து வந்துள்ளனர். அவ்வப்போது மகள்கள் பொன்னேரிக்கு சென்று பெற்றோர்களை பார்த்து வந்துள்ளனர்.

இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு, குமார் வீட்டிற்கு தேவையான பொருள்கள் வாங்க, பொன்னேரி கடைத்தெருவிற்கு சென்றுள்ளார். அவரின் மனைவி சரஸ்வதி மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். கடைக்கு சென்றவர், பொருள்களை வாங்கிவிட்டு வீட்டுக்கு சென்றுள்ளார். அப்போது வீட்டின் கதவு திறந்திருந்தபடி கிடந்துள்ளது. இதனால் அதிர்ச்சியான குமார், சற்று வேகமாக வீட்டின் உள்ளே நுழைந்து பார்த்துள்ளார். 

அப்போது அவரது மனைவி சரஸ்வதி, வீட்டுக்குள் ரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளார். இதனைப் பார்த்ததும் குமார் அதிர்ச்சியில் கதறி அழுதுள்ளார். குமாரின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு ஓடி வந்துள்ளனர். அப்போது குமாரின் வீட்டுக்குள் சென்று பார்க்கும் போது சரஸ்வதி ரத்த வெள்ளத்தில் கிடப்பதைப் பார்த்து அவர்களும் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.

பின்னர், அங்கிருந்த சிலர் சரஸ்வதியைத் தூக்கி முதலுதவி செய்ய முற்பட்டுள்ளனர். அப்போதுதான் தெரிந்துள்ளது சரஸ்வதி இறந்துவிட்டார் என்று. இதனைக் கேட்டதும் குமார் கதறி அழுதுள்ளார். இதனையடுத்து, அங்கிருந்த சிலர் இது குறித்து பொன்னேரி காவல் நிலைய போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்த சரஸ்வதியின் உடல் மற்றும் அவரின் வீட்டில் இருந்த தடயங்களை சேகரித்துள்ளனர். அப்போது சரஸ்வதியின் கழுத்தில் அணிந்திருந்த தாலி சங்கிலி மாயமாகி இருந்தது தெரியவந்துள்ளது. அதன் பின்னர், அவரின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

இதனையடுத்து இந்தக் கொலை தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். மேலும், சரஸ்வதியின் கழுத்தில் அணிந்திருந்த சங்கிலி மாயமாகி இருந்த காரணத்தால் இந்தக் கொலை, சங்கிலிக்காக நடந்திருக்கலாம்.... என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை முடுக்கியுள்ளனர். இதற்காக, குமார் உட்பட அவரின் உறவினர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினர் என அனைவரிடமும் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

இது குறித்து குமாரிடம் விசாரணை செய்த போது, தனக்கு இந்தப் பகுதியில் சொத்து தொடர்பாகவோ அல்லது வேறு விஷயங்கள் தொடர்பாக எதிரிகள் யாருமே இல்லை எனக் கூறியிருக்கிறார். இதனையடுத்து, குமாரின் வீட்டிற்கு யாரேனும் வந்து சென்றார்களா?... என அந்தப் பகுதியில் உள்ள சிலரிடம் விசாரித்துள்ளனர். அப்போது சம்பவத்தன்று சரஸ்வதியின் சகோதரி மகனான அசோக்குமார் வந்து சென்றதாக சிலர் கூறியுள்ளனர். உடனே அசோக்குமாரை பிடித்து விசாரித்துள்ளனர். முதலில் இது குறித்து தனக்கு எதுவும் தெரியாது எனக் கூறிய அசோக்குமார், பின்னர் போலீசாரிடம் முன்னுக்கு பின் முரணாக பதில் கூறியிருக்கிறார். இதனால், மேலும் சந்தேகமடைந்த போலீசார் அவரை காவல் நிலையம் கொண்டு சென்று விசாரித்துள்ளனர்.

விசாரணையில், அவசர தேவைக்கு பணம் தேவைப்பட்டதால் தனது பெரியம்மாவான சரஸ்வதிடம் சென்று கேட்டதாகவும், அவர் அப்போது பணம் கொடுக்க மறுத்த காரணத்தால், இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதும் தெரியவந்துள்ளது. வாக்கு வாதத்தின் போது திடீரென ஆத்திரமடைந்த அசோக்குமார், வீட்டில் இருந்த கத்தியைக் கொண்டு சரஸ்வதியை சரமாரியாக குத்தியதும், பின்னர் அவரின் கழுத்தில் இருந்த சங்கிலியை பறித்துச் சென்றதும் தெரியவந்துள்ளது. இதனையடுத்து அசோக்குமாரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இந்தச் சம்பவம் பொன்னேரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

எல்.முருகன் மீது வழக்குப் பதிவு

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
Case registered against L. Murugan

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

அரசியல் கட்சிகள் தீவிரமான தேர்தல் பரப்புரையில் இறங்கிய நிலையில், மறுபுறம் தேர்தல் பறக்கும் படையினர் பல்வேறு இடங்களில் அதிரடி சோதனைகளில் இறங்கியுள்ளனர். இந்நிலையில், தேர்தல் நடத்தை வழிமுறைகளை மீறியதாக நீலகிரி பாஜக வேட்பாளர் எல்.முருகன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த 25 ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய வந்த மத்திய இணை அமைச்சரும் நீலகிரி நாடாளுமன்றத் தொகுதி பாஜக வேட்பாளருமான எல்.முருகன் பல்வேறு கோவிலுக்கு சென்று வழிபாடு நடத்தியதுடன் உதகை அருகே உள்ள கிராமம் ஒன்றுக்குச் சென்று எந்த அனுமதியும் பெறாமல் 100க்கும் மேற்பட்டோர் ஆலோசனையில் ஈடுபட்டதாக கூறப்பட்டது. இதுகுறித்து தேர்தல் பறக்கும் படையின் தலைவராக உள்ள துணை வட்டாட்சியர் தனலட்சுமி தேனாடுகம்பை காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இந்த புகாரின் அடிப்படையில் தேர்தல் நடத்தைகளை மீறியதாக எல்.முருகன் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.