Skip to main content

வீட்டில் மது விற்ற மூதாட்டி அதிரடி கைது; மதுபாட்டில்கள் பறிமுதல்

Published on 01/06/2023 | Edited on 01/06/2023

 

An old woman who sold liquor at her house was arrested following the public protest

 

ஈரோடு, ராசாம்பாளையம் ரோடு, எஸ்.எஸ்.பி நகரில் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியின் ஒரு வீட்டில் செல்லாயி (58) என்ற மூதாட்டி பல வருடங்களாக வீட்டில் வைத்து மது விற்பனையில் ஈடுபட்டு வந்தார். இவர் வீட்டுக்கு மது அருந்த வருபவர்களால் அப்பகுதி மக்கள் பல்வேறு அவதிக்கு உள்ளாகினர். மது குடிக்க வரும் குடிமகன்களால் அப்பகுதி பெண்கள், குழந்தைகள் வெளியே வர அச்சப்பட்டனர்.

 

இதுதொடர்பாக அப்பகுதி மக்கள் ஏற்கனவே ஈரோடு கலெக்டர் அலுவலகம், எஸ்.பி. அலுவலகத்தில் மனு அளித்தனர். ஆனால் இந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதையடுத்து கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு அப்பகுதி மக்கள் ஒன்று திரண்டு மது விற்பனையை தடுத்து நிறுத்தக் கோரி திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது வீரப்பன் சத்திரம் இன்ஸ்பெக்டர் சண்முகம் தலைமையிலான போலீசார் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

 

நிச்சயமாக மது விற்பனையில் ஈடுபடுபவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என இன்ஸ்பெக்டர் சண்முகம் உறுதி அளித்தார். இதனைத் தொடர்ந்து போலீசார் அந்த பகுதியில் உள்ள செல்லாயி வீட்டுக்கு சென்றனர். அங்கு செல்லாயிடம் விசாரணை நடத்தினர். வீட்டில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 12 மது பாட்டில்களையும் பறிமுதல் செய்தனர். இது குறித்து வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து செல்லாயியை கைது செய்தனர். மேலும் இந்த மது விற்பனையில் தொடர்புடைய அவருடைய உறவினர்களையும் தேடி வருகின்றனர்.

 

 

கடக்கும் முன் கவனிங்க...

கடக்கும் முன் கவனிங்க...

விரிவான அலசல் கட்டுரைகள்

சார்ந்த செய்திகள்

சார்ந்த செய்திகள்

Next Story

‘எங்கள் பகுதிக்கு டாஸ்மாக் வேண்டும்’ - மது பிரியர்கள் ஆட்சியரிடம் மனு

Published on 07/12/2023 | Edited on 07/12/2023

 

people petition Ranipet District Collector to open Tasmac in their area

 

ராணிப்பேட்டை மாவட்டம் பள்ளம் முள்ளுவாடி, மேட்டு முள்ளுவாடி, அரும்பாக்கம், குருந்தாங்கல் ஆகிய கிராமங்களை சேர்ந்த மது பிரியர்கள் மற்றும் பொதுமக்கள் முள்ளுவாடி ஊராட்சி பகுதியில் அரசு மதுபான கடையை அமைக்க வேண்டும் என்கிற கோரிக்கை மனுவினை மாவட்ட ஆட்சியரிடம் வழங்கியுள்ளனர் . 

 

அந்த கோரிக்கை மனுவில், கடந்த சில வருடங்களுக்கு முன்பு அரசு அறிவிப்பின் காரணமாக முள்ளுவாடி ஊராட்சிக்கு உட்பட்ட நெடுஞ்சாலை ஓரமிருந்த அரசு மதுபான கடையை இடமாற்றம் செய்து கலவையை அடுத்த நெத்தம்பாக்கம் பகுதியில் மதுபான கடை திறக்கப்பட்டுள்ளாதாக கூறப்படுகிறது.

 

people petition Ranipet District Collector to open Tasmac in their area

 

முள்ளுவாடி கிராம பகுதியில் இருந்து நெத்தம்பாக்கம் வரை ஆறு கிலோமீட்டர் தொலைவு சென்று எங்களால் மதுபான பாட்டில்களை வாங்க இயலவில்லை. இதனை சாதகமாக பயன்படுத்திக்கொள்ளும் இப்பகுதியை சேர்ந்த சிலர், அரசு மதுபான பாட்டில்களை மொத்தமாக வாங்கி வந்து  ஒரு குவாட்டர் பாட்டில் மீது 40 ரூபாய் முதல் 60 ரூபாய் வரை கூடுதல் விலை வைத்து விற்பனை செய்து வருகின்றனர்.

 

இதுகுறித்து புகார் சொன்னால் காவல் துறையினர் தடுத்து நிறுத்துவதில்லை. இதனால் எங்களுக்கு பெரு நஷ்டம். விவசாயம் மற்றும் கூலி தொழில் செய்யும் மது பிரியர்கள் கள்ளச் சந்தையில் விற்கப்படும் மதுபான பாட்டில்களை வாங்கி வருவதால் தங்களது ஒரு நாள் வருமானம் அதிலேயே செலவாகி விடுகிறது. கள்ளச் சந்தையில் மது விற்பனையை தடுப்பதற்கான நடவடிக்கை எடுக்காத மாவட்ட நிர்வாகம், தங்களது கிராம பகுதியில் அரசு மதுபான கடையை கொண்டுவர வேண்டுமென மதுபான பிரியர்கள் மாவட்ட நிர்வாகத்துக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

 

 

விரிவான அலசல் கட்டுரைகள்

Next Story

‘என் காதலிய என்னோட அனுப்புங்க’ -  இன்னொருவர் மனைவியை வம்புக்கு இழுத்த இளைஞர் 

Published on 07/12/2023 | Edited on 07/12/2023

 

 youth threatens to send someone else  wife with him

 

நாகப்பட்டினம் காடாம்பாடி மகாலட்சுமி நகர் சுனாமி குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் நேசமணி. இவர் மீது நாகை உள்ளிட்ட பல்வேறு காவல் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது. மேலும் குற்ற பின்னணி உடையவர்கள் பட்டியலிலும் இருந்து வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், புதிய பேருந்து நிலையம் அருகே, அரசு தலைமை மருத்துவமனை எதிரே உள்ள சாலையில் கத்தியை வைத்துக் கொண்டு இருசக்கர வாகனத்தில் சென்றவர்களையும், பொது மக்களையும் கத்தியால் குத்துவதற்கு பாய்ந்து சென்றதால், பொது மக்கள் அச்சமடைந்து நாலாபக்கமும் சிதறி ஓடினர்.

 

மேலும் அவ்வழியே வந்த டிராக்டரை நிறுத்தி ஓட்டுனரை குத்த பாய்ந்து ரகளையில் ஈடுபட்டார். தகவல் அறிந்து வந்த வெளிப்பாளையம் போலீசார்  அவரை மடக்கி பிடிக்க முற்பட்ட போது போலீசாரையும் கத்தியால் குத்த முற்பட்டதால் போலீசார் அதிர்ச்சியடைந்தனர். தொடர்ந்து தன்னை பிடித்தால் கழுத்தை அறுத்துக் கொள்வதாக பயமுறுத்திய அவர், தன்னுடைய கழுத்தை அறுத்துக் கொண்டு ரத்தம் வழிய, வழிய பொது மக்களையும் குத்துவதற்கு பாய்ந்தார். இதற்கு பயந்து வாகன ஓட்டிகள் வண்டிகளை நிறுத்தியதால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

 

தொடர்ந்து பொது மக்கள் உதவியுடன் மடக்கி பிடித்த போலீசார் அவரை சிகிச்சைக்காக அருகில் உள்ள அரசு தலைமை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு சிகிச்சை எடுக்க மறுப்பு தெரிவித்து தப்பிக்க முயன்றார். அவரை துரத்தி பிடிக்க சென்ற போலீசாரை மருத்துவமனை வாசலிலே வைத்து துரத்தி துரத்தி கத்தியால் குத்த பாய்ந்த வீடியோவும் தற்போது வெளியாகி உள்ளது. இதனால் மருத்துவமனை வளாகமே பரப்பரப்பானது. 

 

தொடர்ந்து மடக்கி பிடித்த போலீசார் காவல் நிலையத்திற்கு இழுத்து சென்றனர். விசாரணையில், 6 வருடத்திற்கு முன்பு அதே பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்து வந்ததாகவும், அந்த பெண்ணிற்கு வேறு ஒருவரோடு திருமணம் ஆன நிலையில் கடந்த 2 வருடமாக அதே பெண்ணோடு தொடர்பில் இருந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் அந்த பெண்ணின் கணவன் வெளிப்பாளையம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அப்போது விசாரணைக்கு வந்தவர், அந்த பெண்ணை தன்னோடு சேர்த்து வைக்குமாறு ரகளையில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.

 

நாகையில் முன்னாள் காதலியும் இன்னொரு மனைவியான பெண்ணை தன்னோடு சேர்த்து வைக்க சொல்லி கத்தியால் பொது மக்கள் மற்றும் போலீசாரையும் குத்த பாய்ந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

 

 

விரிவான அலசல் கட்டுரைகள்