Skip to main content

கட்டிலில் தூங்கிக் கொண்டிருந்த முதியவர் அடித்துக் கொலை; மர்ம நபர்கள் நள்ளிரவில் வெறிச்செயல்!     

Published on 08/06/2023 | Edited on 08/06/2023

 

old man was beaten to passed away while sleeping on a bed in Namakkal

 

நாமக்கல் அருகே, கட்டிலில் படுத்துத் தூங்கிக் கொண்டிருந்த ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியரை நள்ளிரவில் மர்ம நபர்கள் கட்டில் காலால் அடித்துக் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.    

 

நாமக்கல் மாவட்டம் நாமகிரிப்பேட்டை அருகே உள்ள ஆர்.புதுப்பட்டியைச் சேர்ந்தவர் சுப்ரமணி (70). ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியரான  இவர், ஒலிபெருக்கிக் கடை நடத்தி வந்தார். இத்துடன், அதிமுக பேரூர் செயலாளர் மணிகண்டன் என்பவருக்குச் சொந்தமான தண்ணீர் கேன் விநியோகம் செய்யும் கடையிலும் வேலை செய்து வந்தார். இவருக்கு இரண்டு மகன்கள், ஒரு மகள் உள்ளனர். மூத்த மகன் பாஸ்கரின் வீட்டின் பின்புறம் உள்ள வீட்டில் சுப்ரமணி தனியாக வசித்து வந்தார். ஜூன் 5 ஆம் தேதி இரவு வழக்கம்போல் பணிகளை முடித்துக்கொண்டு, வீட்டின் முன்பு கட்டிலில் படுத்துத் தூங்கினார். அப்போது மர்ம நபர்கள், கட்டில் காலை உடைத்து, அந்த கட்டையால் சுப்ரமணியின் தலையில் தாக்கியுள்ளனர். இதில் பலத்த காயம் அடைந்த அவர் நிகழ்விடத்திலேயே பலியானார்.

 

அன்றாடம் காலையில் அருகில் வசிக்கும் மூத்த மகனின் வீட்டுக்கு தேநீர் குடிக்கச் செல்லும் சுப்ரமணி காலையில் வரவில்லை.  இதனால் சந்தேகம் அடைந்த குடும்பத்தினர் சுப்ரமணியை தேடிச்சென்று பார்த்தபோதுதான் அவர் ரத்த வெள்ளத்தில் சடலமாகக் கிடப்பது  தெரிய வந்தது. இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர், இதுகுறித்து நாமகிரிப்பேட்டை காவல்நிலையத்திற்கு தகவல் அளித்தனர். அதன் பேரில் காவல்துறையினர் நிகழ்விடம் விரைந்தனர். சடலத்தை மீட்ட காவல்துறையினர், உடற்கூராய்வுக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி  வைத்தனர். தடய அறிவியல் நிபுணர்கள் நிகழ்விடத்தில் தடயங்கள், விரல் ரேகைகளை சேகரித்தனர். மோப்ப நாய் மூலமும் சோதனை நடத்தப்பட்டது.  மோப்ப நாய், நிகழ்விடத்தில் இருந்து மலையம்பட்டி சாலையில் ஒரு கி.மீ. தொலைவிற்கு ஓடிச்சென்றுவிட்டு திரும்பவும் வந்துவிட்டது.

 

இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கொலையுண்ட சுப்ரமணிக்கு யாருடனாவது முன்விரோதம்  இருந்ததா? அவர் வீட்டில் ஏதேனும் பணம், நகைகளை சேர்த்து வைத்துள்ளாரா? என்பது குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடந்து  வருகிறது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

எல்.முருகன் மீது வழக்குப் பதிவு

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
Case registered against L. Murugan

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

அரசியல் கட்சிகள் தீவிரமான தேர்தல் பரப்புரையில் இறங்கிய நிலையில், மறுபுறம் தேர்தல் பறக்கும் படையினர் பல்வேறு இடங்களில் அதிரடி சோதனைகளில் இறங்கியுள்ளனர். இந்நிலையில், தேர்தல் நடத்தை வழிமுறைகளை மீறியதாக நீலகிரி பாஜக வேட்பாளர் எல்.முருகன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த 25 ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய வந்த மத்திய இணை அமைச்சரும் நீலகிரி நாடாளுமன்றத் தொகுதி பாஜக வேட்பாளருமான எல்.முருகன் பல்வேறு கோவிலுக்கு சென்று வழிபாடு நடத்தியதுடன் உதகை அருகே உள்ள கிராமம் ஒன்றுக்குச் சென்று எந்த அனுமதியும் பெறாமல் 100க்கும் மேற்பட்டோர் ஆலோசனையில் ஈடுபட்டதாக கூறப்பட்டது. இதுகுறித்து தேர்தல் பறக்கும் படையின் தலைவராக உள்ள துணை வட்டாட்சியர் தனலட்சுமி தேனாடுகம்பை காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இந்த புகாரின் அடிப்படையில் தேர்தல் நடத்தைகளை மீறியதாக எல்.முருகன் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

Next Story

பட்டப்பகலில் வீடு புகுந்து படுகொலை; 6 மணி நேரத்தில் பிடிபட்ட குற்றவாளி

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
Cruelty to a woman in broad daylight; Criminal caught in 6 hours

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் வீட்டில் தனியாக இருந்த பெண் ஒருவர் சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இந்த வழக்கில் 6 மணி நேரத்தில் குற்றவாளியை போலீசார் கைது செய்துள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி பகுதியைச் சேர்ந்தவர் குமார். ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியரான இவர் நேற்று வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பியுள்ளார். அப்போது வீட்டின் ஹாலில் அவருடைய மனைவி சரஸ்வதி வெட்டுக் காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் கிடந்தார். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த குமார் கூச்சலிட்டுள்ளார். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து பார்த்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

தகவலறிந்து உடனடியாக சம்பவம் நடந்த இடத்திற்கு வந்த போலீசார், ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்த சரஸ்வதியின் உடலைப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மர்ம நபர்கள் சரஸ்வதியை வெட்டிப் படுகொலை செய்துவிட்டு அவர் கழுத்தில் இருந்த தங்க நகையைப் பறித்துச் சென்றது விசாரணையில் தெரியவந்தது. இருப்பினும் இந்த கொலை, நகைக்காக நடந்ததா அல்லது வேறு ஏதேனும் முன் விரோதப் பிரச்சனை காரணமாக நிகழ்ந்ததா என்பது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டப்பகலில் பெண் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Cruelty to a woman in broad daylight; Criminal caught in 6 hours

இந்த சம்பவத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், உயிரிழந்த பெண்ணின் சகோதரி மகனே கொலையில் ஈடுபட்டது தெரியவந்தது. பணம் கேட்டுத் தராததால் ஆத்திரத்தில் இருந்த சரஸ்வதியின் சகோதரி மகன் அசோக் குமார், வீட்டில் சரஸ்வதி தனியாக இருந்த பொழுது கத்தியால் குத்திக் கொலை செய்தது தெரியவந்தது.