Skip to main content

மதுரை பாண்டி கோவிலில் முதியவர் தொலைத்த ரூ. 3 லட்சம்! - போலீசார் மீட்டதில் பரவசம்!

Published on 18/12/2021 | Edited on 18/12/2021

 

Old man loses Rs 3 lakh at Madurai Pandi temple

 

எத்தனை வசதியிருந்தாலும், ‘கல்யாண வீட்டுச் சாப்பாட்டு ருசியே தனிதான்’ என்று பந்தியில் அமர்ந்து சாப்பிட விரும்புபவர்கள் அனேகம்பேர். அதேபோல், கோவில் விருந்துகளில் சாப்பிடுவதும், பலருக்கும் பிடித்தமானது.  

 

விருதுநகர் மாவட்டத்துக்காரரான 62 வயதைக் கடந்த அழகிரிசாமிக்கும், அப்படி ஒரு ஆசை வந்தது. இத்தனைக்கும் அவர், அரசு போக்குவரத்துக் கழகத்தில் நடந்துநராகப் பணியாற்றி ஓய்வுபெற்றவர். தனது கைப்பையில் சுமார் ரூ. 3 லட்சம் வைத்திருந்தார். ஆனாலும், மதுரை பாண்டி கோவிலுக்குச் சென்ற இடத்தில், அங்கு ஒரு மண்டபத்தில் எல்லோருக்கும் இலவச அசைவ விருந்து பறிமாறியதை அறிந்து சென்றார். வயிறுமுட்டச் சாப்பிட்டார். உண்ட திருப்தியில், தனது பணப்பையை மறந்து வைத்துவிட்டு பேருந்து ஏறினார். விருதுநகர் செல்லும் வழியில் பணப்பை ஞாபகம் வர, பேருந்திலிருந்து இறங்கி, வேறு பேருந்தில் ஏறி, பாண்டி கோவில் மண்டபம் வந்தார். மண்டபத்தில் யாருமே இல்லை, வைத்த இடத்தில் பணப்பையும் இல்லை. குமுறலோடு மதுரை மாட்டுத்தாவணி போலீசாரிடம் புகாரளித்தார். 

 

காவல்துறை விசாரணையில், அந்த மண்டபத்தில் நிகழ்ச்சியை நடத்தியவர்கள், திண்டுக்கல் – மட்டப்பாறையைச் சேர்ந்த, கோயம்புத்தூரில் காவலராகப் பணிபுரியும் பாண்டியராஜன் என்பது தெரியவந்துள்ளது. அவரிடம் விசாரணை மேற்கொண்டபோது, ‘ஆமாம்.. பணப்பையை நாங்கள்தான் எடுத்து வைத்திருக்கிறோம். காவல்துறையிடம் ஒப்படைக்க நினைத்தபோது, நீங்களே வந்துவிட்டீர்கள். இந்தாங்க அந்தப் பணப்பை’ என்று திருப்பிக்கொடுத்துள்ளார். 

 

பணப்பை தனக்குத் திரும்பக் கிடைத்ததும் ‘மதுரை பாண்டி ஐயா.. போலீசார் உருவத்தில், தொலைந்த பணத்தை எனக்கு கிடைக்கும்படி செய்துவிட்டாயே! உன் மகிமையே மகிமை!’ என்று மனமுருகி மதுரை பாண்டீஸ்வரரை நன்றியோடு வணங்கினார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'ஒரே குடும்பத்தில் 90 பேர்'-வண்டி கட்டிக்கொண்டு வாக்களிக்க வந்த சம்பவம்

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
'90 people in the same family'-incident of carting and coming to vote

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது.  இந்நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்தி வருகின்றனர்.

தமிழகத்தில் பிற்பகல் 3 மணி நிலவரப்படி சராசரியாக 50 சதவீதத்திற்கும் மேலாக வாக்குப்பதிவு நடந்துள்ளது. இந்நிலையில் விருதுநகரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 90 பேர் வண்டி கட்டிக் கொண்டு சென்று வாக்களித்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள பூசாரி நாயக்கன்பட்டி ஊரில் உள்ள ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 90க்கு மேற்பட்டோர் வாக்காளர் அடையாள அட்டை மற்றும் ஆதார் கார்டுடன் வண்டி கட்டிக்கொண்டு வாக்களிக்க வந்தனர். விவசாயத் தொழிலில் ஈடுபட்டிருக்கும் 100 பேர் கொண்ட கூட்டுக் குடும்பத்தினர் வாக்களித்தனர்.

Next Story

விருதுநகர் தொகுதி; ஜனநாயகக் கடமையை நிறைவேற்றும் மக்கள் (படங்கள்)!

Published on 19/04/2024 | Edited on 19/04/2024

 

விருதுநகர் கூரைக்குண்டு, அரசு தொடக்கப்பள்ளி வாக்குச்சாவடி மையத்தில்,விருதுநகர்  மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் / மாவட்ட ஆட்சித் தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன் இ.ஆ.ப.,  தனது வாக்கினைப்  பதிவு செய்தார்.

மல்லங்கிணர் அரசுத் தொடக்கப்பள்ளியில் அமைச்சர் தங்கம் தென்னரசு,தனது குடும்பத்தினருடன் வந்து வாக்களித்தார். திருப்பரங்குன்றம் – திருநகரிலுள்ள சீதாலட்சுமி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூர் வாக்களித்தார். திருத்தங்கல் கே.எம்.கே.ஏ.பள்ளியில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி வாக்களித்தார்.

விருதுநகர் பாராளுமன்றத் தொகுதியில் மொத்தம் 15,01,942 வாக்காளர்கள் உள்ளனர். மொத்தம் 1689 மையங்களில் வாக்காளர்கள் வாக்களித்துக் கொண்டிருக்கிறார்கள். ஏற்பாடு செய்யப்பட்ட சக்கர நாற்காலிகளில் மாற்றுத்திறனாளிகளும் முதியோரும் வாக்களித்துள்ளனர்.  இந்தத் தேர்தலில் 18 வயது நிரம்பிய வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ள முதல் முறை, இளம் தலைமுறை வாக்காளர்கள்,  மூத்த வாக்காளர்கள், திருநங்கைகள், பெண்கள், கர்ப்பிணிகள், மாற்றுத்திறனாளிகள் என அனைத்துத் தரப்பு வாக்காளர்களும் வாக்களித்து, தங்களது ஜனநாயகக் கடமையை நிறைவேற்றி வருகின்றனர். 

விருதுநகர் பாராளுமன்றத் தொகுதி  வாக்குப் பதிவு  மதியம் 1.00 மணி நிலவரப்படி விருதுநகர்- 40.19%, திருப்பரங்குன்றம் - 39.33%, திருமங்கலம் - 41.70%, சாத்தூர் - 44.32%, சிவகாசி- 36.14%, அருப்புக்கோட்டை - 41.31%, என மொத்தம் - 40.45% வாக்குகள் பதிவாகியுள்ளது.