Skip to main content

“படிச்சி என்னத்த.. பாட்டில்தான் பொறுக்கிக்கிட்டு இருக்கேன்” - தலைமையாசிரியரிடம் ஆவேசப்பட்ட முதியவர்

Published on 19/10/2022 | Edited on 19/10/2022

 

old man angry with school head master

 

“படிச்சி என்னத்த கிழிச்சேன்.. பாட்டில் பொறுக்கிக்கிட்டு இருக்கேன்..” என மாணவர் சங்கத்தினருக்கும் ஆசிரியருக்கும் நடந்த வாக்குவாதத்துக்கு மத்தியில், கோணிப்பையுடன் வந்திருந்த முதியவர் ஒருவர் ஆக்ரோஷத்துடன் பேசிய வீடியோ காட்சிகள் வைரலாகி வருகிறது.

 

மத்திய அரசு நாடு முழுவதும் இந்தி மொழி திணிப்பை அமல்படுத்த முயற்சிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துவருகிறது. இதற்கு பல்வேறு மாநிலங்களில் கண்டனம் வலுத்து வருகிறது. இந்த நிலையில் இந்திய மாணவர் சங்கம் சார்பில், தமிழகம் முழுவதும் இந்தி திணைப்பை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அவிநாசி அரசு மேல்நிலைப் பள்ளி அருகே, இந்திய மாணவர் சங்க அவிநாசி ஒன்றிய செயலாளர் மணிகண்டன் தலைமையில், மாவட்ட நிர்வாகி மோகனப்பிரியா முன்னிலையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

 

இதனையறிந்த அரசு பள்ளி தலைமை ஆசிரியர் ஆனந்தன், பள்ளி உதவியாளர் மாதையன் ஆகியோர், மாணவர் சங்க நிர்வாகிகளை கலைந்து செல்லுமாறு எச்சரிக்கை விடுத்துள்ளனர். மேலும், இந்தி எதிர்ப்பு பிளக்ஸ் பேனரையும் பிடுங்கி வீசியதாக சொல்லப்படுகிறது. இதையடுத்து மாணவர் சங்க ஒன்றிய செயலாளர் மணிகண்டனிடம், பள்ளியில் பணியாற்றும் மாதையன் என்பவர், இந்தி மொழி கற்பது தவறில்லை, மும்மொழி கொள்கை  கற்றுக் கொள்ள வேண்டியதுதானே, எனக்கு 30 மொழி தெரியும் என வாக்கு வாதத்தில் ஈடுபட்டிருந்தார்.

 

அப்போது அந்த வழியாக வந்த  கோணிப்பையுடன் பாட்டில் பொறுக்கிக்கொண்டு இருந்த முதியவர் ஒருவர் திடீரென ஆக்ரோஷமாக பேசத் தொடங்கினார். படிச்சு என்னத்த கிழிச்சேன்.. நானும் படிச்சவன்தான்.. இப்போ பாட்டில் பொறுக்கிக்கிட்டு இருக்கேன்.. எனக் கோபமாக கூறினார். இதனை அங்கிருந்தவர் ஒருவர் வீடியோவாக படம் பிடித்து சமூக வலைதளத்தில் வெளியிட்ட நிலையில், அது தற்போது வைரலாகி வருகிறது. 

 

இதனிடையே பள்ளி தலைமையாசிரியர் கொடுத்த  தகவலின் படி அவிநாசி காவல் நிலையத்திலிருந்து சம்பவ இடத்திற்கு வந்த காவலர்கள், மாணவர் சங்க நிர்வாகிகளை முறையாக காவல் நிலையத்தில் கடிதம் கொடுத்த பின்பு ஆர்ப்பாட்டம் நடத்துமாறு கூறினார்கள். இதன்பின்பு மாணவர் சங்க நிர்வாகிகள் கலைந்து சென்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கடும் வெயிலில் போக்குவரத்தை சரி செய்யும் முதியவர்!

Published on 11/04/2024 | Edited on 11/04/2024
 old man fixing the traffic in the hot sun

சமீபகாலமாக வேலூரில் நூறு டிகிரியை தாண்டிய வெயில் 106.4 டிகிரி வரை வெயில் பொதுமக்களை வாட்டி வரும் நிலையில், வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே சில்க் மில் பேருந்து நிலையத்தில் நான்கு முனை சந்திப்பு சாலையில் வாகனங்கள் கரடுமுரடாக சென்று கொண்டிருந்தது. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இதுபோன்ற சிக்னல்களில் மதிய நேரத்தில் வெய்யிலின் தாக்கத்தால் போக்குவரத்து காவலர்கள் பணி செய்வதில்லை. சுடும் வெயிலில் நிற்க முடியாமல் வாகன ஓட்டிகளும் போக்குவரத்து விதிகளை மீறி வேகமாக செல்கின்றனர். இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

இதனைப் பார்த்த அந்தப் பகுதியைச் சேர்ந்த முதியவர் ஒருவர், சாலையின் மையத்துக்கு சென்று ஒவ்வொரு புறத்தில் இருந்து வரும் வாகனங்களை நிறுத்தி போக்குவரத்து காவலரைப்போல் வழியனுப்பும் காட்சி அனைவரையும் ஆச்சர்யப்பட வைத்தது. வாகன ஓட்டிகளும் போக்குவரத்தை சரி செய்ய முயலும் முதியவருக்கு மரியாதை கொடுத்து வாகனங்களை நிறுத்தி, அதன் பிறகு சென்றனர். இதனால் சிலமணி நேரம் போக்குவரத்து நெரிசல் இல்லாத நிலை ஏற்பட்டது.

Next Story

மயிலாடுதுறையில் 7 பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு!

Published on 03/04/2024 | Edited on 03/04/2024
Holiday notification for only 7 schools in Mayiladuthurai

மயிலாடுதுறை நகரில் நேற்று (02-04-24) இரவு மிகப் பெரிய சிறுத்தை ஒன்று தென்பட்டதையடுத்து சி.சி.டி.வி காட்சிகள் அடிப்படையில் காவல்துறையினரும், வனத்துறையினரும் சிறுத்தை தென்பட்ட கூறைநாடு பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.

மயிலாடுதுறை நகரத்தின் ஒருபகுதியான கூறைநாடு செம்மங்குளம் அருகே நேற்று (02-04-24) இரவு  11 மணிக்கு  சிறுத்தை நடமாடியதைப் பார்த்ததாகச் சிலர் காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலின் பேரில், உடனடியாக அப்பகுதிக்கு விரைந்து வந்த காவல்துறையினரும், வனத்துறையினரும் சிறுத்தை நடமாட்டம் உள்ள கால் தடத்தை வைத்து சிறுத்தை சென்றதை உறுதி செய்தனர். பிறகு சி.சி.டி.வி கேமராவில் சிறுத்தையை நாய்கள் விரட்டி சென்றதையும் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

இதனையடுத்து, நள்ளிரவு முதல் வனத்துறை சார்பில் பொதுமக்கள் பாதுகாப்பாக வீட்டில் இருக்கவேண்டும் என ஒலிபெருக்கி மூலம் அறிவுறுத்தி வருகின்றனர். மேலும், சீர்காழி வனச்சரக அலுவலர் டேனியல் ஜோசப் தலைமையில் வனத்துறையினர் கையில் வலைகளுடன் தேடி வருகின்றனர். அதில், சிறுத்தை பதுங்கிய பகுதியில் பன்றி ஒன்று குதறியநிலையில் இறந்து கிடந்ததைக் கண்ட வனத்துறையினர் அதிர்ச்சியடைந்து தேடுதல் வேட்டையை தீவிரமாக்கியுள்ளனர். இதற்கிடையில் சிறுத்தை நடமாட்டம் உள்ள கூறைநாடு பகுதியில் உள்ள பால சரஸ்வதி மெட்ரிகுலேஷன் என்கிற தனியார் பள்ளிக்கு அந்த மாவட்ட ஆட்சியர் மகாபாரதி விடுமுறை இன்று (3.4.2024)  அளித்திருந்தார்.

இந்த நிலையில் சிறுத்தை அச்சுறுத்தல் காரணமாக மயிலாடுதுறை நகரில் 7 பள்ளிகளுக்கு மட்டும் நாளை(4.4.2024) விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் மகாபாரதி உத்தரவிட்டுள்ளார். மேலும் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறும் பள்ளிகளுக்கு காவல்துறை, தீயணைப்புத்துறை பாதுகாப்பு வழங்கவும் உத்தரவிட்டுள்ளார்.