Skip to main content

'அதிகாரிகள் உடனே வரணும்...'' 'மலைக்குன்றின் மீது ஏறி தற்கொலைக்கு முயன்ற இளைஞரால் பரபரப்பு!

Published on 28/05/2022 | Edited on 28/05/2022

 

 'Officers will come soon ...' '' Excitement by the youth

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்றுவதைக் கைவிடக்கோரி இளைஞர் ஒருவர் மலைக்குன்றின் மீது ஏறி தற்கொலை செய்து கொள்ளபோவதாக மிரட்டும் வீடியோ வெளியாகியுள்ளது.

 

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே உள்ள தும்பேரி கிராம ஊராட்சியில் உள்ள அண்ணா நகர் என்ற பகுதியில் உள்ளது வீராணம் மலையடிவாரம். இங்கு சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகள் இருக்கும் நிலையில் அப்பகுதியில் வனத்துறைக்குச் சொந்தமான இடத்தை ஆக்கிரமிப்பு செய்ததாக புகார் எழுந்தது. வனத்துறைக்கு சொந்தமான இடத்தில் உள்ள 19 வீடுகள் காலி செய்யப்பட வேண்டும் என வனத்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டு நோட்டீஸ் வழங்கப்பட்டு இருந்தது. ஆனால் தாங்கள் 21 வருடங்களாக இந்த இடத்தில் வசிப்பதால் இடத்தை காலி செய்ய மாட்டோம் என மக்கள் சார்பில் போராட்டம் நடத்தப்பட்டு வந்தது. இந்த நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த இளைஞர் கல்லூரி மாணவர் சிவராஜ் என்பவர் அருகில் இருக்கும் மலைக்குன்றின் மீது ஏறி அதிகாரிகள் வந்து தங்களுக்கு  தீர்வு காணாவிட்டால் தற்கொலை செய்துள்ளதாக மிரட்டல் விடுத்தார். சம்பவ இடத்திற்குச் சென்ற தீயணைப்புத் துறையினர் மற்றும் வருவாய் துறையினர், உறவினர்கள் பேச்சுவார்த்தை நடத்தி ஒரு மணி நேரத்தில் போராட்டத்திற்குப் பின் இளைஞரை மீட்டு கீழே கொண்டு வந்தனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

18 மாவோயிஸ்டுகள் பலி; சத்தீஸ்கரில் பரபரப்பு!

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
nn

சத்தீஸ்கர் மாநிலத்தில் 18 மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொலை செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

சத்தீஸ்கர் மாநிலம் கன்கர் மாவட்டத்தில் நக்சலைட்டுகள் மற்றும் பாதுகாப்பு படைகளுக்கு இடையே துப்பாக்கிச் சூடு நடைபெற்றது. இதில் மொத்தமாக 18 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொலை செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இந்தத் தாக்குதலில் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த மூன்று வீரர்கள் படுகாயம் அடைந்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

மொத்தமாக 18 மாவோயிஸ்டுகளின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. அவர்கள் பயன்படுத்திய துப்பாக்கிகள், மெஷின் கன்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதில் ஒரே ஒரு எல்லை பாதுகாப்பு வீரரின் காலில் துப்பாக்கி குண்டு பாய்ந்து இருப்பதாகவும் ஆனால் உயிருக்கு எந்தவிதமான சேதம் இல்லை என்று தகவல் வெளியாகியுள்ளது. தேர்தல் நேரத்திற்கு முன்பாக நடைபெற்ற தாக்குதல் சம்பவத்தில் 18 மாவோயிஸ்டுகள் கொலை செய்யப்பட்டிருப்பது முக்கிய சம்பவமாக பார்க்கப்படுகிறது.  நக்சலைட்டுகள் ஆதிக்கம்  அதிகம் இருக்கும் சத்தீஸ்கரில் இந்தச் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Next Story

சாலையோரத்தில் கருகி உயிரிழந்து கிடந்த இளம் பெண்; விசாரணையில் வெளியான பகீர் தகவல்

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
A young woman was burnt to on the roadside; Bagheer information revealed in the investigation

கேரளாவில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு சாலையோரத்தில் இளம்பெண் கருகிய நிலையில் உயிரிழந்த சம்பவத்தில், முறையற்ற தொடர்பால் பெண் கொலை  செய்யப்பட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது.

கேரள மாநிலம் பாலக்காடு காங்காட்டுபடி பகுதியைச் சேர்ந்தவர் பிரவியா(31). கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு பிரவியா காணாமல் போன நிலையில் அவரை பல்வேறு இடங்களில் உறவினர்கள் தேடி வந்தனர். இந்நிலையில் பட்டாம்பி எனும் பகுதிக்கு அருகேயுள்ள சாலையோரத்தில் கருகிய நிலையில் கிடந்த சடலத்தைக் கைப்பற்றிய போலீசார் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அது பிரவியாவின் உடல் என்பது தெரிய வந்தது.

தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில் ஆலுரைச் சேர்ந்த சந்தோஷ் என்பவர் கொலை செய்தது தெரிய வந்துள்ளது. ஏற்கெனவே திருமணமான பிரவியா கருத்து வேறுபாட்டால் கணவரைப் பிரிந்து வாழ்ந்து வந்தார். சந்தோஷ் வைத்திருந்த ஜெராக்ஸ் கடையில் வேலை பார்த்து வந்துள்ளார் பிரவியா. அப்பொழுது அவருக்கும் சந்தோஷிற்கும் முறையற்ற தொடர்பு ஏற்பட்டுள்ளது.

சந்தோஷுக்கும் திருமணமாகி குழந்தைகள் உள்ளது. இந்த நிலையில் சில நாட்களாக சந்தோஷிடம் பேசாமல் தவிர்த்து வந்துள்ளார் பிரவியா. அந்த நேரத்தில் பிரவியாவிற்கு வேறு ஒருவருடன் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டது. வரும் 21ஆம் தேதி திருமணம் நடைபெற திட்டமிடப்பட்டிருந்தது. இந்த நிலையில் சந்தோஷிடம் பேசுவதை முற்றிலுமாக பிரிவியா தவிர்த்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சந்தோஷ் அவரை கடத்திச் சென்று எரித்து கொலை செய்து, உடலை சாலை ஓரத்தில் வீசிவிட்டுச் சென்றுள்ளார். எப்படியும் போலீசார் உடலைக் கைப்பற்றி விசாரித்து தன்னைப் பிடித்து வருவார்கள் எனக்கருதிய சந்தோஷ், வீட்டிற்கு சென்று தற்கொலை செய்து கொண்டார். இந்தச் சம்பவம் கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.