Skip to main content

''மறுகுடியமர்வு செய்யும்வரை ஆக்கிரமிப்புகளை இடிக்கக் கூடாது''-சென்னை மாநகராட்சி உத்தரவு!  

Published on 01/08/2021 | Edited on 01/08/2021

 

 '' Occupancies should not be demolished until resettlement '' - Chennai Corporation order!

 

அரும்பாக்கம் ராதாகிருஷ்ணன் நகரில் ஆக்கிரமிப்பு பகுதியில் குடியிருப்பவர்கள் மறுகுடியமர்வு செய்யும்வரை ஆக்கிரமிப்புகளை இடிக்கக் கூடாது என அறிவிப்பு வெளியாகியுள்ளது. அரும்பாக்கத்தில் ஏற்கனவே 93 ஆக்கிரமிப்பு குடியிருப்புகள் அகற்றப்பட்டு குடிசைப் பகுதி மக்கள் குடிசை மாற்றுவாரிய குடியிருப்புகளில் மறுகுடியமர்வு செய்யப்பட்டுள்ள நிலையில், மக்கள் அனைவருக்கும் குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் வீடுகள் ஒதுக்கீடு செய்து மறுகுடியமர்வு செய்து தரப்படும்வரை ஆக்கிரமிப்புகளை இடிக்க வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 

சென்னை அரும்பாக்கம் ராதாகிருஷ்ணன் நகரில் கிட்டத்தட்ட 243 குடியிருப்புகள் இருந்து வருகிறது. கரை ஓரம் இருப்பதால் வெள்ளப்பெருக்கு உள்ளிட்ட இயற்கை பேரிடர்கள் வரும்பொழுது மக்களுக்கு மிகப் பெரிய இடர்பாடு ஏற்படுகிறது. இதனால் அவர்களுக்கு மாற்று இடம் கொடுக்க வேண்டும் என்று சென்னை மாநகராட்சி ஏற்பாடு செய்து தொடர்ந்து அந்த மக்களுக்கு குடிசைமாற்று குடியிருப்புகளை ஒதுக்கீடு செய்தது. அதனடிப்படையில் கிட்டத்தட்ட 243 வீடுகளில் படிப்படியாக 93 பேருக்கு கே.பி.குப்பம் பகுதியில் வீடும் கொடுக்கும் பணி நடைபெற்று வருகிறது. பூர்வகுடி மக்களை சென்னைக்கு அப்பாற்பட்டு குடியமர்த்தப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. எனவே இங்கிருந்து மக்களை பூர்வகுடி மக்களை அகற்றக்கூடாது என கோரிக்கை எழுந்ததன் அடிப்படையில் சென்னை மாநகராட்சி அது குறித்து பரிசீலனை செய்து வருகிறது.

 

10 குடும்பத்தை சேர்ந்த மக்கள் எங்களுக்கும் வீடுகள் ஒதுக்கித் தர வேண்டும் என மாநகராட்சியும் கோரிக்கை வைத்திருந்தனர். இருப்பினும் இதற்கு முன்பாகவே கணக்கீடு செய்யப்பட்டபடி கரையோரம் இருக்கக்கூடிய வீடுகள் ரேஷன் அட்டைதாரர்கள், ஆதார் அட்டை உள்ளவர்களுக்கு அனைவருக்கும் வீடு ஒதுக்கீடு தரப்படும் என்று சென்னை மாநகராட்சி விளக்கம் கொடுத்திருந்தது. அந்த அடிப்படையில் மக்களுக்கு வீடு ஒதுக்கீடு செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில்  அரும்பாக்கம் ராதாகிருஷ்ணன் நகரில் ஆக்கிரமிப்பு பகுதியில் குடியிருப்பவர்கள் மறுகுடியமர்வு செய்யும் வரை ஆக்கிரமிப்புகளை இடிக்கக் கூடாது என அறிவிப்பு வெளியாகியுள்ளது.  

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தேர்தல் விடுமுறை; சிறப்பு பேருந்துகள் இயக்கம்

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
election holiday; Operation of special buses

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

மக்களுக்கு தேர்தலை முன்னிட்டு நாளை பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து சனி, ஞாயிறு விடுமுறை என்பதால் மொத்தம் மூன்று நாட்கள் விடுமுறை வருகிறது. இதன் காரணமாக சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு தேர்தல் விடுமுறைக்காக செல்வோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இந்நிலையில் சென்னை, தாம்பரம் ரயில் நிலையத்தில் இருந்து தென் மாவட்டங்களுக்கு படையெடுக்கும் மக்கள், முன்பதிவு இல்லாத ரயில் பெட்டியில் அதிகப்படியாக பயணம் செய்து வருகின்றனர். சில ரயில்களில் ஆபத்தான வகையில் தொங்கியபடி பயணம் செய்யும் காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்நிலையில் சென்னையில் இருந்து மற்ற மாவட்டங்களுக்கு செல்வோருக்காக சுமார் 2,899 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. தற்பொழுது வரை ஒரே நாளில் 1,48,800 பேர் சொந்த ஊர்களுக்கு பயணம் மேற்கொண்டுள்ளதாக போக்குவரத்து துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

எடப்பாடி பழனிசாமி மீது தயாநிதிமாறன் அவதூறு வழக்கு!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Dayanithimaran defamation case against Edappadi Palaniswami

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதில் தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளிலும், புதுச்சேரியில் உள்ள ஒரு தொகுதியிலும் என 40 தொகுதிகளில் ஒரே கட்டமாக நாளை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. அதாவது தேர்தல் பிரச்சாரத்திற்கான கடைசி நாளில் அனைத்துக் கட்சிகளும் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் இறங்கின. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

இதற்கிடையே நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் அதிமுக கூட்டணி சார்பில் மத்திய சென்னை தொகுதியில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர் பார்த்தசாரதியை ஆதரித்து அதிமுக பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசுகையில், “மத்திய சென்னை தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் தயாநிதி மாறன், அவருடைய நாடாளுமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியில் 75 சதவீதத்தை செலவு செய்யவே இல்லை. அப்படியென்றால், இவர் எப்படி செயல்பட்டிருப்பார் என்பதை மக்கள் எண்ணிப் பார்க்க வேண்டும்” எனப் பேசி இருந்தார்.

இந்நிலையில் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக மத்திய சென்னை திமுக வேட்பாளர் தயாநிதி மாறன் எம்.பி. சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார். அந்த மனுவில், “தொகுதி மேம்பாட்டு நிதியை 75% பயன்படுத்தவில்லை என சென்னை புரசைவாக்கத்தில் நடந்த அதிமுக பொதுக்கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பேசிய பேச்சு தனது நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் உள்ளது” எனத் தெரிவித்துள்ளார். இந்த வழக்கு விசாரணை அடுத்த மாதம் 14 ஆம் தேதி விசாரணைக்கு வர உள்ளது. 

Dayanithimaran defamation case against Edappadi Palaniswami

இது தொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்த தயாநிதிமாறன், “என் பெயருக்கு அவதூறு ஏற்படுத்தும் வகையில் பேசிய எடப்பாடி பழனிசாமி 24 மணி நேரத்தில் மன்னிப்பு கோர கால அவகாசம் வழங்கி இருந்தேன். இருப்பினும் அவர் மன்னிப்பு கோரவில்லை. ஆகையால் நீதிமன்றத்தில் கிரிமினல் அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளேன். இதுவரை 95 சதவீத நாடாளுமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியைப் பயன்படுத்தியுள்ளேன்”எனத் தெரிவித்தார். 

- படங்கள் : எஸ்.பி. சுந்தர்