Skip to main content

"எல்லோராலும் எம்.ஜி.ஆர் ஆகிவிட முடியாது!" - அமைச்சர் சண்முகம் பேச்சு!

Published on 16/12/2020 | Edited on 16/12/2020

 

Not everyone- can -become -MGR -says minister- shanmugam

 

விழுப்புரத்தில் அ.தி.மு.க மகளிர் அணி, இளைஞர் இளம்பெண்கள் பாசறை அணி மற்றும் தகவல் தொழில் நுட்ப அணி ஆகிய நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. 

 

அதில், பேசிய அமைச்சர் சண்முகம் தமிழகத்தில் யார் வேண்டுமானாலும் எம்.ஜி.ஆர் ஆகிவிட முடியாது. தற்போது நடிகர்கள் எனச் சொல்லிக்கொண்டு அரசியலுக்கு வருகின்றனர். அரசியல் கட்சியை யார் வேண்டுமானாலும் துவக்கலாம். ஆனால், முதலில் கொள்கையைக் கூறுங்கள். இந்த நாட்டிற்கு என்ன செய்தீர்கள்? ஒருவர் இந்த ஊரை, நாட்டை மாற்றப் போவதாகக் கூறுகிறார். உங்களை முதலில் நீங்கள் மாற்றிக் கொள்ளுங்கள். சமீபத்தில் பெய்த பெருமழை காரணமாக மக்கள் பெரிதும் சிரமப்பட்டனர். அரசு நிர்வாகம் அவர்களது துயரைத் துடைத்தது. அப்போதெல்லாம் இவர்கள் எங்கே சென்றார்கள். நீங்கள் சார்ந்துள்ள திரைப்படத் துறையில் உள்ள பிரச்சனைகளைத் தீர்க்க அக்கறை செலுத்துங்கள். கரோனா காலத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எந்த நடிகர்கள் ஓடிவந்து உதவி செய்தனர். திரையில் மட்டுமே தங்களை நல்லவர்கள் போல் காட்டிக் கொள்கின்றனர். ஆனால், இந்தி பட வில்லன் நடிகர் ஒருவர் கரோனா பாதித்த மக்களுக்கு பல உதவிகளைச் செய்திருக்கிறார். 

 

உழைப்பவர்களுக்கு அங்கீகாரம் அளித்து, பதவி கொடுத்து, அழகு பார்க்கும் ஒரே இயக்கம் அதிமுகதான். இது, திமுகவில் நடக்காது. மேலும், தமிழகத்தில் சமூக நீதியை தி.மு.க பாதுகாத்து வருகிறது. அதைச் சிலர் மூலம் உடைத்தெறிய பார்க்கிறார்கள். அது ஒருபோதும் நடக்காது. தடைகளை உடைத்தெறிந்து பிளவுபட்ட இயக்கத்தை ஒன்றிணைத்து, ஆட்சியைத் தக்க வைத்து, மிகச் சிறப்பான முறையில் முதல்வர் பழனிசாமி ஆட்சி செய்து வருகிறார். அதிமுகவின் சாதனை திட்டங்களை, சமூக வலைதளங்கள் மூலம் மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும். அதே நேரத்தில், தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் செய்யும் பொய்ப் பிரச்சாரத்தை மக்களிடம் கொண்டு சென்று, உரிய விளக்கமளிக்க வேண்டும். இவ்வாறு அமைச்சர் சண்முகம் பேசியுள்ளார்.

 

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

பா.ஜ.க.வை கடுமையாக சாடிய முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம்!

Published on 25/02/2024 | Edited on 25/02/2024
the former minister CV shanmugam who slammed the BJP

விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் அ.தி.மு.க. சார்பில் பொதுக் கூட்டம் ஒன்று நடைபெற்றது. இந்த பொதுக் கூட்டத்தில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில், “பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால் வீட்டுக்கு ஒருவருக்கு வேலை கொடுப்போம் என்கிறார்கள். கடந்த 10 ஆண்டுகளாக பா.ஜ.க.வினர் ஆட்சி செய்து வருகின்றனர். பிரதமர் நரேந்திர மோடி எத்தனை பேருக்கு வேலை கொடுத்தார். 10 ஆண்டுகால ஆட்சிக்காலத்தில் தமிழகத்தில் எத்தனை பேருக்கு வேலை கொடுக்கப்பட்டுள்ளது.

நெய்வேலி நிலக்கரி சுரங்கத்திற்குக் கிட்டத்தட்ட ஆயிரம் எஞ்ஜினியர்கள் வேலைக்கு எடுத்தனர். இவர்களில் ஒரு தமிழருக்கு கூட இல்லை. அத்தனை பேரும் வட இந்தியர்கள். ஜிப்மர் மருத்துவமனையில் வேலை கொடுங்கள், நெய்வேலி என்.எல்.சி. நிறுவனத்தில் வேலை கொடுங்கள். அரசு நிறுவனங்கள் எல்லாம் விற்று விட்டனர். இந்தியாவில் இரண்டு பேர் மட்டுமே வளர்ந்துள்ளனர். ஒருவர் அம்பானி மற்றொருவர் அதானி. பிரதமர் மோடி செல்லும் இடமெல்லாம் திருவள்ளுவர், தமிழ் என்று பேசுவார். ஆனால் மறுபுறம் இந்தி திணிப்பு.

மத்திய பா.ஜ.க. அரசு மதத்தின் பெயரால் நாட்டை துண்டாடப் பார்க்கிறது. அமைதியாக உள்ள தமிழகத்தில் அனைத்து சமூகத்தினரும் சமம். வழிபாட்டு உரிமை என்பது என்னுடைய உரிமை. யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்று கூற பா.ஜ.க.வுக்கு உரிமை இல்லை” என்று ஆவேசமாக பேசினார். 

Next Story

பா.ம.க.வுடன் அ.தி.மு.க. மீண்டும் பேச்சுவார்த்தை?

Published on 24/02/2024 | Edited on 24/02/2024
ADMK with pmk Renegotiate
கோப்புப்படம்

நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர ஆலோசனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான பணிகளை அரசியல் கட்சிகள் தற்போதே தீவிரப்படுத்தி வருகின்றன. இத்தகைய சூழலில் இந்திய தேர்தல் ஆணையமும் மக்களவைத் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து தொடர்ந்து ஆய்வு நடத்தி வருகிறது.

அந்த வகையில், மக்களவைத் தேர்தலில் கூட்டணி குறித்து முடிவெடுப்பதற்காக பா.ம.க. சிறப்பு பொதுக்குழு கூட்டம் சென்னை எழும்பூரில் கடந்த 1 ஆம் தேதி (01.02.2024) நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மக்களவைத் தேர்தலில் பா.ம.க. கூட்டணி அமைத்து போட்டியிட முடிவு செய்யப்பட்டது. மாநில நலன் மற்றும் தேசிய நலனில் அக்கறை கொண்ட கட்சிகளுடன் கூட்டணி அமைக்கவும், இதுகுறித்து முடிவு செய்ய பா.ம.க. நிறுவனர் ராமதாஸுக்கு அதிகாரம் வழங்கியும் பா.ம.க. பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதனையடுத்து விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்துள்ள தைலாபுரத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் உடன் அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் கடந்த 5 ஆம் தேதி (05.02.2024) திடீரென சந்தித்துப் பேசியதாகக் கூறப்பட்டது. இந்த சந்திப்பின் போது மக்களவைத் தேர்தலுக்கான கூட்டணி குறித்து இருவரும் பேசியதாகத் தகவல்கள் வெளியாகி இருந்தன. அப்போது அதிமுக கூட்டணியில் பாமக சார்பில் 10 மக்களவைத் தொகுதிகள் கேட்கப்பட்டதாகவும், அதற்கு ஆரணி, சிதம்பரம், கடலூர், தருமபுரி உள்ளிட்ட 6 மக்களவைத் தொகுதிகளை பாமகவுக்கு ஒதுக்கீடு செய்ய அதிமுக முன்வந்துள்ளதாகத் தகவல் வெளியாகி இருந்தது. இந்நிலையில் மக்களவைத் தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் பா.ம.கவை இணைப்பது தொடர்பாக ராமதாஸ் உடன் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் தைலாபுரத்தில் இன்று (24.02.2024) மாலை மீண்டும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.