Skip to main content

ஹெல்மெட் இல்லையா? ஈரோட்டில் வாகனங்கள் பறிமுதல்..!

Published on 14/10/2021 | Edited on 14/10/2021

 

No helmet? Vehicles confiscated in Erode ..!

 

ஈரோட்டில் இருசக்கர வாகனத்தில் செல்வோர் கட்டாயமாக ஹெல்மெட் அணிய வேண்டும் எனவும், அதேபோல் பின்னால் அமர்ந்து செல்பவர்களும் கண்டிப்பாக ஹெல்மெட் அணிய வேண்டும் என ஈரோடு எஸ்.பி. சசிமோகன் அறிவித்திருந்தார். ஆனால்  பெரும்பாலான வாகன ஓட்டிகள் இந்த அறிவிப்பை பின்பற்றவில்லை. இதனால் ஹெல்மெட் அணியாமல் செல்லும் வாகன ஓட்டிகளுக்கு போலீசார் மற்றும் போக்குவரத்து போலீசார் தொடர்ந்து அபராதம் விதித்து வந்தனர். மேலும் ஹெல்மெட் அவசியம் குறித்த விழிப்புணர்வையும் ஏற்படுத்தி வந்தனர்.  

 

கரோனா பரவல்  காரணமாக பொது போக்குவரத்துக்குத் தடை விதிக்கப்பட்டிருந்தது. பிறகு தற்போது மீண்டும் இயல்பு நிலை திரும்பி போக்குவரத்து நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் ஈரோடு மாவட்டத்தில் 13 ந் தேதி  முதல் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்றும், ஹெல்மெட் அணியாமல் வரும் வாகன ஓட்டிகளின் இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் எச்சரிக்கை விடுத்திருந்தார். இந்நிலையில் கட்டாய ஹெல்மெட் உத்தரவு 13 ந் தேதி அமலுக்கு வந்தது. இருசக்கர வாகனங்களில் பின்னால் அமர்ந்திருப்பவர்களும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது.

 

ஈரோடு மாநகர் பகுதியில் காளைமாடு சிலை, ஈரோடு பன்னீர்செல்வம் பார்க், பஸ் நிலையம் அருகே உள்ள பெரியார் நினைவு தூண், அரசு மருத்துவமனை ரவுண்டானா, கருங்கல்பாளையம் உட்பட ஏழு இடங்களில் போலீசார் மற்றும் போக்குவரத்து போலீசார் தீவிர வாகன சோதனை ஈடுபட்டனர். ஈரோடு பன்னீர்செல்வம் பார்க்கில் டவுன் டி.எஸ்.பி. தலைமையிலான போலீசார் ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகன ஓட்டிகளை நிற்க வைத்து அவர்களின் வண்டிச் சாவியை வாங்கிக்கொண்டு அபராதம் விதித்து இருசக்கர வாகனங்களைப் பறிமுதல் செய்தனர். மாநகர் பகுதியில் மட்டும் 800-க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் ஒரே நாளில் பறிமுதல் செய்யப்பட்டன.

 

No helmet? Vehicles confiscated in Erode ..!

 

இதைப்போல் கோபி பகுதியில் பல்வேறு இடங்களில் போலீசார் தனித்தனியாகச் சோதனை நடத்தினர். அப்போது இருசக்கர வாகனங்களில் ஹெல்மெட் அணியாமல் வந்த வாகனங்களை நிறுத்தி அவர்களுக்கு அபராதம் விதித்ததோடு அவர்களுக்குச் சக்கர வாகனங்களையும் பறிமுதல் செய்தனர். மேலும் லைசென்ஸ் இல்லாமல் வந்த வாகனங்களும் பறிமுதல் செய்தனர். கோபி பகுதியில் 350 இருசக்கர வாகனங்கள் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டன. இதைப்போல் அம்மாபேட்டை பகுதிகளிலும் போக்குவரத்து போலீசார் போலீசாருடன் இணைந்து தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது இருசக்கர வாகனங்களில் ஹெல்மெட் அணியாமல் வந்தவர்கள் வாகனங்களை நிறுத்தி அந்த வாகனங்கள் பறிமுதல் செய்தனர். அம்மாபேட்டை பகுதியிலும் 300 வாகனங்களுக்கு மேல் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. 

 

udanpirape

 

நேற்று முதல் நாள் என்பதால் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களைச் சிறிது நேரம் வைத்து விட்டு அந்த வாகன ஓட்டிகளுக்கு ஹெல்மெட் அணிவது அவசியம் குறித்து போக்குவரத்து போலீசார் மற்றும் போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.இன்று முதல் ஹெல்மெட் அணியாமல் வந்தால்  இருசக்கர வாகனம்  கண்டிப்பாகப் பறிமுதல் செய்யப்படும் என எச்சரித்து அனுப்பி வைத்தனர். இதைப்போல் சத்தியமங்கலம், பெருந்துறை, அந்தியூர், மொடக்குறிச்சி, கொடுமுடி, பவானி என மாவட்டம் முழுவதும் போலீசார் போக்குவரத்து போலீசார் ஆங்காங்கே சோதனை நடத்தி ஹெல்மெட் அணியாமல் வந்த இருசக்கர வாகனங்களைப் பறிமுதல் செய்தனர்.

 

No helmet? Vehicles confiscated in Erode ..!

 

மாவட்டத்தில் ஒரே நாளில் மூவாயிரத்திற்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு பின்னர் சிறிது நேரத்தில் உரியவர்களிடம் வாகனம் திருப்பி ஒப்படைக்கப்பட்டது.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அனைத்து ஏற்பாடுகளும் தயார்; வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பப்பட்ட ஈவிஎம்

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
All arrangements are ready; EVM sent to polling stations

தமிழகத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) பாராளுமன்றத் தேர்தல் நடக்க உள்ளது. ஈரோடு பாராளுமன்ற தொகுதியில் அரசியல் கட்சியினர், சுயேட்சைகள் என 31 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். நேற்று மாலை 6 மணியுடன் பிரச்சாரம் ஓய்ந்தது. ஈரோடு மாவட்டத்தில் 8 சட்டசபை தொகுதியில் 198 மண்டலங்களில் 2,222 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஈரோடு பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, காங்கேயம் தாராபுரம் குமாரபாளையம் ஆகிய சட்டசபை தொகுதிகளில் 15 லட்சத்து 38 ஆயிரத்து 778 வாக்காளர்கள் உள்ளனர்.

தேர்தல் பாதுகாப்பு பணியில் 2,325 மத்திய பாதுகாப்பு படையினர், 1,571 உள்ளூர் போலீசார் என 3,896 பேர் ஈடுபடுகின்றனர். மாவட்டத்தில் 5 மாநில சோதனை சாவடி உள்பட 12 சோதனை சாவடிகளிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தி உள்ளனர். 191 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை எனக் கண்டறியப்பட்டுள்ளது. அங்கு கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். ஈரோடு பாராளுமன்றத் தொகுதிக்குள் 1,112 வாக்குச்சாவடிகளில் வெப் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இப்படி வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்படுகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

இதைத் தொடர்ந்து இன்று காலை முதல் அந்தந்த தாலுகா அலுவலகங்களில் இருந்து வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், கட்டுப்பாட்டு எந்திரம், வி வி பேட் மற்றும் வாக்குச் சாவடிக்குத் தேவையான பயன்பாட்டுப் பொருட்களைத் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் லாரி மற்றும் வேன்களில் மண்டல குழுவினர் தலைமையில் பொருட்கள் கருவிகள் எடுத்துச் செல்லப்பட்டன. இந்த வாகனங்களில் ஜிபிஆர்எஸ் கருவி பொருத்தப்பட்டு இருந்தது. மேலும் வாக்குச்சாவடிகளில் 10,970  ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள் பணி செய்ய உள்ளனர். இது தவிர ஒருங்கிணைப்பு பணியில் 2,500 பேர் ஈடுபடுத்தப்படுகின்றனர். தேர்தல் பணியில் ஈடுபடுவோர் ஏற்கெனவே மூன்று கட்ட பயிற்சி பெற்ற பயிற்சி மையம் சென்று ஓட்டு சாவடி பணி நியமன ஆணையைப் பெற்று இன்று மாலைக்குள் சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி மையத்துக்கு சென்று விடுவார்கள். ஒவ்வொரு வாக்கு சாவடிகளிலும் முதியோர், மாற்றுத்திறனாளிக்காக சக்கர நாற்காலி, சாய்வு தளம், நிழல் வசதி, குடிநீர், கழிப்பிடம் உள்ளிட்ட அனைத்தும் ஏற்படுத்தி தயார் நிலையில் உள்ளனர். தற்போது மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பொதுமக்கள் வசதிக்காக சாமியானா பந்தலும் போடப்பட்டுள்ளது.

நாளை காலை சரியாக 7 மணிக்கு வாக்குப்பதிவு  தொடங்குகிறது. வாக்கு பதிவு செய்ய வருபவர்கள் தங்களது 12 ஆவணங்களில் ஏதாவது ஒன்றை காட்டி வாக்கு பதிவு செய்து கொள்ளலாம் என ஏற்கெனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடக்கும் முன்னதாக காலை 5:30 மணிக்கு மாதிரி வாக்குப்பதிவு நடத்தப்படும். ஈரோடு மாவட்டம் பர்கூர் , தாளவாடி, கடம்பூர் ஆகிய மலைப்பகுதி வாக்குச்சாவடிகளில் தொலைபேசி, இன்டர்நெட் வசதி இல்லை. அங்கு வனத்துறையினரின் மைக் மூலம் தொடர்புகள் ஏற்படுத்தப்படும். மேலும் ஈரோடு மாவட்டம் மலைப்பகுதியில் 120 வாக்குச்சாவடிகள் அமைந்துள்ளன. வெப் கேமரா வசதி செய்ய முடியாத வாக்குச்சாவடிகளில் ஓட்டுப்பதிவு பணிகள் முழுமையாக வீடியோவாக பதிவு செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story

தேர்தல் எதிரொலி; தமிழக எல்லையில் தீவிர சோதனை

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Election Echoes; Intensive check on the border of Tamil Nadu

2024 ஆம் ஆண்டிற்கான முதற்கட்ட வாக்குப்பதிவு தமிழகத்திலும், புதுச்சேரியிலும்  நாளை நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் காரணமாக வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருள் கொண்டு செல்வதைத் தடுக்க தமிழக, கர்நாடக எல்லையான காரப்பள்ளம் சோதனை சாவடியில் துப்பாக்கி ஏந்திய போலீசாரும், தேர்தல் பறக்கும் படை அலுவலர்களும் முகாமிட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். கர்நாடக மாநிலத்தில் இருந்து தமிழகம் செல்லும் வாகனங்களிலும் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். அதன் பின்னர்தான் வாகனங்கள் அனுமதிக்கப்படுகின்றன. கர்நாடக மாநிலத்தில் இருந்து வரும் சுற்றுலா பேருந்துகள் சொகுசு கார்கள் உள்ளிட்டவற்றை தீவிர சோதனைக்குப் பிறகு வாகன என் பெயர் போன்ற தகவல்களைச் சேகரித்த பின் தமிழகத்தில் நுழைய அனுமதிக்கின்றனர். இதனால் மாநில எல்லையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.