Skip to main content

நெய்வேலியில் இரும்பு திருடும்போது ஏற்பட்ட உயிரிழப்பு; 4 ஆண்டுகள் கழித்து பழிக்குப் பழி படுகொலை

Published on 20/09/2022 | Edited on 20/09/2022

 

Neyveli issue one passed away six arrested
சக்திவேல்

 

கடலூர் மாவட்டம், நெய்வேலியில் மேலகுப்பம் கிராமத்தைச் சேர்ந்த சக்கரபாணி என்பவரது மகன் இளங்கோவன் (வயது 44). இவரும் இவரது நண்பரும், கூலித் தொழிலாளியுமான, சக்திவேல் (வயது 45) என்பவரும் அவ்வப்போது நெய்வேலி என்.எல்.சி பகுதிகளில் இரும்பு திருடுவார்கள் என கூறப்படுகிறது. 

 

இந்நிலையில், கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு சக்திவேலும், அதே பகுதியைச் சேர்ந்த சுபாஷ் சந்திரகுமார் என்பவரும் இணைந்து நெய்வேலி என்.எல்.சி நிறுவனத்தில் இரும்பு திருடுவதற்காக சென்றதாக கூறப்படுகிறது. அப்போது மின்சாரம் தாக்கி சுபாஷ் சந்திரகுமார் உயிரிழந்துள்ளார். இச்சம்பவத்தால் சுபாஷ் சந்திரகுமாரின் அண்ணன் சுபாஷ் சந்திரபோஸ், சக்திவேல் மீது மிகுந்த கோபத்தில் இருந்ததாக கூறப்படுகிறது.

 

சக்திவேலும் அவரது கூட்டாளியுமான இளங்கோவனும், கடந்த 14-ஆம் தேதி, மேலக்குப்பம் பொன்னம்பலத்தான் தெருவில் அமைந்துள்ள வீரன் கோவிலில் படுத்திருக்கும் போது அதே கிராமத்தைச் சேர்ந்த சக்கரவர்த்தி மகன் சுபாஷ் சந்திரபோஸ் மற்றும் அவரது நண்பர்கள் மணிகண்டன், அர்னால்ட், விக்கி, சுரேஷ்(எ)கோவிந்தன், காக்கி என்ற விஜயபாலன் உள்ளிட்டோர் சேர்ந்து, "எனது தம்பி சுபாஷ் சந்திரகுமாரை திருட்டு சம்பவத்திற்க்கு அழைத்துச் சென்று, அவரை சாகடித்தது நீங்கள் தான்டா...." என்று கூறி, இளங்கோவனையும், சக்திவேலையும் சரமாரியாக, கையாளும் கட்டையாலும் தாக்கியுள்ளனர். பின்னர் அவர்கள் இரண்டு பேரையும் இருசக்கர வாகனத்தில் கடத்திச் சென்று, அருகில் உள்ள முந்திரி தோப்புக்கு தூக்கி சென்று, சரமாரியாக மீண்டும் தாக்கியுள்ளனர். 

 

Neyveli issue one passed away six arrested

 

இதில் சக்திவேல் சம்பவ இடத்திலேயே துடிதுடிக்க உயிரிழந்துள்ளார். சக்திவேல் இறந்ததை பார்த்த அவரது கூட்டாளியான இளங்கோவன் அங்கிருந்து தப்பித்து வீட்டுக்கு சென்று, இதுகுறித்து, நெய்வேலி தெர்மல் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரில், சுபாஷ் சந்திரபோஸ் மற்றும் அவரது நண்பர்கள் சேர்ந்து சக்திவேலை அடித்துக் கொன்றதாகவும், தன்னையும் தாக்கினர் என்றும் குறிப்பிட்டுள்ளார். அதன் பின்னர் இளங்கோவனை அழைத்துக் கொண்டு போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, சக்திவேலின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.


கொலை செய்த குற்றவாளிகளான 6 பேரை நெய்வேலி தெர்மல் போலீசார் தேடிவந்த நிலையில், அர்னால்ட் (வயது 22), பாண்டியன் (வயது 25), விக்கி என்கிற விக்னேஸ்வரன் (வயது 30) ஆகிய 3 பேரையும் நேற்று கைது செய்தனர். இந்நிலையில், இன்று மீதமுள்ள மூன்று குற்றவாளிகளான சுபாஷ் சந்திரபோஸ், சுரேஷ் என்கிற கோவிந்தன், காக்கி என்ற விஜயபாலன் ஆகியோரையும் கைது செய்து சிறையிலடைத்தனர். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

வாக்கு இயந்திரத்தில் கோளாறு; இன்னும் தொடங்கப்படாத வாக்குப்பதிவு!

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
Voting machines malfunction in 10 polling stations in Cuddalore
கோப்புப்படம்

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடுமுழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 5 மணி வரை நடைபெறவுள்ளது.

இந்த நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்து வருகின்றனர்.

இந்த நிலையில் கடலூரில்  உள்ள 10  வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு எந்திரங்களில் கோளாறு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  அதனால் கடந்த ஒரு மணி நேரத்திக்கும் மேலாக அப்பகுதியில் வாக்குப் பதிவு  தொடங்கப்படாமல் இருக்கிறது. தேர்தல் அதிகாரிகள் மாற்று வாக்குப் பதிவு எந்திரம் மூலம் வாக்குப் பதிவு தொடங்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர். தாமதமாகும் வாக்குச்சாவடியில் மக்கள் தங்களது ஜனநாயக கடமையாற்ற நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர். காலை ஒரு மணி நேரத்திற்கும் மேலாக வாக்குப்பதிவு தொடங்கப்படாமல் இருப்பதால் மாலை ஒரு மணி நேரம் கூடுதலாக ஒதுக்கப்படுமா என்பது குறித்து தேர்தல் தலைமை அதிகாரி தெரிவிப்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

காவு வாங்கிய குளம்; கிராமத்தையே சோகத்தில் ஆழ்த்திய சிறுவர்களின் உயிரிழப்பு

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
 The pool of water; The lost their live of the boys left the village in mourning

கடலூரில் குளத்தில் இறங்கி குளிக்க முயன்ற இரண்டு சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே உள்ளது நந்தீஸ்வர மங்கலம். இந்தக் கிராமத்தில் வசித்து வந்த ராமமூர்த்தி என்பவருக்கு இரண்டு மகன்கள் இருந்தனர். திலீப் ராஜ்(16), தினேஷ்(14) ஆகிய இரு மகன்களும் வெளியூரில் விடுதியில் தங்கி படித்து வந்தனர். இந்த நிலையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்திருந்தனர்.

சிறுவர்கள் திலீப் ராஜ் மற்றும் தினேஷ் ஆகியோர் வீட்டுக்கு அருகே உள்ள குளத்தில் குளிக்க சென்றுள்ளனர். அப்பொழுது ஆழமான பகுதிக்கு இருவரும் குளிக்கச் சென்றதாக கூறப்படுகிறது. இதில் நீரில் மூழ்கி இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். குளத்துக்கு குளிக்கச் சென்ற சிறுவர்கள் காணாமல் போனதால் பதறியடித்த பெற்றோர் காவல்துறைக்கு தகவல் அளித்தனர். உடனடியாக மீட்பு படையினர் வரவழைக்கப்பட்டு குளத்தில் இறங்கி தேட ஆரம்பித்தனர். பின்னர், வெகு நேரத்திற்கு பின் இருவரின் உடலையும் கைப்பற்றிய மீட்புப்படையினர் உடல்களை கரைக்கு கொண்டு வந்தனர். சிறுவர்களின் உடல்களை பார்த்து பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். உயிரிழந்த சிறுவர்கள் இருவரின் உடலும் காட்டுமன்னார் கோவில் அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

விடுதியில் தங்கிப் படித்து வந்த சிறுவர்கள் விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்த நிலையில் குளத்தில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.