Skip to main content

திருமணமான புதுப்பெண் எரித்துக் கொலை... ஊரே திரண்டு வந்து புகார்!

Published on 24/08/2022 | Edited on 24/08/2022

 

 The newly married woman was burnt... the town gathered and complained to the Kotatchiyar!

 


மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி வட்டத்திற்குட்பட்ட கரைமேடு கிராமத்தில் வசிக்கும் மோகனசுந்தரம்-உஷாராணி ஆகியோரின் மூத்த மகள் தர்ஷிகா( 26) இவரை சீர்காழி வட்டம் மேலமாத்தூர் கிராமத்தில் வசிக்கும் மாயகிருஷ்ணன்-ஜெகதாம்பாள் தம்பதியினர் மகன் கார்த்தி என்கிற பாலமுருகனுக்கு கடந்த பிப்ரவரி 14ஆம் தேதி இரு வீட்டார் சம்மதத்துடன் சீர்காழியில் உள்ள திருமண மண்டபத்தில் ரூ 15 லட்சத்தில் சீர்வரிசை கொடுத்து திருமணம் செய்து வைத்துள்ளனர்.

 

இந்நிலையில் திருமணமான 2 மாதத்தில் கணவன் ஒப்பந்தப்பணி எடுத்து வேலை செய்ய ரூ 4 லட்சம் வரதட்சணையாக வாங்கி வரச்சொல்லி மனைவியிடம்  அடிக்கடி சண்டை போட்டதால் மன உளைச்சல் தாங்காத  தர்ஷிகா தாய் வீட்டில் வசித்து வந்ததாக உறவினர்கள் கூறுகின்றனர்.

 

இதனிடையே ஊர் முக்கியஸ்தர்கள் இரு வீட்டாரிடம் சமாதானம் செய்துவைத்து கடந்த ஜூன் 5-ஆம் தேதி கணவர் வீட்டில் சேர்த்து வைத்துள்ளனர். இந்நிலையில் கடந்த ஜூன் 30-ம் தேதி தர்ஷிகா வெந்நீர் ஊற்றிக் கொண்டதாக தாய் வீட்டிற்கு தகவல் வந்துள்ளது. அதன் அடிப்படையில் அவர்கள் சென்று பார்த்தபோது அவரது கழுத்து பகுதியிலிருந்து கீழ் வரை தீயிட்டு எரிந்தது தெரிய வந்தது.  

 

இதனையடுத்து அவரை சிதம்பரம் ராஜா முத்தையா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த தர்ஷிகா ஆகஸ்ட் 23-ஆம் தேதி சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்தார். இதுகுறித்து கொள்ளிடம் காவல் நிலையத்தில் சந்தேக மரணம் என வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

 

சிதம்பரம் மருத்துவமனையில் இறந்ததால் சம்பந்தப்பட்ட மகளின் தந்தை மோகனசுந்தரம், மகளின் கணவர் பாலமுருகன் மற்றும் அவரது அம்மா, அப்பா உள்ளிட்ட உறவினர்கள் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தி மண்ணெண்ணெய் ஊற்றி கொளுத்திவிட்டதால் சிகிச்சை பலனின்றி மகள் இறந்துவிட்டதாக சிதம்பரம் கோட்டாட்சியர் ரவியை உறவினர்கள் 30-க்கும் மேற்பட்டவர்களுடன் சந்தித்து புகார் அளித்தார். புகாரைப் பெற்றுக் கொண்ட அவர் இறந்து போன தர்ஷிகாவின் உடலை சிதம்பரம் அரசு மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டு விசாரணை செய்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளார்.

 

உயிரிழப்புக்கு முன் தர்ஷிகா தான் கொடுமைப்படுத்தப்படுவதாக கடிதம் எழுதி வைத்துள்ளார். மேலும் மருத்துவமனையில் சிகிச்சையின் போது அவருக்கு நேர்ந்த கொடுமை குறித்துப் பேசியது வீடியோவாகவும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

 

சார்ந்த செய்திகள்

Next Story

பட்டப்பகலில் வீடு புகுந்து படுகொலை; 6 மணி நேரத்தில் பிடிபட்ட குற்றவாளி

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
Cruelty to a woman in broad daylight; Criminal caught in 6 hours

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் வீட்டில் தனியாக இருந்த பெண் ஒருவர் சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இந்த வழக்கில் 6 மணி நேரத்தில் குற்றவாளியை போலீசார் கைது செய்துள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி பகுதியைச் சேர்ந்தவர் குமார். ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியரான இவர் நேற்று வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பியுள்ளார். அப்போது வீட்டின் ஹாலில் அவருடைய மனைவி சரஸ்வதி வெட்டுக் காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் கிடந்தார். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த குமார் கூச்சலிட்டுள்ளார். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து பார்த்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

தகவலறிந்து உடனடியாக சம்பவம் நடந்த இடத்திற்கு வந்த போலீசார், ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்த சரஸ்வதியின் உடலைப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மர்ம நபர்கள் சரஸ்வதியை வெட்டிப் படுகொலை செய்துவிட்டு அவர் கழுத்தில் இருந்த தங்க நகையைப் பறித்துச் சென்றது விசாரணையில் தெரியவந்தது. இருப்பினும் இந்த கொலை, நகைக்காக நடந்ததா அல்லது வேறு ஏதேனும் முன் விரோதப் பிரச்சனை காரணமாக நிகழ்ந்ததா என்பது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டப்பகலில் பெண் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Cruelty to a woman in broad daylight; Criminal caught in 6 hours

இந்த சம்பவத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், உயிரிழந்த பெண்ணின் சகோதரி மகனே கொலையில் ஈடுபட்டது தெரியவந்தது. பணம் கேட்டுத் தராததால் ஆத்திரத்தில் இருந்த சரஸ்வதியின் சகோதரி மகன் அசோக் குமார், வீட்டில் சரஸ்வதி தனியாக இருந்த பொழுது கத்தியால் குத்திக் கொலை செய்தது தெரியவந்தது.

Next Story

விவேக் இல்லத் திருமணம்; அப்பாவின் கனவை நோக்கி மகள்

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
vivek daughter marriage

பிரபல நகைச்சுவை நடிகர் விவேக் கடந்த 2021 ஆம் ஆண்டு உடல்நலக் குறைவால் காலமானார். அவருக்கு மூன்று குழந்தைகள் இருந்தன. பிரசன்னா குமார், அமிர்த நந்தினி மற்றும் தேஜஸ்வனி. இதில் பிரசன்னா குமார், மூளைக் காய்ச்சல் காரணமாக 2015 ஆம் ஆண்டு உயிரிழந்தார்.

இந்த நிலையில், மறைந்த விவேக்கின் மூத்த மகளான தேஜஸ்வினிக்கு தற்போது திருமணம் நடைபெற்றுள்ளது. பரத் என்பவரைத் திருமணம் செய்து கொண்ட நிலையில், திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பலரும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். 

அப்போது மணமக்கள் இருவரும் மரக்கன்றுகள் மற்றும் மூலிகை பூச்செடிகள் நட்டனர். பின்பு வாழ்த்தியவர்களுக்கு மரக்கன்றை பரிசாக அளித்தனர். விவேக், முன்னாள் குடியரசுத் தலைவர் மறைந்த ஏ.பி.ஜே. அப்துல் கலாமின் வழியில் கிரீன் கலாம் என்ற திட்டத்தின் மூலம் 1 கோடி மரக்கன்றுகள் நடுவதை கனவாக வைத்திருந்தார் என்பதும் அதில் லட்சக்கணக்கான மரக்கன்றுகளை நட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.