Skip to main content

சேலம் சரக காவல்துறையில் புதிய டி.ஐ.ஜி., மாவட்ட எஸ்.பி. பொறுப்பேற்பு!

Published on 08/06/2021 | Edited on 08/06/2021

 

New DIG, Salem Police, District S.P. Responsibility!
                                                    நஜ்மல் ஹோடா


சேலம் சரக காவல்துறையில் புதிய டி.ஐ.ஜி., மாவட்ட எஸ்.பி. ஆகியோர் பொறுப்பேற்றுக்கொண்டனர்.

 

சட்டமன்றத் தேர்தலில் வெற்றிபெற்று முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி அமைத்துள்ளது. இந்நிலையில், தேர்தல் நடத்தை விதிகள் காரணமாக இடமாறுதல் செய்யப்பட்ட காவல்துறை அதிகாரிகள் பலர், மீண்டும் புதிய இடங்களுக்கு இடமாறுதல் செய்யப்பட்டுவருகின்றனர்.

 

கடந்த இரு நாட்களில் மாநிலம் முழுவதும் 72 ஐ.பி.எஸ். அதிகாரிகள் இடமாறுதல் செய்யப்பட்டுள்ளனர். சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய சேலம் சரகத்திற்குப் புதிய டி.ஐ.ஜி. ஆக மகேஸ்வரி நியமிக்கப்பட்டுள்ளார். ஏற்கெனவே இப்பொறுப்பில் இருந்துவந்த பிரதீப்குமார் இடமாறுதல் செய்யப்பட்டதை அடுத்து, புதிய டி.ஐ.ஜி.யாக மகேஸ்வரி திங்கள்கிழமை சேலத்தில் உள்ள டி.ஐ.ஜி. அலுவலகத்தில் பொறுப்பேற்றுக்கொண்டார். 

 

New DIG, Salem Police, District S.P. Responsibility!
                                                          அபிநவ்

 

அதேபோல், சேலம் மாவட்டக் காவல்துறை எஸ்.பி. ஆக இருந்த தீபா கணிகர் ஏற்கெனவே மாற்றப்பட்டுள்ளார். தற்போது புதிய எஸ்.பி. ஆக அபிநவ் நியமிக்கப்பட்டுள்ளார். அவரும் திங்களன்று எஸ்.பி. அலுவலகத்திற்கு நேரில் வந்து பொறுப்பேற்றுக்கொண்டார். 

 

புதிதாக பொறுப்பேற்றுக்கொண்ட அதிகாரிகளுக்கு காவல்துறை அதிகாரிகள் வாழ்த்துத் தெரிவித்தனர்.

 

அதேபோல், சேலம் மாநகரக் காவல்துறை ஆணையராக பணியாற்றிவந்த சந்தோஷ்குமார் மாற்றப்பட்டு, புதிய ஆணையராக நஜ்மல் ஹோடா நியமிக்கப்பட்டுள்ளார். அவரும் சில நாட்களுக்கு முன்பு சேலத்தில் பொறுப்பேற்றுக்கொண்டது குறிப்பிடத்தக்கது. 

 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

10 மணி வரை மழை; நான்கு மாவட்டங்களுக்கு அலர்ட்

Published on 15/06/2024 | Edited on 15/06/2024
Rain till 10 p.m.; Alert for four districts

தமிழகத்தில் இரவு 10 மணி வரை 4 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் 7 நாட்களுக்கு ஒரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு இருக்கும் எனச் சென்னை வானிலை மையம் ஏற்கனவே அறிவித்திருந்தது. வட தமிழக மாவட்டங்களில் குறிப்பாக உள் மாவட்டங்களில், மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் இன்று சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பின்படி தமிழகத்தில் இரவு 10 மணி வரை சேலம், திண்டுக்கல், நாமக்கல், திருச்சி ஆகிய நான்கு மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

இருசக்கர வாகனங்கள் மீது பேருந்து மோதி விபத்து; ஓட்டுநர் கைது!

Published on 13/06/2024 | Edited on 13/06/2024
salem dt sukkampatti village bus lorry two wheer incident

சேலம் மாவட்டம் வலசையூர் அருகே சுக்கம்பட்டி கிராமத்தில், அரசு மேல்நிலைப்பள்ளி எதிரில் நேற்று (12.06.2024) காலை சுமார் 10.40 மணியளவில் அரூரில் இருந்து சேலம் நோக்கி சென்ற லாரி ஒன்றின் பின்னால் இரண்டு இருசக்கர வாகனங்கள் சென்று கொண்டிருந்தன. அப்போது ஆச்சாங்குட்டப்பட்டியிலிருந்து சேலம் நோக்கி வந்துகொண்டிருந்த தனியார் பேருந்து எதிர்பாராதவிதமாக இருசக்கர வாகனங்கள் மீது மோதி விபத்தில் சிக்கியது. இதில் இருசக்கர வாகனங்களில் பயணம் செய்த கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நில அளவையராக பணிபுரிந்து வந்த முருகன் (வயது 30) மற்றும் அவரது மனைவி நந்தினி (வயது 25) மற்றும் பூவனூரைச் சேர்ந்த வேதவள்ளி லட்சுமணன் ஆகிய மூவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

மேலும், இவ்விபத்தில், முருகன் மற்றும் நந்தினி தம்பதியரின் ஒரு வயதுக் குழந்தை கவின் பலத்த காயமடைந்து சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லும் வழியில் உயிரிழந்தது. இந்த விபத்தில் கர்ப்பிணிப் பெண் ஒருவர்,  இரண்டு குழந்தைகள் உட்பட 5 பேர் உயிரிழந்தது அப்பகுதியில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. 

salem dt sukkampatti village bus lorry two wheer incident

வேகத்தடை இருப்பதால் மெதுவாகச் சென்ற லாரியின் பின்னால் வந்த இருசக்கர வாகனங்கள் மீது அதிவேகமாக வந்த பேருந்து மோதியது தெரியவந்தது. இந்நிலையில் இந்த சாலை விபத்தில் 5 பேர் உயிரிழந்த சம்பவத்தில் தனியார் பேருந்து ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார். தலைமறைவாக இருந்த பேருந்தின் ஓட்டுநர் ரமேஷை வீராணம் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.