Skip to main content

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் வெடித்த புதிய சர்ச்சை! 7 ஆயுதப்படை போலீஸார் சஸ்பெண்ட்! 

Published on 21/10/2021 | Edited on 21/10/2021

 

New controversy erupts in Pollachi  case 7 Armed Police Suspended!
                                                     நீதிமன்ற வளாகம் 

 

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட முக்கிய குற்றவாளிகளை சிறைக்கு அழைத்து வரும்போது, நடுவழியில் அவர்களின் உறவினர்களை சந்திக்க வைத்த சம்பவத்தில் சேலம் ஆயுதப்படை எஸ்.ஐ. உள்பட 7 போலீசார் பணியிடைநீக்கம் செய்யப்பட்டனர்.

 

கோவை மாவட்டம், பொள்ளாச்சியில் கல்லூரி மாணவிகள் உள்பட இளம்பெண்களை பாலியல் வன்கொடுமை செய்து வீடியோ எடுத்து மிரட்டியதாக திருநாவுக்கரசு, சபரிராஜன், வசந்தகுமார், சதீஷ், மணிவண்ணன் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். 

 

ஆரம்பத்தில் சிபிசிஐடி காவல்துறையினர் விசாரித்து வந்த இந்த வழக்கு, பின்னர் சிபிஐக்கு மாற்றப்பட்டது. இதையடுத்து பொள்ளாச்சி அதிமுக நகர மாணவர் அணி செயலாளராக இருந்த அருளானந்தம், ஹேரன்பால், பாபு என்கிற பைக் பாபு உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். கடைசியாக, கடந்த ஆகஸ்ட் மாதம் பொள்ளாச்சி கிட்டசூரம்பாளையத்தைச் சேர்ந்த அருண்குமார் என்பவரையும் கைது செய்தனர். 

 

இவர்கள் 9 பேரும் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். இந்த வழக்கின் விசாரணை, கோவை மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. 

 

இந்நிலையில், குற்றம்சாட்டப்பட்டுள்ள மேற்சொன்ன 9 பேரும் கோவை மகளிர் நீதிமன்றத்தில் புதன்கிழமை (அக். 20) ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது, பாதிக்கப்பட்ட பெண்கள், நீதிபதியிடம் அளித்த வாக்குமூலத்தின் நகல் 9 பேரிடமும் வழங்கப்பட்டது. இதையடுத்து விசாரணையை அக். 28ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிமன்றம் உத்தரவிட்டது. 

 

நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பின்னர் 9 பேரும் இரு வாகனங்களில் பலத்த காவல்துறை பாதுகாப்புடன் சேலம் மத்திய சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். 

 

இதில் வழக்கின் முக்கிய குற்றவாளிகளாகக் கருதப்படும் திருநாவுக்கரசு, சபரிராஜன், வசந்தகுமார், சதீஷ், மணிவண்ணன் ஆகிய 5 பேரை அழைத்துச் சென்ற வாகனம் மட்டும் கோவை விமான நிலைய சாலை அருகே திடீரென்று நிறுத்தப்பட்டது. குற்றஞ்சாட்டப்பட்ட 5 பேரின் உறவினர்கள் அப்பகுதியில் ஏற்கனவே காத்திருந்தனர். இதையடுத்து, 5 பேரும் வாகனத்தில் இருந்தபடி தங்களது உறவினர்களிடம் சந்தித்து சிறிது நேரம் பேச அனுமதிக்கப்பட்டனர். பின்னர் அந்த வாகனம் அங்கிருந்து கிளம்பியது. 

 

New controversy erupts in Pollachi  case 7 Armed Police Suspended!

 

இந்நிலையில், தமிழகத்தை உலுக்கிய முக்கிய வழக்கான பொள்ளாச்சி பாலியல் வழக்கின் முக்கிய குற்றவாளிகளாகக் கருதப்படும் இவர்களுக்கு சேலம் மாநகர காவல்துறை அளித்துள்ள இந்த சலுகை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

 

இந்த சர்ச்சைக்குரிய சம்பவம் குறித்து சேலம் மாநகர காவல்துறை ஆணையர் நஜ்மல் ஹோடா விசாரணை நடத்தினார். இதில், பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைதிகளுக்கு வழிக்காவல் பணிக்குச் சென்றது சேலம் மாநகர ஆயுதப்படை சிறப்பு எஸ்ஐ சுப்ரமணியம், காவலர்கள் பிரபு, வேல்குமார், ராஜ்குமார், நடராஜன், ராஜேஷ்குமார், கார்த்தி ஆகியோர்தான் என்பது தெரிய வந்தது. 

 

வழிக்காவல் பணியின்போது கவனக்குறைவாகவும், ஒழுங்கீனமாகவும் செயல்பட்டதாக சிறப்பு எஸ்ஐ உள்ளிட்ட 7 பேரையும் ஆணையர் நஜ்மல் ஹோடா அதிரடியாக பணியிடைநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார். இதற்கான உத்தரவு, புதன்கிழமை இரவே பிறப்பிக்கப்பட்டது.

 

இந்த சம்பவம் காவல்துறை வட்டாரத்திலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

 

கைதாகி சிறையில் அடைக்கப்பட்டு உள்ளவர்களை சந்திக்க விரும்புவோர் அதற்கென முறையாக விண்ணப்பம் செய்து, சிறைத்துறையில் அனுமதி பெற்ற பிறகே சந்திக்க வேண்டும். ஆனால், நடுவழியில் கைதிகளை உறவினர்களுடன் சந்திக்க வைத்தது நடைமுறைகளுக்கு எதிரானது மட்டுமின்றி, கைதிகளுக்கும் அசம்பாவிதங்கள் நடக்கும் அபாயம் உள்ளது என்கிறார்கள் காவல்துறையினர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

உறவினர் வீட்டு விஷேஷத்திற்குச் சென்ற மகன்; தாய்க்குக் காத்திருந்த அதிர்ச்சி!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 young man who went to visit a relative's house passed away

ஈரோடு, சூரம்பட்டி, நேரு வீதியைச் சேர்ந்தவர் சுலோச்சனா (73). இவரது கணவர் மருதாசலம் (75). இவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர். கடைசி மகன் மட்டும் திருமணம் ஆகி தனியாக வசித்து வருகிறார். மற்ற இரண்டு மகன்களும் பெற்றோர்களுடன் வசித்து வந்தனர். 2-வது மகன் மோகனுக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது. இந்த நிலையில், கடந்த 21ஆம் தேதி சித்தோடு, சாணார்பாளையத்தில் உள்ள தங்களது உறவினர் வீட்டு விசேஷத்துக்குச் சென்று வருவதாக கூறிச் சென்ற மோகன் அதன்பின் வீடு திரும்பவில்லை.

இதையடுத்து, பல்வேறு இடங்களில் மகனைத் தேடி வந்த தாய் சுலோச்சனா, நேற்று சித்தோடு பகுதியில் சென்று தன் மகன் குறித்து விசாரித்துள்ளார். அப்போது, கடந்த 21ஆம் தேதி மதுபோதையில் சித்தோடு வந்த மோகன் அங்குள்ள செல்போன் கடை முன்பாக மயங்கிக் கிடந்தவர், சிறிது நேரத்தில் இறந்து விட்டதாகவும், இதையடுத்து, அங்கிருந்தவர்கள் மோகனின் உடலை சித்தோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, சுலோச்சனா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்று இறந்தது தனது மகன் மோகன் தான் என்பதை உறுதி செய்தார்.  இதுகுறித்து நேற்று அவர் அளித்த புகாரின் பேரில், சித்தோடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story

தேஜஸ்வி சூர்யா மீது வழக்குப்பதிவு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Case registered against Tejaswi Surya

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூருவின் தெற்கு மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சமூக வலைத்தள பக்கமான எக்ஸ் வலைத்தள பக்கத்தில் மதரீதியாக வாக்கு சேகரிப்பது தொடர்பான வீடியோ ஒன்றை பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா வெளியிட்டிருந்தார். இந்நிலையில் ஜெயநகர் போலீசார் அவர் மீது தற்போது வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஏற்கெனவே இன்று காலை மற்றொரு பாஜக வேட்பாளரான சுதாகர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.