Skip to main content

கொல்லத்தில் பெரும் விபத்து... நெல்லை பயணிகள் ரயில் தப்பியது!

Published on 13/10/2021 | Edited on 13/10/2021

 

Nellai passenger train escapes!

 

கேரளாவின் கொல்லம் நகரிலிருந்து நெல்லை வரும் பயணிகள் ரயில், ரயில்வே ஊழியர்களின் தீவிர உதவியால் பெரிய விபத்திலிருந்து தப்பியிருக்கிறது. நடக்கவிருந்த விபத்தும் தவிர்க்கப்பட்டிருக்கிறது.

 

தென்காசி மாவட்டத்தின் செங்கோட்டை நகரிலிருந்து அருகிலுள்ள கேரளாவின் கொல்லம் வரையிலான மீட்டர்கேஜ் ரயில் பாதை, அகல ரயில் பாதையாக மாற்றப்பட்டு வழக்கமாகச் செல்லும் ரயில்கள் இயக்கப்படுகின்றன. குறிப்பாகக் கொல்லத்திலிருந்து செங்கோட்டை வழியாக நெல்லைக்கும், செங்கோட்டையிலிருந்து கேரளாவின் புனலூருக்கும் சரக்கு மற்றும் பயணிகள் ரயில்கள் இயக்கப்படுகின்றன. சில இடங்களில் மலைப்பாதை வழியாகவும் ரயில்வே பாதைகள் போடப்பட்டுள்ளன.

 

இந்தச் சூழலில் கடந்த இரண்டு நாட்களாகக் கேரளாவின் கொல்லம் மாவட்டத்தில் கனமழை பெய்திருக்கிறது. இதன் காரணமாகக் கேரளாவின் தென்மலைக்கும் எடமண் ரயில் நிலையத்திற்கும் இடைப்பட்ட ரயில் பாதையில், அக். 11 அன்று இரவு இரவில், மழை காரணமாக மண்சரிவு ஏற்பட்டிருக்கிறது. நடு இரவு ஒரு மணியளவில் கொல்லம் - நெல்லை பயணிகள் ரயில் எடமண்ணிலிருந்து தென்மலையை நோக்கி விரைந்து வந்திருக்கிறது. அதுசமயம் வேலையிலிருந்து திரும்பிய ரயில்வேயின் இருப்புப் பாதை ஊழியர்களான கேங்க்மேன்கள் அந்த மண் சரிவைக் கண்டு அதிர்ந்தவர்கள், தாமதிக்காமல் தென்மலை ரயில் நிலையத்திற்குத் தகவல் கொடுத்து புனலூர் செல்லும் ரயிலை நிலையத்திலேயே நிறுத்தச் சொல்ல, புனலூர் செல்லும் ரயில், ரயில் நிலையத்திலேயே நிறுத்தப்பட்டது. 

 

Nellai passenger train escapes!

 

தொடர்ந்து நடந்தவைகளை எடமண் ரயில் நிலையத்திற்குத் தெரியப்படுத்தி உடனே நெல்லை பயணிகள் ரயிலைச் செல்லவிடாமல் எடமண் நிலையத்திலேயே நிறுத்தி வைக்கச் சொல்லி ஸ்டேஷன் மாஸ்டருக்குத் தகவல் கொடுத்திருக்கிறார்கள். ஆனால் ரயில் ஏற்கனவே நிலையத்திலிருந்து கிளம்பிவிட்டதாக ஸ்டேஷன் மாஸ்டர் தெரிவிக்க, பதறிப்போன ரயில்வே ஊழியர்கள் சமயோஜிதமாக ஒரு கிலோ மீட்டர் தொலைவு வேகமாக ஓடிச்சென்று எதிரே வருகிற ரயிலுக்கு ரெட் சிக்னல் போட்டு ரயிலை நிறுத்தியிருக்கிறார்கள். அதன் பிறகே நடக்கவிருந்த விபத்து ரயில்வே பணியாளர்களால் தவிர்க்கப்பட்டதையறிந்து அதிர்ந்திருக்கிறார்கள். அதன் பின்பு நெல்லை ரயில் பின்னோக்கி செலுத்தப்பட்டு எடமண் ரயில் நிலையத்தில் வந்து நின்றது. அதையடுத்து ஜே.சி.பிக்கள் வரவழைக்கப்பட்டு ரயில்பாதை சீரமைக்கப்பட்டு விடிந்தபின் காலை 7 மணியளவில் நெல்லை ரயில் 6 மணிநேரம் தாமதமாகக் கிளம்பியிருக்கிறது.

 

இதுகுறித்து நாம் மதுரை ரயில்வே கோட்ட பி.ஆர்.ஓ.வான ராதாவிடம் கேட்டதில், ''எடமண் இருப்புப் பாதை சீர் செய்யப்பட்டு ரயில்கள் வழக்கம்போல் இயக்கப்படுகின்றன. அந்த ரயிலில் பயணிகள் எத்தனை பேர் இருந்தார்கள் என்று தெரியாது'' என்கிறார்.

 

நடக்கவிருந்த ரயில் விபத்து ரயில்வே கடைநிலை பணியாளர்களின் அதிதீவிர நடவடிக்கையால் தவிர்க்கப்பட்டிருப்பது ஆரியங்காவு தென்மலைப் பகுதியை அதிரவைத்திருக்கிறது.

 

சார்ந்த செய்திகள்

Next Story

தேர்தல் விடுமுறை; நெரிசலால் உயிரைப் பணயம் வைக்கும் பயணிகள்!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
election holiday; Passengers risking their lives due to congestion

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்தத் தேர்தலை முன்னிட்டு நாளை பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து சனி, ஞாயிறு விடுமுறை என்பதால் மொத்தம் மூன்று நாட்கள் விடுமுறை வருகிறது. இதன் காரணமாக சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு தேர்தல் விடுமுறைக்காக செல்வோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இந்நிலையில் சென்னை, தாம்பரம் ரயில் நிலையத்தில் இருந்து தென் மாவட்டங்களுக்கு படையெடுக்கும் மக்கள், முன்பதிவு இல்லாத ரயில் பெட்டியில் அதிகப்படியாக பயணம் செய்து வருகின்றனர். சில ரயில்களில் ஆபத்தான வகையில் தொங்கியபடி பயணம் செய்யும் காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Next Story

மின்னணு வாக்குப்பதிவு குறித்த புகார்; உச்ச நீதிமன்றம் அதிரடி!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Complaint about electronic voting; The Supreme Court is in action

தேர்தலின் போது மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவாகும் வாக்குகளுடன் ஒப்புகை சீட்டையும் எண்ண வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டிருந்தது. கடந்த முறை இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, ‘ஒப்புகைச் சீட்டு இயந்திரம் கடந்த 2017 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்டது. அதில் வெளிப்படையாக தெரியும் கண்ணாடி பொருத்தப்பட்டுள்ளது. ஆனால் அந்த ஒப்புகை சீட்டு உள்ளே விழுகிறதா? என்பது கூட வாக்காளர்களுக்கு தெரியவில்லை. ஒவ்வொரு மக்களவைத் தொகுதியிலும் உள்ள ஒரு சட்டப்பேரவை தொகுதியில் ஏதாவது 5 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகளுடன் ஒப்புகை சீட்டு சரிபார்க்கப்படுகிறது. இது வெறும் இரண்டு சதவீதம் மட்டுமே சரி பார்ப்பாகும். இதிலும் முறைகேடு ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே இதனைத் தடுக்க மின்னணு வாக்குப்பதிவை மக்கள் நம்பாத பட்சத்தில் ஒப்புகை சீட்டுகளை அதனுடன் ஒப்பிட்டு எண்ணிக்கை நடத்த வேண்டும்’ என மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.

இதைக் கேட்ட நீதிபதிகள், ‘இந்தியாவில் வாக்காளர்களின் எண்ணிக்கை 1960ல் 50 லிருந்து  60 கோடிகளில் தான் இருந்தது. ஆனால் தற்பொழுது 97 கோடிக்கு மேல் பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் இருக்கிறார்கள். இவர்களில் சராசரியாக 65 சதவீதம் பேர் வாக்களிக்கிறார்கள், என்றால் கூட அத்தனை வாக்குகளையும் ஒப்புகை சீட்டுகளையும் எப்படி, எப்போது எண்ணி முடிப்பது? இத்தனை கோடி வாக்கு ஒப்புகை சீட்டுகளை எண்ணி முடிக்க 12 நாட்கள் ஆகும் எனத் தேர்தல் ஆணையம் பிரமாண பத்திரத்தில் தெரிவித்துள்ளது என நீதிபதிகள் சார்பில் தெரிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து மனுதாரர் தரப்பில், ‘மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை எந்த விதத்திலும் தவறாக பயன்படுத்த முடியாது எனத் தேர்தல் ஆணையம் தெரிவிக்கிறது. இதுவரை தவறாக பயன்படுத்தப்படுவதில்லை என்றும் கூறுகிறது. ஆனால் எதிர்காலத்திலும் இவ்வாறு நடக்காது என்று  சொல்ல முடியாது எனவே. 100% ஒப்புகை சீட்டுகளை சரி பார்ப்பதற்கு உத்தரவிட வேண்டும்’ என மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.

இந்நிலையில் இந்த வழக்கு இரண்டாவது முறையாக இன்று (18.04.2024) மீண்டும் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் ஆஜரானார். அவர் அப்போது வாதிடுகையில், “கேரளா மாநிலம் காசர்கோடு சட்டமன்ற தொகுதியில் நடந்த மாதிரி வாக்குப்பதிவில் ஒரு முறை வாக்குப்பதிவு இயந்திரத்தின் பொத்தானை அழுத்தினால் பாஜகவுக்கு 2 ஓட்டுகள் விழுவதாக காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் சார்பில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார். இதனையடுத்து இது குறித்து விசாரிக்க தேர்தல் ஆணையத்திற்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் ஒப்புகைச் சீட்டு இயந்திரத்தை பற்றி பல்வேறு கேள்விகளையும் நீதிபதி எழுப்பியுள்ளனர்.