Skip to main content

நெல்லை கண்ணன் கையெழுத்திடும் நிபந்தனை ரத்து!

Published on 30/01/2020 | Edited on 30/01/2020

கடந்த மாதம் மேலப்பாளையம் எஸ்.டி.பி.ஐ.யின் மாநாட்டில் பேசிய தமிழ் இலக்கிய வித்தகர் நெல்லை கண்ணன் பிரதமர் மோடி மற்றும் அமைச்சர் அமித்ஷா இருவரையும் பற்றிப் பேசிய போது யதார்த்தமாக நெல்லை மாவட்ட மக்கள் மத்தியில் வழக்காற்று மற்றும் சகஜமாகப் புழங்கும், சோலி பற்றிப் பேசியது விமர்சனத்திற்குள்ளானது. காரியத்தைப் பார், வேலையை முடி என்று பிற பகுதிகளில் பேசப்படுவதைப் போன்று தான் நெல்லை வழக்காடுப் பேச்சு சோலியைப் பார். சோலியை முடி என்பது ஆனால் நெல்லை கண்ணனின் இந்தப் பேச்சு திரிக்கப்பட்டு மத்திய அமைச்சர்களை அவதூறாக விமர்சித்தார் என்று பா.ஜ.க.வினர் மத்தியில் பரவ, நெல்லை கண்ணன் மீது மேலப்பாளையம் காவல் நிலையத்தில் அவதூறு வழக்குப் பதிவு செய்யப்பட்டது. 76 வயது கடந்த நெல்லை கண்ணன் உடல் நலமில்லாமலிருந்தார்.

nellai kannan bail district court judgement

சிகிச்சைக்காக மதுரை, பெரம்பலூர் சென்ற நெல்லை கண்ணன் கைது செய்யப்பட்டு பாளை அரசு மருத்துவமனையில் மருத்துவ சோதனை செய்யப்பட்ட பிறகு தளர்ந்த நிலையிலிருந்தவரை நீதிமன்றத்தில் ஆஐர்படுத்திய போலீசார், பின் மேலிருந்து வந்த உத்தரவினையடுத்து அவரை மதுரை, பின்பு தொலைவிலுள்ள சேலம் ஜெயிலில் அடைத்தனர். 


இந்தக் கைதைக் கண்டித்து அனைத்து அரசியல் கட்சிகள், முஸ்லிம் அமைப்புகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் தலைவர்கள் என்று அனைத்து தரப்பிலும் ஆர்ப்பாட்டம் கண்டன அறிக்கைகள் என்று கிளம்பி பரபரப்பு சூட்டைக் கிளப்பியது. இந்நிலையில் நெல்லை கண்ணனின் வழக்கறிஞரான பிரம்மா அவர் சார்பில் நெல்லை செசன்ஸ் கோர்ட்டில் ஜாமீன் மனுதாக்கல் செய்தார். அதனை விசாரித்த மாவட்ட நீதிபதி நசீர் அமகது நெல்லை கண்ணன் மேலப்பாளையம் காவல் நிலையத்தில் காலை மற்றும் மாலையில் ஆஐராகி கையெப்பமிடவேண்டும் என்று நிபந்தனை ஜாமீன் அளித்து உத்தரவிட்டார். அதன்படி சேலம் சிறையிலிருந்து ஜாமீனில் வெளிவந்த நெல்லை கண்ணன் அன்று மாலையே மேலப்பாளையம் காவல் நிலையத்தில் அஐரானார். ஆனால் உரிய ஆவணம் வரவில்லை என போலீஸ் தரப்பில் சொல்லப்பட்டு அவர் அலைக் கழிக்கப்பட்டார்.

nellai kannan bail district court judgement

கடந்த 13- ஆம் தேதி முதல் தன் உடல் கோளாறையும் தாங்கிக் கொண்டு காலை, மாலை என மேலப்பாளையம் காவல் நிலையம் இருமுறை ஆஐராகி கையெழுத்திட்டிருக்கிறார் நெல்லை கண்ணன். இந்த நிலையில் அவருக்குச் சளித் தொந்தரவு அதிகமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதினடையே கடந்த 23- ஆம் தேதி அன்று நெல்லை கண்ணனி்ன் நிபந்தனை ஜாமீனைத் தளர்வு செய்ய அவரது வழக்கறிஞர் பிரம்மா செசன்ஸ் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். அந்த மனு 27- ஆம் தேதி அன்று விசாரணைக்கு வந்த போது அன்றையதினம் வழக்கறிஞர்களின் நீதிமன்றப்புறக்கணிப்பு காரணமாக வழக்கு 30ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.
 

இன்று அவரது மனு விசாரணைக்கு வந்த போது அவரது வழக்கறிஞர் பிரம்மா, நெல்லை கண்ணனின் உடல் நிலை பற்றி முன்வைத்தவர் நிபந்தனை ஜாமீனை தளர்வு செய்யக் கேட்டார். அது சமயம் போலீஸ் தரப்பிலும் அவர் கடந்த 13- ஆம் தேதியிலிருந்து நேற்றைய தினம் வரை தவறாமல் ஆஐராகி வருகிறார் என்று தெரிவிக்கப்பட்டது. பின்னர் மாலைக்கு ஒத்திவைக்கப்பட்டது. மாலையில் மனு மீது தீர்ப்பு வழங்கிய செசன்ஸ் நீதிபதி நசீர் அகமது, நெல்லை கண்ணனின் நிபந்தனையை ரத்து செய்து உத்தரவிட்டார்.
 

இது குறித்து அவரது வழக்கறிஞரான பிரம்மா கூறும்போது, "நெல்லை கண்ணனின் உடல் நலம் பற்றியும் அவரது ஒத்துழைப்பு பற்றியும் நீதிமன்றத்தில் முன்வைத்தோம். அனைத்தையும் ஆராய்ந்த நீதிபதி, நெல்லை கண்ணன் மேலப்பாளையம் காவல் நிலையத்தில் காலை, மாலை 2 வேளையும் ஆஐராகும் நிபந்தனையை ரத்து செய்து உத்தரவிட்டார். உயர்நீதிமன்றத் கிளையில் இந்த வழக்கை ரத்து செய்ய நாங்கள் தாக்கல் செய்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது" என்றார்.

nellai kannan bail district court judgement

இதனிடையே நெல்லை கண்ணன் சளி தொந்தரவு காரணமாக நெல்லை ஜங்ஷனில் உள்ள ஒரு பிரபலமான மருத்துவமனையில் அட்மிட் ஆகியுள்ளார்.



 

சார்ந்த செய்திகள்

Next Story

அங்கித் திவாரி ஜாமீன் மனு; நீதிபதி அதிரடி உத்தரவு!

Published on 15/03/2024 | Edited on 15/03/2024
Ankit Tiwari Bail Petition; Judge action order

திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் துணை சூப்பிரண்டாக இருக்கக்கூடிய டாக்டர் சுரேஷ்பாபுவின் சொத்துக்குவிப்பு வழக்கை விசாரிக்காமல் இருக்க ரூ. 20 லட்சம் லஞ்சம் பெற முயன்றபோது, கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 1 ஆம் தேதி லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரால் மதுரை மண்டல அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி கைது செய்யப்பட்டார். அதன்பின் திண்டுக்கல் மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டு மதுரை மத்திய சிறைக்கு மாற்றினார்கள்.  இதற்கிடையே திண்டுக்கல் மாவட்ட நிதிமன்றம், சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை மற்றும் உச்சநீதிமன்றத்திலும் ஜாமீன் கோரி மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்த மனுக்கள் நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டன.

இதனையடுத்து அங்கித் திவாரி இரண்டாவது முறையாக தனக்கு ஜாமீன் வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுத் தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், “தனது கைது என்பது விதிமுறைகளுக்கு எதிரானது. கைது செய்யப்பட்டு 90 நாட்களுக்கு மேலாக சிறையில் இருக்கிறேன். எனவே சட்டப்படி ஜாமீன் வழங்க வேண்டும்” எனத் தெரிவித்திருந்தார். இந்த மனு கடந்த 12 ஆம் தேதி (12.03.2024) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் திருவடிக்குமார், “அங்கித் திவாரிக்கு ஜாமீன் வழங்கக் கூடாது. ஏற்கனவே உச்சநீதிமன்றம் இந்த வழக்கில் சட்டத்திற்கு உட்பட்டு பரிசீலனை செய்ய வேண்டும் என கூறியிருக்கிறது. எனவே அங்கித் திவாரிக்கு ஜாமீன் வழங்கினால் இந்த வழக்கு நீர்த்துப்போகும்” என வாதிட்டார். மனுதாரர் அங்கித் திவாரி சார்பில் ஆஜரான வழக்கறிஞர், “அங்கித் திவாரிக்கு ஜாமீன் வழங்க வேண்டும்” எனத் தெரிவித்து ஜாமீனுக்கான நிபந்தனைகள் குறித்து வாதிட்டார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதி விவேக்குமார் சிங், “தாம் இன்னும் ஜாமீன் வழங்கவில்லை. ஆனால் மனுதாரர் தரப்பு ஜாமீனுக்கான நிபந்தனைகள் குறித்து வாதிடுகிறார். இதனால் அங்கித் திவாரியின் வழக்கில் இருந்து விலகுகிறேன். இந்த வழக்கை விசாரிக்க விரும்பவில்லை” எனக் கோபத்துடன் தெரிவித்து வழக்கில் இருந்து விலகினார்.  இந்நிலையில் நீதிபதி தண்டபாணி முன்பு இன்று (15.03.2024)  விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் திருவடிக்குமார், “ஒரே நேரத்தில் உயர் நீதிமன்றத்தில், உச்ச நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்துள்ளார். வழக்கு விசாரணை முடிவடைந்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய உள்ள நிலையில் விசாரணைக்கு தடை வாங்கியுள்ளார். எனவே இவருக்கு ஜாமீன் வழங்கக்கூடாது” எனக் கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.

Ankit Tiwari Bail Petition; Judge action order!

இதனைப் பதிவு செய்துகொண்ட நீதிபதி, “லஞ்ச ஒழிப்புத்துறை,  அமலாக்கத்துறையில் பணியாற்றும் அதிகாரிகள் லஞ்சம் பெறுவதை ஒரு போதும்  அனுமதிக்க முடியாது. இதுபோன்ற செயல்களை சகித்துக்கொள்ள முடியாது.  இதனை வேடிக்கை பார்க்க முடியாது. இதுபோன்ற அதிகாரிகள் லஞ்ச வழக்கில் சிக்கும்போது இரும்பு கரம் கொண்டு  அடக்க வேண்டும்.  அரசு அதிகாரிகள் லஞ்சம் பெறும் செயல் அதிகரித்திருப்பது நாட்டின் வளர்ச்சிக்கு நல்லது அல்ல. வருமான வரித்துறை மற்றும் அமலாக்கத்துறையில் லஞ்சம் ஊடுருவி உள்ளதை சகித்துக் கொள்ள முடியாது.  அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி லஞ்சம் பெற்றதாக கூறப்படும் வழக்கு தீவிரமானது. அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரியின் ஜாமீன் மனுவை  நீதிமன்றம் தள்ளுபடி செய்கிறது” என அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளார்.

Next Story

அவதூறு வழக்கு; ராகுல் காந்திக்கு ஜாமீன்

Published on 23/02/2024 | Edited on 23/02/2024
Bail for Rahul Gandhi for defamation suit

கடந்த 2018ஆம் ஆண்டு கர்நாடகா மாநிலத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலின் போது, காங்கிரஸ் கட்சியின் சார்பாக அக்கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா குறித்து அவதூறாக பேசியதாக பா.ஜ.க.வைச் சேர்ந்த விஜய் மிஸ்ரா, உத்தரப்பிரதேச மாநிலம் சுல்தான்பூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். 

இந்த வழக்கு தொடர்பான விசாரணை கடந்த 5 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், கடந்த 16ஆம் தேதி, வழக்கு விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு ராகுல் காந்திக்கு நீதிமன்றம் சம்மன் அனுப்பியிருந்தது. இதையடுத்து, சுல்தான்பூர் நீதிமன்றத்தில் ஆஜரான ராகுல் காந்தி, தனக்கு ஜாமீன் கேட்டு மனுதாக்கல் செய்தார். 

இது மனு மீதான வழக்கை விசாரித்த நீதிமன்றம், ராகுல் காந்திக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. முன்னதாக இந்த வழக்கை தொடர்ந்த பா.ஜ.க பிரமுகர் விஜய் மிஸ்ரா கூறுகையில், “பா.ஜ.க நாட்டின் மிகப்பெரிய கட்சி. அந்த கட்சியைச் சேர்ந்த தலைவர் பற்றி அவதூறாக பேசுவது நியாயமற்றது” என்று கூறினார்.