Skip to main content

நெல்லை பயங்கரம்.. கட்டிட கான்ட்ராக்டர் வெட்டிப் படுகொலை... பழிக்குப் பழியா?

Published on 13/07/2021 | Edited on 13/07/2021

 

Nellai District Kannan passes away police investigating

 

நெல்லை அருகேயுள்ள தாழையூத்தைச் சேர்ந்த பில்டிங் கான்ட்ராக்டர் தொழில் செய்துவந்த கண்ணன், நேற்று மதியம் சுமார் 1 மணியளவில் தனது லோடு வேனில் வீட்டிற்குத் தேவையான குடிதண்ணீரைப் பிடிப்பதற்காக 10 ப்ளாஸ்டிக் குடங்களுடன் தாழையூத்து நான்கு வழிச் சாலையிலிருக்கும் பண்டார குளத்திற்குச் சென்றிருக்கிறார்.

 

அவரை வேவு பார்த்த ஒரு கும்பல் அவரை பின் தொடர்ந்திருக்கிறது. அங்குள்ள பொதுக்குழாயில் கண்ணன் தண்ணீர் பிடித்துக் கொண்டிருந்த போது, மூன்று பைக்குகளில் வந்த ஆறு பேர் கொண்ட கும்பல் ஒன்று அவரை அரிவாளால் வெட்ட முயன்றுள்ளது. பதறிப்போன அவர், உயிர் தப்பிக்க ஓடியிருக்கிறார். ஆனாலும், அவரை விடாமல் விரட்டிச் சென்ற கும்பல் சாலையில் வழிமறித்து சரமாரியாக கண்ணனை வெட்டிக் கொலை செய்துவிட்டுத் தப்பியிருக்கிறது அந்த கும்பல். ரத்த வெள்ளத்தில் மிதந்து துடித்த கண்ணனை அந்தப் பகுதியில் உள்ளவர்கள் மீட்டு பாளை அரசு மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காகக் கொண்டு சென்ற போது வழியிலேயே கண்ணனின் உயிர் பிரிந்திருக்கிறது. இந்த சம்பவத்தின் போது அங்கு நின்றிருந்தவர்கள் பதறி, சிதறி ஓடியிருக்கிறார்கள்.

 

தகவலறிந்து ஸ்பாட்டுக்கு வந்த நெல்லை டி.ஐ.ஜி. பிரவீன் குமார் அபினவ், எஸ்.பி.மணிவண்ணன், தாழையூத்து டி.எஸ்.பி. அர்ச்சனா உள்ளிட்ட போலீஸார் ஸ்பாட்டில் விசாரணையை நடத்தியிருக்கின்றனர். இது குறித்து நாம் பரவலாக விசாரித்தபோது, கடந்த ஏப்ரல் மாதம் பணகுடி பள்ளி ஒன்றில் மாணவனும் மாணவி ஒருவரும் காதலித்த விவகாரத்தில், மாணவிக்கு ஆதரவாகச் செயல்பட்டு, அந்த மாணவியின் வாழ்க்கையில் மாணவன் குறுக்கிடாமல் இருப்பதற்காக அவரை சிங்கிகுளத்திற்கு வரவழைத்து அடித்து மிரட்டிய வழக்கில் களக்காடு போலீஸாரால் கைது செய்யப்பட்டவர்கள் மூன்றடைப்பு வாகைகுளத்தைச் சேர்ந்த முத்துமனோ, அருள்துரைசிங், மாதவன், சந்திரசேகர் உள்ளிட்ட 4 பேர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய களக்காடு போலீஸார் கடந்த ஏப்ரல் 22 அன்று பாளை மத்தியச் சிறையில் அடைத்தனர். அது சமயம் சிறையிலிருந்த அவர்களின் எதிர் பிரிவைச் சேர்ந்த விசாரணைக் கைதிகளால் இவர்கள் 4 பேரையும் சுற்றி வளைத்து தாக்கியதில் முத்துமனோ சிறையிலேயே பலியானார். இந்தச் சிறைப் படுகொலையில் தொடர்புடையவர்களில் ஜேக்கப் மற்றும் கொக்கி குமார் குறிப்பிடத்தக்கவர்கள். இது தொடர்பாகச் சிறைக்காவலர்கள் சிலர் சஸ்பென்ட் செய்யப்பட்டார்கள்.

 

பலியான முத்துமனோ தேவேந்திரகுல வேளாளர் அமைப்பின் மாவட்ட மாணவரணிச் செயலாளரானவர். உரிய நிவாரணம் வேண்டும், சிறைக்காவலர்கள் மீது கொலை வழக்குப் பதிய வேண்டுமென்று போராடிய முத்துமனோவின் உறவினர்கள் அரசால் அறிவிக்கப்பட்ட உதவித் தொகையையடுத்து 72 நாள் போராட்டத்திற்குப் பிறகே முத்துமனோவின் உடலைப் பெற்றுக்கொண்டனர்.

 

முத்துமனோ கொலைக்குக் காரணமான ஜேக்கப்பின் உற்ற நண்பர் தான் தற்போது கொலை செய்யப்பட்ட கண்ணன். முத்துமனோவின் கொலைக்குப் பழிக்குப்பழியாக அவரது ஆதரவாளர்கள் ஜேக்கப்பின் நண்பரைப் போட்டுத் தள்ளியிருக்கலாம் என்ற சந்தேக கோணத்தில் போலீஸாரின் விசாரணை சென்றுகொண்டிருக்கிறது. இதனிடையே தாழையூத்தின் சர்வீஸ் சாலையில் படுகொலையைக் கண்டித்தும், கண்ணன் குடும்பத்திற்கு உரிய நிவாரணம் வழங்குவதோடு அவரது மனைவிக்கு அரசு வேலை வழங்க வேண்டுமென்று வலியுறுத்தியும் கண்ணனின் உறவினர்கள் மற்றும் பொது மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டிருக்கிறார்கள்.

 

கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு தாழையூத்துப் போலீஸார் ஒரு வழக்கின் காரணமாக ஜேக்கப்பைத் தேடியிருக்கிறார்கள். அது சமயம் தன் நண்பனான ஜேக்கப்பிற்குத் தன் வீட்டில் அடைக்கலம் கொடுத்துப் பாதுகாத்து வந்திருக்கிறார் கண்ணன். இதையறிந்த போலீஸார் கண்ணன் வீட்டில் மறைந்திருந்த ஜேக்கப்பைக் கைது செய்து பாளை மத்தியச் சிறையில் அடைத்திருக்கின்றனர். அதன் பிறகே ஜெயிலில் முத்துமனோவின் படுகொலைச் சம்பவம் நடந்தேறியிருக்கிறது. ஜேக்கப், கண்ணன் இவர்களின் நெருங்கிய தொடர்பையறிந்து முத்துமனோவின் கொலைக்குப் பழியாக தற்போது கண்ணனைக் குறிவைத்துப் படுகொலைச் செய்திருக்கலாம் என்று சந்தேகமுள்ளது. தவிர இந்தச் சம்பவத்தில் தற்போது முத்துமனோவிற்கு ஆதரவாகப் புதிய கேங்க் ஒன்று உருவாகியிருக்கலாம் என்றும் தெரிகிறது. மேலும் ஜேக்கப், ராக்கெட் ராஜாவின் நெருங்கிய கூட்டாளியானவர் என்கிறார்கள் விசாரணை அதிகாரிகள்.

 

இது குறித்து நாம் நெல்லை மாவட்ட எஸ்.பி.யான மணிவண்ணனைத் தொடர்பு கொண்டதில், இந்தச் சம்பவத்தில் அந்த டீம் தான் ஈடுபட்டிருக்க வேண்டும் என்ற அடிப்படையில் விசாரணைப் போகிறது மேலும் இதில் தொடர்புடையவர்கள் புதிய நபர்களாகத் தெரிகிறது. எப்படியும் விரைவில் கொலைக்குக் காரணமானவர்களை வளைத்துவிடுவோம் என்கிறார் அழுத்தமாக. அண்மைக்காலமாக அடங்கியிருந்த பழிக்குப் பழி கொலைச் சம்பவம் தற்போது மீண்டும் தலைதூக்கி இருப்பது நெல்லை மாவட்டத்தைப் பதற்றத்தில் தள்ளியிருக்கிறது.


 

சார்ந்த செய்திகள்

Next Story

தீ விபத்து; பலி எண்ணிக்கை 6 ஆக உயர்வு!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
incident for hotel near Patna Railway Station Bihar

பீகார் மாநிலம் பாட்னா ரயில் நிலையம் அருகே உள்ள ஹோட்டலில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு படை வீரர்கள் தீயை அணைக்கும் பணியிலும், மீட்புப் பணியிலும் ஈடுபட்டனர். இந்த தீ விபத்தில் சிக்கிய 12 பேர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக முதற்கட்டமாக அனுப்பி வைக்கப்பட்டனர். இச்சம்பவம் பாட்னாவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருந்தது. இந்த தீ விபத்தில் சிக்கி 3 பேர் உயிரிழந்ததாகவும், 7 பேர் பலத்த காயமடைந்துள்ளனர் என பாட்னா போலீஸ் எஸ்.எஸ்.பி. ராஜீவ் மிஸ்ரா தெரிவித்திருந்தார்.

இது குறித்து பாட்னா தீயணைப்புத் துறை போலீஸ் டிஜி, ஷோபா ஓஹட்கர் கூறுகையில், “தீயணைப்புத் அணைக்கும் மேற்கொண்டோம். இதுபோன்ற நெரிசலான பகுதிகளில் விபத்துகளை தடுக்க தொடர்ந்து சிறப்பு கவனம் செலுத்தி வருகிறோம். இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்க நாங்கள் தொடர்ந்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம். சிலிண்டர் வெடித்ததால் இந்த தீ விபத்து நடந்தது. இருப்பினும் தற்போது தீ முற்றிலும் அணைக்கப்பட்டது” எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் பாட்னா சட்டம் மற்றும் ஒழுங்கு போலீஸ் டிஎஸ்பி கிருஷ்ணா முராரி கூறுகையில், “இந்த தீ விபத்தில் 5 முதல் 6 பேர் வரை இறந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சுமார் 30க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளனர். அதில் பலத்த காயம் அடைந்த 7 பேர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்” எனத் தெரிவித்தார். 

Next Story

ஷர்மிளாவின் உடல் பிரவீனின் பெற்றோரிடம் ஒப்படைப்பு!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Sharmila handed over to Praveen parent

சென்னை பள்ளிக்கரணை பகுதியைச் சேர்ந்தவர் பிரவீன். இவர் ஜல்லடையான் பேட்டையைச் சேர்ந்த ஷர்மிளா (வயது 22) என்ற பெண்ணைக் கடந்த சில வருடங்களாக பிரவீன் காதலித்து வந்துள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பிரவீன் - சர்மிளா இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுடைய காதலுக்கு இரு வீட்டார் தரப்பிலும் எதிர்ப்புகள் எழுந்த நிலையில், எதிர்ப்பையும் மீறி இந்தத் திருமணமானது நடைபெற்றது. இந்தக் காதல் திருமணத்தை தொடர்ந்து அதே பகுதியில் இவர்கள் இருவரும் வசித்து வந்தனர்.

இத்தகைய சூழலில் கடந்த பிப்ரவரி மாதம் 24 ஆம் தேதி ஷர்மிளாவின் சகோதரன் தினேஷ் மற்றும் நண்பர்கள் சேர்ந்து இரவு அந்தப் பகுதியில் இளைஞர் பிரவீன் அமர்ந்திருந்தபோது அவரை சரமாரியாக பயங்கர ஆயுதங்களைக் கொண்டு தாக்கினர். படுகாயங்களுடன் மீட்கப்பட்ட இளைஞர் பிரவீன் குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். போலீசார் விசாரணையில் நடந்தது ஆணவக் கொலை என்பது உறுதியானது. கொலையில் ஈடுபட்ட பெண்ணின் சகோதரர் தினேஷ் உட்பட நான்கு பேரை போலீசார் கைது செய்தனர். இந்தச் சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

இதனையடுத்து காதல் கணவன் கொலை செய்யப்பட்டதால், ஷர்மிளா மன உளைச்சலில் இருந்த நிலையில் தற்கொலைக்கு முயன்றுள்ளார். உடனடியாக மீட்கப்பட்டு ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் 9 நாட்களாக கோமா நிலையில் சிகிச்சை பெற்றுவந்த ஷர்மிளா, சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் நள்ளிரவு (22.04.2024) உயிரிழந்தார். மேலும் தன்னுடைய காதல் கணவன் கொல்லப்பட்டது குறித்தும், தன்னுடைய தற்கொலை முடிவு குறித்தும் ஷர்மிளா கடிதம் ஒன்றையும் எழுதியுள்ளார். அதில், 'அவன் இல்லாத லைஃப் எனக்கு வேண்டாம். நானும் அவன் கூடவே போறேன்' என உருக்கமாக எழுதியதோடு கொலைக்கு காரணமான தனது பெற்றோர் மற்றும் சகோதரர்களின் பெயர்களையும் ஷர்மிளா குறிப்பிட்டிருந்தார்.

அதனைத் தொடர்ந்து தற்கொலை செய்து கொண்ட ஷர்மிளா மரணம் தொடர்பாக கோட்டாட்சியர் (RDO - ஆர்.டி.ஓ.) விசாரணைக்கு உத்தரவிடப்பட்டிருந்தது. ஷர்மிளாவின் உடல் உடற்கூராய்வு செய்யப்படும் போது வீடியோ பதிவு செய்யப்படும் எனவும் காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் சென்னை அரசு ராஜீவ்காந்தி மருத்துவமனையில் இன்று (25.04.2024) வருவாய் கோட்டாட்சியர் இப்ராஹிம் நேரில் விசாரணை மேற்கொண்டார். அதனைத் தொடர்ந்து ஷர்மிளா உடலுக்கு ராஜீவ்காந்தி மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனை நடைபெற்று நிறைவடைந்த நிலையில் ஷர்மிளாவின் உடல் பிரவீனின் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.