Skip to main content

“திமுக ஆட்சிக்கு வந்தவுடன் 'நீட்' தேர்வு ரத்து செய்யப்படும்!” - உதயநிதி ஸ்டாலின்!

Published on 11/02/2021 | Edited on 11/02/2021

 

Neet exam will be canceled as soon as DMK comes to power" - Udayanithi Stalin

 

‘விடியலை நோக்கி ஸ்டாலின் குரல்’ எனும் தேர்தல் பிரச்சாரத்திற்காக, திண்டுக்கல் வருகை தந்த திமுக மாநில இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின், திண்டுக்கல் சீலப்பாடி பிரிவில், 40அடி உயரமுள்ள கொடிக் கம்பத்தில், திமுக கொடியை ஏற்றிவைத்து வேன் பரப்புரை மேற்கொண்டார். அப்போது அவர் பேசுகையில், “தமிழகத்திலேயே திண்டுக்கல் பாராளுமன்றத் தொகுதியில் திமுக அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெறச் செய்தீர்கள். அதேபோல் சட்டமன்றத் தேர்தலிலும் வெற்றி பெறச் செய்யவேண்டும். தமிழகத்தில் 39 தொகுதிகளில் 38 தொகுதிகளில் திமுக வெற்றிபெற்றுள்ளது. அதனால், தமிழகத்தின் மீது மோடிக்குக் கோபம்.

 

இதன் காரணமாக, தமிழகத்திற்கு எதுவும் செய்து தரமறுக்கிறார். பாஜக ஆட்சியில் பெட்ரோல், டீசல், அரிசி, கோதுமை, சர்க்கரை போன்ற பொருட்களின் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. தமிழகத்திற்கு தரவேண்டிய 15,000 கோடி ஜிஎஸ்டி வரி பணத்தையும், புயல் மற்றும் தொடர் மழை காரணமாக பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணத் தொகையை வழங்க மறுக்கிறார், காரணம் கேட்டால் நிதி நெருக்கடி எனக் கூறுகிறார். பிரதமர் மோடி. இதனைக் கேட்க வேண்டிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, மத்திய அரசிடம் தட்டிக் கேட்க மறுக்கிறார். தமிழகத்தில் நீட் தேர்வை ஜெயலலிதா எதிர்த்தார். ஆனால், மோடி சொன்னதால் தமிழகத்தில் நீட்தேர்வுக்கு அனுமதி அளித்தார், முதல்வர் பழனிசாமி. இதன் காரணமாக கடந்த மூன்று வருடத்தில் 16 பேர் தற்கொலை செய்துகொண்டனர்.

 

Neet exam will be canceled as soon as DMK comes to power" - Udayanithi Stalin

 

திமுக ஆட்சிக்கு வந்ததும் முதல் வேலையாக நீட் தேர்வு ரத்து செய்யப்படும். மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டப்படும் எனக் கூறி, கடந்த 2 வருடங்களுக்கு முன்பு, அடிக்கல் நாட்டப்பட்டது. ஆனால், இன்றுவரை ஒரு செங்கல் கூட எடுத்து வைக்கவில்லை. ஜெயலலிதா மருத்துவமனையில் 80 நாள் அடைத்து வைத்திருந்தனர். 'அம்மா இட்லி சாப்பிட்டார் என நான் போய் சொன்னேன், எங்களை சொல்லச் சொன்னார்கள்' என வனத்துறை அமைச்சர் சீனிவாசன் கூறினார். அதிமுக ஆட்சி கேவலமான ஆட்சி என விமர்சித்தவர் சீனிவாசன். 'ஜெயலலிதா, டிடிவி தினகரன் கோடி கோடியாகப் பணத்தைக் கொள்ளையடித்தவர்கள்' என சீனிவாசன் கூறினார். 

 

தமிழக அரசு பொங்கல் பரிசாகக் கொடுத்த 2,500 ரூபாய், டாஸ்மாக் மூலம் தமிழக அரசுக்கு வந்துவிடும் எனப் பேசியவர் சீனிவாசன். சொத்துக் குவிப்பு வழக்கில், கோடிக்கணக்கில் ஊழல்செய்து ஜெயிலுக்கு சென்றுவந்த சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோரின் சொத்துகள் முடக்கப்பட்டுள்ளது. ஆனால், 'A-1' குற்றவாளியான ஜெயலலிதாவின் சொத்துகள் மட்டும் ஏன் முடக்கப்படவில்லை எனக் கேள்வி எழுப்பினார். கலைஞர் ஆட்சியின்போது தொழில்துறையில் தமிழகம் முதலாவது இடத்தில் இருந்தது, ஆனால், அதிமுக ஆட்சியில் தற்பொழுது தொழில்துறையில் தமிழகம் 14-வது இடத்தில் உள்ளது எனப் பேசினார்.

 

Neet exam will be canceled as soon as DMK comes to power" - Udayanithi Stalin

 

இதனைத் தொடர்ந்து திண்டுக்கல் தோல் தொழிற்சாலை உரிமையாளர்கள் மற்றும் தொழிலாளர்களுடன் கலந்துரையாடினார். அப்போது தோல் தொழிற்சாலை உரிமையாளர்கள் தங்களது கோரிக்கைகளைத் தெரிவித்தனர். இதனையடுத்து அவர்களது கோரிக்கைகளை திமுக ஆட்சிக்கு வந்தபின்பு நிறைவேற்றித் தரப்படும் என உறுதியளித்தார். இதனைத் தொடர்ந்து பேகம்பூரில் உதயநிதி ஸ்டாலினுக்கு, 25 அடி உயரம் கொண்ட மலர்மாலை, கிரேன் மூலம் தொண்டர்களால் அணிவிக்கப்பட்டது. அதனை ஏற்றுக் கொண்ட அவர் திண்டுக்கல் மெயின் ரோட்டில் திறந்த வேனில் ஊர்வலமாக வந்தார். அப்போது சாலையின் இருபுறங்களிலும் திரண்டிருந்த ஏராளமான பொதுமக்களைப் பார்த்து கையசைத்துச் சென்றார்.

 

இதில், முன்னாள் அமைச்சரும், துணைப் பொதுச் செயலாளருமான ஐ.பெரியசாமி, திண்டுக்கல் மேற்கு மாவட்டச் செயலாளரும் ஒட்டன்சத்திரம் சட்டமன்ற உறுப்பினருமான சக்கரபாணி, கிழக்கு மாவட்டச் செயலாளரும் பழனி, சட்டமன்ற உறுப்பினருமான ஐ.பி.செந்தில்குமார், திண்டுக்கல் பாராளுமன்ற உறுப்பினர் வேலுசாமி, முன்னாள் துணை சபாநாயகர் காந்திராஜன், மாநில வர்த்தக அணி துணை அமைப்பாளர் ஜெயன், முன்னாள் நகரச் செயலாளர்கள் பசீர் அகமது, நடராஜன், ஒன்றியச் செயலாளர் நெடுஞ்செழியன், முன்னாள் ஒன்றியச் செயலாளர் சந்திரசேகர் உள்பட கட்சிப் பொறுப்பாளர்கள் பலர் கலந்துகொண்டனர்.

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“மக்களுக்காக குரல் கொடுப்பேன்” - தி.மு.க. வேட்பாளர் அருண் நேரு உறுதி

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
DMK candidate Arun Nehru promised to speak on behalf of the people

பெரம்பலூரை அடுத்த எளம்பலூர் ஊராட்சியில் பெரம்பலூர் பாராளுமன்றத் தொகுதி திமுக  வேட்பாளர் அருண் நேரு பெரம்பலூர் ஒன்றியத்தில் எளம்பலூர் கிராமத்தில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். திமுக வேட்பாளர் அருண் நேருவை ஆதரித்து போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் பொதுமக்கள் மத்தியில் ஆதரவு திரட்டினார்.

அப்போது வேட்பாளர் அருண் நேரு பேசியதாவது;- பெரம்பலூர் பாராளுமன்றத் தொகுதியில் கடந்த கால எம்.பி.க்கள் பல பேரை பார்த்திருப்பீர்கள். நிச்சயமாக நான் வெற்றி பெற்று அவர்களுக்கு வித்தியாசமாக பெரம்பலூர் பகுதியில் உள்ள அனைத்து பிரச்சனைகளையும் தீர்த்து கொடுப்பேன். மேலும் காவிரி  பெரம்பலூர் பகுதி குடிநீர் இன்னும் முழுமை அடையாமல் உள்ளது. நான் வெற்றி பெற்றவுடன் பெரம்பலூர் பகுதியில் உள்ள அனைத்து ஊர்களுக்கும் காவிரி குடிநீர் கிடைக்க ஆவண செய்வேன். இந்தப் பகுதியில் சின்ன வெங்காயம் மற்றும் முத்துச்சோளம் ஆகிய பயிர்களை விவசாயம் செய்து உரிய விலை மற்றும் வெங்காயம் பதப்படுத்தும் கிடங்கு இல்லாமல் பெரும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். இதனை உடனே சரி செய்ய ஆவண செய்வேன் என்றார்.

பிரச்சாரத்தின் போது தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி. சிவசங்கர், பெரம்பலூர் மாவட்டச் செயலாளர் ஜெகதீசன், பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் எம். பிரபாகரன், கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன், பெரம்பலூர் மாவட்ட துணைச் செயலாளர் டி.சி. பாஸ்கர், மாநில செயற்குழு உறுப்பினர் வக்கீல் ராஜேந்திரன், மதிமுக மாவட்டச் செயலாளர் ஜெயசீலன், பெரம்பலூர் திமுக ஒன்றிய செயலாளர் ராஜ்குமார், செயற்குழு உறுப்பினர்கள் ஜெகதீஸ்வரன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் டி.ஆர். சிவசங்கர், ஓவியர் முகுந்தன், முன்னாள் பெரம்பலூர் சேர்மன் ராஜாராம், வேப்பந்தட்டை ஒன்றிய சேர்மன் ராமலிங்கம், துணை சேர்மன் ரெங்கராஜ், எளம்பலூர் ஊராட்சி மன்றத் தலைவர் சித்ராதேவி குமார், காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட கூட்டணிக் கட்சியினர் வாக்கு சேகரிப்பின் போது உடன் சென்றனர்.

பெரம்பலூர் வட்டம் எளம்பலூர், செங்குணம், அருமடல் கவுல் பாளையம், நெடுவாசல் எறைய சமுத்திரம், கல்பாடி, சிறுவாச்சூர் ஆகிய ஊர்களில் தொடர்ந்து பெரம்பலூர் பாராளுமன்ற உறுப்பினர் அருண் நேரு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

Next Story

அமைச்சர் காரில் தேர்தல் பறக்கும் படை சோதனை

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
Election Air Force Test in Ministerial Car

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

அரசியல் கட்சிகள் தீவிரமான தேர்தல் பரப்புரையில் இறங்கிய நிலையில், மறுபுறம் தேர்தல் பறக்கும் படையினர் பல்வேறு இடங்களில் அதிரடி சோதனைகளில் இறங்கியுள்ளனர். இந்நிலையில் தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கரின் காரை மடக்கி தேர்தல் பறக்கும் படையினர் சோதனையில் ஈடுபட்டனர். அரியலூர் அஸ்தினாபுரம் பகுதியில் வந்த அமைச்சர் சிவசங்கரின் காரை மடக்கி தேர்தல் பறக்கும் படையினர் சோதனையில் ஈடுபட்டனர். இதேபோல் நேற்றைய தினம் நீலகிரியில் திமுகவின் நாடாளுமன்ற வேட்பாளர் ஆ. ராசாவின் காரில் பறக்கும் படையினர் சோதனையில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.