Skip to main content

நீட் தேர்வில் மதிப்பெண் குறைவு விரக்தியால் இளைஞர் தற்கொலை! 

Published on 07/11/2021 | Edited on 07/11/2021

 

 

neet exam mark student incident police investigation

தலைவாசல் அருகே,நீட் தேர்வில் மதிப்பெண் குறைவாக பெற்றுவிடுவோம் என்ற விரக்தியால் இளைஞர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார்.

 

சேலம் மாவட்டம், தலைவாசல் அருகே உள்ள வடகுமரையைச் சேர்ந்தவர் கணேசன். இவர் விவசாயி. இவருடைய மகன் சுபாஷ் சந்திரபோஸ் (வயது 20). தனியார் பள்ளியில் படித்து வந்த இவர், கடந்த ஆண்டு பிளஸ்2 படிப்பை முடித்திருந்தார். 

 

மருத்துவர் ஆக வேண்டும் என்ற கனவில் இருந்த சுபாஷ் சந்திரபோஸ், கடந்த ஆண்டு நடந்த நீட் தேர்வை முதன்முதலில் எழுதினார். அதில் 158 மதிப்பெண்கள் மட்டுமே பெற்றார். 

 

இதையடுத்து இரண்டாவது முறையாக கடந்த செப்டம்பர் மாதம் நடந்த நீட் தேர்வை எழுதினார். இதில், இயற்பியல் பாடப்பிரிவில் இருந்து கேட்கப்பட்ட கேள்விகள் கடினமாக இருந்ததாகவும், அதனால் இந்தமுறையும் தன்னால் எதிர்பார்த்த மதிப்பெண்களைப் பெற முடியாது என்றும் அடிக்கடி புலம்பி வந்துள்ளார்.

 

இந்நிலையில் தேர்வு முடிவுகள் கடந்த நவம்பர் 2- ஆம் தேதி வெளியிடப்பட்டது. அதில், எத்தனை மதிப்பெண் பெற்றோம் என்று கூட பார்க்காத சுபாஷ் சந்திரபோஸ், பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து தற்கொலைக்கு முயன்றார்.

 

இதையறிந்த பெற்றோர் பதறியடித்துக் கொண்டு, அவரை உடனடியாக ஆத்தூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு முதல்கட்ட சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், மேல் சிகிச்சைக்காக சேலத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சைப் பலனின்றி சனிக்கிழமை (நவ. 6) காலை சுபாஷ் சந்திரபோஸ் உயிரிழந்தார். 

 

இதற்கிடையே அவர் நீட் தேர்வில் 261 மதிப்பெண்கள் பெற்றிருந்தது தெரிய வந்தது. இச்சம்பவம் குறித்து தலைவாசல் காவல்நிலைய காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நீட் தேர்வு நடந்த அன்றும், அதற்கு அடுத்த நாளும் ஓரிரு மாணவர்கள் நீட் தேர்வு மீதான அச்சம் காரணமாக தற்கொலை செய்திருந்தனர். இந்நிலையில் நீட் தேர்வு வெளியான பிறகும் மேலும் ஒரு இளைஞர் நீட் தேர்வினால் தற்கொலை செய்த சம்பவம் தலைவாசல் சுற்றுவட்டாரத்தில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 

 

சார்ந்த செய்திகள்

Next Story

18 மாவோயிஸ்டுகள் பலி; சத்தீஸ்கரில் பரபரப்பு!

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
nn

சத்தீஸ்கர் மாநிலத்தில் 18 மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொலை செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

சத்தீஸ்கர் மாநிலம் கன்கர் மாவட்டத்தில் நக்சலைட்டுகள் மற்றும் பாதுகாப்பு படைகளுக்கு இடையே துப்பாக்கிச் சூடு நடைபெற்றது. இதில் மொத்தமாக 18 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொலை செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இந்தத் தாக்குதலில் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த மூன்று வீரர்கள் படுகாயம் அடைந்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

மொத்தமாக 18 மாவோயிஸ்டுகளின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. அவர்கள் பயன்படுத்திய துப்பாக்கிகள், மெஷின் கன்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதில் ஒரே ஒரு எல்லை பாதுகாப்பு வீரரின் காலில் துப்பாக்கி குண்டு பாய்ந்து இருப்பதாகவும் ஆனால் உயிருக்கு எந்தவிதமான சேதம் இல்லை என்று தகவல் வெளியாகியுள்ளது. தேர்தல் நேரத்திற்கு முன்பாக நடைபெற்ற தாக்குதல் சம்பவத்தில் 18 மாவோயிஸ்டுகள் கொலை செய்யப்பட்டிருப்பது முக்கிய சம்பவமாக பார்க்கப்படுகிறது.  நக்சலைட்டுகள் ஆதிக்கம்  அதிகம் இருக்கும் சத்தீஸ்கரில் இந்தச் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Next Story

சாலையோரத்தில் கருகி உயிரிழந்து கிடந்த இளம் பெண்; விசாரணையில் வெளியான பகீர் தகவல்

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
A young woman was burnt to on the roadside; Bagheer information revealed in the investigation

கேரளாவில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு சாலையோரத்தில் இளம்பெண் கருகிய நிலையில் உயிரிழந்த சம்பவத்தில், முறையற்ற தொடர்பால் பெண் கொலை  செய்யப்பட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது.

கேரள மாநிலம் பாலக்காடு காங்காட்டுபடி பகுதியைச் சேர்ந்தவர் பிரவியா(31). கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு பிரவியா காணாமல் போன நிலையில் அவரை பல்வேறு இடங்களில் உறவினர்கள் தேடி வந்தனர். இந்நிலையில் பட்டாம்பி எனும் பகுதிக்கு அருகேயுள்ள சாலையோரத்தில் கருகிய நிலையில் கிடந்த சடலத்தைக் கைப்பற்றிய போலீசார் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அது பிரவியாவின் உடல் என்பது தெரிய வந்தது.

தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில் ஆலுரைச் சேர்ந்த சந்தோஷ் என்பவர் கொலை செய்தது தெரிய வந்துள்ளது. ஏற்கெனவே திருமணமான பிரவியா கருத்து வேறுபாட்டால் கணவரைப் பிரிந்து வாழ்ந்து வந்தார். சந்தோஷ் வைத்திருந்த ஜெராக்ஸ் கடையில் வேலை பார்த்து வந்துள்ளார் பிரவியா. அப்பொழுது அவருக்கும் சந்தோஷிற்கும் முறையற்ற தொடர்பு ஏற்பட்டுள்ளது.

சந்தோஷுக்கும் திருமணமாகி குழந்தைகள் உள்ளது. இந்த நிலையில் சில நாட்களாக சந்தோஷிடம் பேசாமல் தவிர்த்து வந்துள்ளார் பிரவியா. அந்த நேரத்தில் பிரவியாவிற்கு வேறு ஒருவருடன் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டது. வரும் 21ஆம் தேதி திருமணம் நடைபெற திட்டமிடப்பட்டிருந்தது. இந்த நிலையில் சந்தோஷிடம் பேசுவதை முற்றிலுமாக பிரிவியா தவிர்த்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சந்தோஷ் அவரை கடத்திச் சென்று எரித்து கொலை செய்து, உடலை சாலை ஓரத்தில் வீசிவிட்டுச் சென்றுள்ளார். எப்படியும் போலீசார் உடலைக் கைப்பற்றி விசாரித்து தன்னைப் பிடித்து வருவார்கள் எனக்கருதிய சந்தோஷ், வீட்டிற்கு சென்று தற்கொலை செய்து கொண்டார். இந்தச் சம்பவம் கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.