Skip to main content

நடராஜர் கோயில் திருவிழா..! பொதுமக்கள் வழிபட கோயில் தீட்சிதர்கள் கட்டுப்பாடு அறிவிப்பு..! 

Published on 06/07/2021 | Edited on 06/07/2021

 

Natarajar Temple Festival ..! Public Worship Temple Diocese Restriction Announcement ..!


சிதம்பரம், நடராஜர் கோயிலில் ஆனி திருமஞ்சன திருவிழாவிற்கு ஜூலை 6ஆம் தேதி காலை 7 மணியிலிருந்து 8 மணிக்குள் கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெறும். அதனைத் தொடர்ந்து உற்சவம் நடைபெறும். இந்தக் காலத்தில் அரசின் வழிகாட்டுதல்படி 6ஆம் தேதி முதல் காலை 9 மணிமுதல் 12 மணிவரையிலும் மாலை 5 மணிமுதல் 8 மணிவரையிலும் பொதுமக்கள் தரிசனத்திற்காக அனுமதிக்கப்படுவார்கள்.  

 

7ஆம் தேதிமுதல் 13ஆம் தேதிவரை காலை 7 மணிமுதல் 10 மணிவரையிலும் மாலை 5 மணிமுதல் 8 மணிவரையிலும் பொதுமக்கள் தரிசனத்திற்காக அனுமதிக்கப்படுவார்கள். தேர் அன்று (14.7.2021) காலை 9 மணிமுதல் 12 மணிவரை ஆயிரங்கால் மண்டபம் முகப்பில் நடராஜரை தரிசிக்கலாம் என்றும் 15.7.2021 தரிசனத்தன்று தரிசனம் முடிந்த பிறகு பொதுமக்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்றும் பொது தீட்சிதர்கள் தெரிவித்துக்கொள்கிறார்கள்  என்று கோயிலில் பேனர் வைத்துள்ளனர். 

 

தமிழ்நாடு அரசு கோயில்களில் திருவிழா மற்றும் குடமுழக்கு நடத்த தடைவிதித்து பொதுமக்கள் வழிபட மட்டும் அனுமதியளித்துள்ள நிலையில், தீட்சிதர்கள் பொதுமக்களைத் திருவிழா நேரத்தில் கோயிலுக்குள்ளே வர தடைவிதித்து திருவிழாவை நடத்துகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து சிதம்பரம் பகுதியில் உள்ள பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் சிதம்பரம் நடராஜர் கோயில் ஆனி திருமஞ்சன திருவிழாவுக்கு கொடியேற்றும் நிகழ்ச்சிக்கு 6ஆம் தேதி பொதுமக்களுக்கு காலை 9 மணிவரை அனுமதி இல்லை என்று அறிவித்துள்ளனர். 

 

அதேநேரத்தில், தீட்சிதர் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள், கோயில் ஊழியர்கள் உள்ளிட்ட 1,800க்கும் மேற்பட்டவர்கள் திருவிழாவில் கலந்துகொள்வார்கள் என்றும் இதற்குப் பத்திரிகையாளர்கள், காவல்துறை, வருவாய்துறையினருக்கு அனுமதி இல்லை என்றும் அறிவித்துள்ளனர். கோயில் உள்ளே ஒரே நேரத்தில் கூடும் அனைவரும் கோவிலுக்குள்ளே இருக்கப் போவது இல்லை. கொடியேற்றம் மற்றும் திருவிழா காலம் முடிந்தவுடன் அனைவரும் பொதுமக்கள் இருக்கும் இடத்திற்கு செல்லும்போது நோய் தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே கொடியேற்றம் மற்றும் கோயில் திருவிழா நிகழ்ச்சிக்கு சம்பந்தபட்ட தீட்சிதர்கள் மற்றும் ஊழியர்களை அனுமதித்து நோய் தொற்று பரவாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.  

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சிதம்பரம் பாராளுமன்ற தொகுதியில் திருமாவளவன் உள்ளிட்ட 14 பேர் போட்டி!

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
14 contests including Thirumavalavan in Chidambaram Parliamentary Constituency

தமிழகத்தில் வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி முதல் கட்டமாக பாராளுமன்றத் தேர்தல் நடைபெறுகிறது. இதனையொட்டி வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாளான புதன்கிழமை சிதம்பரம் தொகுதியில் 27 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது.

அதனைத் தொடர்ந்து அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சிதம்பரம் பாராளுமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரும் அரியலூர் மாவட்ட ஆட்சியருமான ஆணிமேரி ஸ்வர்னா தலைமையில் வேட்பு மனுக்கள் பரிசீலனை வியாழக்கிழமை நடைபெற்றது.

இதில் திமுக கூட்டணி தலைமையில் போட்டியிடும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், அதிமுக வேட்பாளர் சந்திரகாசன், பாஜக வேட்பாளர் கார்த்தியாயினி, நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஜான்சிராணி, பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் நீலமேகம், நாடாளும் மக்கள் கட்சியின் வேட்பாளர் மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டது.

இதில் சுயேச்சையாக போட்டியிட்ட முன்னாள் அதிமுக எம்பி சந்திரகாசி மனு நிராகரிக்கப்பட்டது.  மேலும் மாற்று வேட்பாளர்கள் மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் மனுக்கள் நிராகரிக்கப்பட்ட நிலையில் சிதம்பரம் பாராளுமன்ற தொகுதியில் அங்கீகரிக்கப்பட்ட மற்றும் பதிவு செய்யப்பட்ட பிரதான கட்சி வேட்பாளராக 6 பேரும் 8  சுயேச்சை வேட்பாளர்களும் களத்தில் உள்ளனர். இதில் இறுதி வேட்பாளர் பட்டியல் 30-ந்தேதி வெளியிடப்படுகிறது. இன்னும் வேட்பாளர்கள் குறையும் என்று கூறப்படுகிறது.

Next Story

சிதம்பரத்தில் இ.பி.எஸ். பிரச்சாரம்; பொதுக்கூட்ட பணிகள் தீவிரம்!

Published on 26/03/2024 | Edited on 26/03/2024
Edappadi Palaniswami is campaigning in Chidambaram on 31st

சிதம்பரம் பாராளுமன்றத் தொகுதியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் திமுக தலைமையிலான கூட்டணியில் போட்டியிடுகிறார். அதேபோல் பா.ஜ.க. தலைமையிலான கூட்டணியில் பா.ஜ.க. சார்பில் வேலூர் மாநகராட்சி முன்னாள் மேயர் கார்த்தியாயினி போட்டியிடுகிறார்.

அதிமுக தலைமையிலான கூட்டணியில் வேட்பாளர் சந்திரகாசன் போட்டியிடுகிறார். இவருக்கு வாக்கு கேட்டு வரும் 31 ஆம் தேதி சிதம்பரம் புறவழிச் சாலை பகுதியில் அதிமுக பொதுச் செயலாளரும் தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் மேற்கொள்கிறார்.

இதனையொட்டி பொதுக்கூட்டம் மேடை அமைப்பதற்காகப் பந்தக்கால் நடும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் சிதம்பரம் தொகுதி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் கே.ஏ. பாண்டியன், புவனகிரி சட்டமன்ற உறுப்பினர் அருள்மொழி தேவன் உள்ளிட்ட கட்சியின் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.