Skip to main content

தனது பள்ளி பருவ விளையாட்டு குறித்து மனம் திறந்த நக்கீரன் ஆசிரியர்! 

Published on 04/10/2021 | Edited on 04/10/2021

 

சென்னை, மாதவரம் பால்பண்ணை பகுதியில் ‘கேர் டூகெதர்’ (care together) எனும் கால் பந்தாட்டக் குழு, வருடத்திற்கு ஒருமுறை என 18 ஆண்டுகாலமாக ஆண், பெண் இருபாலருக்குமான கால்பந்து விளையாட்டுப் போட்டிகளை மாநில அளவில் நடத்திவருகிறது. அந்த வகையில், இந்த வருடமும் மாநிலம் முழுவதும் உள்ள கால் பாந்தாட்ட குழுக்களை அழைத்து, 5 நாள் தொடர் ஆட்டமாக கடந்த செப்டம்பர் 9ஆம் தேதி தொடங்கி 13ஆம் தேதிவரை நடத்தப்பட்டது.

 

இதில் 75 அணிகள் கலந்துகொண்டு விளையாடின. இதில் பெண்களுக்கான பிரிவில் இறுதி ஆட்டத்தில் தமிழ்நாடு எஸ்.டி.ஏ.டி. மகளிர் அணியும், தமிழ்நாடு காவலர் மகளிர் அணியும் மோதின. அதில் தமிழ்நாடு எஸ்.டி.ஏ.டி அணி வெற்றிபெற்று முதல் பரிசைத் தட்டிச் சென்றது. அதேபோல, ஆண்களுக்கான பிரிவில் கேர் டூகெதர் அணியும், ரயில்வே அணியும் இறுதியாக மோதின. இதில் கேர் டூகெதர் அணி வெற்றிபெற்று முதல் பரிசை வென்றது. அதேபோல், 18 வயதிற்குக் கீழ் உள்ள சிறுவர்களுக்கான போட்டியில் பட்டினப்பாக்கம் அணி முதல் பரிசை தட்டிச்சென்றது. 

 

இதில் வெற்றி பெற்றவர்களுக்குப் பரிசு வழங்குவதற்காக நக்கீரன் ஆசிரியர் மற்றும் விசிக தலைவரும், எம்.பி.யுமான தொல். திருமாவளவன் ஆகியோர் பரிசு வழங்கி சிறப்பித்தனர். இந்நிகழ்ச்சியில் பேசிய நக்கீரன் ஆசிரியர், “ஐந்து நாட்களாக நடைபெற்ற இந்த விளையாட்டுப் போட்டி என்பது உண்மையிலே, ஊர் கூட்டி தேர் இழுப்போம் என்பதற்குச் சான்று. அப்படி அந்த ஊர் கூட்டி தேர் இழுப்பதில் முக்கிய பங்காற்றியவரும், அஸ்திவாரமாகவும் இருந்துவந்துள்ள பயிற்சியாளர் விக்டர் மற்றும் வழக்கறிஞர் பாலசுப்பிரமணியன் இருவரையும் இந்த நேரத்தில் பாராட்டியாக வேண்டும். என்னுடைய பள்ளி பருவத்தில் ஆரம்பகால விளையாட்டாக நான் முதலில் விளையாடியது கால் பந்தாட்டம்தான். அதன் பிறகு கால் பந்தாட்டம் அரசியல் பக்கம் திரும்பியது. அது எனக்கும், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கும் நடைபெற்றது. அதுவும் இப்போது முடிந்துவிட்டது. விளையாட்டு என்பது வாழ்க்கைக்கு மிக முக்கியமானது. விளையாட்டில் வெற்றி பெறுபவர்கள், தோல்வி அடைபவர்கள் இருவருமே வெற்றியாளர்களே. அது உங்களின் அடுத்தக்கட்ட உந்துதலுக்கு வழிவகுக்கும். தோல்வி அடைபவர்களே அடுத்த உச்சத்தை அடைய முடியும் என்பதற்கு நானே சான்று. மேலும் இதுபோன்ற விளையாட்டுப் போட்டிகளைத் தொடர்ந்து நடத்தவும், வெற்றிபெறவும் வாழ்த்துகள்” என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'வேதனையாக இருக்கிறது' - ஏமாற்றத்துடன் வீடியோ வெளியிட்ட நடிகர் சூரி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
 'It's painful' - Suri who came to vote and returned disappointed

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது.  இந்நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்தி வருகின்றனர்.

தமிழகத்தில் பிற்பகல் 3 மணி நிலவரப்படி சராசரியாக 50 சதவீதத்திற்கும் மேலாக வாக்குப்பதிவு நடந்துள்ளது. இந்நிலையில் சென்னையில் வாக்களிக்க வந்த நடிகர் சூரியின் பெயர் வாக்காளர் பட்டியலில் இல்லாததால் அவர் வாக்களிக்காமலேயே திரும்பிச் சென்றார். வெளியே வந்த அவர் வாக்குச்சாவடி முன்பு நின்று பேசி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், ''கடந்த எல்லா தேர்தலிலும் கரெக்டா என்னோட உரிமையை செலுத்தி கொண்டிருக்கிறேன். ஆனால் இந்த தடவை இந்த பூத்தில் என்னுடைய பெயர் விடுபட்டு போய்விட்டது என்கிறார்கள். என்னுடைய மனைவியின் ஓட்டு இருக்கிறது. ஆனால் என்னுடைய ஓட்டு இல்லை. என்னுடைய ஓட்டு விடுபட்டுப் போச்சு என்கிறார்கள். இருந்தாலும் 100% ஜனநாயக உரிமையை ஆற்றுவதற்காக வந்தேன். அது நடக்கவில்லை என்பது மன வேதனையாக இருக்கிறது. நினைக்கும் போது மனசு கஷ்டமாக இருக்கிறது. இது எங்கு யாருடைய தவறு என்று தெரியவில்லை. இருந்தாலும் ஓட்டு போட்டுவிட்டு ஓட்டு போட்டேன் என்று சொல்வதை விட ஓட்டு போடவில்லை என்ற வேதனையை நான் சொல்கிறேன். எல்லாருமே 100% ஓட்டு போட வேண்டும். அது நம்ம நாட்டுக்கு நல்லது. தவறாமல் எல்லாரும் வாக்கை செலுத்தி விடுங்கள். நான் அடுத்த எலெக்ஷனில் என்னுடைய வாக்கை செலுத்துவேன் என்று நம்புகிறேன்'' என்றார்.

Next Story

சென்னையில் வாக்குப்பதிவு மந்தம்

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
nn

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது.  இந்நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்தி வருகின்றனர்.

தமிழகத்தில் பிற்பகல் 3 மணி நிலவரப்படி சராசரியாக 50 சதவீதத்திற்கும் மேலாக வாக்குப்பதிவு நடந்துள்ளது. நாமக்கல் தொகுதியில் பகல் 3 மணி நிலவரப்படி 59.55 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. நாகையில் 54.07 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. மயிலாடுதுறையில் 50.91% வாக்குகள் பதிவாகியுள்ளது. திருச்சி மக்களவைத் தொகுதியில் 49.27% வாக்குகள் பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக சேலம் தொகுதியில் 60.05 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. கரூரில் 59.56 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் 53.02 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. வேலூர் மக்களவைத் தொகுதியில் 51.19 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. புதுச்சேரியில் 58.97 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. இவை அனைத்தும் பிற்பகல் 3 மணி அளவில் வாக்குப்பதிவு நிலவரங்கள் ஆகும்.

சென்னையில் உள்ள மூன்று தொகுதிகளிலும் வாக்குப்பதிவு மந்தமாகவே நடைபெற்று வருகிறது. மத்திய சென்னையில் 37.62% வாக்குகள் பதிவாகியுள்ளது. வடசென்னையில் 39.67 சதவீத வாக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளது. தென் சென்னையில் 40.98 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. தமிழகத்தில் சராசரியாக  வாக்குப்பதிவு  50 சதவீதத்தை தாண்டிய நிலையில் சென்னையில் சராசரி வாக்குப்பதிவு 40 சதவிகிதத்திற்கும் குறைவாகவே உள்ளது.