Skip to main content

சிக்கன் 65 ஒரு பாக்ஸ் 10 ரூபாய்... போட்டி போட்ட சிக்கன் பிாியா்கள்!

Published on 15/03/2020 | Edited on 15/03/2020

கரோனா வைரஸ் மனிதா்களை மட்டும் பதம் பாா்க்கவில்லை கோழிகள் விற்பனையையும் தலை கீழாக புரட்டி போட்டுள்ளது. கோழி இறைச்சி சாப்பிட்டால் கரோனா வைரஸ் தாக்கும் என்ற பீதி சிக்கன் பிாியா்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் கோழி விற்பனை அடியோடு வீழ்ந்துள்ளது. மட்டன் பீப் கடைகளில் தான் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது. ஹோட்டல்களில் கூட சிக்கன்கள் விற்பனையில்லாமல் அப்படியே இருக்கிறது. இதனால் கோழி விற்பனையாளா்கள் பெரும் நஷ்டத்தை சந்தித்துள்ளனா்.

 

 Chicken 65 One Box 10 Rupee ... Competition

 

இந்தநிலையில் மக்களிடம் ஏற்பட்டு இருக்கும் அச்சத்தை போக்கும் விதமாக நாகா்கோவில் இருளப்பபுரத்தில் கோழி விற்பனையாளா்கள் சிக்கன்  65 ஒரு பாக்ஸ் 10 ரூபாய்க்கு விற்பனை செய்தனா். இதை கேள்விபட்ட ஆண்களும் பெண்களும் அங்கு குவிந்து போட்டியிட்டு சிக்கன் 65 யை வாங்கினாா்கள். பொதுவாக கடைகளில் 70 ரூபாய்க்கு விற்று வந்த சிக்கன் 65 10 ரூபாய்கு கிடைக்கிற மகிழ்ச்சியில் கரோனா பற்றிய பயமின்றி மக்கள் வாங்கி ருசித்து சாப்பிட்டனா்.

 

 Chicken 65 One Box 10 Rupee ... Competition

 

 Chicken 65 One Box 10 Rupee ... Competition

 

மாலை மூன்று மணியில் இருந்து தொடங்கிய அந்த விற்பனை இரவு 12 மணி வரை நெருக்கடியுடன் நீடித்தது. சிக்கன் 65 யை வாங்கிய அந்த கூட்டத்தை பாா்க்கும் சிக்கன் சாப்பிட்டால் கொரோனா பாதிப்பு வராது என்று அதை வேடிக்கை பாா்த்தவா்களுக்கும் உணா்த்தியது. ஒவ்வொருத்தரும் குறைந்தது 5-ல் இருந்து 10  பாக்ஸ் வரை வாங்கி சென்றனா்.

இந்த நிலையில் மக்களிடம் இந்த மாதிாி தான் பீதியை போக்க முடியும் என்றனா் கோழி விற்பனையாளா்கள்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

3 மாதங்களுக்குக் கோழி இறைச்சிக் கடைகளுக்குத் தடை!

Published on 16/02/2024 | Edited on 16/02/2024
Ban on chicken shops for 3 months in andhra

ஆந்திரா மாநிலம், நெல்லூர் மாவட்டத்தில் உள்ள கும்மிடிதிப்ப கிராமத்தில் பறவைக் காய்ச்சல் காரணமாக, அங்கு பண்ணைகளில் வளர்க்கப்பட்டு வந்த பல்லாயிரக்கணக்கான கோழிகள் உயிரிழந்துள்ளன. 

இதனையடுத்து, பறவைக் காய்ச்சல் மேலும் பரவாமல் தடுக்கவும் மனிதர்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் தவிர்க்கவும் நெல்லூர் மாவட்ட ஆட்சியர் சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அதன் பின்னர், பறவைக் காய்ச்சல் பரவி கோழிகள் இறந்த ஊரிலிருந்து 1 கி.மீ சுற்றளவுக்குள் இருக்கும் கிராமங்கள் மற்றும் நகரங்களில் மூன்று மாதங்களுக்கு கோழி இறைச்சி விற்பனைக்கு, மாவட்ட ஆட்சியர் தடை விதித்து உத்தரவிட்டார். 

மேலும், அந்தப் பகுதிகளில் 3 மாதங்களுக்கு கோழி இறைச்சி விற்பனை கடைகளைத் திறக்கவும் தடை விதித்தும், ஒரு கி.மீ முதல் 10 கி.மீ சுற்றளவுக்குள் இருக்கும் பகுதிகளில் வெளியூர்வாசிகள் கோழி இறைச்சியை வாங்கிச் செல்ல 15 நாட்கள் தடை விதித்தும் உத்தரவிட்டார். 

Next Story

உயிரைப் பறித்த பழைய சிக்கன் குழம்பு!

Published on 12/02/2024 | Edited on 12/02/2024
The old chicken broth that took the life away

அரியலூரில் கோழி இறைச்சி குழம்பை அடுத்த நாள் சூடு செய்து சாப்பிட்ட பொழுது சிறுமி ஒருவர் உடல்நலக்குறைவு ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ளது கூழாட்டுக்குப்பம் கிராமம். இந்த கிராமத்தைச் சேர்ந்தவர்கள் கோவிந்தராஜ் - அன்பரசி தம்பதியினர். இவருக்கு இரண்டு மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். சம்பவத்தன்று கோவிந்தராஜ் தான் புதிதாகக் கட்டவிருக்கும் வீட்டிற்கு அஸ்திவாரம் போடும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளார். அதனையொட்டி கோவிலுக்கு குடும்பத்துடன் சென்ற அவர்கள் கோழிக்கறி எடுத்து வீட்டில் சமைத்துள்ளனர்.

மீதமிருந்த கோழிக்கறி குழம்பை பிரிட்ஜில் வைத்து மறுநாள் சூடு செய்து சாப்பிட்டுள்ளனர். அப்பொழுது பழைய கறிக் குழம்பை சாப்பிட்ட ஏழாம் வகுப்பு பயின்று வரும் இளைய மகள் இலக்கியாவுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. உடனடியாக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் சிகிச்சையில் இருந்த அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து போனார். அதேபோல் பழைய கோழிக் கறி குழம்பை சாப்பிட்ட தந்தை கோவிந்தராஜ், தாய் அன்பரசி, சகோதரி துவாரகா ஆகியோரும் உடல் நலக்குறைவு காரணமாக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். தொடர்ந்து அவர்கள் மேல் சிகிச்சைக்காக கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பழைய சிக்கன் குழம்பு சாப்பிட்டு சிறுமி உயிரிழந்தது அந்தப் பகுதியில் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது.