Skip to main content

நாகையில் சாராய வியாபாரி மரணத்தில் மர்மம்... உடலை தோண்டி எடுத்து விசாரணை!

Published on 07/12/2021 | Edited on 07/12/2021

 

Mystery of the death of the liquor dealer in Naga; Body dug up and interrogated!

 

நாகை அருகே சாராய வியாபாரி உயிரிழப்பில் மர்மம் இருப்பதாக வட்டாட்சியர் தலைமையில் சடலத்தைத் தோண்டியெடுத்து கீழ்வேளூர் போலீசார் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

 

நாகை மாவட்டம், கீழ்வேளூர் அருகே செருநல்லூர் மேலத்தெருவைச் சேர்ந்தவர் ரவி (வயது 48). இவர் கடந்த சில வருடங்களாகவே அதே பகுதியைச் சேர்ந்த ஒரு சாராய வியாபாரியிடம், சாராயம் விற்றுத்தரும் வேலையைச் செய்துவந்துள்ளார். ஒருநாள் சாராயம் விற்ற பணத்தில் ஏதோ பிரச்சினை ஏற்படவே, மொத்த சாராய வியாபாரி தனது சகாக்களோடு ரவியை கொடூரமாக தாக்கியுள்ளனர். 

 

அன்றிரவு ரவி வீட்டிற்குவந்து படுத்துள்ளார். ரவிக்கு மது அருந்தும் பழக்கம் இருப்பதால், அவர் வழக்கம்போல் மது அருந்திவிட்டு வந்து படுத்திருக்கிறார் என வீட்டில் உள்ளவர்கள் நினைத்துள்ளனர். ஆனால், நீண்ட நேரமாக அவரது உடலில் அசைவில்லாததால் அவர் அருகே சென்று பார்த்துள்ளனர். அப்போது ரவி உயிரிழந்துகிடந்துள்ளார். அவரது சடலத்தை மறுநாள் (28ஆம் தேதி) மாலை செருநல்லூர் கீழத்தெருவில் உள்ள மயானத்தில் அடக்கம் செய்துள்ளனர். 

 

Mystery of the death of the liquor dealer in Naga; Body dug up and interrogated!

 

இந்தநிலையில், ரவியின் இறப்பில் சந்தேகம் உள்ளதாக ரவியின் உறவினரான எறும்புகன்னியைச் சேர்ந்த கண்ணதாசன், கீழ்வேளூர் போலீசில் புகார் கொடுத்துள்ளார். புகாரின் பேரில் சந்தேக மரணம் என கீழ்வேளூர் போலீசார் வழக்குப் பதிவுசெய்து, இன்று (07.12.2021) புதைக்கப்பட்ட மயானத்தில் கீழ்வேளூர் வட்டாட்சியர் அமுதா முன்னிலையில், திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவர்கள்  ரவியின் உடலைத் தோண்டி எடுத்து, பிரேதப் பரிசோதனை மேற்கொண்டனர். 

 

"பிரேதப் பரிசோதனை முடிந்துள்ளது. நாகையிலிருந்து உடற்கூறாய்வு முடிவு வந்த பிறகே உயிரிழப்புக்கான காரணம் தெரியவரும்," என்கிறார்கள் போலீசார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஆண் நண்பருடன் சேர்ந்து கணவனைக் கொன்ற மனைவி; பகீர் கிளப்பும் பின்னணி

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
wife who incident her husband along with her boyfriend

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே வசிப்பவர்கள் ஸ்ரீகாந்த் - ஆர்த்தி தம்பதியினர். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இந்த நிலையில் ஆர்த்திக்கு ஸ்ரீகாந்தின் நண்பர் இளையராஜாவுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் அந்த பழக்கம் திருமணத்தை மீறிய உறவாக மாறி உள்ளது.

இது குறித்த தகவல் ஸ்ரீகாந்துக்கு தெரிய வர இருவரையும் அழைத்து கடுமையாக எச்சரித்துள்ளார். இந்த நிலையில் திருமணத்தை மீறிய உறவிற்கு இடையூறாக இருக்கும் கணவன் ஸ்ரீகாந்தை கொல்ல இளையராஜாவுடன் ஆர்த்தி திட்டமிட்டுள்ளார்.  அதன் படி கடந்த 2021 ஆம் ஆண்டு தேவகோட்டை அருகே உள்ள அருகே உள்ள ஆள் நடமாட்டம் இல்லாத காட்டு பகுதிக்கு இளையராஜா ஸ்ரீகாந்தை அழைத்துச் சென்று மது குடிக்க வைத்து அவரை வெட்டிக்கொன்று புதைத்துள்ளார். ஆனால் மனைவி ஆர்த்தி தனது கணவர் குடும்ப பிரச்சனை காரணமாக கோபித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறியதாக குடும்பத்தாரிடமும் அக்கம்பக்கத்தினரிடமும் நாடகமாடி உள்ளார்.

இந்த நிலையில் இரண்டரை வருடம் கழித்து ஸ்ரீகாந்த் கொலை செய்யப்பட்டது குறித்த தகவல் போலீசாருக்கு கிடைத்துள்ளது. அதன் பெயரில் விசாரணையை தொடங்கிய போலீஸ் மனைவி ஆர்த்தியையும், இளையராஜாவையும் கைது செய்தனர். மேலும் இந்த சம்பவத்தில் இளையராஜாவின் நண்பர் ஒருவருக்கும் தொடர்பு இருப்பது தெரிய வந்தது. அவரையும் கைது செய்தனர். மேலும் இந்தக் கொலை தொடர்பாக தலைமறைவாக இருக்கும் இருவரை போலீஸ் தேடி வருகின்றனர்.

Next Story

ஷர்மிளா தற்கொலை விவகாரம்; ஆர்.டி.ஓ. விசாரணைக்கு உத்தரவு!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Sharmila incident RdO Order for investigation

சென்னை பள்ளிக்கரணை பகுதியைச் சேர்ந்தவர் பிரவீன். இவர் ஜல்லடையான் பேட்டையைச் சேர்ந்த ஷர்மிளா (வயது 22) என்ற பெண்ணை கடந்த சில வருடங்களாக பிரவீன் காதலித்து வந்துள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பிரவீன் - சர்மிளா இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுடைய காதலுக்கு இரு வீட்டார் தரப்பிலும் எதிர்ப்புகள் எழுந்த நிலையில், எதிர்ப்பையும் மீறி இந்தத் திருமணமானது நடைபெற்றது. இந்த காதல் திருமணத்தை தொடர்ந்து அதே பகுதியில் இவர்கள் இருவரும் வசித்து வந்தனர்.

இத்தகைய சூழலில் கடந்த பிப்ரவரி மாதம் 24 ஆம் தேதி ஷர்மிளாவின் சகோதரன் தினேஷ் மற்றும் நண்பர்கள் சேர்ந்து இரவு அந்தப் பகுதியில் இளைஞர் பிரவீன் அமர்ந்திருந்தபோது அவரை சரமாரியாக பயங்கர ஆயுதங்களைக் கொண்டு தாக்கினர். படுகாயங்களுடன் மீட்கப்பட்ட இளைஞர் பிரவீன் குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். போலீசார் விசாரணையில் நடந்தது ஆணவக் கொலை என்பது உறுதியானது. கொலையில் ஈடுபட்ட பெண்ணின் சகோதரர் தினேஷ் உட்பட நான்கு பேரை போலீசார் கைது செய்தனர். இந்தச் சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

இதனையடுத்து காதல் கணவன் கொலை செய்யப்பட்டதால் ஷர்மிளா மன உளைச்சலில் இருந்த நிலையில் தற்கொலைக்கு முயன்றுள்ளார். உடனடியாக மீட்கப்பட்டு ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் 9 நாட்களாக கோமா நிலையில் சிகிச்சை பெற்றுவந்த ஷர்மிளா, சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் நள்ளிரவு (22.04.2024) உயிரிழந்தார். மேலும் தன்னுடைய காதல் கணவன் கொல்லப்பட்டது குறித்தும், தன்னுடைய தற்கொலை முடிவு குறித்தும் ஷர்மிளா கடிதம் ஒன்றையும் எழுதியுள்ளார். அதில், 'அவன் இல்லாத லைஃப் எனக்கு வேண்டாம். நானும் அவன் கூடவே போறேன்' என உருக்கமாக எழுதியுள்ளதோடு கொலைக்கு காரணமானவர்களின் பெயர்களையும் ஷர்மிளா குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில் தற்கொலை செய்து கொண்ட ஷர்மிளா மரணம் தொடர்பாக கோட்டாட்சியர் (RDO - ஆர்.டி.ஓ.) விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. ஷர்மிளாவின் உடற்கூராய்வு சற்று நேரத்தில் நடைபெற உள்ளது எனவும், உடற்கூராய்வு வீடியோ பதிவு செய்யப்படும் எனவும் காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.