Skip to main content

தபால் நிலைய கருவூல பிரிவில் திருடிய மர்ம நபர்கள்..! தீவிர விசாரணையில் காவல்துறை..! 

Published on 16/07/2021 | Edited on 16/07/2021

 

Mysterious persons who stole from the treasury of the post office


விழுப்புரம் மாவட்டம், காமராஜர் சாலையில் மாவட்ட தலைமை தபால் நிலையம் உள்ளது. இந்த தபால் நிலையத்தின் முன்பு நேற்று மாலை ஒரு ஆட்டோவில் வந்து இறங்கிய மூன்று நபர்கள், அஞ்சலகத்தில் உள்ளே சென்று அங்கிருந்த பெண் ஊழியரிடம், “2,000 ரூபாய் மணியார்டர் அனுப்ப வேண்டும்” என்று கூறியுள்ளனர். 

 

அந்த ஊழியரோ, “மணியார்டர் அனுப்பும் நேரம் முடிந்து விட்டது. இனிமேல் நாளைதான் அனுப்பலாம் நாளைக்கு வாருங்கள்” என்று கூறியுள்ளார். உடனே அந்த மூன்று பேரும் இரண்டாயிரம் ரூபாய் நோட்டை ஒன்று அந்தப் பெண் ஊழியரிடம் கொடுத்து அதற்கு சில்லரை தருமாறு கேட்டுள்ளனர். அதற்கு அந்த பெண் ஊழியர், “தபால் நிலையத்தில் அலுவலகத்தின் உள்ளே உள்ள கருவூல பிரிவு உள்ளது. அங்கு சென்று அங்குள்ளவர்களிடம் சில்லரை வாங்கி கொள்ளுங்கள்” என்று தெரிவித்துள்ளார். 

 

அதன்படி மூன்று நபர்களும் கருவூல பிரிவிற்கு சென்றுள்ளனர். அங்கிருந்த ஊழியர்களிடம் 2000 ரூபாய் நோட்டை கொடுத்து சில்லறை கேட்டுள்ளனர். அந்த ஊழியர் சில்லரை எடுத்துக் கொடுப்பதற்குள் அந்த ஊழியரின் கவனத்தை திசை திருப்பும் விதமாக அவரிடம் பேச்சுக் கொடுத்துக்கொண்டே அவரது மேஜை மீது இருந்த இரண்டு லட்சம் பணத்தை சில வினாடிகளில் திருடிக்கொண்டு வெளியே வந்தவர்கள் தயாராக நிறுத்தி வைத்திருந்த ஆட்டோவில் ஏரி தப்பிச் சென்றுவிட்டனர். 

 

கருவூல அறையில் பணியிலிருந்த ஊழியர் சிறிது நேரத்தில் அந்த மேஜைமேல் இருந்த ரூ.2 லட்சம் பணம் களவாடப்பட்டது கண்டு திடுக்கிட்டார். இதுகுறித்து உடனடியாக விழுப்புரம் நகர காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். அதனைத் தொடர்ந்து போலீஸார் தபால்நிலையத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தியுள்ளனர். மேலும் தபால் நிலையத்திற்கு உள்ளே நுழைந்த அந்த மூன்று நபர்கள் யார் என்பது குறித்து அங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ள காட்சிகளை கொண்டு ஆய்வு செய்துள்ளனர். அந்த மர்ம நபர்களை பிடிப்பதற்காக போலீசார் தீவிர முயற்சியில் இறங்கியுள்ளனர். பட்டப்பகலில் தலைமை தபால் நிலையத்திற்குள் புகுந்து யாருக்கும் சந்தேகம் வராத வகையில் நூதன முறையில் இரண்டு லட்சம் ரூபாய் பணத்தை கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் விழுப்புரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

விக்கிரவாண்டி திமுக எம்.எல்.ஏ புகழேந்தி காலமானார்!

Published on 06/04/2024 | Edited on 06/04/2024
Vikravandi DMK MLA Pugalenthi passed away!

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி தொகுதியில் தி.மு.க சார்பில் எம்.எல்.ஏ வாக பொறுப்பு வகித்து வந்தவர் புகழேந்தி (71). இந்த நிலையில், விழுப்புரம் தொகுதி விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் துரை. ரவிக்குமார், கடலூர் காங்கிரஸ் வேட்பாளர் விஷ்ணு பிரசாத் ஆகியோரை ஆதரித்து விழுப்புரம் விக்கிரவாண்டி வி.சாலையில் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக தமிழக முதலமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் நேற்று (05-04-24) இரவு வந்திருந்தார். 

இந்த பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக நேற்று முன் தினம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய விக்கிரவாண்டி தொகுதி தி.மு.க எம்.எல்.ஏ புகழேந்தி வந்திருந்தார். அப்போது, புகழேந்திக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டதால் அவர் உடனடியாக, விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர அளிக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில், இன்று (06-04-24) காலை, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தி.மு.க எம்.எல்.ஏ புகழேந்தி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். விக்கிரவாண்டி திமுக எம்.எல்.ஏவான புகழேந்தி, விழுப்புரம் தெற்கு மாவட்ட திமுக செயலாளராக இருந்தவர். புகழேந்தி மறைந்த செய்தியை அறிந்து மருத்துவமனை முன்பு திமுக தொண்டர்கள் பெரும் திரளாக கூடியுள்ளனர். மேலும், அமைச்சர் பொன்முடி மருத்துவமனைக்கு வந்து, மறைந்த புகழேந்திக்கு அஞ்சலி செலுத்தினார். 

Next Story

இளம் பெண்ணிற்குத் தாலி கட்டிவிட்டு இளைஞர் தற்கொலை; சிக்கிய உருக்கமான கடிதம்!

Published on 05/04/2024 | Edited on 05/04/2024
young man lost their life by tying a thali to a woman

விழுப்புரம் திருவெண்ணெய்நல்லூர் அருகே வசிப்பவர் ராதாகிருஷ்ணன். இவர் விழுப்புரத்தில் உள்ள ஒரு வங்கியில் தற்காலிக ஊழியராக பணியாற்றி வருகிறார். இதனிடையே 26 வயது இளம்பெண் ஒருவரும் ராதாகிருஷ்ணனும் 10 ஆண்டுகளுக்கு மேலாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. அவர் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு ராதாகிருஷ்ணனிடம் கூறி இருக்கிறார். அதற்கு ராதாகிருஷ்ணன் தனது தாயார் இறந்து சில மாதங்களே ஆகிறது. அதனால் ஒரு வருடம் கழித்து திருமணம் செய்து கொள்ளலாம் என கூறி இருக்கிறார்.

இந்த நிலையில்தான் அந்த பெண் நேற்று முன் தினம் விழுப்புரம் மகளிர் காவல்நிலையத்தில் ராதாகிருஷ்ணனை தனக்கு திருமணம் செய்து வைக்குமாறு புகார் கொடுத்துள்ளார்.அதன் பெயரில் போலீசார் ராதாகிருஷ்ணன் மற்றும் இளம்பெண் இருவர் வீட்டாரிடம் பேசி  சமாதானம் செய்துள்ளனர். அதனை தொடர்ந்து மாலை போலீஸ் நிலையம் அருகே உள்ள கோவிலில் ராதாகிருஷ்ணனுக்கும் அந்த பெண்ணுக்கும் திருமணம் நடந்துள்ளது. இதையடுத்து, இருவரும் பெண் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இரவு சிறிது நேரம் தங்கியிருந்த ராதாகிருஷ்ணன் பெண்ணிடம்  தனது வீட்டிற்கு சென்று விட்டு காலையில் வந்து உன்னை கூட்டிச்செல்கிறேன் என்று தெரிவித்துவிட்டு சென்றிருக்கிறார். இந்த நிலையில்தான் ராதாகிருஷ்ணன் காலையில் தனது விட்டில் தற்கொலை செய்துகொண்டுள்ளார். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் ராதாகிருஷ்ணனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

அதன்  பிறகு விசாரணை செய்த போலீசாரிடம் ராதாகிருஷ்ணன் எழுதிய கடிதம் ஒன்று கிடைத்துள்ளது. அந்த கடிதத்தில், “என்னை மன்னித்து விடுங்கள் என்னை வற்புறுத்தி எனக்கு விருப்பம் இல்லாமல் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று இந்த திருமணத்தை செய்து வைத்துள்ளார்கள். இது எனக்கு பிடிக்கவில்லை. என்னையும் என் குடும்பத்தாரையும் கொன்று விடுவேன் என மிரட்டினார்கள். எனது மரணத்திற்கு அவர்கள் தான் காரணம் எனக்கு விருப்பம் இல்லாத வாழ்கையை  எப்படி வாழ முடியும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனைத்தொடர்ந்து தனது மகனின்  மரணத்திற்குக் காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போலீஸில் புகார் அளிக்க, 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார், அவர்களை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.