Skip to main content

இரவு நேரத்தில் பசுக்களை வெட்டி இறைச்சி திருடும் மர்ம கும்பல்-காவல் நிலையத்தில் புகார்

Published on 27/08/2022 | Edited on 27/08/2022

 

Mysterious gang slaughtering cows and stealing meat at night-report to police

 

சிதம்பரம் அருகே புது பூலாமேடு கிராமத்தைச் சேர்ந்தவர்  இளவழகி இளையராஜா. கடந்த வெள்ளிக்கிழமை  இவரது வீட்டின் அருகே  கட்டி வைத்திருந்த இவரது மாடு காணாமல் போனது. இந்நிலையில் மாடு காணவில்லை என சனிக்கிழமையென்று அவர் அப்பகுதியில் உள்ள வயல்வெளிகளில் தேடி உள்ளார். அப்போது அந்தப் பகுதியில் உள்ள வயலில் மாட்டு தலை தனியாகவும், அதன் குடல்கள் மற்றும் தோல், வால் என கடந்துள்ளது.  இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் சிதம்பரம் தாலுகா காவல் நிலையத்தில் சனிக்கிழமை புகார் அளித்தார். காவல்துறையினர் இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

இந்த சம்பவம் தொடர்பாக இளவழகி கூறுகையில் ''கடந்த சில நாட்களாக சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் புது பூலாமேடு, சிவாயம் கிராமங்களில்  இரவு நேரங்களில் மாடுகளின் தலைகளை வெட்டி கறியை மட்டும் எடுத்துக் கொண்டு குடல், தோல் உள்ளிட்டவற்றை வயல்வெளிகளில் வீசி சென்று விடுகிறார்கள். இதனால் பெருத்த மன உளைச்சல் ஏற்படுகிறது. மாட்டை அப்படியே ஓட்டி சென்றாலும் பரவாயில்லை இப்படி அநியாயமா கொலை செய்து மாட்டு உரிமையாளர்கள் கண் முன்னே போடுவது வேதனை அளிக்கிறது.   அதே போல் இந்த பகுதியில்  10 -க்கும் மேற்பட்ட மாடுகள் வெட்டப்பட்டுள்ளதாகவும், இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தால் சரியான நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் கூறினார். இனிமேலும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் மாட்டு தலையுடன் சிதம்பரம் தாலுகா காவல் நிலையத்தை முற்றுகையிடும் போராட்டம் நடத்துவோம்'' என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

காவு வாங்கிய குளம்; கிராமத்தையே சோகத்தில் ஆழ்த்திய சிறுவர்களின் உயிரிழப்பு

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
 The pool of water; The lost their live of the boys left the village in mourning

கடலூரில் குளத்தில் இறங்கி குளிக்க முயன்ற இரண்டு சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே உள்ளது நந்தீஸ்வர மங்கலம். இந்தக் கிராமத்தில் வசித்து வந்த ராமமூர்த்தி என்பவருக்கு இரண்டு மகன்கள் இருந்தனர். திலீப் ராஜ்(16), தினேஷ்(14) ஆகிய இரு மகன்களும் வெளியூரில் விடுதியில் தங்கி படித்து வந்தனர். இந்த நிலையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்திருந்தனர்.

சிறுவர்கள் திலீப் ராஜ் மற்றும் தினேஷ் ஆகியோர் வீட்டுக்கு அருகே உள்ள குளத்தில் குளிக்க சென்றுள்ளனர். அப்பொழுது ஆழமான பகுதிக்கு இருவரும் குளிக்கச் சென்றதாக கூறப்படுகிறது. இதில் நீரில் மூழ்கி இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். குளத்துக்கு குளிக்கச் சென்ற சிறுவர்கள் காணாமல் போனதால் பதறியடித்த பெற்றோர் காவல்துறைக்கு தகவல் அளித்தனர். உடனடியாக மீட்பு படையினர் வரவழைக்கப்பட்டு குளத்தில் இறங்கி தேட ஆரம்பித்தனர். பின்னர், வெகு நேரத்திற்கு பின் இருவரின் உடலையும் கைப்பற்றிய மீட்புப்படையினர் உடல்களை கரைக்கு கொண்டு வந்தனர். சிறுவர்களின் உடல்களை பார்த்து பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். உயிரிழந்த சிறுவர்கள் இருவரின் உடலும் காட்டுமன்னார் கோவில் அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

விடுதியில் தங்கிப் படித்து வந்த சிறுவர்கள் விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்த நிலையில் குளத்தில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

18 மாவோயிஸ்டுகள் பலி; சத்தீஸ்கரில் பரபரப்பு!

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
nn

சத்தீஸ்கர் மாநிலத்தில் 18 மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொலை செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

சத்தீஸ்கர் மாநிலம் கன்கர் மாவட்டத்தில் நக்சலைட்டுகள் மற்றும் பாதுகாப்பு படைகளுக்கு இடையே துப்பாக்கிச் சூடு நடைபெற்றது. இதில் மொத்தமாக 18 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொலை செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இந்தத் தாக்குதலில் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த மூன்று வீரர்கள் படுகாயம் அடைந்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

மொத்தமாக 18 மாவோயிஸ்டுகளின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. அவர்கள் பயன்படுத்திய துப்பாக்கிகள், மெஷின் கன்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதில் ஒரே ஒரு எல்லை பாதுகாப்பு வீரரின் காலில் துப்பாக்கி குண்டு பாய்ந்து இருப்பதாகவும் ஆனால் உயிருக்கு எந்தவிதமான சேதம் இல்லை என்று தகவல் வெளியாகியுள்ளது. தேர்தல் நேரத்திற்கு முன்பாக நடைபெற்ற தாக்குதல் சம்பவத்தில் 18 மாவோயிஸ்டுகள் கொலை செய்யப்பட்டிருப்பது முக்கிய சம்பவமாக பார்க்கப்படுகிறது.  நக்சலைட்டுகள் ஆதிக்கம்  அதிகம் இருக்கும் சத்தீஸ்கரில் இந்தச் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.