Skip to main content

மர்மக் காய்ச்சல்... மனவளர்ச்சி குன்றிய பள்ளி மாணவர்கள் 2 பேர் பலி! 5 பேர் காய்ச்சலால் அனுமதி!

Published on 16/07/2019 | Edited on 16/07/2019

நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் மனவளர்ச்சி குன்றியோர் பள்ளியில் காய்ச்சல், வாந்திக்கு 2 மாணவர்கள் பலியானதைத் தொடர்ந்து நகராட்சி மருத்துவத்துறையினர் அங்கு முகாமிட்டு மருத்துவ பரிசோதனை செய்து வருகின்றனர். இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சங்கரன்கோவிலில் டி.டி.டி.ஏ. பள்ளி வளாகத்தில் மனவளச்சி குன்றியோர் பள்ளி உள்ளது. இந்தப் பள்ளியில் சுமார் 45 மாணவர்கள் பயின்று வருகின்றனர். இவர்களில் அங்கேயே தங்கிப்படிக்கும் மாணவர்கள் 30 பேர் வரை உள்ளனர். இது தவிர சில மாணவர்கள் தினமும் வந்து செல்கின்றனர். அவர்களை அவர்களது பெற்றோர்கள் பள்ளியில் கொண்டுவந்து விட்டு பின்னர் மாலையில் அழைத்துச்செல்வர். தங்கிப்படிக்கும் மாணவர்களுக்கு அங்கேயே உணவு சமைத்துக் கொடுக்கின்றனர். மேலும் வெளியில் இருந்து நன்கொடையாளர்கள் மூலமும் உணவு வழங்குவது உண்டு.

 Mysterious fever in nellai


இந்தநிலையில் அங்கு படித்து வந்த கரிசல்குளத்தைச் சேர்ந்த கமலக்கண்ணன் மகன் மணிகண்டனுக்கு (13) கடந்த 3 தினங்களுக்கு முன் காய்ச்சல் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து அவரை சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனிளிக்காமல் இறந்தார்.

 

 Mysterious fever in nellai


இதைத் தொடர்ந்து அதே பள்ளியில் பயின்ற ரெட்டியபட்டியைச் சேர்ந்த சண்முகப்பாண்டி மகன் பொன்னுச்சாமி (21) என்ற மாணவருக்கு ஞாயிற்றுக் கிழமை திடீரென்று வாந்தி ஏற்பட்டதாம்.பின்னர் வயிற்றுப் போக்கும் ஏற்பட்டதாம். இதனால் அவரை கரிவலம்வந்தநல்லூர் ஆரம்ப சுகாதார நிலையத்திலும், பின்னர் அரசு மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். ஆனால் அங்கு அவர் இறந்தார்.

 Mysterious fever in nellai


இதனால் சங்கரன்கோவில் நகராட்சியைச் சேர்ந்த சுகாதாரத் துறையினர் இன்று அதிரடியாக அப்பள்ளிக்கு சென்று தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். பள்ளி  மற்றும் வளாகத்தைச்  சுற்றிலும் மருந்து தெளித்தனர். குடிநீரில் புழுக்கள் ஏதும் உள்ளதா என சோதனையிட்டனர். மேலும் அங்கு மருத்துவ குழு மூலம் அங்கு பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் மருத்துவ பரிசோதனை மேற் கொண்டனர். அதில் மேலும் 5 மாணவர்களுக்கு காய்ச்சல் இருப்பது கண்டறியப்பட்டது. உடனடியாக அவர்கள் சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். 

அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மனவளர்ச்சிகுன்றியோர் பள்ளியில் பயின்ற இரு மாணவர்கள் அடுத்தடுத்து இறந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.மாவட்ட எஸ்.பி. அருண் சக்திகுமார் மற்றும் ஆட்சியர் ஷில்பா அங்கு விரைந்துள்ளனர்.


மாவட்ட ஆட்சியர் பேட்டி.

நெல்லை மாவட்டம் சங்கரன்கோவிலில் பரிபவுல் மனவளர்ச்சி குன்றிய பள்ளியில் 2 மாணவர்கள்  இறந்தனர் இந்நிலையில் முதலில்  இறந்த மாணவன் இதய கோளாறு நோயால் இறந்து விட்டதாகவும் மற்றொரு மாணவன் மனநலிவு நோயால் அந்த மாணவனுக்கு என்ன பிரச்சனை என்பது குறித்து விசாரணை நடந்து வருவதாகவும் மாவட்ட ஆட்சித் தலைவர் ஷில்பா பிரபாகர் சதிஷ் என்றார்.

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பிடிபட்ட 4 கோடி; ஒரே நேரத்தில் அவகாசம் கேட்கும் நயினார் நாகேந்திரன் & இ.டி

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
4 crore caught; ED, Nayanar Nagendran, who asked for time at the same time

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19.04.2024 அன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வாக்குப்பதிவு முடிந்தது. வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

முன்னதாக தமிழகத்தில் தேர்தல் பரப்புரைகள் தீவிரமாக சென்று கொண்டிருந்த நேரத்தில் சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து திருநெல்வேலிக்கு செல்லும் ரயிலில் தாம்பரம் ரயில் நிலையத்தில் கடந்த 06.04.2024 அன்று இரவு உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்ல முயன்ற ரூ.4 கோடி மதிப்பிலான ரொக்கம் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. 6 பைகளில் கட்டுக்கட்டாக இருந்த 500 ரூபாய் நோட்டுகளைப் பறக்கும் படையினர் அதிரடியாகப் பறிமுதல் செய்தனர்.

இதனையடுத்து இந்தப் பணத்தை எடுத்து வந்த புரசைவாக்கம் தனியார் விடுதி மேலாளரும் பாஜக உறுப்பினருமான சதீஷ், அவரின் சகோதரர் நவீன் மற்றும் லாரி ஓட்டுநர் பெருமாள் ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர். திருநெல்வேலி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு, இந்தப் பணத்தைக் கொண்டு செல்ல முயன்றதாக மூவரும் பகீர் வாக்குமூலம் கொடுத்ததாகத் தகவல் வெளியாகி இருந்தது. இச்சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

சம்பவத்தில் ரொக்கமாக நான்கு கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பாக நயினார் நாகேந்திரன் ஆஜராகி பதிலளிக்கும்படி காவல்துறை தரப்பில் சம்மன்  அனுப்பப்பட்டிருந்தது. ஆனால் நயினார் நாகேந்திரன் விசாரணைக்கு ஆஜராகாத நிலையில் விசாரணைக்கு ஆஜராக பத்து நாட்கள் அவகாசம் வேண்டும் என நயினார் நாகேந்திரன் தரப்பில் காவல்துறைக்கு பதில் கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் திருநெல்வேலியைச் சேர்ந்த ராகவன் என்பவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், நெல்லையில் பாஜக சார்பில் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் சார்பில் கொண்டு செல்லப்பட்ட நான்கு கோடி ரூபாய் பணம் தாம்பரம் ரயில் நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 

அதேபோல் காங்கிரஸ் வேட்பாளர் ராபர்ட் புரூஸ் சார்பாக வாக்காளர்களுக்கு வழங்குவதற்காக திருநெல்வேலி திமுக கிழக்கு மாவட்ட செயலாளர் அலுவலகத்தில் இருந்து 28 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டு இருக்கிறது. இந்தச் சம்பவங்கள் தொடர்பாக இருவரும் மீதும் பணப்பரிமாற்றத் தடைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் அமலாக்க துறையில் புகார் அளித்துள்ளேன். உயர்நீதிமன்றம் அமலாக்கத்துறை இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்' எனத் தெரிவித்திருந்தார். இந்த மனு நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், சுந்தர மோகன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்பொழுது மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு இருவர் மீதும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று தெரிவித்தார். இந்த வழக்கு அமலாக்க துறையின் பணப் பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் விசாரணைக்கு வருவதற்கான முகாந்திரம் உள்ளதா? என அமலாக்கத்துறை தரப்பிற்கு நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அமலாக்கத்துறை வழக்கறிஞர், சட்டவிரோத பண பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் இந்த வழக்கு வராது. இருப்பினும் மனு தொடர்பாக விரிவான பதிலளிக்க அவகாசம் வேண்டும் எனப் பதில் அளித்தனர். அதனைத் தொடர்ந்து வழக்கை நாளை மறுநாளுக்கு நீதிபதிகள் ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.

Next Story

‘பகல் 12 முதல் 3 வரை வெளியே வர வேண்டாம்’ - மதுரை மக்களுக்கு அறிவுறுத்தல்

Published on 15/04/2024 | Edited on 15/04/2024
Advice to Madurai people Don't come out between 12 noon and 3 am

தமிழகத்தில் கோடை வெயில் தற்போது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக அனைத்து தரப்பு மக்களும் கடும் பாதிப்படைந்து வருகின்றனர். அந்த வகையில், தமிழ்நாட்டில் 8 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் மற்றும் அதற்கும் மேல் வெயில் கொளுத்தி வருகிறது. 

இந்த நிலையில், மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா மதுரை மாவட்ட மக்களுக்கு அறிவுரை கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, “வெயில் அதிகரிப்பு காரணமாக மதுரையில் பகல் 12 மணி முதல் 3 மணி வரை மக்கள் வெளியே வர வேண்டாம். வெயில் தாக்கம் மற்றும் அனல்காற்று அதிகமாக வீசுவதால் மக்கள் முன்னெச்சரிக்கயாக இருக்க வேண்டும்.

அதாவது, வெயிலில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனங்களில் குழந்தைகள் கால்நடைகளை அனுமதிக்கக் கூடாது. தாகம் எடுக்காவிட்டாலும் போதுமான தண்ணீர் குடிக்க வேண்டும். பழச்சாறுகள் அருந்த வேண்டும். அவசர கால தேவைகளுக்கு 1077 மற்றும் 1070 ஆகிய இலவச அழைப்பு எண்களை தொடர்பு கொள்ளலாம்” எனத் தெரிவித்தார்.