Skip to main content

முனீஸ்வரர் கோயில் திருப்பணி நடத்த தடை; இரு தரப்பினர் இடையே பதற்றம்

Published on 12/08/2022 | Edited on 12/08/2022

 

Muneeswarar temple conflict between two parties

 

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகில் உள்ள கல்லாலிப்பட்டு கிராமத்தில் இருக்கும் முனீஸ்வரர் கோவிலை அனைத்து பொதுமக்களும் வழிபட்டு வருகின்றனர். இதையடுத்து  முனீஸ்வரர் கோவிலை  திருப்பணி செய்து கும்பாபிஷேகம் நடத்த அந்த கிராம மக்கள் ஏற்பாடுகள் செய்தனர். இதற்காக முனீஸ்வரர் சிலைக்கு வண்ணம் பூசும் பணி நடைபெற்று வந்தது

 

இந்த நிலையில் இந்த கோவில் ஒரு தரப்பினருக்கு மட்டுமே சொந்தம் என நீதிமன்றத்தில் சிலர் தடை உத்தரவு பெற்றதாக கூறப்படுகிறது. இதனால் கோவில் திருப்பணி தடுத்து நிறுத்தப்பட்டு, ஏற்கனவே சாமி சிலைகளுக்கு பூசப்பட்ட வண்ண பூச்சுகளை மாற்றி வெள்ளை நிறம் பூசப்பட்டது.

 

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று(11.8.2022) காலை அந்த கிராமத்தைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் முனீஸ்வரர் கோயில் முன்பு திரண்டு முற்றுகையில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த அனந்தபுரம் போலீசார் முனீஸ்வரர் கோவிலுக்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது முனீஸ்வரர் கோவில் திருப்பணி செய்து கும்பாபிஷேகம் நடத்த அரசு அதிகாரிகள் தலையிட்டு பேச்சுவார்த்தை நடத்தி சுமுகமான தீர்வு காண வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். அவர்களிடம் போலீசார் உரிய நடவடிக்கை எடுத்து விரைவில் திருப்பணி செய்து கும்பாபிஷே நடத்த ஏற்பாடு செய்வதாக உறுதியளித்ததனர் அதனை ஏற்றுக்கொண்ட கிராம மக்கள் முற்றுகையை கைவிட்டு  கலைந்து சென்றனர். இதனால் கல்லாலிப்பட்டு  கிராமத்தில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அங்கு ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.  

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பட்டப்பகலில் பெண் படுகொலை; போலீசார் விசாரணை

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
nn

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் வீட்டில் தனியாக இருந்த பெண் ஒருவர் சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி பகுதியைச் சேர்ந்தவர் குமார். ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியரான இவர் நேற்று வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பியுள்ளார். அப்போது வீட்டின் ஹாலில் அவருடைய மனைவி சரஸ்வதி வெட்டுக் காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் கிடந்தார். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த குமார் கூச்சலிட்டுள்ளார். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து பார்த்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

தகவலறிந்து உடனடியாக சம்பவம் நடந்த இடத்திற்கு வந்த போலீசார், ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்த சரஸ்வதியின் உடலைப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மர்ம நபர்கள் சரஸ்வதியை வெட்டிப் படுகொலை செய்துவிட்டு அவர் கழுத்தில் இருந்த தங்க நகையைப் பறித்துச் சென்றது விசாரணையில் தெரியவந்தது. இருப்பினும் இந்த கொலை, நகைக்காக நடந்ததா அல்லது வேறு ஏதேனும் முன் விரோதப் பிரச்சனை காரணமாக நிகழ்ந்ததா என்பது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டப்பகலில் பெண் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Next Story

நீரோடையில் மிதந்த சடலம்; போலீசார் விசாரணையில் அதிர்ச்சி

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
A body lying in a stream; Police investigation shocked

தந்தையைக் கொலை செய்தவரைப் பழிக்குப் பழி கொலை செய்து நீரோடையில் வீசிய சம்பவம் நெல்லையில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

நெல்லை மாவட்டம் தெற்கு ஏறாந்தை கிராமத்தில் வசித்து வருபவர் தேவபாலன். லாரி ஓட்டி வந்த தேவபாலன் திடீரென காணாமல் போன நிலையில், உறவினர்கள் அவரைத் தேடி வந்தனர். இறுதியில் ஊருக்கு ஒதுக்குப்புறமாக உள்ள நீரோடை ஒன்றில் சடலம் ஒன்று மிதப்பதாகத் தகவல் பரவியது. இந்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த திசையன்விளை போலீசார் ஆய்வு செய்ததில், வெட்டுக் காயங்களுடன் ஒருவர் கொலை செய்யப்பட்டு நீரோடையில் வீசப்பட்டது தெரிய வந்தது.

உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தியதில், அது காணாமல் போன தேவபாலன் என்பது தெரியவந்தது. இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில், தேவபாலன் கொலை வழக்கு தொடர்பாக சாத்தூர் நீதிமன்றத்தில் உத்திரகுமார், சுரேஷ்குமார், சேர்மதுரை உள்ளிட்ட மூன்று பேர் சரணடைந்தனர். மூவரும் சகோதரர்கள். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், பழிக்குப் பழியாக லாரி டிரைவரை கொலை செய்தது தெரியவந்தது.

2017 ஆம் ஆண்டு துரைபாண்டியன் என்பவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தேவபாலனுக்கு தொடர்பு இருந்ததாகத் தெரிகிறது. ஆனால் நீதிமன்றத்தில் குற்றம் நிரூபணம் ஆகாததால் அவர் விடுவிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், துரைபாண்டியனின் மகன்களான சுரேஷ்குமார், உத்திர குமார், சேர்மதுரை ஆகிய மூன்று பேரும் பல வருடங்கள் கழித்து தேவபாலனை வெட்டிக் கொலை செய்தது விசாரணையில் தெரிய வந்தது.