Skip to main content

மா.சுப்பிரமணியன் தலைமையில் திமுகவினர் சாலை மறியல் போராட்டம்

Published on 25/05/2018 | Edited on 25/05/2018

தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தை கண்டித்து தமிழகம் முழுவதும் அரசியல் கட்சிகளும், பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்களும் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இன்று (வெள்ளிக்கிழமை) தி.மு.க. கூட்டணி கட்சிகள் சார்பில் முழு அடைப்பு போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.

அதன் படி இன்று தமிழகம் முழுவதும் தி.மு.க மற்றும் கூட்டணி கட்சியினர் ஆர்பாட்டம் நடத்தினர்.

சென்னை சைதாப்பேட்டை மற்றும் பெரம்பூர் பகுதிகளில் திமுக மற்றும் தோழமைக் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். சென்னை சைதாப்பேட்டை பனகல் மாளிகை அருகே திமுகவினர் தோழமை கட்சியினருடன் எம்எல்ஏ மா.சுப்பிரமணியம் தலைமையில் 1000க்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டனர். 
 

இதனைத்தொடர்ந்து போலீசார் மறியலில் ஈடுபட்ட மா.சுப்பிரமணியன் உள்ளிட்ட திமுக மற்றும் தோழமைக் கட்சியினர் கைது செய்யப்பட்டனர்.

சார்ந்த செய்திகள்