Skip to main content

பூமி பூஜை கல்லை எட்டி உதைத்தாரா செந்தில்குமார் எம்.பி?

Published on 23/09/2022 | Edited on 23/09/2022

 

MP SenthilKumar's viral video

 

நூலகங்கள் அறிவுத் தேடலை நிறைவு செய்கின்றன. வாசிப்பும், வாசிப்பின் வழியே உருவாகிற சிந்தனையும் நம்மைப் பிற்போக்கு சிந்தனையில் இருந்து முற்போக்கு சிந்தனைக்கு இட்டுச்செல்கின்றது. அப்படியான உயர்ந்த சிந்தனைகளை கொண்ட மனிதர்களை உருவாக்கும் நூலகத்திற்கு அடிக்கல் நாட்டும் விழா தர்மபுரி மாவட்டத்தில் செப்டம்பர் 22ஆம் தேதி வியாழன் அன்று அதியமான் கோட்டையில் நடைபெற்றது. இந்தநிகழ்ச்சி இந்து கலாச்சாரப் பண்பாட்டு முறைப்படி நடைபெற்றது. 

 

இந்நிகழ்ச்சியில் தர்மபுரி மாவட்ட ஆட்சியர், தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர், தருமபுரி சட்டப்பேரவை உறுப்பினர், உள்ளாட்சி பிரதிநிதிகள், மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். முன்னதாகவே அரசு நிகழ்ச்சிகளில் இந்து முறைப்படி பழக்கங்கள் பின்பற்றப்படுமாயின் என்னை அழைக்காதீர்கள் என அவர் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

இந்நிலையில் இந்தப் பூமிபூஜையில் செங்கல்களை எம்.பி. செந்தில்குமார் தனது காலால் எட்டி உதைத்தாக பரப்பப்பட்டது. இது தொடர்பாக நாம் விசாரித்தபோது, இந்த நிகழ்ச்சியில் இந்து முறைப்படி அடிக்கல் நாட்டப்பட்டபோதும் அவர், தான் ஏற்றுக்கொண்ட கொள்கையை தாண்டி சடங்குகள் நடைபெற்றாலும். அதனை வெளிக்காட்டிக் கொள்ளாமல், மற்றவர் மனம் புண்படக்கூடாது என்பதற்காக அமைதியாக கலந்து கொண்டார். 

 

இந்த நிகழ்வு முடிந்த பிறகு இந்நிகழ்ச்சியை ஒருங்கிணைத்த தன் கட்சியைச் சார்ந்த ஒன்றிய செயலாளர் சண்முகத்திடம், “அரசு விழாக்களில் இந்து முறைப்படியான நிகழ்வுகள் இருக்குமானால், என்னை அழைக்க வேண்டாம் என உங்களிடம் தெரிவித்துள்ளேன். அதையும் மீறி சடங்கு சம்பிரதாயங்களை முன்னிலைப்படுத்தும் இந்த நிகழ்வுக்கு என்னை நீங்கள் அழைத்துள்ளீர்கள்” என மென்மையாக கடிந்துகொண்டார் என அவருக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்தனர். 

 

மேலும், இதைப் பற்றி தர்மபுரி எம்.பி செந்தில்குமார் அவரிடம் கேட்ட போது, “நான் ஆரம்பத்திலே, இந்து சடங்குகள் மூலம் நிகழ்வு நடைபெறுமானால் என்னை அழைக்கவேண்டாம் என பல முறை தெரிவித்திருந்தேன். இருந்தும் அதுபோல நிகழ்வுகள் இல்லை எனக்கூறி என்னை அழைத்தனர். ஆனால் அந்நிகழ்வில் சடங்கு சமாச்சாரங்கள் நடத்தப்பட்டது. ஆனாலும் நான் இன்முகத்தோடு பொறுத்துக்கொண்டேன். இது இந்துத்துவா வாதிகளின் திட்டமிட்ட சதி அல்லது அவதூறு பிரச்சாரம்” என்றார்.    

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'அதிமுகவின் பொய் பிரச்சாரம் மக்களிடம் எடுபடாது'-ஐ.பி.செந்தில்குமார் பேச்சு

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
'AIADMK's false propaganda will not be accepted by the people' - IP Senthilkumar's speech

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களைத் தீவிரப் படுத்தியுள்ளன.

இந்நிலையில், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும், பழனி சட்டமன்றத் தொகுதி திமுக உறுப்பினருமான ஐ.பி.செந்தில்குமார் திண்டுக்கல் பாராளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் சிபிஎம் வேட்பாளர் சச்சிதானந்தம் ஆகியோர் தீவிரமாகப் பிரச்சாரம் செய்து அரிவாள் சுத்தியல் நட்சத்திரம் சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்தார். பிரச்சாரத்திற்கு ரெட்டியார்சத்திரம் தெற்கு ஒன்றிய செயலாளரும், ஒன்றிய பெருந்தலைவருமான சிவகுருசாமி தலைமை தாங்கினார். திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக அவைத்தலைவர் வழக்கறிஞர் காமாட்சி ஒன்றிய குழு உறுப்பினர் தமிழ்ச்செல்வி முத்துகிருஷ்ணன், ரெட்டியார்சத்திரம் ஒன்றிய சிபிஎம் செயலாளர் சக்திவேல் வரவேற்றுப் பேசினார்.

நிகழ்வில் மாவட்டச் செயலாளர் ஐ.பி.செந்தில்குமார் பேசுகையில், ''மலைவாழ் மக்களுக்கு திமுக அரசு துரோகம் செய்தது போல் பொய்யான பிரச்சாரத்தை அதிமுகவினர், பாஜகவினர் பரப்பி வருகின்றனர். இது முற்றிலும் மோசடியான பிரச்சாரம் இது பொதுமக்கள் மத்தியில் எடுபடாது. கடந்த ஆண்டு 5.8.22 ஆம் தேதி அன்று, நமது திமுக பாராளுமன்ற உறுப்பினர் வேலுச்சாமி அவர்கள் ஆடலூர் மற்றும் பன்றி மலைப் பகுதியில் வசிக்கும் பொலையர் இன மக்களைப் பழங்குடியின மக்களாக மாற்றி அவர்களுக்கான உரியச் சான்றிதழ் வழங்க வேண்டும் என்று மத்திய பழங்குடியின துறை அமைச்சர் அர்ஜீன் முன்டாவிடம் கோரிக்கை மனு கொடுத்துள்ளார்.

இதோ அந்தக் கோரிக்கை மனு என்று மனுவைத் தூக்கி காண்பித்து பிரச்சாரம் செய்தார். எதையும் ஆதாரத்துடன்தான் நாங்கள் பேசுவோம். ஆத்தூர் தொகுதியின் செல்லப் பிள்ளையாக இருக்கும் அமைச்சர் ஐ.பெரியசாமி ஆடலூர் ஊராட்சிக்கு மட்டும் எண்ணற்ற நலத்திட்டங்களைச் செயல்படுத்தியுள்ளார். இங்குள்ள மக்கள் மருத்துவ வசதிக்காக தாண்டிக்குடி, கொடைக்கானல் செல்ல வேண்டிய நிலையை மாற்றி ஆடலூருக்கும் பன்றி மலைக்கும் இடையே மிகப்பெரிய மருத்துவமனையைக் கொண்டு வந்துள்ளார். தேர்தல் முடிந்த பின்பு மருத்துவமனை திறக்கப்படும். ஆம்புலன்ஸ் வசதியுடன் மலையில் உள்ள எந்தக் கிராம மக்களும் இங்கு வந்து சிகிச்சை பெறலாம், விரைவில் மலைக் கிராமத்தில் வசிக்கும் பெண்களும் இலவசமாகப் பேருந்தில் பயணம் செய்ய தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் விரைவில் உத்தரவிட உள்ளார். அதன்பின்னர் நீங்கள்(பெண்கள்) திண்டுக்கல்லுக்கு இலவசமாகப் பயணம் செய்யலாம்'' என்று கூறினார்.

Next Story

அதிமுக - நா.த.க.வினர் இடையே திடீர் மோதல்!

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
Sudden issue between ADMK and ntk

நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அந்த வகையில் திமுக, அதிமுக, நாம் தமிழர், பாஜக ஆகிய கட்சிகள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றன.

இத்தகைய சூழலில் தருமபுரி மாவட்டம் பாலக்கோட்டில் அதிமுக - நாம் தமிழர் கட்சியினர் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. பாலக்கோடு காவல் நிலையம் அருகே நாம் தமிழர் கட்சியினருக்கு காலை 11 மணியளவில் பிரச்சாரம் மேற்கொள்ள நேரம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதே போன்று அதிமுகவினருக்கு காலை 12 மணியளவில் பிரச்சாரம் மேற்கொள்ள நேரம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்நிலையில் 12 மணிக்கு முன்பாகவே அதிமுகவினர் பாலக்கோடு காவல் நிலையம் அருகே வந்து பிரச்சாரம் மேற்கொண்டுள்ளனர்.

அப்போது அனுமதிக்கப்பட்ட நேரத்திற்கு முன்பாக அதிமுகவினர் பிரச்சாரம் செய்ததால் நாம் தமிழர் கட்சியினர் எதிர்த்துள்ளனர். இதனால் இரு கட்சியினருக்கும் இடையே வாக்கு வாதம் ஏற்பட்டு பின்னர் கைகலப்பாக மாறியுள்ளது. மேலும் நாம் தமிழர் கட்சியினர் வந்த வாகனத்தை அதிமுகவினர் உடைத்ததால் அப்பகுதியில் பெரும்  பரபரப்பு ஏற்பட்டது. இது தொடர்பாக பாலக்கோடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.