Skip to main content

வாடிப்பட்டியில் கலைஞருக்கு  இரங்கல் ஊர்வலம்

Published on 17/08/2018 | Edited on 17/08/2018
m

 

 மறைந்த திமுக தலைவர் கலைஞருக்கு அஞ்சலிக் கூட்டமும், அனைத்துக்கட்சி சார்பில் இரங்கல் ஊர்வலமும் மதுரை வடக்கு மற்றும் தெற்கு மாவட்டத் திமுக சார்பில் வாடிப்பட்டியில் நடைபெற்றது. இதில் மதுரை வடக்கு மாவட்டச் செயலாளர் பி.மூர்த்தி, தெற்கு மாவட்டச் செயலாளர் மணிமாறன், முன்னாள் சபாநாயகர் சேடபட்டி முத்தையா, வடக்கு மாவட்ட மகளிரணிச் செயலாளர் ஜி.எல்.ரேணுகா ஈஸ்வரி, வடக்கு மாவட்ட இளைஞரணிச் செயலாளர் ஜி.பி.ராஜா, வாடிப்பட்டி பேரூர் செயலாளர் பிரகாஷ், முன்னாள் செயலாளர் பால்பாண்டியன், பொதுக்குழு உறுப்பினர் கிருஷ்ணவேணி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

 

mm

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

கலைஞர் நினைவு மாரத்தான்: 40 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

Published on 07/08/2022 | Edited on 07/08/2022

 

kalaignar Memorial Marathon

 

முன்னாள் முதல்வர் கலைஞரின் நான்காம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, மாரத்தான் போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியை அமைச்சர் மெய்யநாதன் தொடங்கிவைத்தார்.  5 கி.மீ., 10 கி.மீ., 21 கி.மீ., 42 கி.மீ. என மொத்தம் 4 பிரிவுகளில் நடைபெற்ற இந்தப் போட்டியில் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

 

இந்த நிகழ்வின் தலைமை விருந்தினராக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு 4 பிரிவுகளிலும் முதல் 3 இடங்களை பிடித்த வீரர்களுக்கான ரொக்க பரிசுகளையும், நினைவு பரிசுகளையும் வழங்கினார்.  மாரத்தான் ஓட்டத்தின் பதிவுத்தொகையாக பெறப்பட்ட ரூ.1 கோடியே 20 லட்சத்து 69 ஆயிரத்து 980ஐ சுகாதாரத்துறை செயலாளரிடம் முதலமைச்சர் ஒப்படைத்தார். இந்த நிகழ்வில் முதலமைச்சரோடு, அமெரிக்கா, இங்கிலாந்து, ஜப்பான், பிரான்ஸ் ஆகிய 4 நாடுகளின் துணைத் தூதர்கள் கலந்து கொண்டார்கள்.

 

 

Next Story

லாரியின் முன் நின்று ஃபாஸ்டேக் ஸ்டிக்கரை ஸ்கேன் செய்த போது விபரீதம்!  

Published on 21/07/2022 | Edited on 21/07/2022

 

When I stood in front of the truck and scanned the FASTAKE sticker, it was a disaster!

 

சுங்கச்சாவடியில் லாரியின் ஃபாஸ்டேக் ஸ்டிக்கரை ஸ்கேன் செய்த ஊழியர் மீது லாரி மோதிய சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. 

 

மதுரை மாவட்டத்தில் இருந்து காய்கறிகளை ஏற்றிக் கொண்டு, சிவகாசியை நோக்கிச் சென்ற லாரி கப்பலூர் சுங்கச்சாவடியில் கட்டணத்திற்காக நிறுத்தப்பட்டது. அந்த லாரியின் முன்பகுதியில் ஒட்டப்பட்டிருந்த ஃபாஸ்டேக் ஸ்கேன் ஆகாததால் பணியில் இருந்த சுங்கச்சாவடி ஊழியர் கையில் இருந்த கையடக்க இயந்திரத்தின் மூலம் லாரியின் முன்பகுதியில் நின்று ஸ்கேன் செய்துக் கொண்டிருந்தார். அப்போது, அதிவேகமாக வந்த கனரக லாரி நின்றுக் கொண்டிருந்த லாரியின் பின்னால் மோதியதில் முன்னால் நின்றுக் கொண்டிருந்த ஊழியர் மீது லாரி பாய்ந்தது. 

 

இதில், சுங்கச்சாவடி ஊழியர் தினேஷ் தலையில் பலத்த காயங்களுடன் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.