Skip to main content

கழிவறையில் வைத்து பச்சிளம் குழந்தையை கொன்றது ஏன்..? பதைபதைக்க வைத்த தாயின் வாக்குமூலம்

Published on 06/12/2021 | Edited on 06/12/2021

 

Mother's shocking confession in the incident in thanjai hospital

 

தஞ்சையில் பிறந்த குழந்தையைக் கழிவறை தண்ணீர் தொட்டியில் மூழ்கடித்து கொலை செய்த கொடூர தாயை போலீசார் கைது செய்துள்ளனர்.

 

தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வெர்ஸ்டன் கழிவறையில் நீர் தேக்க வைத்திருந்த தொட்டியில் பிறந்து சிலமணிநேரமே ஆன பச்சிளங்குழந்தை தொப்புள் கொடியுடன் பரிதாபமாக உயிரிழந்து கிடந்தது. இதனைக்கண்டு அதிர்ந்த மருத்துவமனை நிர்வாகம் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்த நிலையில், போலீசார் இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டனர். மருத்துவமனையின் சிசிடிவி காட்சி, மருத்துவமனை வருகைப் பதிவு ஆகியவற்றைக் கைப்பற்றி விசாரித்த போலீசார் பிரியதர்ஷினி என்ற பெண்ணை கைது செய்தனர்.

 

Mother's shocking confession in the incident in thanjai hospital

 

பூதலூர் அடுத்த ஆலக்குடி பகுதியைச் சேர்ந்த பிரியதர்ஷினியிடம் போலீசார் மேற்கொண்ட விசாரணையில் திடுக்கிடும் தகவல் தெரியவந்தது. பிரியதர்ஷினி திருப்பூரில் வேலைசெய்துகொண்டிருந்த பொழுது அங்கு ஒரு நபருடன் காதல் ஏற்பட, தன்னை திருமணம் செய்துகொள்வதாகக் கூறி கர்ப்பமாக்கிய அந்த நபர் தான் வயிற்றில் குழந்தை வளர்கிறது என்பதை அறிந்தவுடன் விட்டுச் சென்றுவிட்டதாகக் கூறிய பிரியதர்ஷினி, இதனால் மருத்துவமனை கழிவறையிலேயே குழந்தையைப் பெற்று நீரில் அழுத்தி கொலை செய்ததாகக் கூறியுள்ளார். இந்த சம்பவம் தஞ்சை மருத்துவமனை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

வெள்ளியங்கிரி மலை ஏறிய இளைஞருக்கு நேர்ந்த துயரம்!

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Tragedy befell the young man who climbed the Velliangiri mountain

கோவை மாவட்டத்தில் உள்ள வெள்ளியங்கிரி மலையில் பக்தர்கள் மட்டுமல்லாது டிரக்கிங் ஆர்வம் உள்ளவர்களும் மலையேறி அங்குள்ள சிவன் கோவிலில் வழிபாடு செய்வது வழக்கம். மலையேறும் பக்தர்கள் எண்ணிக்கை அங்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பல்வேறு மாவட்டங்களில் இருந்து மட்டுமல்லாது அண்டை மாநிலங்களில் இருந்தும் மலையேற்ற அனுபவத்தைப் பெறுவதற்காகவும், சிவ லிங்கத்தை தரிசனம் செய்யவும் வெள்ளியங்கிரி மலைக்குச் செல்கின்றனர்.

மொத்தமாக ஏழு மலைத்தொடர்கள் கொண்ட வெள்ளியங்கிரி மலையில் ஏழாவது மலையில் சிவலிங்கம் உள்ளது. அதனைத் தரிசிப்பதற்காகவே பக்தர்கள் கூட்டம் படையெடுக்கிறது. அதுவும் சிவராத்திரி, சித்ரா பவுர்ணமி உள்ளிட்ட முக்கிய சீசன் காலங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து மலையேறுவர். இந்நிலையில் வெள்ளியங்கிரி மலையில் ஏறி சாமி தரிசனம் செய்துவிட்டு, கீழே இறங்கியபோது 7 வது மலையில் திருப்பூரை சேர்ந்த வீரக்குமார் (வயது 31) என்பவர் கடந்த 18 ஆம் தேதி தவறி விழுந்தார். இதனால் அவரின் கை மற்றும் வயிற்றுப்பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

உடல்நலக் குறைவால் வெள்ளியங்கிரி மலையில் ஏறிய 7 பேர் ஏற்கனவே உயிரிழந்த நிலையில் தற்போது மேலும் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பக்தர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதன் மூலம் வெள்ளியங்கிரி மலைக்கு சென்று உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8 ஆக் உயர்ந்துள்ளது. முன்னதாக சித்ரா பவுர்ணமியையொட்டி ஏராளமான பக்தர்கள் வெள்ளியங்கிரி மலைக்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால் வெள்ளியங்கிரி மலைக்கு செல்லும் பக்தர்களை ட்ரோன் மூலம் கண்காணிக்க வனத்துறை சார்பில் திட்டமிடப்பட்டுள்ளது எனவும், கோடை வெயிலின் தாக்கத்தால் ஏற்படும் காட்டுத் தீயை கண்காணிக்கவும் ட்ரோன்களை பயன்படுத்த வனத்துறை முடிவு செய்துள்ளதாகவும் கூறப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

Next Story

டிபன் பாக்ஸ் குண்டு வீச்சு; மதுரையில் பரபரப்பு!

Published on 21/04/2024 | Edited on 21/04/2024
Tiffin box range Sensation in Madurai

மதுரை அருகே டிபன் பாக்ஸ் வெடிகுண்டு வீசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள கீழவளவு என்ற பகுதியில் காரின் அருகே நின்று கொண்டிருந்தவர் மீது நேற்று இரவு (20.04.2024)  டிபன் பாக்ஸ் வெடிகுண்டு வீசப்பட்ட இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. இந்த சம்பவத்தில் அங்கிருந்த நவீன்குமார் என்பவர் காயமடைந்தார்.

மேலும் டிபன் பாக்ஸ் குண்டு வீசப்பட்டதில் நவீன்குமாருக்கு அருகில் இருந்த ஆட்டோக்காரர் கண்ணன் என்பவர் காயம் அடைந்துள்ளார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு உடனடியாக விரைந்து வந்த கீழவளவு காவல்துறையினர் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். காயமடைந்த இருவரையும் போலீசார் அருகிலுள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.