Skip to main content
Breaking

பெற்ற தாயே செய்த கொடூரம்; விசாரணையில் வெளிவந்த பகீர் உண்மை

Published on 20/11/2023 | Edited on 20/11/2023

 

A cruel mother who did what she shouldn't have done at virudhunagar

 

பிறந்து ஒரு மாதமே ஆன ஆண் குழந்தையை, பெற்ற தாயே விற்பனை செய்த கொடூரச் சம்பவம் அரங்கேறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் முனியசாமி. இவருடைய மனைவி முத்துச்செல்வி. இந்த தம்பதியருக்கு கடந்த அக்டோபர் மாதம் 18ஆம் தேதி ராஜபாளையம் அரசு மகப்பேறு மருத்துவமனையில் ஆண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. இதையடுத்து, முத்துச்செல்விக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. அதனால், அவர் சிகிச்சைக்காக சேத்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அவர் சென்றிருந்தார்.

 

அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவரின் குழந்தை குறித்து கேள்வி கேட்டிருந்தனர். அதற்கு முத்துச்செல்வி, முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்துள்ளார். இதில் சந்தேகமடைந்த மருத்துவர்கள், ராஜபாளையம் காவல்துறையினருக்கு இது குறித்து தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்து அங்கு வந்த காவல்துறையினர், முத்துச்செல்வியிடம் விசாரணை நடத்தினர்.

 

அவர்கள் நடத்திய அந்த விசாரணையில், முத்துச்செல்வி தனது குழந்தையை ராஜேஸ்வரி, தென்காசியைச் சேர்ந்த ஜெயபால், ஈரோட்டைச் சேர்ந்த ரேவதி ஆகியோர் மூலம் ஹசீனா என்பவருக்கு 3 லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்துள்ளதாக அதிர்ச்சி தகவல் தெரியவந்தது. இதையடுத்து, இந்த சம்பவம் குறித்து ராஜபாளையம் காவல்துறையினர், வழக்குப்பதிவு செய்து முத்துச்செல்வி, ராஜேஸ்வரி, ரேவதி மற்றும் ஹசீனா ஆகிய 4 பேரையும் கைது செய்தனர். மேலும், தலைமறைவாக இருக்கின்ற ஜெயபாலை, போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.  

 

 

 

கடக்கும் முன் கவனிங்க...

கடக்கும் முன் கவனிங்க...

விரிவான அலசல் கட்டுரைகள்

சார்ந்த செய்திகள்

சார்ந்த செய்திகள்

Next Story

“அமலாக்கத்துறையை இழுத்து மூட வேண்டும்” - கார்த்தி சிதம்பரம்

Published on 02/12/2023 | Edited on 02/12/2023

 

Karthi Chidambaram says Enforcement should be pulled and closed

 

அரசு மருத்துவரை மிரட்டி லஞ்சம் பெற்ற அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி என்பவர் நேற்று (01-12-23) திண்டுக்கல்லில் கைது செய்யப்பட்டு தற்போது நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டார். அவரிடம் 15 மணி நேர விசாரணையும், அவர் பணிபுரிந்து வந்த மதுரை அமலாக்கத்துறை அலுவலகத்தில் 13 மணி நேர சோதனையும் நிறைவடைந்து இந்த விவகாரம் தொடர்பாகத் தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

 

இந்த நிலையில், காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் இன்று (02-12-23) செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது அவர், “இந்த விவகாரம் எந்த வகையிலும் எனக்கு வியப்பு அளிக்கவில்லை. என்னை பொறுத்தவரை ஊழல் அதிகாரிகளால் இருக்கும் இயக்கம் தான் இந்த அமலாக்கத்துறை. பல பேர் பெரும் பணம் கொடுத்து தான் இந்த துறையிலே சேர்வார்கள். அவர்கள் லஞ்சம் கொடுத்து தான் இந்த துறையிலே சேருகிறார்கள். அதனால், லஞ்சம் பெற்று தான் அவர்களுடைய முதலீட்டை திருப்புவதற்காக இந்த செயலில் ஈடுபடுகிறார்கள்.

 

அமலாக்கத்துறையினர், சம்பந்தமே இல்லாதவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பியோ அல்லது சம்மன் அனுப்பியோ அவர்களை எல்லாம் மன உளைச்சலை உண்டாக்குகிறார்கள். அதனால்,  பல தொழிலதிபர்கள் வேறு வழியின்றி லஞ்சத்தை கொடுக்கிறார்கள். எனவே, இது அவர்களுடைய வாடிக்கையான நடவடிக்கை தான். அங்கித் திவாரி போல் அங்கு நூற்றுக்கணக்கான அதிகாரிகள் இருக்கிறார்கள். அதனால், இந்த அமலாக்கத்துறையை இழுத்து மூட வேண்டும்” என்று கூறினார்.  

 

 

 

விரிவான அலசல் கட்டுரைகள்

Next Story

அரசுப் பேருந்தை வழிமறித்து நடத்துநரைத் தாக்கிய மாணவர்கள்!

Published on 28/11/2023 | Edited on 28/11/2023

 

nn


                                                    கோப்புப்படம் 
 

கடந்த 13 வருடங்களாக தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் சிவகாசி கிளையில் நடத்துநராக பணிபுரிந்து வருகிறார் சுரேஷ். விருதுநகரில் இருந்து சிவகாசிக்கு சென்ற அரசுப் பேருந்தை ஓட்டுநர் கனிமுத்து இயக்க, நடத்துநராக சுரேஷ் இருந்துள்ளார். அந்தப் பேருந்தில் பயணித்த ஐடிஐ மாணவர்களான மதன்குமாரும் வசந்தும் விசிலடித்து தகாத வார்த்தைகள் பேசி ரகளையில் ஈடுபட்டுள்ளனர். அவ்விருவரும் மதுபோதையில் இருந்ததால், சிவகாசி சாலையில் உள்ள பஜார் காவல் நிலையத்தில் புகார் கூறி, அங்கேயே இறக்கி விட்டுள்ளார் நடத்துநர் சுரேஷ்.

 

அப்பேருந்து சிவகாசி சென்றுவிட்டு மீண்டும் அதே வழித்தடத்தில் திரும்பியபோது, பி.குமாரலிங்கபுரம் பேருந்து நிறுத்தத்தின் அருகே, 17 வயது சிறுவனான மதன்குமாரும் வசந்தும் டூ வீலரில் வழிமறித்து நிறுத்தியதோடு, பேருந்துக்குள் ஏறி நடத்துநர் சுரேஷை தாக்கியிருக்கின்றனர். காயமடைந்த சுரேஷ், தன்னைப் பணி செய்யவிடாமல் வழிமறித்து பேருந்துக்குள் ஏறி தாக்கிய இருவர் மீதும் நடவடிக்கை எடுக்கக்கோரி ஆமத்தூர் காவல்நிலையத்தில் புகாரளிக்க, வழக்கு பதிவுசெய்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். 

 


 

விரிவான அலசல் கட்டுரைகள்