Skip to main content

மோசடி அழைப்பு மூலம் பண மோசடி.... மாணவர்களை கைது செய்த சைபர் க்ரைம் காவல்துறையினர்! 

Published on 15/07/2022 | Edited on 15/07/2022

 

Money Fraud through Fraudulent Calls...Cyber ​​Crime Police Arrested Students!

 


ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த இரண்டு இளைஞர்கள் ஈரோடு சைபர் க்ரைம் காவல்துறையிடம் ஒரு புகார் மனு கொடுத்தனர். அந்த புகார் மனுவில், "நாங்கள் சமூக வலைதளங்களைப் பார்த்துக் கொண்டிருந்த போது ஒரு நாள் இரண்டு இணையதள முகவரியில் ஒரு தொலைபேசி எண் பதிவிடப்பட்டிருந்தது. அதில் இந்த எண்ணை தொடர்புக் கொண்டால் பெண்களுடன் உல்லாசமாக இருக்கலாம். எங்களுக்கு ஆசை ஏற்பட்டது. அதனை நம்பி நாங்கள் அந்த தொலைபேசி நம்பருக்கு ஃபோன் செய்தோம். ஆனால் எங்களது அழைப்பை யாரும் எடுக்கவில்லை. 

 

இதையடுத்து சிறிது நேரம் கழித்து அந்த தொலைபேசி எண்ணில் இருந்து எங்களுக்கு அழைப்பு வந்தது. நாங்கள் அதை எடுத்துப் பேசும்போது, அந்த தொலைபேசி எண்ணில் பேசியவர்கள், நீங்கள் உல்லாசத்திற்கு அழைத்ததாக காவல்துறையினரிடம் புகார் செய்து விடுவோம் என மிரட்டினார்கள். காவல்துறையினரிடம்  புகார் கூறாமல் இருக்க பணம் வேண்டும் என்றும் மிரட்டினார்கள். பயந்து போன  நாங்கள் அவர்கள் அனுப்பிய எண்ணுக்கு ரூபாய் 20,000 பணம் அனுப்பினோம். அதோடு முடியவில்லை, மறுநாள் மற்றொரு எண்ணில் இருந்து எங்களுக்கு அழைப்பு வந்தது. அதில் பேசியவர்கள் நாங்கள் போலீஸ் பேசுகிறோம். 

 

உங்கள் மீது செக்ஸ் புகார் வந்துள்ளது. புகார் மீது நடவடிக்கை எடுக்காமல் இருக்க வேண்டும், என்றால் நாங்கள் சொல்லும் வங்கி கணக்கில் பணம் செலுத்த வேண்டும் என மிரட்டினார்கள். இதனால் பயந்து போய் மீண்டும் நாங்கள், அவர்கள் கூறிய வங்கி கணக்கில் 85,000 ரூபாய் அனுப்பினோம். இதையடுத்து, தான் நாங்கள் ஏமாற்றப்பட்டதை உணர்ந்தோம். எங்களை ஏமாற்றியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கோரிக்கை விடுத்திருந்தனர். 

 

இதையடுத்து, ஈரோடு சைபர் க்ரைம் காவல்துறையினர் ஏ.டி.எஸ்.பி. ஜானகிராமன் தலைமையில் காவல்துறையினர் இது குறித்து விசாரணை மேற்கொண்டனர். அந்த இணையதள முகவரிக்கு சென்று அந்த செல்போன் எண்ணை கைப்பற்றி விசாரணையை தீவிரப்படுத்தினர். செல்போன் டவரை வைத்து அந்த கும்பல் கோவையில் பதுங்கி இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து, ஈரோடு சைபர் கிரைம் காவல்துறையினர், அந்த இடத்துக்கு விரைந்து சென்றனர். இந்த சம்பவத்தில் ஈடுபட்டது மொத்தம் 5  பேர் கொண்ட கல்லூரி மாணவர்கள் எனத் தெரிய வந்தது. 

 

காவல்துறையினர் வரும்போது மூன்று மாணவர்கள் மட்டும் பிடிபட்டனர். அவர்களிடம் விசாரணை நடத்தியதில் அவர்கள் செல்போன் எண்ணை போலியான பெயரில் வாங்கிப் பயன்படுத்தி வந்தது தெரிய வந்தது. இதேபோல் பல முகவரியில் செல்போன் எண்ணை பதிவிட்டு பெண்ணுடன் உல்லாசத்திற்கு அழைத்து நிறைய பேரிடம் பணம் கேட்டு மிரட்டியுள்ளனர். 

 

இவ்வாறாக கிட்டத்தட்ட இவர்கள் இந்த ஆறு மாதங்களில் 10 லட்சம் ரூபாய் வரை பல பேரிடம் பணத்தை பறித்துள்ளது விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதையடுத்து, சைபர் கிரைம் காவல்துறையினர் மூவரையும் ஈரோட்டுக்கு விசாரணைக்கு அழைத்து வந்துள்ளனர். மேலும் தலைமறைவாக இருக்கும். இரண்டு கல்லூரி மாணவர்களை தேடி வருகிறார்கள். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

திருமணத்தை மீறிய உறவு; பெண்ணை பெட்ரோல் ஊற்றி எரித்த நடத்துநர்

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Conductor who doused woman with petrol and her in Krishnagiri

கிருஷ்ணகிரியைச் சேர்ந்தவர் திருப்பதி. இவரது மனைவி சிவகாமி(பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவருக்கும் கிருஷ்ணகிரி பாத்திமா நகரைச் சேர்ந்த அரசு பேருந்து நடத்துனர் மாதவன் என்பவருக்கும் கடந்த ஐந்து ஆண்டுகளாக திருமணத்தை மீறிய உறவு இருந்துள்ளது. இந்த நிலையில் மாதவனுக்கு வேறு சில பெண்களுடன் தொடர்பு  இருப்பதாக கருதிய லட்சுமி மாதவன் உடனான உறவை துண்டித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து மாதவன் சிவகாமிக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று இரவு வீட்டிற்கு வெளியே சென்று லட்சுமியைப் பின் தொடர்ந்து வந்த மாதவன் சிவகாமியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். மேலும் தன்னுடன் பேசுமாறு வற்புறுத்தியுள்ளார். ஆனால்   இதற்குச் சிவகாமி மறுப்பு தெரிவிக்க, ஆத்திரமடைந்த மாதவன் சிவகாமி மீது பெட்ரோலை ஊற்றி உயிரோடு எரித்துள்ளார். பின்னர் வீட்டின் அருகே உள்ள முட்புதிரில் தீயில் கருகி நிலையில் உயிருக்கு போராடி கொண்டிருந்த சிவகாமியைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக அவரை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இந்த நிலையில் இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் சிவகாமிடம் விசாரணை செய்ததில் மேற்கண்ட விவரங்கள் தெரியவந்துள்ளது. இதை அடுத்து மாதவன் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

Next Story

தீ விபத்து; பலி எண்ணிக்கை 6 ஆக உயர்வு!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
incident for hotel near Patna Railway Station Bihar

பீகார் மாநிலம் பாட்னா ரயில் நிலையம் அருகே உள்ள ஹோட்டலில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு படை வீரர்கள் தீயை அணைக்கும் பணியிலும், மீட்புப் பணியிலும் ஈடுபட்டனர். இந்த தீ விபத்தில் சிக்கிய 12 பேர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக முதற்கட்டமாக அனுப்பி வைக்கப்பட்டனர். இச்சம்பவம் பாட்னாவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருந்தது. இந்த தீ விபத்தில் சிக்கி 3 பேர் உயிரிழந்ததாகவும், 7 பேர் பலத்த காயமடைந்துள்ளனர் என பாட்னா போலீஸ் எஸ்.எஸ்.பி. ராஜீவ் மிஸ்ரா தெரிவித்திருந்தார்.

இது குறித்து பாட்னா தீயணைப்புத் துறை போலீஸ் டிஜி, ஷோபா ஓஹட்கர் கூறுகையில், “தீயணைப்புத் அணைக்கும் மேற்கொண்டோம். இதுபோன்ற நெரிசலான பகுதிகளில் விபத்துகளை தடுக்க தொடர்ந்து சிறப்பு கவனம் செலுத்தி வருகிறோம். இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்க நாங்கள் தொடர்ந்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம். சிலிண்டர் வெடித்ததால் இந்த தீ விபத்து நடந்தது. இருப்பினும் தற்போது தீ முற்றிலும் அணைக்கப்பட்டது” எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் பாட்னா சட்டம் மற்றும் ஒழுங்கு போலீஸ் டிஎஸ்பி கிருஷ்ணா முராரி கூறுகையில், “இந்த தீ விபத்தில் 5 முதல் 6 பேர் வரை இறந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சுமார் 30க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளனர். அதில் பலத்த காயம் அடைந்த 7 பேர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்” எனத் தெரிவித்தார்.